search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது தார் மாடல் விலையை மாற்றி அமைத்து இருக்கிறது.
    • காரின் வேரியண்டுக்கு ஏற்ப விலை உயர்வு மற்றும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது தார் எஸ்யுவி மாடல் விலையை மாற்றி இருக்கிறது. தார் எஸ்யுவி வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு மற்றும் குறைக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா தார் AX வேரியண்ட் புதிய விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    எனினும், மஹிந்திரா தார் பெட்ரோல் AT, கன்வெர்டிபில் ஹார்டு டாப் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 678 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 271 குறைக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா தார் பெட்ரோல் MT மாடல் விலை ரூ. 5 ஆயிரத்து 711 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா தார் டீசல் வேரியண்ட் விலைகளும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டீசல் MT ஹார்டு டாப் வேரியண்ட் மற்றும் கன்வெர்டிபில் விலை முறையே ரூ. 28 ஆயிரத்து 278 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 096 உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போன்று மஹிந்திரா தார் டீசல் AT வேரியண்ட் கன்வெர்டிபில் மற்றும் ஹார்டு டாப் வேரியண்ட் விலை முறையே ரூ. 52 ஆயிரத்து 780 மற்றும் ரூ. 53 ஆயிரத்து 411 உயர்த்தப்பட்டு உள்ளது.

    முன்னதாக இதே மாதத்தில் மஹிந்திரா தார் நிற ஆப்ஷன்கள் மாற்றப்பட்டன. இத்துடன் மஹிந்திரா XUV700 விலைகளும் மாற்றப்பட்டன. அந்த வரிசையில் தான் தற்போது தார் மாடல் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிராண்ட் விட்டாரா மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.
    • இந்த மாடல் பெட்ரோல் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை செப்டம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இந்த மாடல் பெட்ரோல் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. புதிய கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காரை வாங்க இதுவரை சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    புதிய கிராண்ட் விட்டாரா மாடல் மொத்தத்தில் ஆறு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் நான்கு வேரியண்ட்கள் ஸ்டாண்டர்டு பெட்ரோல், இரு வேரியண்ட் ஸ்டிராங் ஹைப்ரிட் வடிவில் இடம்பெற்றுள்ளன. புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா டாப் எண்ட் மாடலுடன் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது. இதன் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் முன்புற டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது.

    இதன் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் வேரியண்ட் 1.5 லிட்டர் K15 டூயல்ஜெட் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் எர்டிகா மற்றும் XL6 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் AC சின்க்ரோனஸ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த செட்டப் 114 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் G4 புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட 4WD வேரியண்டிற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அல்டுராஸ் G4 புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அல்டுராஸ் மாடல் விலை ரூ. 30 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் 2WD ஹை என அழைக்கப்படுகிறது. இந்த வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த 4WD மாடலுக்கு மாற்றாக அமைகிறது.

    தற்போதைய 4WD வேரிண்ட் உடன் ஒப்பிடும் போது மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை வேரியண்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் நீக்கப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் காரணமாக அல்டுராஸ் G4 விலை தற்போது ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை குறைந்து இருக்கிறது. அல்டுராஸ் G4 4WD வேரியண்ட் விலை தற்போது ரூ. 31 லட்சத்து 88 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் 2WD வேரியண்ட் விலை ரூ. 30 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை வேரியண்ட் ஹெச்ஐடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லைட்கள், கார்னரிங் வசதி, 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், டிண்ட் செய்யப்பட்ட கிளாஸ், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங், 8 ஏர்பேக், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூப் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 178 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது.
    • போக்ஸ்வேகன் கார்களின் விலை உயர்வு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது.

    ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான போக்ஸ்வேகன் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் போக்ஸ்வேகன் நிறுவன கார் மாடல்கள் விலை 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என போக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

    இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் சந்தை பங்குகளை அதிகப்படுத்தியதில் டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்கள் முக்கிய பங்காற்றி உள்ளன. எனினும், தற்போதைய விலை உயர்வு போக்ஸ்வேகன் வாகன விற்பனையை அதிகப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மற்றும் விர்டுஸ் செடான் மாடல்கள் அந்நிறுவனத்தின் இந்தியா 2.0 வியாபார யுக்தியின் அங்கமாக அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் MQB-AO IN பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செடான் பிரிவில் பெரிய மாடலாக விர்டுஸ் உருவாகி இருக்கிறது. இத்துடன் சிறப்பான வீல்பேஸ் கிடைத்துள்ளது.

    டைகுன் மாடல் அளவீடுகளை பொருத்தவரை 4221 மில்லிமீட்டர் நீளம், 1760 மில்லிமீட்டர் அகலம், 1612 மில்லிமீட்டர் உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் 2651 மில்லிமீட்டர் ஆகும். அம்சங்களை பொருத்தவரை டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்களில் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங் பேட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேடிக் வைப்பர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ வைப்பர் மற்றும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் கேமோ எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் மூலம் டாடா பன்ச் முதலாம் ஆண்டு விழாவை டாடா மோட்டார்ஸ் கொண்டாடுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் கேமோ எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா பன்ச் கேமோ எடிஷன் விலை ரூ. 6 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பன்ச் கேமோ எடிஷன் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய கேமோ எடிஷன் மாடல் டாடா பன்ச் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    டாடா பன்ச் கேமோ எடிஷன் மாடலின் வெளிப்புறம் போலியேஜ் கிரீன் நிறம் மற்றும் டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் (பியானோ பிளாக் மற்றும் ப்ரிஸ்டைன் வைட்) கிடைக்கிறது. இந்த காரில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், கேமோ பேட்ஜிங் சார்கோல் நிற அலாய் வீல்கள், ஃபாக் லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    காரின் உள்புறம் மிலிட்டரி கிரீன் இன்சர்ட்கள், கமோபிளேக் செய்யப்பட்ட சீட் கவர்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய டாடா பன்ச் கேமோ எடிஷன் மாடலிலும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது.
    • புது மைல்கல் யூனிட் அந்நிறுவன ஆலையில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் உற்பத்தியில் நான்கு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. டாடா நெக்சான் உற்பத்தி துவங்கிய ஐந்து ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது.

    2017 செப்டம்பர் மாத வாக்கில் டாடா நெக்சான் உற்பத்தி துவங்கயது. உற்பத்தி துவங்கிய முதல் 15 மாதங்களிலேயே நெக்சான் மாடல் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. அதன் பின் மற்றொரு ஆண்டு மற்றும் 11 மாதங்களில் 2 லட்சம் யூனிட்கள் மைல்கல்லை நெக்சான் எட்டியது.

    இதைத் தொடர்ந்து அடுத்த எட்டே மாதங்களில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்தது. மூன்று லட்சம் யூனிட்களை கடந்த ஏழு மாதங்களில் நெக்சான் மாடல் நான்கு லட்சம் யூனிட்களை கடந்து விட்டது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடல் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. சர்வதேச NCAP சோதனையில் இத்தகைய புள்ளிகளை பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமையை டாடா நெக்சான் வைத்திருக்கிறது.

    டாடா நெக்சான் எஸ்யுவி மாடலில் பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார் கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், குரூயிஸ் கண்ட்ரோல் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் XC60 மற்றும் XC90 என இரு கார்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இரண்டு புதிய வால்வோ கார்களிலும் பெரும்பாலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

    வால்வோ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய XC60 மற்றும் XC90 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் XC40 பேஸ்லிப்ட், 2023 வால்வோ S90 போன்ற மாடல்களையும் வால்வோ அறிமுகம் செய்து இருக்கிறது. 2023 வால்வோ XC60 மாடலின் விலை ரூ. 65 லட்சத்து 90 ஆயிரம், என துவங்குகிறது. வால்வோ XC90 மாடல் விலை ரூ. 94 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வால்வோ XC60 மாடலில் முற்றிலும் புது கிரில், ஹெட்லேம்ப், புது மாற்றம் செய்யப்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஆண்ட்ராய்டு சார்ந்த ஒஎஸ், டச் ஸ்கிரீன், 1100 வாட் போவர்கள், வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், ADAS அம்சம், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிபையர், பானரோமிக் சன்ரூப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வால்வோ XC90 மாடலில் மேம்பட்ட ஏர் பியுரிபையர், PM 2.5 பில்ட்டர், ஆண்ட்ராய்டு சார்ந்த டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பில்ட்-இன் கூகுள் சேவைகள், ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 19 ஸ்பீக்கர் போவர் மற்றும் வில்கின்ஸ் ஸ்டீரியோ சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்கு இந்த மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், 360 டிகிரி கேமரா, லேன் கீப் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய வால்வோ XC90 மாடலில் 2.0 லிட்டர் என்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 300 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    வால்வோ XC60 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோவ்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய XC60 மாடல் ஆடி கியூ5, பிஎம்டபிள்யூ X3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • வால்வோ நிறுவனத்தின் XC40 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த எஸ்யுவி 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    வால்வோ கார்ஸ் இந்தியா பேஸ்லிப்ட் செய்யப்பட்ட XC40 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 43 லட்சம் 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் B4 அல்டிமேட் எனும் பெயரில் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.


    புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் ஆர் டிசைன் செய்யப்பட்ட கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 18 இன்ச் 5-ஸ்போக் சில்வர், அலாய் வீல்கள், பிளாக் ஸ்கிட் பிளேட்கள், ORVM-கள், ரூப் ரெயில்கள் மற்றும் இண்டகிரேடெட் பாக்ஸ் டெயில் பைப் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி க்ரிஸ்டல் வைட், ஜார்ட் புளூ, பியுஷன் ரெட், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் மைக்ரோ எஸ்யுவி மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய டாடா பன்ச் மாடல் கேமோ கிரீன் நிற பெயிண்ட் கொண்டிருக்கும் என டீசர்களில் தெரியவந்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எஸ்யுவி மாடல்களின் ஜெட் எடிஷனை சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது டாடா பன்ச் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் கேமோ எடிஷன் என அழைக்கப்படும் என தெரிகிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் கேமோ பேட்ஜ்கள், கேமோ கிரீன் வெளிப்புற பெயிண்ட், ORVM-கள், அலாய் வீல், ரூப் உள்ளிட்டவைகளில் கிளாஸ் பிளாக் அக்செண்ட் செய்யப்பட்டு உள்ளது. உள்புறம் காண்டிராஸ்ட் நிற இன்சர்ட், லெதர் இருக்கை மேற்கவர்களில் புதிய தீம் செய்யப்பட்டு இருக்கிறது.

     இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய கேமோ எடிஷன் மாடல்: 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    தற்போது டாடா பன்ச் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 93 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய டாடா பன்ச் கேமோ எடிஷன் மாடல் நாளை (செப்டம்பர் 22) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • இரு கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் சில தினங்களுக்கு முன் எம்ஜி ஆஸ்டர் மாடல் விலையை உயர்த்தியது. தற்போது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக எம்ஜி மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இம்முறை இரு கார்களின் விலை ரூ. 28 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    விலை உயர்வின் படி எம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் டூயல் டோன் வேரியண்ட்கள் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர காரின் மற்ற வேரியண்ட்கள் விலை ரூ. 25 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 28 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     எம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் பெட்ரோல் என்ஜின் 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியுன் செய்யப்பட்டு உள்ளது. டீசல் என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல், CVT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசரையும் எம்ஜி மோட்டார் வெளியிட்டு உள்ளது.

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் விலையை மாற்றி இருக்கிறது.
    • இரு கார்களிலும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை மட்டும் மாற்றப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி மஹிந்திரா பொலிரோ B4 மற்றும் B6 (O) வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 701 மற்றும் ரூ. 22 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போன்று பொலிரோ நியோ N4, N10 மற்றும் N10(O) மாடல்கள் விலை முறையே ரூ. 18 ஆயிரத்து 800, ரூ. 21 ஆயரத்து 007 மற்றும் ரூ. 20 ஆயிரத்து 501 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வு தவிர இரு மாடல்களின் அம்சங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தோற்றத்தில் இரு கார்களிலும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய லோகோ மட்டும் இடம்பெற்று உள்ளது. காரின் ஸ்டீரிங் வீல், முன்புற கிரில், வீல் ஹப் கேப்கள் மற்றும் டெயில் கேட் உள்ளிட்ட இடங்களில் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா பொலிரோ மாடல் விலை ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. பொலிரோ நியோ மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. மஹிந்திரா பொலிரோ நியோ டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா பொலிரோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 75 ஹெச்பி பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது XC40 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய வால்வோ காரில் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் XC40 பேஸ்லிப்ட் மற்றும் XC90 பேஸ்லிப்ட் மாடல்களை செப்டம்பர் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு கார்கள் அறிமுகமாகும் முன்பே புதிய XC40 பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    தற்போது லீக் ஆன தகவல்களின் படி புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 12.3 இன்ச் அளவில் இரண்டாம் தலைமுறை டிரைவர் டிஸ்ப்ளே, க்ரிஸ்டல் கியர் நாப், இரண்டு டைப் சி போர்ட்கள், புதிய இண்டீரியர் தீம், ஆக்டிவ் நாய்ஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிபையர், மல்டி பில்ட்டர், ஆட்டோ டிம்மிங் ORVM-கள், ஆப்பிள் கார்பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.


    புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் டிரைவ் மோட் ஸ்விட்ச்கள், டூயல் டோன் ஆப்ஷன், ரோட் சைன் விவரங்கள், ஹெட்லேம்ப் ஸ்டேடிக் பெண்டிங் பன்ஷன் உள்ளிட்டவை நீக்கப்படுகிறது. புதிய மாடல் க்ரிஸ்டல் வைட், ஜார்ட் புளூ, பியுஷன் ரெட், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2022 வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி மாடல் ஒற்றை வேரியண்டில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த கார் வால்வோ XC40 அல்டிமேட் B4 மைல்டு ஹைப்ரிட் எனும் பெயரில் கிடைக்கிறது.

    ×