search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டலூர்"

    வண்டலூர் பூங்காவுக்கு கேமரா வசதியுள்ள செல்போன் கொண்டு சென்றால் கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவதாக பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். #VandalurPark

    சென்னை:

    வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்குள்ள புலி, சிங்கம், கரடி, முதலைகள் போன்ற விலங்குகளை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.

    வண்டலூர் பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்கள், குழந்தைகளுக்கு தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்கள் கொண்டு வரும் கேமராவுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கேமரா வசதியுள்ள செல்போன்களுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவதாக பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பார்வையாளர்களில் சிலர் கூறியதாவது:-

    வண்டலூர் பூங்காவுக்கு செல்ல நுழைவு கட்டணம் செலுத்தி வாங்கினோம். உள்ளே செல்ல முயன்றபோது அங்கிருந்த காவலாளிகள் கேமராவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கேமரா இல்லை என்று தெரிவித்தோம். ஆனால் கேமரா வசதியுள்ள செல்போனை எடுத்து செல்வதால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதைகேட்க அதிர்ச்சியாக இருந்தது. கேமராவுக்கும், செல்போன் கேமராவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பூங்கா நிர்வாகத்துக்கு தெரியவில்லையா? செல்போன் கேமராவில் ஒரளவுக்குதான் விலங்குகளை ‘ஜூம்’ செய்து படம் பிடிக்க முடியும். கேமரா போன்று படம் பிடிக்க முடியாது.

    நாங்கள் ‘செல்பி’ மட்டும் தான் எடுக்கிறோம். அதற்காக செல்போனுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவது எப்படி முறையாகும்?. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #VandalurPark

    வண்டலூர் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட வெளிநாட்டு மாணவியை கற்பழிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 25 வயது இளம்பெண் மேற்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் தங்கியுள்ளார். நேற்று மாலையில் மாணவி நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள முட்புதர் நிறைந்த பகுதியில் 2 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நைஜீரிய மாணவியை பார்த்ததும் அருகில் சென்று பேச்சு கொடுத்தனர்.

    திடீரென இருவரும் சேர்ந்து அவரது வாயை பொத்தி புதர் மண்டிய பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடினர்.

    அப்போது 2 வாலிபர்களும் போதை தலைக்கேறிய நிலையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கற்பழிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் வாலிபர்களை பிடித்து அடித்து உதைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஒருவரது பெயர் தமிழரசன், இன்னொருவரது பெயர் ஜெயவேல் என்பது தெரிய வந்தது. காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த தமிழரசன், திருவல்லிக்கேணியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    ஜெயவேல் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர். நண்பரான இவரை பார்ப்பதற்கு நேற்று மாலையில் தமிழரசன் சென்றுள்ளார். அப்போது தான் 2 பேரும் சேர்ந்து மது குடித்துவிட்டு போதையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டது அம்பலமானது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் பெண்கள் வன்கொமை தடுப்பு சட்டம், கற்பழிக்க முயற்சி செய்தது உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். #Tamilnews
    ×