search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • இந்திய சந்தையில் ஆல்டோ மாடல் 2000-ஆவது ஆண்டு, முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
    • 2005 முதல் 2018 வரை நாட்டின் பிரபல கார் மாடலாக ஆல்டோ விளங்கி வந்தது.

    இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி விரைவில் ஆல்டோ K10 ஹேச்பேக் காரை மீண்டும் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தான் மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆல்டோ மாடல் சில வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்தியது.

    2020 வாக்கில் பி.எஸ்.6 புகை விதிகள் அமலுக்கு வந்த பின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஆல்டோ K10 மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடலுக்கு இன்னும் வரவேற்பு இருப்பதோடு, இதற்கு போட்டியாக அதிக மாடல்கள் இல்லாத காரணத்தால், மீண்டும் இதனை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


    ஆல்டோ மாடல்களை மாற்றியமைத்து வரும் மாருதி சுசுகி நிறுவனம் சத்தமின்றி Std, LXi மற்றும் LXi CNG வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. மூன்று வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதை அடுத்து ஆல்டோ 800சிசி மாடல் விலை தற்போது ரூ. 3 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது ஆல்டோ மாடல் LXi (o) வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    ஆல்டோ K10 மாடலை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த முயற்சிக்கும். தற்போது ஆல்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ மாடல்கள் சேர்ந்து ஆண்டுக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகி வருகின்றன. இன்று வரை மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக ஆல்டோ விளங்குகிறது.

    இந்திய சந்தையில் ஆல்டோ மாடல் 2000-ஆவது ஆண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதல் தலைமுறை மாடல் 2012 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரண்டாம் தலைமுறை ஆல்டோ மாடல் அதன் பின் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் இதுவரை சுமார் 43 லட்சம் ஆல்டோ ஹேச்பேக் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. 2005 முதல் 2018 வரை நாட்டின் பிரபல கார் மாடலாக ஆல்டோ விளங்கி வந்தது.

    • டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
    • இந்த முறை மூன்று கார்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த முறை கார் மாடல்கள் விலை ரூ. 27 ஆயிரத்தில் துவங்கி ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    டொயோட்டா வெல்பயர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பார்ச்சூனர் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. டொயோட்டா கேம்ரி மாடலின் விலை ரூ. 90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.

    இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு ரூ. 86 ஆயிரம் வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தான் டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. வரும் மாதங்களில் இது பற்றிய தகவல் வெளியாகும்.

    • ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடல் உற்பத்தி குறித்து புது அப்டேட் வெளியிட்டு உள்ளது.
    • இந்த மாடல் உலகம் முழுக்க ஒன்பது பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் கைகர் மாடல் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது. ரெனால்ட் கைகர் 50 ஆயிரமாவது யூனிட் சென்னையில் உள்ள ரெனால்ட் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. உற்பத்தியில் புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் ரெனால்ட் நிறுவனம் கைகர் மாடலை புதிதாக ஸ்டெல்த் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே இந்தியாவில் அறிமுகமான மூன்றாவது கார் மாடலாக ரெனால்ட் கைகர் இருந்தது. இந்த மாடலின் சர்வதேச வெளியீடு இந்தியாவில் தான் நடைபெற்றது. தற்போது இந்த மாடல் தென் ஆப்ரிக்கா, இந்தோனேசியா, கிழக்கு ஆப்ரிக்கா, சிச்சில்ஸ், மொரிஷியஸ், பூட்டான், பெர்முடா மற்றும் புரூனெய் போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.


    "தலைசிறந்த டிசைன், ஸ்மார்ட் அம்சங்கள், அதீத பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் என அனைத்து பிரிவுகளிலும் சிறந்த மதிப்பீட்டை கொண்டிருக்கும் ரெனால்ட் கைகர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் அதிக போட்டி நிறைந்த காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் 50 ஆயிரம் யூன்ட்கள் உற்பத்தியாகி இருக்கிறது."

    "இந்திய சந்தையில் எங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் மாடல்களில் ரெனால்ட் கைகர் ஒன்று. ரெனால்ட் கைகர் மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறுவதோடு இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் பிராண்டு வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கிறோம்," என்று ரெனால்ட் இந்தியா சி.இ.ஒ. மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் மமலிப்பல்லே தெரிவித்தார்.

    • ஜாகுவார் நிறுவனம் சில தினங்களுக்கு முன் தனது F பேஸ் SVR எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • இது ஜாகுவார் நிறுவனத்தின் முதல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும்.

    ஜாகுவார் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த F பேஸ் SVR எடிஷன் 1998 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இது ஜாகுவார் ஹை பெர்பார்மன்ஸ் எஸ்.யு.வி.-யின் முதல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இந்த மாடலை எஸ்.வி. பிஸ்போக் வல்லுனர்கள் உருவாக்கினர் மொத்தத்தில் 394 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

    இவை அனைத்தும் ஜாகுவார் ரேசிங் பாரம்பரியத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 1998 ஆம் ஆண்டு சர்வதேச ஸ்போர்ட்ஸ் ப்ரோடோடைப் சாம்பியன்ஷிப் பட்டத்தை XJR-9 மாடல் வென்றதற்கு பெருமை சேர்க்கும் வகையில், புதிய லிமிடெட் எடிஷன் மாடல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.


    லிமிடெட் எடிஷன் மாடலில் விசேஷமான பார்முலேட் செய்யப்பட்ட மிட்நைட் அம்திஸ்ட் கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் ஆப்ஷனல் ஷேம்பெயின் கோல்டு சாட்டின் ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் உள்ளன.மேலும் சன்செட் கோல்டு சாட்டின் எக்ஸ்டீரியர், இண்டீரியர் டீடெயிலிங் 'One of 394' எஸ்.வி. பிஸ்போக் கமிஷனிங் கிராபிக் இடம்பெற்று இருக்கிறது.

    மேலும் சன்செட் கோல்டு சாட்டின் ஜாகுவார் லீப்பர், டெயில்கேட்டில் ஸ்க்ரிப்ட், முன்புற விங் பேனல் மீது லேசர் இட்ச் செய்யப்பட்ட எடிஷன் 1998 லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்த மாடலில் ஜாகுவார் நிறுவனத்தின் 5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை நான்கு நொடிகளில் எட்டி விடும்.

    • தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோர் மீதும் மோதியது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நீர்முளை கடைத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை கடைத்தெருவை சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். இருவருடைய மகள் நூரா பாத்திமா(வயது 12). தாயார் பாத்திமா பீவி(70).

    நேற்று இரவு நீர்முளை கடைத்தெருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பாத்திமா பீவி தனது பேத்தி நூரா பாத்திமாவுடன் சென்று விட்டு வீட்டுக்கு நடந்தது வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நீர்முளை கடைத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. பின்னர் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோர் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாட்டி-பேத்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோரின் உடல்களை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்தில் உயிரிழந்த நூரா பாத்திமா அந்த பகுதியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதுதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் வாய்மேடு அருகே உள்ள ராஜன்கட்டளை பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலக சாதனை செய்வதற்கு மன தைரியம் அவசியம் என்றும், உனக்கு உடல் தைரியம் மன தைரியத்தோடு தலைமுடியும் உறுதியாக இருக்கிறது.
    • 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 10 செகண்டில் இழுத்துச் சென்று வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா. வயது 12. இவர் நேற்று தனது தலைமுடியில் 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 10 செகண்டில் இழுத்துச் சென்று வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பும் சில உலக சாதனை படைத்துள்ளார், தற்போதைய சாதனையை இந்திய அளவில் இவர் ஒருவர் மட்டுமே செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று உலக சாதனை புரிந்த மாணவி சம்யுத்தாவை நேரில் வரவழைத்து வாழ்த்திய தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன். மேலும் மாணவியிடம் பேசும் பொழுது இது போன்ற உலக சாதனை செய்வதற்கு மன தைரியம் அவசியம் என்றும், உனக்கு உடல் தைரியம் மன தைரியத்தோடு தலைமுடியும் உறுதியாக இருக்கிறது என்று பாராட்டி பொன்னாடை போர்த்தி காசோலை கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்.

    இதல் மாணவியுடன் அவரது பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் ஆஷா தம்பதியினர், கராத்தே மாஸ்டரும் இந்த உலக சாதனை பயிற்சியாளருமான இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பயிற்சியாளர் இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

    • கேரளாவுக்கு அரசின் மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கடத்தல்
    • சந்தேகத்திற்கிடமாக செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசின் மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கடத்தப்படுவதால் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு சுனில் மற்றும் ஏட்டு ரமேஷ் ஆகியோர் அம்சி சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் காரில் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 10 கேன்களில் 350 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கார் மற்றும் மண்எண் ணையை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்த போது, தூத்தூர் பகுதி ஆன்டனி சேவியர் (வயது 41) என்பவர் முள்ளுர்துறை பகுதி அலக்சாண்டர் என்பவரிடம் இருந்து வாங்கி கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது.

    இதேபோல் பார்வதி புரத்தில் வைத்து ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 35 லிட்டர் கொள்ளள வுள்ள 5 கேன்களில் 175 லிட்டர் மானிய விலை மண்எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் என்ற இடத்தை சேர்ந்த அவுசேப் (31) என்பவர் இனயம் புத்தன்துறை பகுதி சொப்னா என்பவரிடம் இருந்து மண்எண்ணை வாங்கியது தெரிய வந்தது.

    புதுக்கடை போலீசார் பறிமுதல் செய்த வாக னங்கள், மண்எண்ணை போன்றவற்றை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வயலாதேவியிடம் ஒப்படைத்தனர்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் இருவித டியூனிங்கில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது C3 மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த மாடலின் விலை விவரங்கள் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தியாவில் சிட்ரோயன் C3 மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் - லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    C5 ஏர்கிராஸ் எஸ்.யு.வி.யை தொடர்ந்து சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது மாடல் சிட்ரோயன் C3 ஆகும். இந்த மாடல் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், டூ-டோன் பெயின்ட், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாஸ்டிக் கிளாசிங் கொண்டுள்ளது. புதிய சிட்ரோயன் C3 நான்கு மோனோ டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.


    காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், லெதர் இருக்கை கவர்கள், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், மேனுவல் HVAC சிஸ்டம் கொண்டிருக்கிறது.

    புதிய சிட்ரோயன் C3 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த என்ஜின்கள் முறையே 81 ஹெச்.பி. மற்றும் 109 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை அறிமுகம் செய்தது.
    • இந்த கார் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா, நேற்று தான் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் நியோ டிரைவ் மற்றும் செல்ஃப் சார்ஜிங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நியோ டிரைவ் மாடல் நான்கு வேரியண்ட்கள் - E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. செல்ப் சார்ஜிங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் மாடல் S. G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.


    ஹைப்ரிட் பவர்டிரெயினில் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிங்கில் எலெக்ட்ரிக் மோட்டார், லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்த என்ஜின் 87 ஹெச்.பி. பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜின் மற்றும் மோட்டார் ஒன்றிணைந்த செயல்திறன் 114 ஹெச்.பி. ஆக உள்ளது. இத்துடன் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் யூனிட் 100.5 ஹெச்.பி. திறன், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசைய வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    • பி.எம்டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்தது.
    • இந்த மாடல் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் 6 சீரிஸ் 50 ஜாரெ எம் எடிஷன் காரை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் M பிரிவு 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தான் இந்த ஸ்பெஷல் ஜாரெ எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

    முன்னதாக பி.எம்டபிள்யூ. 3 சீரிஸ் ஜாரெ எம் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஜாரெ ஸ்பெஷல் எடிஷனில் இரண்டாவது மாடலாக பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் ஜாரெ எம் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் 50 ஜாரெ எம் எடிஷனில், பி.எம்.டபிள்யூ. பாரம்பரிய மோட்டார் ஸ்போர்ட் லோகோவை தழுவிய M சின்னம் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இது வழக்கமான பி.எம்.டபிள்யூ. லோகோவுக்கு பதிலாக காரின் இருபுறங்களிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் டான்சனைட் புளூ மெட்டாலிக், M கார்பன் பிளாக், பெர்னினா கிரே ஆம்பர் எபெக்ட் மற்றும் மினரல் வைட் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 2 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 258 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டி விடும். 

    • கியா நிறுவனத்தின் 2022 செல்டோஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய செல்டோஸ் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    2022 கியா செல்டோஸ் மாடல் டிஜிட்டல் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. புசான் மோட்டார் விழாவில் வெளியாக இருந்த நிலையில், இந்த டிஜிட்டல் அறிமுகம் நடைபெற்று இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய கியா செல்டோஸ் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    இந்தியாவில் கியா செல்டோஸ் சி செக்மண்ட் எஸ்.யு.வி. வெற்றிகர மாடலாக விளங்குகிறது. சமீபத்தில் கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட நிலையில், இதன் அப்டேட் செய்யப்பட்ட வேரியண்ட் தற்போது அறிமுகமாகிறது. இந்த மாடல் மேலும் அதிக வாடிக்கையாளர்கள் புது காரை வாங்க செய்யும்.


    முன்னதாக கியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி புதிய மேம்பட்ட மாடலும், பேஸ்லிப்ட் மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. எனினும், 2022 மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், பெரிய முன்புற கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டி.ஆர்.எல்.களின் டிசைன் மாற்றப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடலில் 18 இன்ல் அளவில் புதிய அலாய் வீல்கள், வீல் ஆர்ச்களை முழுமையாக ஆக்கிரமித்து, காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை எளிதில் எடுத்துக் கொடுக்கிறது. பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப், ஃபுல் விட்த் எஸ்.இ.டி. லைட் பார் உள்ளது. இதன் நடுவே கியா லோகோ உள்ளது. 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 பிரெஸ்ஸா மாடல் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் கொண்டிருக்கிறது.
    • 2022 பிரெஸ்ஸா மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் 2022 பிரெஸ்ஸா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிரெஸ்ஸா மாடல் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா இருந்து வருகிறது. தற்போது இதன் மேம்பட்ட மாடல் மாருதி சுசுகி பிரெஸ்ஸா பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனைாகி உள்ளன. புதிய 2022 பிரெஸ்ஸா மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் வெளிப்புறம் அழகிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் புல் பார் எபெக்ட், பக்கவாட்டுகளில் புதிய அலாய் வீல்கள் உள்ளன. ரூஃப் பகுதியில் புளோட்டிங் எபெக்ட் உள்ளது.


    இதன் டெயில்கேட் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் முந்தைய விட்டாரா பிரெஸ்ஸாவை விட சற்றே பெரியதாக காட்சியளிக்கிறது. கேபின் பகுதியில் 9 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஏ.சி. வெண்ட்கள் டேஷ்போர்டின் கீழ் மாற்றப்பட்டு இருக்கிறது.

    புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் K12C பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கூடுதலாக மைல்டு ஹைப்ரிட் மோட்டார் உள்ளது. இது 3 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் ஆப்ஷன், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் கியா சொனெட், டாடா நெக்சான், ஹூண்டாய் வென்யு, நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×