search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன்"

    • உயிர் காக்கும் ஊசி மருந்துக்காக 9 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது
    • இதில் பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரை அனைவரும் அடக்கம்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் போலீஸ் எஸ்.ஐ. ஆக இருந்து வருபவர் நரேஷ் ஷர்மா. இவரது 2 வயதில் ஹிருதயான்ஷ் ஷர்மா என்ற மகன் உள்ளார்.

    ஷர்மா ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (எஸ்எம்ஏ) எனப்படும் அரிய மரபணு கோளாறால் பாதிப்பு அடைந்துள்ளார். இதற்கு ஒற்றை டோஸ் மரபணு சிகிச்சை ஊசி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இந்த மருந்தின் விலை ரூ.17. கோடி. இது உலகின் மிக விலை உயர்ந்த மருந்துகளில் ஒன்றாகும்.

    ஷர்மா இடுப்பிற்குக் கீழே உள்ள அனைத்து உடல் செயல்பாடுகளையும் கிட்டத்தட்ட இழந்திருந்தான். ஊசி போடப்படுவதற்கு முன் அவனால் இயல்பான வாழ்க்கையை நடத்தமுடியும் என்பதை உறுதிப்படுத்தினர்.

    ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனையில் 3 மாதத்துக்குள் ₹9 கோடி திரட்டப்பட்டு, ஹிருதயன்ஷுக்கு ஊசி போடப்பட்டது. மீதமுள்ள தொகையை ஒரு வருடத்திற்குள் 3 முறை செலுத்தவேண்டும்.

    பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரையிலான பலரது முயற்சியால் நிதி திரட்டப்பட்டது.

    பிரபல நடிகர் சோனு சூட் மற்றும் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் ஆகியோர் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தனர். ஜெய்ப்பூரில் பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பழங்களை விற்பவர்கள் உள்பட அனைத்து இனத்தைச் சேர்ந்த தனிநபர்களும் நிதி திரட்டுவதில் பங்களித்தனர். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள் பிரசாரத்திற்காக நிதி திரட்ட உதவியது.

    மாநில காவல்துறை பணியாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 5 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ராஜஸ்தானில் இதுபோன்று நிதி திரட்டப்படுவது முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுவன் வீட்டுக்கு வராத நிலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.

    இன்று காலை சிறுவன் படித்து வந்த தனியார் பள்ளிக்கு வந்த பெற்றோர்களுக்கு பள்ளியில் உள்ளவர்கள் மழுப்பலாக பதிலளித்து அவரைகளை உள்ளே விட மறுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

    அப்போது பள்ளியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிறுவனின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கும்பலைக் கட்டுப்படுத்தி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முற்றக்கட்டமாக சிறுவன் பள்ளிக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    எனவே சிறுவனைக் கொன்று சடலத்தை மறைத்து வைத்ததாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு ரப்பர் டயர்களுக்கும் பள்ளியின் சுவர்களுக்கும்  தீ வைத்து போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது.
    • வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார்.

    டெல்லியின் கிழக்கு விஹார் போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் ரொட்டிக்கடை நடத்தும் 10 வயது சிறுவன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிது.

    சரப்ஜித் சிங் என்ற உணவு பதிவர் ஒருவர் அந்த கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருந்த 10 வயது சிறுவன் ஜஸ்பிரீத்திடம் உனது தந்தை எங்கே என்று கேட்க... அதற்கு ஜஸ்பிரீத் எனது தந்தை சமீபத்தில் உடல் நலப்பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு எனது தாயார் என்னையும், எனது சகோதரியையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் நானும், எனது சகோதரியும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். பின்னர் வாழ்வாதாரம் கருதி எனது தந்தையின் கடையை நானே நடத்த தொடங்கி விட்டேன். என் தந்தையிடம் இருந்து எக்ரோல் மற்றும் சிக்கன் ரொட்டி வகைகளை செய்ய பழகி இருந்தேன். தற்போது பல்வேறு வகையான ரொட்டி வகைகளை விற்பனை செய்கிறேன். வருபவர்கள் எல்லோருமே நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர் என கூறுகிறார்.

    அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது. வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார். இது தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தைரியம், உன் பெயர் ஜஸ்பிரீத். ஆனால் அவரது கல்வி பாதிக்கப்பட கூடாது. யாரேனும் அவரது தொடர்பு எண்ணில் இருந்தால் பகிரவும். ஜஸ்பிரீத்தின் கல்விக்கு ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புகளை எனது அறக்கட்டளை செய்யும் என கூறியுள்ளார்.

    • சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான்.
    • சிறுவனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த லொஹேகன் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷம்பு காலிதாஸ் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இது தொடர்பான வீடியோவில் சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். குறிப்பிட்ட நேரத்தில் சிறுவன் பேட்டிங் செய்த தனது நண்பருக்கு பந்துவீசுகிறான். பந்தை எதிர்கொண்ட நண்பர் அதனை வேகமாக அடித்துள்ளார்.

    இந்த பந்து சிறுவன் பிறப்புறுப்பின் மீது வேகமாக தாக்கியது. இதில் சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான். பிறகு சில நொடிகளில் மேலே எழுந்த சிறுவன் அடுத்த சில நொடிகளில் நிற்க முடியாமல் கீழே விழுகிறான்.

    அப்படி விழுந்த சிறுவன் மீண்டும் எழவே இல்லை. கீழே விழுந்த சிறுவனை உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    எனினும், மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை விபத்தால் நேர்ந்த உயிரிழப்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

    • வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.
    • தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மிட்டப்பள்ளி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சிவா-விஜய பிரியா தம்பதியரின் 10 வயது குழந்தை வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதி செய்தனர்.

    தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதையடுத்து குறித்த நேரத்தில் சிறுவன் முழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினார்.

    இந்த சிகிச்சையில் மருத்துவர்கள் மதன்குமார், காது மூக்கு, தொண்டை மருத்துவர் செந்தில், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.
    • 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஓட்டுனர் உரிமம் இன்றி பள்ளி மாணவர்கள், மோட்டார் சைக்கிள்கள், 4 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.

    போலீசார் கண்காணித்து ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் சிறு வயதிலேயே லாரிகளை ஓட்டிச் செல்லும் குழந்தைகளை பெற்றோர்களே ஊக்கப்படுத்தி வருகின்றனர். 18 வயது பூர்த்தியடைந்தால்தான் ஓட்டுனர் உரிமமே வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்களும் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

    சில நேரங்களில் சாகச பயணம் மேற்கொண்டு அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர். இதே போல ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் தண்ணீர் டேங்கருடன் இணைந்த டிராக்டரை 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    இதனை அவரது குடும்பத்தினரே ஊக்கப்படுத்தி வருகின்றனர். சிறுவன் டிராக்டர் ஓட்டி வரும் போது தெருவில் நடந்து செல்லும் மக்கள் அச்சத்தில் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர்.
    • சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கித்வாய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மல்லிகார்ஜுன் (வயது 10) என்ற சிறுவன் தனது பெற்றோரிடம் போலீஸ் அதிகாரியாக விரும்புவதாக கூறினான்.

    இது பற்றி பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், பெங்களூரு நிவாரண அமைப்பு இணைந்து பெங்களூரு வடக்குப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதாவத்திடம் உதவி கேட்டனர்.

    அதன்படி அவர் சிறுவனுக்கு உதவி செய்தார். நேற்று மல்லிகார்ஜூன் போலீஸ் சீருடை அணிந்து போலீஸ் ஜீப்பில் துணை கமிஷனர் அலுவலகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை காட்டப்பட்டது. போலீஸ் சீருடையில் இடுப்பில் கை துப்பாக்கி, கையில் போலீஸ் லத்தியுடன் அவரை போலீஸ் துணை கமிஷனர் அமரும் நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது சிறுவன் மல்லிகார்ஜுன் நான் வளர்ந்ததும் டிசிபி ஆகுவேன்' என துணை கமிஷனர் சைதுலு அதாவத்திடம் விருப்பம் தெரிவித்தான். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்களை தொட்டு பார்த்து அவற்றின் தகவல்களைப் பெற்றான். மேலும் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பார்த்தான்.

    • ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
    • மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார்.

    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது அவரை பார்த்து உற்சாகமடைந்த சிறுவன் ஒருவன் அவரை நோக்கி உற்சாகமாக கையசைத்துக் கொண்டே இருந்தான்.

    இதை மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார். 'மகனே, உன் அன்பை நான் பெற்றுவிட்டேன். தயவு செய்து உன் கையை தாழ்த்தி சாதாரணமாக வைத்துக் கொள். இல்லாவிட்டால் கை வலிக்க தொடங்கும்' என்றார்.

    பிரதமர் மோடியின் சிறுவனை பார்த்து கூறிய இந்த வார்த்தைகள் கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை பார்த்து சிறுவன் கையசைத்ததும், சிறுவனை பார்த்து பிரதமர் மோடி பேசியதும் வீடியோவாக இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், பார்வைகளையும் குவித்து வருகிறது.
    • 498 ரூபிக்ஸ் கியூப்ஸ்களை பயன்படுத்தி ஹிருதய் படேல் ராமர் படத்தை உருவாக்கி உள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஹிருதய் படேல் என்ற 11 வயது சிறுவன் ரூபிக் கன சதுரத்தை பயன்படுத்தி கியூப்பில் ராமபிரானின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், பார்வைகளையும் குவித்து வருகிறது.

    498 ரூபிக்ஸ் கியூப்ஸ்களை பயன்படுத்தி ஹிருதய் படேல் ராமர் படத்தை உருவாக்கி உள்ளார். சிறுவனின் இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், நம்ப முடியவில்லை! என்ன ஒரு அசாத்திய திறமை உங்களிடம் உள்ளது, கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர் என்ன ஆச்சரியம், ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் ஹிருதய் படேலின் திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவியேற்றார்.
    • சீன ஆதரவாளராக கருதப்படும் அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவியேற்றார். சீன ஆதரவாளராக கருதப்படும் அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருகிறார்.

    மாலத்தீவில் உள்ள இந்திய படைவீரர்கள் 88 பேரை மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெறும்படி இந்தியாவுக்கு மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீன பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாலத்தீவுக்கு டிரோனியர் ரக விமானத்தையும் இந்தியா வழங்கியது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மாலத்தீவில் உயிரிழந்துள்ளான்.

    மாலத்தீவின் கபி அலிப் விலிங்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டு இருந்தான். சிறுவனுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டதால் உடனடி மேல் சிகிச்சை தேவைப்பட்டது. தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    சிறுவனை அழைத்துச் செல்ல இந்தியா வழங்கிய டிரோனியர் விமானத்தைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.

    இதனால் 16 மணி நேரத்திற்கு பின் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக மாலத்தீவு உள்ளூர் ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறும்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை உரிய நேரத்தில் தலைநகர் மாலேவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை, தாமதமான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்து விட்டான் என தெரிவித்தார்.

    புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஓறையூர்காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகல்யா (வயது 19), இவருக்கு சசிதரன் என்ற 2 வயது மகன் இருந்தான். அகல்யா,கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் மகனுடன் வசித்துவந்தார். தனது மகன் சசிதரனுக்கு இட்லி ஊட்டி உள்ளார். சிறிது நேரத்தில் சிறுவனை தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலையை கவனித்தார்.பிறகு குழந்தையை எழுப்பிய போது குழந்தை அசைவில்லாமல் இருந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து அகல்யாவின் அண்ணன் அசோக் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரே தபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மினி பஸ் மோதி சிறுவன் பலியானான்
    • தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    அருப்புக்கோட்டை

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் திவான். இவரது தாய் மீரான்பீவி (வயது 70), மனைவி, 3 வயது மகன் தானிஷ்அகமது ஆகியோர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக இன்று காலை வந்தனர்.

    அருப்புக்கோட்டை புது பஸ் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடிப்பதற்காக மதுரை சாலையில் நடந்து சென்றனர். அப்போது தவறான வழியில் வேகமாக வந்த மினி பஸ் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த தானிஷ்அகமது சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தான். மீரான் பீவி, திவானின் மனைவி மற்றும் அங்கு நின்றிருந்த கருப்பசாமி, லட்சுமிபிரியா ஆகியோர் காயம் அடைந்த னர்.

    தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த வர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

    தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×