search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக கடலோர பகுதிகளில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

    தூத்துக்குடி:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் 6 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று தமிழக கடலோர பகுதிகளில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த ஒத்திகை நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் கடலோர காவல்படை போலீசார், மத்திய, மாநில உளவுத்துறையினர், கியூ பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சுமார் 1,000 போலீசார் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மரைன் டி.எஸ்.பி. தலைமையில் கடலோர போலீசார் 2 குழுக்களாக பிரிந்து படகுகள் மூலம் கடலோர பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.

    வழக்கமாக இந்த ஒத்திகையையொட்டி கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக பயங்கரவாதிகள் வேடத்தில் ஊடுருவுவார்கள். அவர்களை உள்ளூர் போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும் என்பது தான் இந்த ஒத்திகையின் முக்கிய உத்தரவு ஆகும்.

    அதன்படி தூத்துக்குடி கடற்கரை பகுதி வழியாக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 10 பேர் நகருக்குள் ஊடுருவ முயன்றனர்.

    அவர்களை கடலோர பாதுகாப்பு படை டி.எஸ்.பி. பிரதாபன், இன்ஸ்பெக்டர் ரேனிஸ் மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை வரை நடைபெறுகிறது.

    • கடலூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
    • முக்கிய சுற்றுலாத் தலங்கள் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நவம்பர் 26, 2008 மும்பையில் கடல் வழியாக ஊடுருவி வந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தினார்கள். அதன் பிறகு இந்தியாவின் கடல் எல்லைகளை தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் வேடமிட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக வந்து நகர்ப்புற பகுதிக்குள் ஊடுருவி வருவார்கள். அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து, மடக்கிப்பிடிக்க வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் சிறப்பு அம்சம்.

    இன்று காலை 6 மணிக்கு தொடங்கி, 2 நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடக்கும். கடலூரில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள், 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500 காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் கடல் வழியாக தங்களது ரோந்து படகின் மூலம் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    • மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.
    • வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    சீர்காழி:

    சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களு க்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.

    சீர்காழி குடிமை ப்பொருள் வழங்கல் தாசில்தார் சபிதாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் இந்துமதி, சாந்தி, வட்ட வழங்கல் தனி தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி தையல் எந்திரம், ஊன்றுகோல் ஆகியவற்றை வழங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக்கொ ண்டார். இதில் டாக்டர் அருண்ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், மேலாளர்கள் சங்கர், சுமதி கலந்து கொண்டனர்.

    • சீராப்பள்ளி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
    • கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி பெறும் முறை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் லோகாம்பாள், துணைத் தலைவர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாமலை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கோமதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குழந்தைகளின் திருமணங்கள், குழந்தைகள் தத்தெடுக்கும் முறை, ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாக்குதல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், இளம் வயது குழந்தை திருமணம் தடுத்தல், கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி பெறும் முறை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • போலீஸ் துணை சூப்பிரண்டு நேரில் ஆய்வு
    • 2000 பக்தர்கள் கோவில் வளாகத்தில் நிற்பதற்கு வசதி உண்டு

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ ப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுவதையொட்டி அதிகாரிகள் முகாமிட்டு வேலைகளை முடுக்கி விட்டனர்.

    கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து நேற்று தேவஸ்வம் போர்டு இணை ஆணையாளர் ஞானசேகர், சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார், தக்கலை டி.எஸ்.பி. கணேசன், திருவ ட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கோயிலுக்குச்சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி பக்தர்கள் வழக்க மாக வரும் கிழக்குவாசல் வழியாக அனுமதிக்காமல் மேற்கு வாசல் வழியாக கோயினுள் அனுமதிக்கப்படுவர்.

    கும்பாபிஷேக வேளை யில் கோயில் வளாகத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும், அந்நேரம் 2000 பக்தர்கள் கோவில் வளா கத்தில் நிற்பதற்கு வசதி உண்டு, அன்றைய தினம் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

    மேலும் கோயில் வரை படத்தை வைத்து எந்தெந்த பகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொ ள்ளலாம் என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவிலில் மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி முடிவடைந்து விட்டது. கோயில் கருவறையில் தற்போது 22 அடி நீளமுள்ள கடுசர்க்கரையோக திரு மேனியை கூடுதல் பள பளப்புடன் பக்தர்கள் தரிசிக்க முடியும். மேலும் சிலையின் பின்புறமுள்ள சுவரில் சங்கை உரைத்து அதன்மூலமாகக் கிடைக்கப்பெற்ற வெள்ளை வர்ணமாக பூசியுள்ளதால் சிலையின் அழகு கூடுதல் அழகுடன் காட்சி தருகிறது. கோயில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பணி முடிவடைது விட்டது.

    பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் பழமை மாறாமல் மூலிகை ஓவியங்கள் புதுபிக்கப்பட்டு உள்ளன. இவற்றையெல்லாம் தொல்லியல் துறை சிறப்பு அலுவலர் லோகநாதன் ஆய்வு மேற்கொண்டார் அறநிலையத் துறை பொறி யாளர் ராஜ்குமார் ஒவியங்க ள் புதுபிப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்.

    • ஆய்வில் சுமார் 1,100 ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது.
    • அனைத்து கல் வெட்டுகளும் தற்போதும் கோவில் சுவர்களில் காணக் கிடைக்கிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ளது ஆலத்தூர் கிராமம். இந்த ஊர் பண்டைய வட கொங்கின் 20 நாட்டு பிரிவுகளில் ஒன்றான வட பரிசார நாட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள அமணீசர் கோவில் என அழைக்கப்படும் சமணர் கோவிலில் திருப்பூரை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் சுமார் 1,100 ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது.கல்வெட்டுகளின் மூலம் இந்த ஊர் பண்டைய வணிகர்கள் செல்லும் பெருவழியில் உள்ளதால் சமணர்கள் இங்கு குடியேறி 1,100 ஆண்டுகளுக்கு முன் வீரசங்காத பெரும்பள்ளி அணியாதழிகியார் என்ற இந்த சமணர் கோவிலை கட்டியுள்ளனர் .

    இந்த கோவில் தான் தற்போது அமணீசர் கோவில் என்று அழைக்கப்படுகிறது . பல சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கி.பி. 10 - ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டுகள் மூன்றும் , கி.பி. 13 , 14 - ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன . இங்கு உள்ள தமிழ் கல்வெட்டு 14- ம் நூற்றாண்டை சேர்ந்த போசள மன்னன் வீரவல்லாளன் காலத்தை சேர்ந்தது . இது மிக முக்கியமானது ஆகும் .

    இதன் மூலம் அரசு வருவாய் நிர்வாகத்தை அறிந்து கொள்வதற்கும் , நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கும் சிறப்பை வெளிப்படுத் துவதற்கான சிறந்த சான்றாக உள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நம்முடைய பண்டைய நிர்வாகத்தையும், பெண்களுக்கு சம பங்கு கொடுத்தமையையும் பற்றி பேசும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகள் உடைய அமணீசர் கோவில் கருவறை முற்றிலும் சிதிலம் அடைந்துள்ளது.

    முன் மண்டபமும் பராமரிப்பு இன்றி சிதிலமாகி கற்கட்டுமானங்கள் பெயர்ந்து மொத்தமாக கீழே விழும் நிலையில் உள்ளது.மேலும் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தின் மீது ஏராளமான பெரிய மரங்கள் வளர்ந்து உள்ளன.இக்கோவிலை சுற்றி ஏராளமான மரங்கள் வளர்ந்து உள்ளூர் மக்களே கூட உள்ளே செல்ல முடியாத அளவு புதர் மண்டி கிடக்கிறது.

    அனைத்து கல் வெட்டுகளும் தற்போதும் கோவில் சுவர்களில் காணக் கிடைக்கிறது.அவை பாதுகாப்பற்ற நிலையில் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது.மதுரை ஜெயின் வரலாற்று மையம் சார்பில் அறிவிப்பு பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ள நிலையில்,வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி ஏதோ ஒரு குறுங்காடுபோல் அமைந்துள்ளது.

    சமண சமயத்திற்கும் , தமிழ் மண்ணுக்கும் 2,500 ஆண்டுகளாக வரலாற்றியல் பண்பாடு சார்ந்த உறவும் , தொடர்பும் நீடிப்பதால், அழிவின் பிடியில் உள்ள இந்த கோவிலை தமிழக அரசு மறுசீரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும் என்று ஆலத்தூர் கிராமத்தில் வாழும் பொதுமக்களும் , சமண சமூகத்தினரும் தொல்லியல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • தியாகதுருகம் அருகே தேசிய பேரிடர் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் பாலு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தேசிய பேரிடர்மீட்பு படை உதவி ஆய்வாளர் சஞ்சீவதேஸ்வால் தலைமை யில் நிலநடுக்கம் ஏற்படும் போதும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மற்றும் பாது காப்பு குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் 15-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், ரூபா தேவி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பிளாட்பாரங்களில் தீவிர கண்காணிப்பு
    • குழித்துறை, இரணியல், வள்ளியூர், நாங்குநேரி ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய 'அக்னிபத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.

    இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

    4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். அரசின் அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர்.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையத்திலும் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    தமிழகத்திலும் பாது காப்பை பலப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இந்த நிலையில் சென்னையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் பாதுகாப்பு பணியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். ரெயில் நிலைய வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ரெயில் நிலையத்திற்கு வந்த வட மாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    இதேபோல் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குழித்துறை, இரணியல், வள்ளியூர், நாங்குநேரி ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    • மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் வருவதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி அர்ஜுன் சம்பத் மனு கொடுத்துள்ளார்.
    • மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மதுரை

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று காலை மதுரை மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது போலீஸ் கமிஷனரிடம் மதுரை ஆதீனத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி கோரிக்கை மனு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை ஆதீனம் தற்போது அரசியல்வாதிகளாலும், ரசிகர்களாலும், இன்னபிற சக்திகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார். எனவே குரு சன்னிதானத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

    மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளுகிறார். நாங்கள் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அறநிலைய துறை அமைச்சர் மிரட்டி வருகிறார்.

    இந்து மத சமய நம்பிக்கைகள் சீர்குலைவதும், கோவில்கள் அறநிலையத் துறை பிடியில் இருப்பதும் 50 வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இதற்கு எதிரான கருத்தைத்தான் ஆதீனம் வெளிப்படுத்தி உள்ளார். இது நடிகர் விஜய்க்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்து அல்ல. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்விஜய் ரசிகர்கள் ஆதீனம் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

    தாய், தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் அல்ல. எனவே விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

    எப்பொழுதும் போல மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் வழியில் பணிகளை செய்து வருகிறார். அவருக்கு இந்து சமய அமைப்புகள் ஆதரவாக உள்ளன. அவர் எல்லா ஆன்மீக சமய அமைப்புகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்.அறநிலையத் துறை அமைச்சரே மிரட்டுவதால், மத்திய அரசு மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    ஆதீனம் சர்ச்சைக்கு உள்ளான கருத்துக்களை சொல்லவில்லை . கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று சொல்லி வருகிறார். இந்த கருத்து எல்லா காலகட்டத்திலும் சொல்லப்பட்டது.

    சர்ச் சொத்து கிறிஸ்துவர்களிடமும், முஸ்லிம் சொத்து முஸ்லிம்களிடமும் இருக்கிறபோது, இந்து ஆலய சொத்துக்கள் மட்டும் ஏன் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்? எங்களது உரிமைக் குரலாக ஆதீனம் இருந்து வருகிறார்.

    தி.மு.க.வோடு மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு மாநில அரசு செவி கொடுக்கவில்லை என்றால் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீஸ் குவிப்பு-சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு
    • போலீசார் பலத்த பாதுகாப்பு

    கன்னியாகுமரி :

    திங்கள் நகர் அருகே மேக்கோடு என்ற இடத்தில் புதுக்கடை பாரதிய ஜனதா பிரமுகர் ராதாகிருஷ்ணன் மீது சில அமைப்புகளை சேர்ந்த 4 பேர் தாக்குதல் நடத்தினர்.

    இதில் தொடர்புடைய நபர்களை உடனே கைது செய்ய கேட்டு திங்கள்நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இது தொடர்பாக குற்றவாளி களுக்கு உதவி செய்ததாக திருவிதாங்கோடு, கோட்டார் பகுதியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) மாற்றம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் திங்கள் நகரில் நாளை (8-ந் தேதி) காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதற்கிடையில் போலீஸ் துறை யினர் ஒருதலை பட்சமாக செயல் படுவதாக கூறி பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் திங்கள் நகரில் நாளை காலை முதல் மாலை வரை தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனால் திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நான்கு மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #AmitShah
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநில சட்டசபைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

    பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

    அமித் ஷாவுக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு எப்போதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

    தற்போது அவருக்கு மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


    அதில், “அமித்ஷாவுக்கு அளிக்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு படையினருடன் மாநில போலீசாரும் இணைந்து பணியில் ஈடுபட வேண்டும். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு முன்னதாகவே நேரில் சென்று பார்வையிட்டு தீவிர சோதனை நடத்த வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு தேசிய பாதுகாப்பு படையினரின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது விழா நிகழ்ச்சிகளில் இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. #BJP #AmitShah
    ×