search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவேரிப்பட்டணம்"

    நாடு முழுவதும் நாளை (18-ந் தேதி) ஆயுதபூஜையும், நாளை மறுநாள் 19-ந் தேதி விஜயத சமியும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளதால் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    காவேரிப்பட்டணம்:

    நாடு முழுவதும் நாளை (18-ந் தேதி) ஆயுதபூஜையும், நாளை மறுநாள் 19-ந் தேதி விஜயத சமியும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் வணிக பெருமக்கள் தங்களது தொழிலகங்களுக்கும், மாணவ, மாணவியர் தங்களது கல்வி புத்தகங்களுக்கும், மகளிர் தங்களது வீடுகளிலும் வெகுவிமர்சையாகபூஜை செய்வர். இப்பூஜையில் கலந்துகொள்வோருக்கு பூஜை செய்த பொரியை அன்பளிப்பாக வழங்குவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். 

    இந்த ஆண்டு ஆயுத பூஜைக்காக வேண்டி காவேரிப்பட்டணம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக பொரி உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொரி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தற்போது சீசன் களைகட்டியுள்ளதால் இரவு, பகலாக வேலை நடைபெற்று வருகிறது. மூலப்பொருட்கள், மின் கட்டணம், ஆட்கள் கூலி ஆகியவை உயர்ந்துள்ளதால் கடந்தாண்டு ரூபாய் 330-க்கு விற்கப்பட்ட 50 படி கொண்ட மூட்டை இந்த ஆண்டு சுமார் 380 முதல் 400வரை விற்கப்படுகிறது. இந்த ஆண்டு 30முதல்50 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    அரசியல் ஆதாயத்துக்காக சராசரி நபர்போல மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #KPMunusamy #MKStalin
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமி நிருபரிடம் கூறியதாவது:-

    நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அதை சந்திக்க தயார் என்று கூறி தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என கூறி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதை விடுத்து அரசியல் ஆதாயத்திற்கு சராசரி நபர் போல் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக இவரது தந்தை கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழகத்தில் 13முறை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அப்படி என்றால் அந்த சமயத்தில் அவரது தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும்.


    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழக முதல்வரை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். இவருக்கு அரசியல் செய்ய எந்த பிரச்சனையும் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே இது போன்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து கடுமையான வார்த்தைகளை உபயோகித்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் நாக்கை அடக்கி பேச வேண்டும். தொடர்ந்து அப்படி பேசினால் அடுத்த முறை நானே நேரடியாக சென்று வைக்கோவிற்கு பதில் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KPMunusamy #MKStalin
    ×