search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமமுக"

    • ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.
    • வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சுதேசி இயக்கத்தை தொடங்கி இந்திய மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை அதிகரிக்கச் செய்வதோடு ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.

    வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • சிவகங்கை சீமையில் சீறி எழுந்து வீரப்போர் புரிந்த தியாக தீபங்களாம் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள்.
    • திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்த இருக்கிறார்.

    சென்னை:

    அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அடிமை விலங்கொடித்து, தாய்மண் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க, சிவகங்கை சீமையில் சீறி எழுந்து வீரப்போர் புரிந்த தியாக தீபங்களாம், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவுநாளான 24.10.2023 செவ்வாய் கிழமையன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்த இருக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
    • மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை :

    அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்துவந்த மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மேலும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்கி தாய்நாடு மீது பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.
    • தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்கி தாய்நாடு மீது பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.

    எளிய சொற்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கென தனி பத்திரிகையை தொடங்கி தமிழ் இதழியல் முன்னோடியாக திகழ்ந்ததோடு சட்டப்பேரவை தலைவராகவும் அமைச்சராகவும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய புரட்சித் தலைவி அம்மாவை நினைவுகூர விரும்புகிறேன்.
    • மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் என்று கூறியதோடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி சாதனை படைத்து நாட்டின் முன்னோடியாக திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

    அதே நேரத்தில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதோடு, இட ஒதுக்கீடு மசோதாவின் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    மேலும், நாட்டின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரங்களில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் 33 சதவீதம் இட ஒதுக்கீட்டு சட்டமசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவதோடு, அதனை விரைவில் அமலுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டெங்கு உறுதி செய்யப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகளை உருவாக்கிட வேண்டும்.
    • டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 4048 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 300க்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நாளிதழ்களில் வெளியாகி இருக்கும் செய்தி வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.

    டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதனை உருவாக்கும் ஏடிஸ் கொசுவை ஒழிப்பது தான் ஒரே வழி என்பதை உணர்ந்து கொசு ஒழிப்பு பணியை தமிழ்நாடு முழுவதும் அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் வருவோருக்கு டெங்கு பரிசோதனையை மேற்கொள்ள ஏதுவாக பரிசோதனை கருவிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் டெங்கு உறுதி செய்யப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகளை உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    அதே நேரத்தில் மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை கணக்கெடுத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதோடு, டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • வாலிபர்கள் மாவட்ட செயலாளரை சூழ்ந்து நின்று கொண்டு தகராறு செய்தனர்.
    • தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    ஜெயங்கொண்டம்:

    பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் சீர்காழியில் நடைபெ ற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது காரில் புறப்பட்டார். காரை செந்தில் என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் ஜெயங்கொண்டம் வாரியாங் கோவில் பகுதியில் வந்த போது 2 வாலிபர்கள் அவரது காரை திடீரென வழிமறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் மாவட்ட செயலாளரை சூழ்ந்து நின்று கொண்டு தகராறு செய்தனர்.

    பின்னர் அவரது கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். இதில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திகேயனுக்கு முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் 2 வாலிபர்கள் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்தது தெரியவந்தது. பின்னர் தப்பி ஓடிய இலையூர்மேலவழி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சிவா (வயது 24) என்பவரை கைது செய்தனர். ரோட்டு தெருவை சேர்ந்த பூபாலன் என்பவரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் காரை வழிமறித்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • நீரஜ் சோப்ரா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில் வென்று இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு உலக அளவிலும் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார்.

    விரைவில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கும் நீரஜ் சோப்ரா அங்கும் தங்கம் வென்று வரலாறு படைக்கவும் இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கவும் மனமார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது பற்றி விரைவில் முடிவு எடுப்போம்.
    • யோகியை துறவியாக ரஜினி பார்த்திருப்பார்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு கட்சி மாநாடு நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நீட் தேர்வு குறித்து தி.மு.க. உண்ணாவிரதம் இருந்து, அவர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்ததாக இருந்ததால் மக்களின் நம்பிக்கையை இழந்தது. தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். ஆனால் அவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ஆட்சி செய்கிறார்கள். எனவே இவர்களுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான். எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருப்பதால், எங்களை உறுதியாக தேர்ந்தெடுப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது பற்றி விரைவில் முடிவு எடுப்போம். கூட்டணி பற்றி பின்னர் தெரியும்.

    ரஜினிகாந்த் இமயமலை போய் வரும் வழியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார். யோகி ஒரு துறவி என்பதால், அவர் காலில் விழுந்திருப்பார். துறவியிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கு வயது வித்தியாசம் இல்லை. முற்றும் துறந்தவர் பாதத்தில் ஆசீர்வாதம் பெற்றிருப்பார். யோகியை துறவியாக ரஜினி பார்த்திருப்பார்.

    பா.ஜனதா ஊழல் இல்லாமல் மத்தியில் ஆட்சி செய்வதாக அண்ணாமலை கூறுவது குறித்து கேட்கிறீர்கள். ஊழல் உள்ளதா? இல்லையா? என்பதை வரும் தேர்தலில் மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் ஜி. செந்தமிழன் முன்னிலை வகித்தார்.
    • தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து பிரசாரங்களை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    போரூர்:

    சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அ.ம.மு.க. பொதுக் குழுக்கூட்டம் இன்று நடந்தது.

    இதையொட்டி வானகரம் முழுவதும் அ.ம.மு.க. கொடிகள் மற்றும் தோரணங்கள், பேனர்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.

    பொதுக்குழு கூட்டத்துக்கு அ.ம.மு.க.பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை வகித்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் அழைப்பிதழுடன் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் ஜி. செந்தமிழன் முன்னிலை வகித்தார்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை தேர்வு செய்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தலைவராக கோபால், துணை தலைவராக முன்னாள் எம்.பி.அன்பழகன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    பெரியார், அண்ணா எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வழிகாட்டுதலில் தொடர்ந்து பணியாற்றுவோம்.

    கழக மாணவர் அணி, மாணவியர் அணி உருவாக்கம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டதற்கு அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கழகத்தின் 6-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றுதல், குக்கர் சின்னம் வரைந்து விளம்பரப்படுத்துதல், மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குதல் மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து பிரசாரங்களை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மேம்போக்காகக் கையாள்வதற்கும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கும் தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை மற்றும் சுங்கக் கட்டணத்தைக் குறைத்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல், மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டிட வலியுறுத்தல், விவசாயத்தைப் பாதிக்கும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தையும், என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத் திட்டத்தையும் கைவிடுக என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் துணைத்தலைவர் எஸ்.அன்பழகன்,சி.ஆர்.சரஸ்வதி, அமைப்பு செயலாளர் நேதாஜி கணேசன், மாவட்ட செயலாளர்கள் வி.சுகுமார்பாபு, அம்பத்தூர் எஸ்.வேதாச்சலம், திருவள்ளூர் லக்கிமுருகன், சி.பி.ராமஜெயம், ஏ.ஆர்.பழனி, பி.ஆனந்தன், முகமது சித்திக், கே.விதுபாலன் மற்றும் நிர்வாகிகள் கிரித ரன், நசீர்கான் தட்சிணா மூர்த்தி, குட்வில்குமார், எஸ்.கே.கோவிந்தசாமி, பி.விஜயகுமார், புதூர் எம்.சரவணன், எஸ்.செல்வன், எஸ்.வெங்கடேசன், எஸ்.மூர்த்தி, வி.ஜே.குமார், டி.சக்கரபாணி, முகவை ஜெயராமன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது கொடநாடு பங்களாவில் கொலை-கொள்ளை நடந்தது. எடப்பாடி பழனி சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது நடந்த சம்பவத்தை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்தது.

    இந்த வழக்கில் இதுவரையில் குற்றவாளிகள் யார் என்பதை உறுதி செய்யாத நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அ.ம.மு.க.வினருடன் இணைந்து ஓ.பி.எஸ். அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த 7 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், அ.ம.மு.க. நிர்வாகிகள் என ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும், உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி செயலாளர் ஆர்.ராஜ லட்சுமி, மீனவர் அணி செயலாளர் கோசுமணி திரு.வி.க.நகர் வடக்கு பகுதி செயலாளர் சிவக்குமார், ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர்கள் த.மகிழன்பன், வி.என்.பி. வெங்கட்ராமன், எம்.எம்.பாபு, ராயபுரம் பி.எஸ். சிவா, வழக்கறிஞர் எம்.வி.சதீஷ், ரெட்சன் சி.அம்பி காபதி, என்.கே.அச்சுதன் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடந்தது.

    வள்ளுவர் கோட்டம் அருகில் வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.கே.ரமேஷ், பகுதி செயலாளர்கள் பிரேம் குமார், சக்தி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சாஸ்தா சரண், அயன்புரம் சரவணன், அயன்புரம் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
    • அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்று இப்போதே முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

    அந்த வைகயில் டி.டி.வி.தினகரன் தலைமை யிலான அ.ம.மு.க. தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்குள் கூட்டணி உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.

    தேவர் சமுதாய வாக்குகளை முழுமையாக பெறுவதற்கு இவர்களது வியூகம் அமையும் என தெரிகிறது.

    இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுக் குழுக்கூட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி கூடுகிறது.

    இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம், கழக துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×