search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157148"

    • விழாவுக்கு புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.
    • பெண்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி இலக்கிய அமர்வு நிகழ்ச்சி வேதாரண்யம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை ஆய்வு மாணவி.சுகன்யா, சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தினமும் 120 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணித்து மீன் வியபாரம் செய்யும் பஞ்சவர்ணம், பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு, சிறுதானிய உணவு தயாரிப்பில் முனைப்பு காட்டும் கத்தரிப்புலம் சித்ரா ஆகியோர் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

    இவர்களை அரசு கல்லூரி பேராசிரியர் மாரிமுத்து, சமூக செயல்பாட்டாளர் ஆசிரியை வசந்தா ஆகியோர் பாராட்டி பேசினர். மேலும், கல்லூரி மாணவி நித்யா, கோவி.ராசேந்திரன், ஆசிரியர் சதீஷ் உள்ளிட்டோர் பெண்ணியம் சார்ந்த பாடல்கள் பாடினர்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர் பிராபாகரன், கலை இலக்கிய பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட பொருளாளர் கைலாசம், மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, கார்த்தி, ஆசிரியர் சத்யராஜ், நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வ ராசு, கிளை துணை செயலாளர் செந்தில்நாதன், மணி வண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

    • மகளிர் தின விழா கோலப்போட்டி கோவில்பட்டி ராஜீவ் நகரில் நடைபெற்றது.
    • சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் கரிசல் இலக்கியம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மகளிர் தின விழா கோலப்போட்டி நடை பெற்றது.

    கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள கவுணியன் பதின்ம பள்ளியில் நடைபெற்ற போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையிலும், பெண் உரிமை, பெண்கள் சுதந்திரம், தாய்மை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வண்ண கோலங்கள் இட்டு அசத்தினர்.

    இதையடுத்து சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழக்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். ஆசிரியை அமல புஷ்பம் வரவேற்றார். சத்தியபாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் லதா வெங்கடேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • தடகள போட்டிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் வயது வரம்பின்றி நடத்தப்பட்டன.
    • வருகிற 18-ந் தேதி பெண் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடகள போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

    தஞ்சாவூர்:

    பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. அதேபோல் 2022-2023 ஆம் ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பெண்களின் நல்வாழ்வுக்கு விளை யாட்டு, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி பங்களிக்கிறது என்றும் இது சம்பந்தமாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கையில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வயதினருக்கும் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றது.

    அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இன்று காலை மாவட்ட அளவிலான மகளிருக்கான தடகள போட்டிகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் வயது வரம்பின்றி நடத்தப்பட்டன.

    இப்போட்டியினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை போட்டிகள் நடத்தப்பபட உள்ளது. 15-ந் தேதி மகளிருக்கு வாலிபால் விளையாட்டுப் போட்டிகளும், 18-ந் தேதி பெண் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடகள போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

    இன்று நடந்த நிகழ்ச்சியில் பயிற்றுனர்கள் நீலவேணி (தடகளம்), தாரணி (பளு தூக்குதல்), ரஞ்சித் குமார் (நீச்சல்) மற்றும் மாவட்ட அளவிலான உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் நிறைவில் தஞ்சாவூர் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுநர் பாபு நன்றி கூறினார்.

    • தஞ்சாவூரில் மொத்தமாக 1212 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர்.
    • மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் கடந்த 3-ம் தேதி தாய் சேய் நலம் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மையத்தை நடிகர் சசிகுமார் நேற்று மாலை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்–களிடம் கூறியதாவது:-

    தஞ்சாவூரில் படப்பிடிப்பில் இருந்தேன்.

    இங்கு தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை பார்வை–யிட்டேன்.

    இந்த திட்டமானது பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். கர்ப்பிணி காலங்களில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சி மேயர் அனைத்து பெண்களுக்கும் வழங்கி வருகிறார்.

    தஞ்சாவூரில் மொத்தமாக 1212 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர்.

    அவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் அனைத்து மருத்துவ சேவைகள் மற்றும் ஊட்டச்–சத்துக்கள் அனைத்தும் வீடுகளுக்கு நேரடியாக சென்றும் இங்கு வர வைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சையில் தொடங்கியது போல அனைத்து மாவட்டங்–களிலும் தாய் சேய் நலம் கண்காணிப்பு மையம் தொடங்க வேண்டும்

    கர்ப்பிணி காலங்களில் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றுவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    இந்த மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பேசினேன். இந்த திட்டம் எங்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது.

    இந்தத் திட்டத்தை நிறைவேற்றி தந்த தஞ்சை மாநகராட்சி மேயருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் என்று அவர் கூறினார்.

    பேட்டியின் போது மேயர் சண்.ராமநாதன், பேட்டியின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, இளநிலை பொறியாளர் ஜெகதீசன், கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பள்ளிகுழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
    • பெண்களின் முக்கியத்துவத்தை ஆண் குழந்தைகளுக்கு உணா்த்த வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-

    குழந்தைகள்தான் வருங்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள். சமுதாயம் என்பது ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் என அனைவருக்குமானதாகும். பெண்களின் முக்கியத்துவத்தை ஆண் குழந்தைகளுக்கு உணா்த்த வேண்டும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் வன்முறைகள் குறித்து தைரியமாக புகாா் அளிக்க முன்வர வேண்டும். சமுதாயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் உயா்ந்த நிலைக்குச் செல்ல கல்வியறிவு மட்டுமின்றி அனுபவ அறிவும் அவசியமானதாகும் என்றாா்.

    • விழுப்புரத்தில் வருகிற மாா்ச் 9-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • குழுக்களின் வீராங்கனைகள் பங்கேற்கலாம், வயது வரம்பு இல்லை.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவிலான பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கபடி கழக செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநில அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் 69 -வது மாநில அளவிலான பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் விழுப்புரத்தில் வருகிற மாா்ச் 9-ந்தேதி முதல் 12 -ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தப்போட்டியில் பங்குபெற திருப்பூா் மாவட்டத்தில் பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் மணி மஹாலில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அனைத்து குழுக்களின் வீராங்கனைகள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. 75 கிலோ மற்றும் அதற்கு மேல் உள்ள திருப்பூா் மாவட்ட வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் 12 வீராங்கனைகள் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

    திருப்பூா் மாவட்டத்தின் சாா்பில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.7 ஆயிரம், 3 மற்றும் 4-வது பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவகாசியில் 4 பெண்கள் திடீரென மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்தவர் காளிராஜ். இவருக்கு 17 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டின் அருகிலேயே காளிராஜின் மாமனார் வீடு உள்ளது.

    காளிராஜின் மகள் அங்கிருக்கும் தனது சித்தி ஆனந்த ஈஸ்வரியை அடிக்கடி சென்று பார்த்து வருவார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த காளிராஜ் மகளை அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மகளையும், ஆனந்த ஈஸ்வரியையும் காணவில்லை. எங்கு சென்றார்கள்? என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மனைவி இசக்கியம்மாள் மற்றும் அவரது மகள் நாகஜோதியையும் காணவில்லை என தெரியவந்தது.

    மேலும் விசாரித்தபோது இந்த 4 பேரும் அந்தப்பகு தியில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனி முன்பு நின்று பேசிக் கொண்டிருந்ததாக தெரியவந்தது. ஆனால் இந்த 4 பேரும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து பெண்கள் மாயமானது குறித்து காளிராஜ் மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து பெண்களும் புடவையில் பங்கேற்கும் நடைபயணம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.
    • நடை பயணத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை இன்னர் வீல் சங்கத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு இன்னர்வீல் சங்கமும், வீ.கே.சி. பிரைடு நிறுவனமும் இணைந்து அனைத்து பெண்களும் புடவையில் பங்கேற்கும் நடைபயணம் தஞ்சையில் இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இன்னர்வீல் சங்கத் தலைவர் டாக்டர் சோபியா சோமேஷ், பொன்விழா ஆண்டின் குழு தலைவர் உஷா நந்தினி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    முன்னாள் தலைவர்கள் சங்கீதா திருவேங்கடம், புவனா, நிர்மலா வெங்க டேசன், ஒருங்கிணை ப்பாளர் சண்முகவடிவு, பொருளாளர் ரேகா குபேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரி சுப்பிரமணியம், உறுப்பினர் சுசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நடை பயணத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நடைபயணமானது வரம்பின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

    அதாவது 18 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கு 4 கிலோமீட்டர் தூரமும், 36 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கிலோ மீட்டர், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் நிர்ணயிக்கப்பட்டது.

    அதன்படி மூன்று பிரிவின் கீழ் ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு புடவையில் நடை பயணம் மேற்கொண்டனர்.

    முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    முதல் இரு பிரிவுகளில் முதலிடம் பிடித்த பெண்களுக்கு ரூ.7500, 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.5000, 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2500 ரொக்க பரிசும், 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவில் முதல் இடம் பிடித்த பெண்ணுக்கு ரூ.5000, 2-ம் இடம் பிடித்தவருக்கு ரூ.3000, 3-ம் இடம் பிடித்தவருக்கு ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விழா 3 நாட்கள் நடக்கிறது.
    • 29 தட்டுகளில் சீர் பொருட்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் குழிவிளை இசக்கியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று தொடங்கியது. விழா 3 நாட்கள் நடக்கிறது.

    இந்த கோவிலுக்கு பக்கத்து ஊரில் உள்ள அம்பலத்துவிளை சக்தி பரமேஸ்வரி கோவிலில் இருந்து அம்மனுக்கு பக்தர்கள் சீர் கொண்டு வந்து விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த சீரில் பெண்கள் முன்னால் விளக்கு ஏந்தி வரிசையாக வர பின் 29 தட்டுகளில் சீர் பொருட்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். குழிவிளை இசக்கியம்மன் கோவில் அம்மன் பக்தர்கள் சீருடை அணிந்து வந்த அவர்களை வரவேற்று சீரை பெற்றுக்கொண்டனர்.

    இது இப்பகுதியில் உள்ள கோவில்களில் முதல் முதலாக நடக்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்வை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வரும் காலங்களில் இந்த நிகழ்வு அனைத்து அம்மன் கோவில்களிலும் நடக்கும் என்று பக்தர்கள் கூறினர். இதனால் ஊர் ஒன்றுமை ஓங்கும், மக்களிடம் பரஸ்பரம், விட்டுக்கொடுத்து செல்லுதல், அன்பு ஏற்படும். இதனால் சுபிட்சம் உண்டாகும் என அம்மன் பக்தர்கள் கூறினார்கள்.

    • கொல்லிமலையில், செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய பகுதியில், அரசுக்கு சொந்தமான 3 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது.
    • இரவு, பகல் என 24 மணி நேரமும், சந்துக்கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய பகுதியில், அரசுக்கு சொந்தமான 3 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. ஆனால், இங்குள்ள 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து நாட்களிலும், இரவு, பகல் என 24 மணி நேரமும், சந்துக்கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த சந்துக் கடைகளால், மலைவாழ் மக்கள் பலரும் பல்வேறு இன்னல்க–ளுக்கு ஆளா–கின்றனர். குறிப்பாக, பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர் செல்லும் வழியில், சந்துக்–கடைகள் செயல்படுவதால், அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது. அதனால் சந்துக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, கொல்லி–மலை ஒன்றியம், தேவனூர்–நாடு பஞ்சாயத்து பகுதி மக்கள் கலெக்டர் அலுவ–லகத்தில் மனு கொடுத்தனர்.

    இது குறித்து, மலைவாழ் மக்கள் சிலர் கூறியதாவது:-

    தேவனூர்நாடு பஞ்சா–யத்து பின்னம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள வெண்டலபாடி பஸ் ஸ்டாப்பில், சந்துக்கடையில் அமோகமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. அங்கு, மதுபிரியர்கள் குடித்து விட்டு, அவ்வழியாக செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டுகின்றனர்.

    மேலும், மது போதையில் அரை நிர்வாணத்தில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர். அதனால், அவ்வழியாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்வதற்கு அச்சப்ப–டுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து, பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள், மாணவியர் நலனை கருத்தில் கொண்டு, சந்துக்கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வசதிகள் செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியில் ரூ.28.10 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், ஊராட்சி நிதி மற்றும் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் நுள்ளிவிளை ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவுக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ., மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சாதி, மதம், இனம், அரசியல் என எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து செல்லும் அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    நமது மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பணிகளை செயல்படுத்து வதற்காக அதிகளவில் நிதியுதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. நிதி பெறப்பட்ட பின் நமது மாவட்டத்தில் சாலை தொடர்பான பணிகள் விரைவில் முடிவடையும்.

    4 வழிச்சாலை பணிக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1150 கோடி மறுமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை யினை மேற்கொண்டு வருகிறோம்.

    மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களின் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று கும்பாபிஷேகம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்திலேயே முதல் முறையாக கண்டன் விளை பகுதியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏழை பெண்கள் சுய உதவி தொழில் செய்வதற்கு முன்வர வேண்டும். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாறுவோம் என்ற உறுதிமொழியினை பொது மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் எடுத்து கொண்டார்.

    கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இடையிலான போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப்ப தக்கமும், மும்முறை தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்று பழைய சாதனையை முறியடித்த அபிநயாவுக்கு நுள்ளிவிளை ஊராட்சி சார்பில் ரூ.20 ஆயிரத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 ஆண்டுகளில் 4,312 பெண்களுக்கு கருக்கலைப்பு, 11,830 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தகவல் அறியும் சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி, மதுரை அரசு மருத்துவ மனையில் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு நடந்துள்ளது? எத்தனை பேர் குடும் கட்டுப்பாடு செய்துள்ளனர்? எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன? என்பது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாக கேட்டிருந்தார்.

    இதற்கு மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்தது. அதில் கூறப்பட்டிருப்பதா வது:-

    மதுரை அரசு மருத்துவமனையில் 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் 4,312 பெண்க ளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 2022-ம் ஆண்டு மட்டும் அதிகமாக 1,413 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டுகளில் 11,830 பேர் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 3,216 பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த மருத்துவமனையில் 60 ஆயிரத்து 717 குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களில் 1,015 குழந்தைகள் இரட்டை யர்கள். 21 ஆயிரத்து 685 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

    மொத்த பிரசவத்தில் 64 சதவீதம் சுகப்பிரசவம் ஆகும். பிரசவத்தின் போது 197 தாய்மார்கள் இறந்துள்ளனர். 2021-ம் ஆண்டில் 69 பேர் பிரச வத்தின் போது அதிகபட்ச மாக இறந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை பாதி யாக குறைந்து 30 பேர் மட்டுமே இறந்தனர். 1,258 குழந்தைகள் பிரசவத்தின் போது இறந்தன. 2021 -ம் ஆண்டு 325 குழந்தை கள் அதிகபட்ச மாக இறந் துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×