search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ்"

    • ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு பேருந்தில் ஏறி விரட்டி சென்று ஆம்புலன்சை மடக்கி பிடித்தார்.
    • பாலாஜி விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை காற்று பிடிப்பதற்காக சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் டயரை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி அதை ஓட்டிச் சென்றார்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு பேருந்தில் ஏறி விரட்டி சென்று ஆம்புலன்சை மடக்கி பிடித்தார். ஆம்புலன்சை திருடி சென்ற நபருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், விசாரணை செய்ததில் தனது பெயர் பாலாஜி என்கிற விக்கி என்றும் மதுராந்தகம் அருகே உள்ள திருவாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார். பின்னர் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடல் முழுவதும் பலத்த காய தழும்புகள் உள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    • அழகான பெண் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி (வயது 36). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அப்போது பிச்சனூர் கிராமம் அருகே 108 ஆம்புலன்சிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முத்துக்குமரன் பிரசவம் பார்த்தார். பின்னர் தாயும், சேயும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

    • அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
    • ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம்- சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய அவசரகால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகை யில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இன்று, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் 'மனநல நல்லாதாரவு மன்றங்கள் (மனம்)" மற்றும் "நட்புடன் உங்களோடு மனநல சேவை (14416)" ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விரி வுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    அனைத்து வகையான மனநல சேவைகளையும் ஓரிடத்தில் வழங்கும் வகையில், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மனநலக் காப்பகம் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மனநலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனமாக தொடங்கப்பட உள்ளது. இங்கு மனநல சேவையுடன் கூடுதலாக நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மனநல ஆலோசனை பெற, தொலை மருத்துவத்திற்கான மின்னணு மையம் உருவாக்கப்படும். இந்த ஒப்புயர்வு மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மனநல உளவியல் மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மனநலப் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்திற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் முப்பரிமாண வரைபடத்தை முதலமைச்சர் வெளியிட்டார். ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் வெற்றியழகன், தாயகம் கவி, மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்சை கருணை நோக்கத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
    • பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் நேரில் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செஞ்சிலுவை சங்கம் பயன்பாட்டிற்காக ஆம்புலன்சை செஞ்சிலுவை சங்கம் தலைவரும் மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், தஞ்சாவூர் பாரத் ஸ்டேட் வங்கியின் சமூக கூட்டாண்மை சார்பில் பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் நேரில் வழங்கினார்.இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் தஞ்சாவூர் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்துக்கு தஞ்சாவூர் பாரத் ஸ்டேட் வங்கி சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதி மூலமாக ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்சை கருணை நோக்கத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா , ஸ்ரீகாந்த் , பாரத ஸ்டேட் வங்கி துணைப் பொது மேலாளர் நவீன் குமார், உதவி பொது மேலாளர் ஆல்வின் மார்டின் ஜோசப் ஆல்பர்ட், செஞ்சிலுவை சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர் செல்லும் வழியில் அவர் பிரசவ வலியால் துடித்தார்.

    கடலூ ர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருேக முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்மணி()இவரதுமனைவி ஐஸ்வர்யா (வயது. 23), இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இன்றுஅதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதுஉடனே108ஆம்புலன்ஸ்க்குபோன் செய்தனர். 108 ஆம்புலன்ஸ் பைலட் திரிசங்கு, மருத்துவ உதவியாளர் ஆனந்தி ஆகியோ ர்விரைந்து சென்றுஐஸ்வர்யாவை கடலூர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து ச்சென்றனர்.

    கடலூ ர்செல்லும்வழியில் அவர்பிரசவ வலி யால் துடித்தார்.சிறிது நேரத்தில் ஓடும் ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும்கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காகசேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக உள்ளனர் 

    • 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டு னர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 
    • மாத ஊதியம் ரூ.15,235 மொத்த ஊதியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.

    நாமக்கல்:

    108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டு னர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

    ஓட்டுனர்களுக்கான அடிப்படை தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆண், பெண் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். வயது 24 முதல் 35 மிகாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்று இருக்க வேண்டும்.

    ஓட்டுனர்களுக்கான தேர்வு முறை எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாத ஊதியம் ரூ.15,235 மொத்த ஊதியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.

    மருத்துவ உதவியாளர்க ளுக்கான தகுதி பி.எஸ்.சி.நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. 12 -ம்வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் லைப் சயின்ஸ் பட்டதாரி பிரிவில் பிஎஸ்சி ஜூவாலஜி, பாட்டனி, கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்தி ருக்க வேண்டும். இவர்க ளுக்கு ஊதியம் ரூ.15 435 வழங்கப்படும்.

    வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்ப

    தாரர்கள் அசல் சான்றி தழ்களை அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும் என நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிய உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • டீசல் இல்லாததால் நடுரோட்டில் நின்ற ஆம்புலன்சை நோயாளி உறவினர்கள் தள்ளிச் சென்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் தனப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தேஜ்யா (40). நேற்று வீட்டில் இருந்தபோது இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து 108 தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்த ஆம்புலன்சில் தேஜ்யாவை ஏற்றிய உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில், தனப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் திடீரென நடுரோட்டில் நின்றுவிட்டது. டீசல் தீர்ந்ததால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கீழே இறங்கி ஆம்புலன்சை தள்ளிக்கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் மயக்க நிலையில் இருந்த தேஜ்யா ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    டீசல் இல்லாததால் ஆம்புலன்ஸ் நடு வழியில் நின்றதே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்றதால் ஆம்புலன்சில் நோயாளி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மேலூர் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
    • இதனை தொடர்ந்து உடனடியாக தாயும், சேயும் அதே ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி போதும் பொண்ணு. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான போது (35). இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர் . சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சில் கர்ப்பிணியை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் வழியிலேயே பிரசவ வலி அதிகமானமானதால் வேன் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் போதுவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக தாயும், சேயும் அதே ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.ஆம்புலன்ஸ், குழந்தை, Ambulance, baby

    • 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
    • பிரசவம் பார்த்த ஊழியருக்கு குவியும் பாராட்டு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கு.வல்லம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சஙகீதா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு வீட்டில் இருக்கும் பொழுதே பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் துடித்தார்.

    இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அப்குதியில் இருந்த ஆண்டிமடம் ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அரியலூர் அருகே அல்லிநகரம் நெடுஞ்சாலை பகுதிக்கு வந்த போது பிரசவ வலி அதிகரித்து பிரசவிக்கும் நிலை உருவானது.

    உடனே ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் மணிகண்டன் பிரசவம் பார்த்தார். இதில் சங்கீதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பைலட் ராமானுஜம் உதவி புரிந்தார். பின்னர் தாயும், சேயும் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

    அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் பணியாளர்களை உடன் வந்த உறவினர்கள் பாராட்டினார்கள்.

    • முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
    • மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ,இளைஞர் அணி நிர்வாகி சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம், மங்கலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் மங்கலத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் பகுதி தலைவர் ஜக்காரியா சேட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தாஹாநசீர் , மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ,இளைஞர் அணி நிர்வாகி சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான வே. முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் சிறப்புரையாற்றினர். முடிவில் தெளபிக் நன்றி கூறினார். இந்த ஆம்புலன்ஸ் சேவையானது குறைந்த கட்டணத்தில் செயல்படும் என தெரிவித்தனர்.

    • மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர்.
    • டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குடும்பம் சமத்துவம் பகுதியை சேர்ந்தவர் மாவீரன். இவரது மனைவி சரண்யா (வயது 26).கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சரண்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    • பஸ் மீது ஆம்புலன்ஸ் வேன் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • மழை பெய்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிராம் மில் அருகே ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் ஆம்புலன்ஸ் மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றிக்கொண்டு சிவகிரியில் இருந்து சென்றது.

    அரசு பஸ்சை ஆம்புலன்சு வேன் முந்த முயன்றபோது எதிரே ஜே.சி.பி. வாகனம் வந்தது. அதன் மேல் மோதாமல் இருப்பதற்காக இடது புறமாக ஆம்புலன்சை டிரைவர் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னே சென்ற அரசு பஸ் மீது பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர், ஆம்புலன்சில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்காக சென்ற நபரை மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மதுரைக்கு அனுப்பி வைத்தனர் .

    இந்த விபத்தில் ஆம்பு லன்சில் அமர்ந்திருந்தவர் விபத்தில் சிக்கி மீட்க முடியாத நிலையில் இருந்தார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த சம்பத் (வயது 26), ராம்குமார் (29), சிவகுமாரி (49) ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த பஸ் பயணி பாண்டிச்சேரியைச் சேர்ந்த குணாலும் (27) மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் (29), முகமது பாசிக் (25) இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

    இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்ததால்இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

    ×