search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மாருதி சுசுகி நிறுவனம் பிரெஸ்ஸா மாடலை மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்கிறது.
    • புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் பிரெஸ்ஸா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதய மாருதி சுசுகி பிரெஸ்ஸா விலை ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. முன்னதாக 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த எஸ்யுவி மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    பிரெஸ்ஸா CNG மாடல்- LXi, VXi, ZXi மற்றும் ZXi டூயல் டோன் என நான்குவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒட்டுமொத்த தோற்றத்தில் புதிய பிரெஸ்ஸா CNG மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. காரின் வெளிப்புறத்திலும் CNG பேட்ஜ் எதுவும் இடம்பெறவில்லை.

     

    பவர்டிரெயினை பொருத்தவரை பிரெஸ்ஸா CNG மாடல் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதே என்ஜின் எர்டிகா மற்றும் XL6 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. CNG மோடில் இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 25.51 கிமீ வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG LXi ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம்

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG VXi ரூ. 10 லட்சத்து 49 ஆயிரம்

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG ZXi ரூ. 11 லட்சத்து 89 ஆயிரம்

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG ZXi டூயல் டோன் ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • கியா நிறுவனத்தின் புதிய கரென்ஸ் மாடல் பிஎஸ்6 2 ரக என்ஜின்கள், iMT கியர்பாக்ஸ் கொண்டுள்ளன.
    • புதிய மாடலில் 12.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    கியா இந்தியா நிறுவனம் 2023 கியா கரென்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கியா கரென்ஸ் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய என்ஜின்கள் பிஎஸ்6 2 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய அப்டேட்களுக்கு ஏற்ப கரென்ஸ் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. புதிய கியா கரென்ஸ் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் iMT மற்றும் 7 ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது.

    டீசல் என்ஜினுடன் iMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை கியா கரென்ஸ் மாடலில் 12.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் அலெக்சா கனெக்டிவிட்டி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர்.
    • கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியில் சென்ற கண்டெய்னர் லாரி அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் மீது உரசியது. இதில் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இந்தநிலையில் இன்று காலை மின்கம்பம் அருகே காரில் பயணிகள் 4பேர் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென மின்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 4பேரும் உயிர் தப்பினர். மின்சாரம் இருந்த நிலையில் கம்பம் சாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று மின்சாரத்தை துண்டித்தனர். போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர். மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர். தொடர்ந்து மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மேலும் சம்பவ இடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். நகர்ப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
    • புதிய டஸ்டர் மாடல் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.

    ரெனால்ட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. 2013 வாக்கில் முதல் தலைமுறை டஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்திய சந்தையில் இதன் இரண்டாவது தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. அந்த வகையில், மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் 2025 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     

    ஸ்பை படங்களின் படி மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் தோற்றத்தில் டேசியா பிக்ஸ்டர் கான்செப்ட் எஸ்யுவி போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இதில் மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், சதுரங்க வடிவிலான ஃபிளாட் பொனெட் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

     

    பக்கவாட்டு பகுதிகளில் டஸ்டர் மாடலில் புல்-டைப் டோர் ஹேண்டில்களை கொண்டிருக்கிறது. இதன் ரியர் டோன் ஹேண்டில்கள் சி பில்லரில் இண்டகிரேட் செய்யப்பட்டு உள்ளது. மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடலில் தொடர்ந்து சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்களே வழங்கப்பட்டு இருக்கின்றன.பின்புறம் பூமராங் வடிவம் கொண்ட டெயில் லேம்ப், டுவின் பாட் ஸ்பாயிலர் உள்ளது.

    புதிய ரெனால்ட் டஸ்டர் மாடல் CMF-B பிளாட்ஃபார்மில் அதிகளவு உள்நாட்டிற்கு ஏற்ற மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த கார் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் ஐந்து இருக்கைகள் வழங்கப்பட உள்ளன. இதே காரின் 7 சீட்டர் வெர்ஷனும் உருவாக்கப்படுகின்றன.

    Photo Courtesy: cochespias

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் புது வேரியண்டை அறிமுகம் செய்தது.
    • புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடல் மேனுவல் மற்றும் AMT என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யூடிவ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கிராண்ட் i10 நியோஸ் விலை ரூ. 7 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்ட் மேனுவல் மற்றும் AMT என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இவற்றின் விலை முறையே ரூ. 7 லட்சத்து 16 ஆயிரம் என்றும் ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய வேரியண்ட் மேக்னா வேரியண்டின் மேல், ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்டில் எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், 15 இன்ச் டூயல் டோன் ஸ்டைல் கொண்ட வீல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரியர் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடல் நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடலில் 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட GD சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கான முன்பதிவுகளை சில நாட்களுக்கு முன் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடல் G, GX, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 13 ஆயிரம் என துவங்குகிறது. இன்னோவா க்ரிஸ்டா GX வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள 2.4 லிட்டர் டீசல் என்ஜின் 150பிஎஸ் பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் E20 ரக எரிபொருளில் இயங்கும் வசதியும், RDE விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இந்த எம்பிவி மாடலில் 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை, டிஜிட்டல் டிஸ்ப்ளே ரியர் ஆட்டோ ஏசி, சீட் பேக் டேபில் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளது. இத்துடன் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 ஹேச்பேக் மாடல் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 மாடல் இக்னிஸ் மர்றும் டாடா பன்ச் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 மாடலின் விலை இதுவரை மூன்று முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை உயர்வுக்கு சிட்ரோயன் இதுவரை எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை சிட்ரோயன் C3 மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் இரண்டு 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் முதல் என்ஜின் 83 ஹெச்பி பவர், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     

    இதன் இரண்டாவது என்ஜின் 110ஹெச்பி பவர், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த காரில் இதுவரை ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    சிட்ரோயன் C3 1.2 லிட்டர் பெட்ரோல் லைவ் ரூ. 6 லட்சத்து 16 ஆயிரம்

    சிட்ரோயன் C3 1.2 லிட்டர் பெட்ரோல் ஃபீல் ரூ. 7 லட்சத்து 08 ஆயிரம்

    சிட்ரோயன் C3 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஃபீல் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களின் மேனுவல் வெர்ஷன்களுக்கு போட்டியாக அமைகிறது. விலையை பொருத்தவரை சிட்ரோயன் C3 பேஸ் வேரியண்ட் விலை பன்ச் மற்றும் மேக்னைட் மாடல்களை விட ரூ. 16 ஆயிரம் அதிகம் ஆகும்.

    • இந்தியாவில் எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு தொடரந்து அதிகரித்து வருகிறது.
    • ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா 2023 மாடலை மார்ச் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. கிரெட்டா, வென்யூ, வெர்னா, கிராண்ட் i10 நியோஸ், i20 மற்றும் ஆரா போன்ற மாடல்களை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    இந்த மாதம் ஹூண்டாய் எஸ்யுவி மாடல்களுக்கு எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில் கிரெட்டா, வென்யூ, அல்கசார் அல்லது டக்சன் போன்ற மாடல்களை வாங்கும் பட்சத்தில் எவ்வித சலுகைகளும் தற்போது வழங்கப்படவில்லை. இந்தியாவில் எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இவற்றின் காத்திருப்பு காலம் அதிகரிப்பதால், இவற்றுக்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

     

    எனினும், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அல்லது i20 மாடல்களை வாங்கும் பட்சத்தில் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 38 ஆயிரம் வரையிலான சலுகைகளும், i20 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் ஆரா மாடலுக்கு ரூ. 33 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா 2023 மாடலை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. புதிய மிட் சைஸ் எஸ்யுவி மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் ஹோண்டா சிட்டி 2023, ஸ்கோடா ஸ்லேவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் சுசுகி சியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • சிட்ரோயன் நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • புதிய புகை விதிகள் அமலுக்கு வரவுள்ளதை அடுத்து பழைய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவில் புதிய பிஎஸ்6 2 புகை விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதை அடுத்து பல்வேறு கார் உற்பத்தியாளர்களும் தங்களின் பழைய கார் மாடல்களை விரைவில் விற்றுத்தீர்க்க அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    பிரென்ச் நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இதில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் ஃபிளாக்ஷிப் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் கூடுதல் தள்ளுபடி மற்றும் பேக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன.

     

    சிறப்பு சலுகைகளை அடுத்து C5 ஏர்கிராஸ் விலை பலரையும் கவரும் வகையில் உள்ளது. சிட்ரோயன் C3 காரை வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் வரை ஆன்-ரோட் நிதி சலுகை வழங்கப்படுகிறது.

    தற்போது சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் எஸ்யுவி மற்றும் சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் மார்ச் 31 ஆம் தேதி வரை பொருந்தும். விருப்பமுள்ள பயனர்கள் இவற்றை அருகாமையில் உள்ள சிட்ரோயன் இந்தியா விற்பனையகம் சென்று சலுகை பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு பயன்பெறலாம். 

    • ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி மாடல் ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    • கிராண்ட் செரோக்கி மாடலில் 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் செரோக்கி விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விலை தற்போது ரூ. 1 லட்சம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் கிராண்ட் செரோக்கி விலை ரூ. 78 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

    கிராண்ட் செரோக்கி மாடலில் 7-பாக்ஸ் முன்புற கிரில், கிளாம்ஷெல் பொனெட், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 5-சீட் எஸ்யுவி-யாக கிடைக்கிறது. இந்த காரில் 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப் உள்ளது.

     

    ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன.

    இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஜீப் நிறுவனம் தனது ஜீப் ராங்ளர் மற்றும் மெரிடியன் மாடல்கள் விலையை உயர்த்தியது. இதில் மெரிடியன் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரு. 20 ஆயிரமும், ராங்ளர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டது.

    விலை உயர்வை அடுத்து இரு கார்களின் விலை தற்போது ரூ. 30 லட்சத்து 10 ஆயிரமும், ரூ. 59 லட்சத்து 05 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்படுகிறது.
    • பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என இரு எஸ்யுவி மாடல்களின் புதிய விலை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு எஸ்யுவி-க்கள் புதிய RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படுவதால் இவற்றின் விலை ஏப்ரல் 1, 2023 முதல் உயர்த்தப்படுகிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 31 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. பொலிரோ நியோ மாடலின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்கிறது.

    புதிய விலை விவரங்கள்:

    பொலிரோ நியோ ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்தில் துவங்கி ரூ. 12 லட்சத்து 14 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 78 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 79 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    பொலிரோ நியோ மாடலின் N10 லிமிடெட் எடிஷன் வேரியண்ட் தவிர அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. பொலிரோ B4 வேரியண்ட் விலை ரூ. 25 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. இதன் டாப் எண்ட் B6 (O) விலை ரூ. 31 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பொலிரோ B6 விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 10 லட்சம் என்றே விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 100 பிஎஸ் பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பொலிரோ மாடலில் 75பிஎஸ் பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு எஸ்யுவி-க்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றுகிறது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் தனது கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 5 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. புதிய விலை உயர்வு ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வர இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    யூரோக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மற்றும் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் போக்குவரத்து செலவீனங்கள் அதிகரிப்பதை விலை உயர்வுக்கு காரணமாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. முந்தைய விலை உயர்வு உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதால் அறிவிக்கப்பட்டது என மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருந்தது.

     

    புதிய விலை உயர்வின் படி மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மற்றும் GLA மாடல்கள் விலை ரூ. 2 லட்சம் வரை அதிகரிக்க இருக்கிறது. சி கிளாஸ், இ கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் மாடல்கள் விலை முறையே ரூ. 2.5 லட்சம், ரூ. 3.5 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. GLE 300d 4மேடிக், GLE 400d 4மேசிக் மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் உயர்கிறது. GLS விலை ரூ. 10 லட்சம் வரை உயர்கிறது.

    டாப் எண்ட் மாடல்களான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்580 விலை ரூ. 12 லட்சமும், EQS 580 விலை ரூ. 4 லட்சம் வரை உயர்கிறது. முன்னதாக மெர்சிடிஸ் AMG E 53 4மேடிக் பிளஸ் கேப்ரியோலெட் மாடல் வெளியீட்டின் போது இந்திய சந்தையில் 2023 முதல் பாதியில் மட்டும் பத்து புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்தது.

    ×