என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 162808"
- செல்வலிங்கம் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- பலத்த காயம் அடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் செல்வலிங்கம் ( வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் வழக்கம்போல் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தார்.
லாரி மோதியது
மறவன்மடம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
- விழாவில் சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
மறுநாள் இரவு 7 மணிக்கு நாடு நலம் பெற வேண்டியும், நல்ல மழை பொழிந்து வறுமை நீங்கி செழுமை வேண்டி பாடல்கள் பாடியும், 108 திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் தெருபவனி நடந்தது.
நேற்று காலை 108 பால்குட ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக மேளதாளத்துடன் பவனி வந்து கோவிலை அடைந்ததும், பின்பு சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது. வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலிபூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜையுடன் சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடந்தது.
இன்று நண்பகல் 1 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்டபூஞ் சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் கொடுத்தல், நாளை 10-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு கலக்கல் கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.
- தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு விருது ஆறுமுகநேரி சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
தேசிய நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு ஆறுமுகநேரி அருகேயுள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு நுகர்வோர் பேரவை சிறப்பு விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நுகர்வோர் பேரவை ஆய்வு குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சுற்றுசூழல், தொழிலாளர்கள் இணக்கம், பொதுமக்கள் நல்லுறவு ஆகியவற்றிற்கான சிறப்பு விருது ஆறுமுகநேரி சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் இந்த விருதை வழங்க அதனை டி.சி.டபிள்யூ. மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது நுகர்வோர் பேரவையின் மாவட்ட சட்ட ஆலோசகர் திலீப்குமார், ஸ்பிக்நகர் உறுப்பினர்கள் சந்திரசேகரன், கீதா சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஜேம்ஸ்ராஜ் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
- இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்ராஜ் (வயது 55). இவர் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று இரவு வழக்கம்போல் தூங்க சென்றார். இன்று காலை உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் ராஜ் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயிற்சி பாசறை கூட்டத்திற்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.
- அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட மாடல் பயிற்சி பாசறை புதுக்கோட்டையில் நடைபெற்றது.
மாநில சுயாட்சி
தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், அனஸ், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மனிதனை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று கொண்டு வந்தது தான் திராவிட இயக்க வரலாறு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி.
இந்தி திணிப்பை அமல் படுத்துவதற்கு அமித்ஷா, ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளார். மற்ற மொழிகளை அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காது.
மாநில சுயாட்சி திராவிட வரலாறு என்ன என்பதை இளைஞர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதை புரிந்து கொண்டு 234 தொகுதிகளிலும் இது போன்ற கருத்துகளை மனதில் ஏற்றிக் கொண்டு நமக்கு எதிராக கருத்துகள் சொல்லுபவர்கள் மத்தியில் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் திராவிட இயக்க வரலாறை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் செல்வகுமார், பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, அணி அமைப்பாளர்கள் அருண்குமார், பேரின்பராஜ் லாசரஸ், ஆனந்த், வீரபாகு, துணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கோபால், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர்கள் பால்ராஜ், ஸ்டாலின், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மற்றும் புதுக்கோட்டை யூனியன் கவுன்சிலர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கணவர் இறந்து விட்டதால் கட்டித்தங்கம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
- இன்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் கட்டித்தங்கம் (வயது 77). இவருக்கு 3 மகன்கள். அனைவருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
நகை-பணம் கொள்ளை
கணவர் இறந்து விட்டதால் கட்டித்தங்கம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் உடனடியாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர்.
அப்போது பீரோவில் இருந்த 2½ பவுன் நகைகள் மற்றும் ரூ. 15 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- செயற்குழு கூட்டத்திற்கு. மண்டல தலைவர் தூசிமுத்து தலைமை தாங்கினார்.
- தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
ஆறுமுகநேரி:
பாரதீய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மண்டல செயற்குழு கூட்டம் ஆறுமுக நேரியில் நடைபெற்றது. மண்டல தலைவர் தூசிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலா ளர் தங்கபாண்டி யன், துணைத் தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ராஜவேலன் வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், பொதுச்செய லாளர் சிவமுருக ஆதித்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகேச பாண்டியன், ஓ. பி.சி. அணி துணைத் தலைவர் மகேஷ், பாலாஜி, ஜெயக்குமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அடைக்கப்படும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக் கடியை போக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஆறுமுகநேரியில் கூடுதல் மின் கம்பியா ளர்களை நியமிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேரூராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை தவிர்க்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
- பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.
- செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.
தொடர்ந்து யாக சாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்து கோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை, வருஷாபிஷேகம் நடைபெற்றது.
பகல் 11 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், அலங்கார பூஜையும், பிற்பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி, நாளை (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜை, சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.
9-ந் தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு 7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் பூஞ் சப்பரத்தில் பவனி, 10-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்துள்ளனர்.
- மேம்பாலம் கட்டுவதற்காக ராட்சத கான்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- தற்போது தொடர் மழையின் காரணமாக அந்த மணல் சாலை சகதி குளமாக மாறியுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந் தேதி முதல் ராட்சத கான்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனால் தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய இடத்திற்கு கூடுதலாக10 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக பெட்ரோல் செலவும் ஆனது.
இந்நிலையில் தூரத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு வழியை கண்டுபிடித்தனர்.
அதன்படி மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் சாலையில் மறுபுறத்தில் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் முடுக்குகாடு ஊர் வழியாக சென்று நடுநிலைப் பள்ளியை கடந்து சென்றால் துறைமுகச் சாலையில் மேம்பாலத்தின் மறுகரைக்கு சென்று விடலாம்.
இதனால் அவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் மிச்சமானது. ஆனால் இந்த முடுக்குகாடு ஊர் வழியாக செல்ல வேண்டும் என்றால் 300 மீட்டர் தூரம் உள்ள உப்பளம் பகுதியை கடந்த செல்ல வேண்டும் இந்த உப்பள பகுதி மணல் சாலையாகும்.
தற்போது தொடர் மழையின் காரணமாக அந்த மணல் சாலை சகதி குளமாக மாறியுள்ளது. அதிக தூரத்தை கடந்து செல்ல விரும்பாதவர்கள் இந்த சகதி குளம் வழியாக துணிந்து சென்று வருகின்றனர். பயணத்தின் போது பலர் சகதியில் விழுந்து எழுந்து செல்கின்றனர். பலர் காயமடைந்து செல்கின்றனர்.
மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் வருகிற 11-ந் தேதி வரைக்கும் இந்த பயணம் தொடரும் என கூறப்படுகிறது.
எனவே வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக அலுவலகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4,5,6 ஆகிய தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தா மல் ஆய்வினை முழுமையாக நடத்தி பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.
அம்போது, பகுதி சபா கூட்டத்தில் மக்கள் வைத்த கோரிக்கையான கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4, 5, 6 ஆகிய தெருக்களில் புதிய கழிவுநீர் கால்வாய் விரைவில் அமைத்து தருவதாக உறுதியளித்தார்.
ஆய்வின் போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், வட்ட செயலாளர் சக்கரைசாமி, கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷ்லின், சங்கர், அசோக்குமார், கலைச் செல்வன் உள்பட பலர் உடனி ருந்தனர்.
- தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
- குரூஸ் பர்னாந்துக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் .
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படுபவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து. இவருக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா பகுதியில் மணிமண்டபம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் நகரின் மையப்பகுதியில் அமைக்காமல் இங்கு அமைப்பதற்கு மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குருஸ் பர்னாந்து நற்பணிமன்ற தலைவர் ஹெர்மன் கில்டு கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு நகரின் ஒதுக்குப்புறத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு மீனவ மக்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. அனைத்து சமுதாய மக்களுக்கும் தொண்டு ஆற்றிய அவருக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் . இல்லை என்றால் கடற்கரை பகுதி மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் அனைத்து மீனவ அமைப்புகளுடன் ஆலோசனை தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற எட்வின் பாண்டியன், தலைவர் ஹெர்மன் கில்டு, செயலாளர் சசிக்குமார், பொருளாளர் டெரன்ஸ், வளன் ஆண்ட்ரூஸ், லூர்துசாமி, ராஜ், அலாய், அமலநாதன், கென்னடி, சாக், ஜெபி, பரதநலச் சங்கம் பொதுக் செயலாளர் கனகராஜ், இக்னேஷியஸ், ரூஸ்வால்ட், ராஜேந்திரன், முன்னாள் துணை மேயர் சேவியர், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அகஸ்டின், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி என்ற தோணி ஒன்று மாலத்தீவுக்கு சென்றது.
- அதிக காற்று வீசியதால் தோணி கவிழ்ந்து 7 பேரும் நீரில் மூழ்கினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி என்ற தோணி ஒன்று மாலத்தீவுக்கு சென்றது.
அதில் தூத்துக்குடி தருவை மைதானம் அருகே உள்ள லைன்ஸ்டவுன் 6-வது தெருவை சேர்ந்த ஸ்டான்லி சாக்ரியாஸ் (வயது 59), சகாய கிளிப்பட் ஜான் பெக்மான்ஸ், தொன்மை ஜேசு, ஆண்டன் ராஜேந்திரன், மில்டன் தாசன் பெர்ணான்டோ, ஆண்டன் வாஸ்டின் பெர்ணான்டோ, லிங்கராஜ் முனியசாமி ஆகிய 7 பேர் பயணம் செய்தனர். மாலத்தீவுக்கு அருகே சென்றபோது அதிக காற்று வீசியதால் தோணி கவிழ்ந்ததில் பயணம் செய்த 7 பேரும் நீரில் மூழ்கினர்.
இதில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி சாக்ரியாஸ் மட்டும் உயிரிழந்தார். அவரது உடலை கடலோர காவல் படையினர் மீட்டு மாலத்தீவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மீட்கப்பட்ட 6 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்தனர்.
இந்நிலையில் கடலில் மூழ்கி பலியான ஸ்டான்லி சாக்ரியாஸ் உடல் மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து வானம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இன்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்