search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜார்கண்ட்"

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.

    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஜார்கண்ட் அணி, மராட்டியத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த மராட்டிய அணி, ஜார்கண்ட் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ரோஹித் மோத்வானி 52 ரன்னும், கேப்டன் ராகுல் திரிபாதி 47 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் அன்குல் ராய் 4 விக்கெட்டும், ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், வருண் ஆரோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலக்கை நோக்கி ஜார்கண்ட் அணி பேட்டிங் செய்கையில் 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி ஜார்கண்ட் அணிக்கு 34 ஓவர்களில் 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜார்கண்ட் அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ஆனந்த் சிங் 12 ரன்னிலும், கேப்டன் இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷஷீம் ரதோர் 53 ரன்னுடனும், சவுரப் திவாரி 29 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பெங்களூருவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்-ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சந்தீப் 96 ரன்கள் எடுத்தார். கேப்டன் அம்பத்தி ராயுடு 28 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆந்திரா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆந்திர அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹனுமா விஹாரி 95 ரன்னும், ரிக்கி புய் 52 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூருவில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் டெல்லி-ஜார்கண்ட் அணிகள் சந்திக்கின்றன. #VijayHazareTrophy
    ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி, அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Jharkhand #PopularFrontofIndia
    ராஞ்சி:

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது ஜார்கண்ட் மாநில அரசு தடை விதித்திருந்தது. இந்த அமைப்பின் முழு செயல்பாடுகளையும் முடக்கும் விதமாக இருந்த இந்த தடையை எதிர்த்து ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய முறையான வழிமுறைகளை மாநில அரசு பின்பற்றவில்லை என தெரிவித்ததுடன், அந்த அமைப்பின் மீதான தடையையும் விலக்கி உத்தரவிட்டுள்ளது. #Jharkhand #PopularFrontofIndia
    ஜார்கண்ட் மாநிலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். #Jharkhand #FamilySuicide
    ராஞ்சி:

    இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டத்தில் உள்ள போடோம் பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து பிணமாக கிடந்தனர். இவர்களில் 3 பேர் வீட்டின் உள்ள அறையில் தூக்குப்போட்டும், அடுத்த பிளாட்டில் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்திலும் பிணமாக கிடந்தனர். 6-வது நபர் மாடியில் இருந்து குதித்தும் உயிரை மாய்த்து உள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், ‘6 பேர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் அவர்கள் நடத்திய மளிகைக்கடையில் ரூ.50 லட்சம் கடன் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது’ என்றார்.   #Jharkhand #FamilySuicide  #tamilnews
    ஜார்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர்.

    ராஞ்சி:

    சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.

    தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை தடுத்து நிறுத்த நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

    இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள சின்ஜோ பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மாநில போலீசை சேர்ந்த சிறப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. அதோடு மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
    ஜார்கண்ட் மாநிலம் மொராபடி பகுதியில் குடியை கைவிடுமாறு கூறிய மகளின் கழுத்தை அறுத்து தந்தையே கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் மொராபடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் யாதவ். இவர் பல ஆண்டுகளாக மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்து வருகிறார். இதனால் அவர் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அவரது மகளான சுஜாதா முண்டா (18), குடியை விடுமாறு தந்தையிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

    நேற்றும் இதனால் தந்தைக்கும், மகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் பிரதீப் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இரவு சண்டை ஏறபட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் இன்று காலை தனது மகளின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுஜாதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிரதீப் யாதவை தேடி வருகின்றனர்.
    பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை சார்ந்த விபத்துகளில் 57 பேர் உயிரிழந்தனர்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கடந்த 24 மணிநேரமாக கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக இங்குள்ள உன்னாவ் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனால், மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் வீடுகள் இடிந்த விபத்தில் உன்னாவ் மாவட்டத்தில் 6 பேர், ரேபரேலி, கோன்டா, பஹ்ராய்ச், கான்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் மற்றும் பாரபங்கி மாவட்டத்தில் ஒருவர் என மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதேபோல், பீகார் மாநிலத்தில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த பெருமழைக்கு 19 பேர் பலியாகினர். ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரமாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கி 23 பேர் உயிரிழந்தனர். #tamilnews
    பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம், 10 செல்போன்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

    அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தின் ஜேம்ஷெட்பூர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.26.44 லட்சம் பணம், 390 கிராம் தங்கம், 13 செல்போன்கள், 2 லேப்டாப்கள், ஒரு டேப் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting
    ஜார்கண்ட் மாநிலத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை இரவோடு இரவாக உடைத்து, சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் சில நாட்களாக இணைய சேவை இல்லாமல் இருந்து வந்துள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு பாதுகாப்பு பணியிலும் யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 17 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறியுள்ளார். இச்சம்பவத்தின் தொடர்புடைய அனைத்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #ATMLoot
    ×