search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்"

    • மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் (வயது 64) மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியிடம் நாகராஜ் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கு இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.

    பின்னர் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்ததி ஜெயிலில் அடைத்தனர்.

    காவல் துணை ஆய்வாளருடனான வாக்குவாதத்தில் அவரை மிக கொடூரமாக தாக்கிய பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். #BJP #UP
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரான மனிஷ்,  ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு பெண் வழக்கறிஞருடன் வந்த காவல் துணை ஆய்வாளருக்கும், ஹோட்டலில் பணிபுரிபவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.



    இதனால் அப்பகுதிக்கு வந்த பாஜக கவுன்சிலர் மனிஷ் போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்பினரும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க, மனிஷ் காவல் துணை ஆய்வாளரை கடுமையாக தாக்க துவங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதனையடுத்து, பாஜக கவுன்சிலர் மனிஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். #BJP #UP
    ×