search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • கியா இந்தியா நிறுவனத்தின் சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் கியா சொனெட் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.
    • இந்த மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா சொனெட் மாடல் இந்திய சந்தையில் 1.5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. இந்தியாவில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் கியா இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 32 சதவீதம் கியா சொனெட் பிடித்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை அப்போது ரூ. 6 லட்சத்து 71 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். விற்பனைக்கு வந்த 12 மாதங்களில் கியா சொனெட் மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி அசத்தி இருந்தது.


    இந்திய சந்தையில் 2020 நிதியாண்டில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் கியா சொனெட் நான்காவது இடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களில் டாடா நெக்சான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற மாடல்கள் பிடித்தன.

    சில மாதங்களுக்கு முன் கியா நிறுவனம் தனது சொனெட் மற்றும் செல்டோஸ் மாடல்களை அப்டேட் செய்து இருந்தது. புது மாடல்களில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதிக உபகரணங்கள் வழங்கப்பட்டது. புதிய சொனெட் மாடல் விலை தற்போது ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்தியாவில் கியா சொனெட் மாடல் 83 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 120 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு iMT, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் அல்லது 7 ஸ்பீடு DCT போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M சீரிஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • இந்த மாடல் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஏழாம் தலைமுறை M5 மாடல் புதிய பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய M2 மாடல் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M2 மாடல் கடைசி முழுமையான இண்டர்னல் கம்பஷன் மாடல் ஆகும். இதே போன்று XM மாடல் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் முதல் M சீரிஸ் எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.


    புதிய பி.எம்.டபிள்யூ. M சீரிஸ் மாடல் 2024 வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. புதிய M5 சூப்பர் செடான் மாடல் வழக்கமான பெட்ரோல் என்ஜினில் இருந்து பிளக்-இன் ஹைப்ரிட் மாடலாக உருவெடுக்கிறது. புதிய ஹைப்ரிட் பவர்டிரெயின் அதிகபட்சம் 700 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும்.

    இந்த மாடலில் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 4.4 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 790 ஹெச்.பி. வரையிலான திறன் கொண்டது ஆகும். இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டீரிங் வீலில் பேடில் ஷிப்டர்கள், வேரியபில் எக்ஸ் டிரைவ், 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.
    • விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிரெஸ்ஸா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய மாடலின் பெயரில் இருந்து விட்டாரா-வை நீக்கி இருக்கிறது. மேலும் புதிய பிரெஸ்ஸா மாடலுக்கான டீசரையும் மாருதி சுசுகி வெளியிட்டு உள்ளது.


    புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலை வாங்க விரும்புவோர், அதனை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு அரினா ஷோரூம் மற்றும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. முன்னதாக 2020 வாக்கில் பிரெஸ்ஸா மாடல் அப்டேட் செய்யப்பட்ட நிலையில், இம்முறை அதிக மாற்றங்களுடன் அறிமுகமாகிறது.

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் மேம்பட்ட என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், 6 ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய பிரெஸ்ஸா மாடலில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் ஹைப்ரிட் கே சீரிஸ் என்ஜின் வழங்கப்படுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • அதற்குள் இந்த மாடலை வாங்க பலர் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஹூண்டாய் நிறுவனம் சில தினங்களுக்கு முன் தான் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஜூன் 3 ஆம் தேதி துவங்கியது. இந்த நிலையில், புதிய ஹூண்டாய் வென்யூ மாடலை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து உள்ளது.

    முன்பதிவு செய்தவர்களில் சுமார் 36 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆகும். எந்த வேரியண்ட் அதிக முன்பதிவை பெற்றது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், கார் முன்பதிவு தொடங்கிய இரண்டே வாரங்களில் சுமார் 15 ஆயிரம் முன்பதிவுகளை கடந்து இருக்கிறது.


    புதிய ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், D-கட் ஸ்டீரிங் வீல், 2 ஸ்டெப் ரிக்லைனிங் ரியர் சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவையை பத்து மொழிகளில் இயக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய வென்யூ மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் - 1.2 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், iMT யூனிட் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்பட்ட வென்யூ மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
    • வெளியீட்டுக்கு முன் இந்த மாடல் விற்பனையகம் வந்தடைந்தது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்பட்ட பேஸ்லிப்ட் வென்யூ மாடல் விற்பனையகம் வரத் துவங்கி இருக்கிறது. புதிய 2022 ஹூண்டாய் வென்யூ மாடல் நாளை (ஜூன் 16) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர 2022 வென்யூ எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஹூண்டாய் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. புதிய ஹூண்டாய் வென்யூ மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விற்பனையகம் வந்துள்ள புதிய ஹூண்டாய் வென்யூ மாடல் பேஸ் வேரியண்ட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த மாடலில் பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் வெள்ளை நிற எக்ஸ்டீரியர் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக 2022 ஹூண்டாய் வென்யூ மாடல் டைட்டன் கிரே நிற மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    2022 ஹூண்டாய் வென்யூ எஸ்.யு.வி. மாடல் ஏழு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த மாடல் டைஃபூன் சில்வர், டைட்டன் கிரே, போலார் வைட், ஃபேண்டம் பிளாக், டெனிம் புளூ, ஃபியரி ரெட் மற்றும் ஃபியரி ரெட் (டூயல்-டோன்) நிறங்களில் கிடைக்கிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து உள்ளது.
    • சர்வதேச சந்தையில் சுமார் பத்து லட்சம் கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் ரிகால் செய்வதாக அறிவித்தது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் 2 ஆயிரத்து 179 கார்களை இந்திய சந்தையில் இருந்து ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் 2005 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் GL மற்றும் ML கிளாஸ் எஸ்.யு.வி. மற்றும் R கிளாஸ் எம்.பி.வி.க்கள் ஆகும்.


    வாகனத்தின் பிரேக் பூஸ்டரில் துருப் பிடித்து இருக்கலாம் என்றும், இது பிரேக்கிங்கின் போது அசௌகரியம் அல்லது ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே கார்கள் ரிகால் செய்யப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் உலகம் முழுக்க சுமார் பத்து லட்சம் கார்களை ரிகால் செய்வதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. அப்போதும் இதே காரணத்தை மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா 701 பொட்டலங்களாக இருந்தது கண்டுபிடிப்பு
    • சொகுசு கார் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

    கன்னியாகுமரி :

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பூத்தாம்பூர் அருகே உள்ள தென்னங்கோடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது34).

    இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள குரும்ப பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். பகுதி நேர கார் ஓட்டுனரான இவர், கன்னியாகுமரி போலீஸ் நிலையம் வந்து, தொழில் போட்டியில் தன்னை 6 பேர் இங்கு கடத்தி வந்து லாட்ஜில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் தான் தற்போது தப்பி வந்த தாகவும் குறிப்பிட்டார்.

    இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாய்லட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ஹரிகுமார் மற்றும் போலீசார் கன்னியாகுமரி யில் உள்ள குறிப்பிட்ட விடுதியில் சோதனை நடத்தி னர்.

    அப்போது அங்கு ஒரு அறையில் ஆயுதங்களுடன் 6 பேர் தங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பி ஒடிவிட, மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நாங்குநேரி கோதைசேரி ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (வயது 23), மாஞ்சங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (28), ஸ்ரீவைகுண்டம் தெற்கு காரசேரி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (22), வடக்குதெருவை சேர்ந்த முத்துக்குமார் (21) என தெரிய வந்தது.

    அவர்கள் வந்த சொகுசு கார் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து டிரைவர் ஆறுமுகம் கடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பெங்களூருவைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்குச் சொந்தமான தடை செய்யப்பட்ட குட்காவை ஆறுமுகம் காரில் தமிழகத்திற்கு கடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த மற்றொரு கும்பல் தான் அவரை ஆள் வைத்து கடத்தி உள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே நேதாஜி காலனி பகுதியில் குட்காவுடன் கார் நிற்பதும் தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று காரை கைப்பற்றி சோதனை செய்தனர்.

    காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா 701 பொட்டலங்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குட்கா கடத்தி வந்ததாக டிரைவர் ஆறுமுகத்தை (வயது 34) கைது செய்தனர்.

    அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பொருட்கள் என்று கூறி கலப்படம் செய்து லாபம் கருதி விற்பனை செய்யும் நோக்கில் செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    • ரெனால்ட் நிறுவன கார் மாடல்களுக்கு ஜூன் மாதத்திற்கான சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • இந்த மாதம் கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஜூன் மாதம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ரெனால்ட் கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    அதன்படி ரெனால்ட் க்விட் ஹேச்பேக், டிரைபர் எம்.பி.வி. மற்றும் கிகர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி, லாயல்டி பலன்கள், எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் கார் மாடல்களுக்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ரெனால்ட் டிரைபர்

    தள்ளுபடி ரூ. 40 ஆயிரம்

    லாயல்டி பலன்கள் ரூ. 44 ஆயிரம்

    ஸ்கிராபேஜ் திட்ட பலன்கள் ரூ. 10 ஆயிரம்

    ஜூன் மாதம் ரெனால்ட் டிரைபர் காரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.


    ரெனால்ட் க்விட்

    தள்ளுபடி ரூ. 35 ஆயிரம்

    லாயல்டி பலன்கள் ரூ. 37 ஆயிரம்

    ஸ்கிராபேஜ் திட்ட பலன்கள் ரூ. 10 ஆயிரம்

    2022 க்விட் மாடலுக்கு ரூ. 30 தள்ளுபடி உள்பட மொத்தம் ரூ. 77 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜூன் மாதம் ரெனால்ட் க்விட் காரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 82 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் கிகர்

    கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 10 ஆயிரம்

    லாயல்டி பலன்கள் ரூ. 55 ஆயிரம்

    ஸ்கிராபேஜ் திட்ட பலன்கள் ரூ. 10 ஆயிரம்

    ஜூன் மாதம் ரெனால்ட் கிகர் காரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    குறிப்பு: சலுகை மற்றும் தள்ளுபடி பலன்கள் ஸ்டாக் இருப்பு மற்றும் ஒவ்வொரு நகருக்கு ஏற்ப வேறுபடும்.

    • கியா இந்தியா நிறுவனத்தின் புதிய செல்டோஸ் மாடல் விரைவில் அறிமுகமாகிறது.
    • இந்த மாடலின் ஸ்பை படங்கள் முதல் முறையாக லீக் ஆகி இருக்கிறது.

    கியா செல்டோஸ் மாடல் வெளிநாடுகளில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போது 2022 கியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் முதல் முறையாக லீக் ஆகி உள்ளது.

    இந்த எஸ்.யு.வி. மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. ஒரு மாடலில் அலாய் வீல்களும், மற்றொரு மாடலில் ஸ்டீல் வீல் கவர்களை கொண்டுள்ளது. இத்துடன் செங்குத்தாக இருக்கும் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன. இதே போன்று புது மாடலின் முன்புற கிரில் மற்றும் எல்.இ.டி. டி.ஆர்.எல். உள்ளிட்டவை மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.


    உள்புறம் ஹூண்டாய் அல்கசார் மாடலில் உள்ளதை போன்றே 10ய25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், வெண்டிலேடெட் சீட்கள், ADAS போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய 2022 செல்டோஸ் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 140 பி.எஸ். பவர், 115 பி.எஸ். பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல், 115 பி.எஸ். பவர் வழங்கும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் ஆப்ஷன்கள், 6 ஸ்பீடு AT, 7 ஸ்பீடு DCT அல்லது CVT கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

    Photo Courtesy: Rushlane

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா N லைன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த காரின் இந்திய வெளியீடு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எஸ்.யு.வி. மாடல் கிரெட்டா காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். கிரெட்டா N லைன் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய கிரெட்டா N லைன் மாடலில் பிரத்யேக ஸ்டைலிங் டச் மற்றும் மைனர் மெக்கானிக்கல் அப்டேட்களை கொண்டுள்ளது. இதன் முன்புறம் உயரமான பம்ப்பர் உள்ளது. ஏர் இண்டேக் அளவில் பெரியதாக, ஃபாக் லேம்ப் ஹவுசிங் கொண்டிருக்கிறது. முன்புற கிரில்-இல் டார்க் குரோம் உள்ளது. இந்த காரின் கிரில் மீது N லைன் பேட்ஜிங் காணப்படுகிறது.


    மேலும் முன்புற ஃபெண்டர் மீதும் N லைன் பேட்ஜிங் உள்ளது. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் வித்தியாசமான பம்ப்பர், ஃபௌக்ஸ் டிப்யுசர் மற்றும் ட்வின் எக்சாஸ்ட் டிப்கள் உள்ளன. காரினுள் சீட்கள், கியர் நாப், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் N லைன் தீம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிவப்பு நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த காரில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • இந்த கார் மூன்று கஸ்டமைசேஷன் பேக்குகளில் கிடைக்கும்.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடல் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலாக நிலை நிறுத்தப்பட இருக்கிறது.


    புதிய சிட்ரோயன் C3 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இருவித டியூனிங்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் லைவ் மற்றும் ஃபீல் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும். மேலும் இந்த கார் மொத்தத்தில் பத்து விதமமான நிறங்கள் மற்றும் மூன்று விதமான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும். புதிய சிட்ரோயன் C3 காருக்கான முன்பதிவு ஜூலை 1 ஆம் தேதி துவங்குகிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதன் பேஸ் மாடல்கள் டாடா நெக்சான், விட்டாரா பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட் மற்றும் கைகர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளலாம்.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்து இருக்கிறது.
    • கார் மாடல்களுக்கு வேற லெவல் பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 48 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஹூண்டாய் சாண்ட்ரோ, ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் சாண்ட்ரோ அந்நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக் மாடல் ஆகும். இந்த மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 28 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.


    அதிக மைலேஜ் வழங்கும் செடான் மாடல் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் ஆரா இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது. இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஹூண்டாய் ஆரா மாடலில் கிராண்ட் i10 நியோஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 121 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ×