search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது மாடல்களின் எண்ணிக்கையை குறைக்கும் சூழல் ஏற்படலாம் என தெரிவித்து இருக்கிறது.
    • இதற்கான காரணம் பற்றியும் புது தகவல் வெளியாகி உள்ளது.

    அரசு திட்டங்கள் காரணமாக சிறிய கார்கள் பயனற்று போகும் பட்சத்தில் அவற்றின் விற்பனை நிறுத்தப்படும் என மாருதி சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்து இருக்கிறார்.

    இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பயணிகள் வாகனங்களில் ஆறு ஏர்பேக் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்ற விதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார்.


    இது போன்ற திட்டங்கள் சிறு கார்களை பயனற்று போகச் செய்யும் பட்சத்தில் அவற்றின் விற்பனையை மாருதி சுசுகி நிறுத்தி விடும். இதன் காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும் என கூறப்பட்டது. எனினும், மாருதி சுசுகி நிறுவன லாபம் சிறிய கார்களின் விற்பனையை சார்ந்து இருக்கவில்லை என தெரிவித்தார்.

    "எங்களின் லாபம் சிறிய கார்களை நம்பி இருக்கவில்லை. மக்கள் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளனர். நாங்கள் ஆல்டோ போன்ற மாடல்களை லாபம் இன்றி தான் விற்பனை செய்கிறோம். கார் சந்தையில் இருந்து சிறிய கார்கள் மறையும் பட்சத்தில் இந்த துறை வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விடும்," என ஆர்.சி. பார்கவா தெரிவித்தார். 

    • இந்தியாவில் பாரத் NCAP திட்டத்திற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    • இந்த திட்டம் அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கிறது.

    இந்தியாவில் பாரத் NCAP திட்டத்திற்கு அனுமதி கோரும் வரைவு மசோதாவுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி அனுமதி அளித்தார். இந்த திட்டம் ஏபர்ல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. இந்த திடத்தின் கீழ் பாதுகாப்பு சோதனையில் கார் மாடல்கள் பெறும் புள்ளிகள் அட்டபிடையில் அவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.

    தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய விதிமுறைகள் மற்றும் டிரைவிங் நிலைகளை கருத்தில் அடிப்படையாக கொண்டு தான் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட உள்ள. பாரத் NCAP திட்டம் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.


    பாரத் NCAP பாதுகாப்பு சோதனையானது நுகர்வோர் தளம் போன்று உருவாக்கப்படும். இது வாடிக்கையாளர்கள், பாதுகாப்பான கார்களை அவை பெற்று இருக்கும் ஸ்டார் ரேட்டிங் கொண்டு தேர்வு செய்ய உதவும். மேலும் இது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்.

    பயணிகள் பாதுகாப்பு மட்டுமின்றி இந்திய ஆட்டோமொபைல் மாடல்களின் ஏற்றுமதி தரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தான் இந்திய கார்களுக்கான ஸ்டார் ரேட்டிங் முறை அவசியம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய நிறுவனங்கள் உள்நாட்டு பரிசோதனை மையங்களில் தங்களின் வாகனங்களை சோதனை செய்ய முடியும்.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்சார்பு கொள்கையை நிலைநாட்ட பாரத் NCAP முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தை உலகளவில் முதலிடத்தை நோக்கி பயணிக்கும். பாரத் NCAP பாதுகாப்பு சோதனை இண்டர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட வாகனங்கள் மட்டும் இன்றி சி.என்.ஜி. மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மேற்கொள்ளப்படும்.

    • மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ லாபின் LC பெயரில் புது மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இதில் ஆல் வீல் டிரைவ் வசதி உள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புகழ் பெற்ற ஹேச்பேக் மாடலாக மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ விளங்குகிறது. இந்தியாவில் அறிமுகமானது முதலே ஆல்டோ மாடல் அமோக வரவேற்பை பெற்று அசத்தியது. இந்தியாவில் ஆல்டோ காரின் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

    ஜப்பான் நாட்டில் மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ லாபின் LC மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் அழகிய ரெட்ரோ தோற்றம் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆல்டோ லாபின் LC அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


    புதிய சுசுகி ஆல்டோ லாபின் LC மாடலில் 660சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் 63 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும். ஜப்பானில் தற்போது அறிமுகமாகி இருக்கும் ஆல்டோ லாபின் LC மாடலின் அம்சங்கள் இந்தியாவில் கிடைக்கும் ஆல்டோ மாடலை முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

    ஆல்டோ லாபின் LC மாடலின் முன்புற இருக்கைகளில் ஹீட்டிங் வசதி உள்ளது. மேலும் ஆட்டோமேடிக் ஏ.சி., அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் டில்ட் வசதி கொண்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கீலெஸ் எண்ட்ரி, புஷ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் அம்சம் உள்ளது.

    காரின் உள்புறம் 7 இன்ச் டிஜிட்டல் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் பார்கிங் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள டிரைவர் டிஸ்ப்ளேவில் மைலேஜ், காரில் இருக்கும் எரிபொருள் கொண்டு எவ்வளவு தூரம் செல்ல முடியும் உள்பட பல்வேறு விவரங்களை பார்க்க முடியும்.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ N இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ N மாடலை அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11.99 லட்சம் என துவங்குகிறது. இந்த மாடலின் முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைன் மற்றும் மஹிந்திரா விற்பனை மையங்களில் துவங்க இருக்கிறது. வினியோகம் பண்டிகை காலக்கட்டத்தில் துவங்க இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் - Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என மொத்தம் ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் டாடா ஹேரியர், டாடா சஃபாரி, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஹூண்டாய் அல்கசார் போன்ற மாடல்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமைகிறது.


    விலை விவரங்கள்:

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 பெட்ரோல் மேனுவல் ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 டீசல் மேனுவல் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 பெட்ரோல் மேனுவல் ரூ. 13 லட்சத்து 49 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 டீசல் மேனுவல் ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z6 டீசல் மேனுவல் ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 பெட்ரோல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 டீசல் மேனுவல் ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8L பெட்ரோல் மேனுவல் ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8L டீசல் மேனுவல் ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம்

    புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் - டார்மேக், ஸ்னோ, மட் மற்றும் டெசர்ட் என பல்வேறு டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் மூன்றாம் தலைமுறை பாடி ஆன் ஃபிரேம் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது காருக்கு ஆஃப் ரோடிங் வசதி மற்றும் அதிவேகமாக பயணிக்கும் போதும் சிறப்பான கண்ட்ரோல் வழங்குகிறது.

    இந்த மாடலில் எம் ஸ்டேலியன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 பி.எஸ். பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் எம் ஹாக் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 175 பி.எஸ். பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோ கியர்பாக்ஸ், ஷிப்ட் பை வயர் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • டொயோட்டா நிறுவனம் விரைவில் புது ஹைரைடர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடல் டொயோட்டா நிறுவனத்தின் ஹைப்ரிட் எஸ்.யு.வி. ஆகும்.

    டொயோட்டா நிறுவனம் புதிய ஹைப்ரிட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் ஹைரைடர் என அழைக்கப்படுகிறது. புதிய டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் மாடல் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புது கார் மட்டுமின்றி அதற்கான டீசரையும் டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி காரின் முன்புறம் தெளிவாக காட்சி அளிக்கிறது. அதன்படி டொயோட்டா ஹைரைடர் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன் வழங்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்படும் பல்வேறு கார் மாடல்களில் இது வழக்கமான அம்சமாக மாறி விட்டது. இத்துடன் எல்.இ.டி. டே டைம் ரன்னிங் லைட்கள் கிரிலின் மேல்புறத்தில் உள்ளது.


    டொயோட்டா ஹைரைடர் மாடலின் ஹெட்லேம்ப், முன்புற பம்ப்பரின் கீழ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் பௌக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் செண்ட்ரல் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கார் டூயல் டோன் பெயிண்ட் ஃபினிஷ்-இல் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய டொயோட்டா கார் பெங்களூரு ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மேலும் இதே காரின் சுசுகி பிராண்டிங் கொண்ட வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது. டொயோட்டா ஹைரைடர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படலாம். 

    • சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்பு பகுதியில் தலைகீழாக கவிழ்ந்தது.
    • இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

    மதுரை

    மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு மாடக்குளம் பெரியார் நகர் வழியாக, பழங்காநத்தம் நோக்கி ஒரு சிவப்பு நிற கார் அதிவேகமாக சென்றது.

    அப்போது மாணவர் விடுதி அருகே நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. எனவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது கார் டிரைவர் சிறிய காயங்களுடன் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே டிரைவர் யாருக்கோ போன் செய்ய, அடுத்த 10 நிமிடங்களில் நண்பர்கள் குழு புறப்பட்டு வந்தது. அவர்கள் போலீசார் வருவதற்குள் காரை அப்புறப்படுத்தி, புறப்பட்டுச் சென்று விட்டனர்.

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புது காரை அறிமுகம் செய்தது.
    • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய M340i எக்ஸ்டிரைவ் 50 ஜாரெ எம் எடிஷன் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. காரின் விலை ரூ. 68 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் M பிரிவு 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. M340i எக்ஸ்டிரைவ் 50 ஜாரெ எம் எடிஷன் மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த என்ஜின் 387 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் எக்ஸ்டிரைவ் சிஸ்டம் ஸ்டாரண்டு அம்சமாக வழங்கப்படுகிறது.


    இந்த கார் டிராவிட் கிரே மற்றும் டான்சானைட் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் 50 ஜாரெ எம் எடிஷன் எலிமண்ட்களான ஹை-கிளாஸ் பிளாக் கிட்னி கிரில், ஜெட் பிளாக் விண்டோ சரவுண்ட், மிரர் கேப்கள் மற்றும் 19 இன்ச் M லைட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. காரின் உள்புறம் சென்சடெக்/அல்காண்ட்ரா ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆந்த்ரசைட் பி.எம்.டபிள்யூ. ரூஃப் லைனர், M லெதர் ஸ்டீரிங் வீல், M சீட் பெல்ட் மற்றும் பியானோ பிளாக் நிற ட்ரிம் ஸ்ட்ரிப்கள் வழங்கப்படுகிறது.

    புதிய M சீரிஸ் காரை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆப்ஷனல் 50 ஆண்டுகள் M பேக்கேஜ்கள் - மோட்டார்ஸ்போர்ட் பேக் மற்றும் கார்பன் ஃபைபர் பேக் வடிவில் வழங்குகிறது. இவை காரின் ஸ்போர்ட் தோற்றத்தை மேலும் மேம்படுத்தி காண்பிக்கிறது. 

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் மாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் இது நான்காம் தலைமுறை டக்சன் மாடல் ஆகும்.

    ஹூண்டாய் நிறுவனம் 2022 ஹூண்டாய் டக்சன் எஸ்.யு.வி. மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. புதிய ஹூண்டாய் டக்சன் எஸ்.யு.வி. மாடல் ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. எஸ்.யு.வி. மாடல்களுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், புதிய டக்சன் அமோக வரவேற்பு பெறும் என ஹூண்டாய் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

    சர்வதேச சந்தையில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டதகு. இதன் வடிவமைப்பு மற்றும் டிசைன் மூலம் இந்த மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவிலும் இந்த மாடல் சோதனை செய்யப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளது.


    புதிய மாடலின் வெளிப்புறம் முற்றிலும் புது எக்ஸ்டீரியர் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் புதிய 3D முன்புற கிரில், முன்புற பம்ப்பரில் செங்குத்தான எல்.இ.டி. ஹெட்லைட்கள் உள்ளன. இதன் முன்புற பம்ப்பரில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் உள்ளன. இவை காருக்கு ரக்கட் தோற்றத்தை வழங்குகின்றன.

    2022 ஹூண்டாய் டக்சன் மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 417 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் புத்தம் புதிய பிரெஸ்ஸா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரெஸ்ஸா மாடலை வாங்க முதல் நாளிலேயே 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பழைய பிரெஸ்ஸா மாடலை வாங்க முன்பதிவு செய்து இருப்பவர்கள், முன்பதிவை புதிய மாடலுக்கு மாற்றிக் கொள்ள முடியும். புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாடல் பிரெஸ்ஸா என்றே அழைக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும். இத்துடன் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.


    இதுதவிர புதிய மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என மாருதி சுசுகி அறிவித்து விட்டது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்தியாவில் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கு கியா சொனெட், ஹோண்டா WR-V, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்சான், ரெனால்ட் கைகர், நிசான் மேக்னைட் மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டி இருக்கிறது.
    • இந்த கார் CKD முறையில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும்.

    ஸ்கோடா ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் 2001 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் இந்தியாவில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல் எட்டியுள்ளது. இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 111 யூனிட்களை வினியோகம் செய்து இருக்கிறது.

    "ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அசத்தலான டிசைன், தொழில்நுட்பம், சவுகரியம் மற்றும் சிறப்பான டைனமிக்ஸ் கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் இந்த கார் தனக்கான பிரிவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.


    நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 26 லட்சத்து 85 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 2 லிட்டர், 4 சிலிண்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 600 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புற இருக்கையை மடித்து வைக்கும் போது பூட் ஸ்பேஸ் 1555 லிட்டர்களாக அதிகரித்துள்ளது.

    • ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் தனது 2022 வென்யூ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • புதிய வென்யூ மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலை வாங்க ஏற்கனவே 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையிவல், முன்பதிவு எண்ணிக்கை தற்போது 21 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பது.


    புதிய வென்யூ காரை முன்பதிவு செய்தவர்களில் மூன்றில் ஒருவர் டீசல் வேரியண்டை தேர்வு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் மூன்று வேரியண்ட்களில் தான் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. டீசல் என்ஜின் மிட் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. பேஸ் வேரியண்ட்கள் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் தான் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சத்து 32 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • பவானி அருகிலுள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் கார் அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சித்தோடு:

    சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளாராக இருப்பவர் சுரேஷ் (50) . இவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காரில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்றார். காரை டிரைவர் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கன்னிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (46) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கார் பவானி அருகிலுள்ள சித்தோடு, நசியனூர் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை கார் டிரைவர் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.‌ காரில் பயணம் செய்த சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் (50) காயத்துடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று இறந்த பச்சியப்பன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×