search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் 2 வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, டிக்கெட் பெறக்கூடிய கவுண்டர், உள்ளே நுழையக் கூடிய பகுதியில் நீண்ட வரிசையும் காணப்படுகிறது.

    ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 4 பெட்டிகள் உள்ளன. அதில் 3 பெட்டிகள் பொதுவானவை. ஒரு பெட்டி மட்டும் பெண்கள் பயணம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து இடையூறு செய்வதாக புகார்கள் வருகின்றன.

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணத்தின் போது மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிக்கக்கூடாது என அறிவிப்பையும் வெளியிடுகிறது.

    ஆனாலும் சிலர் தெரியாமலும் ஒரு சிலர் தெரிந்தே அதில் பயணம் செய்வதால் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஆண்-பெண் ஒன்றாக மகளிர் பெட்டி யில் பயணம் செய்கின்றனர். இதனால் தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

    மேலும் ரெயில் நிலையங்களிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நின்று பேசுவது, உட்கார்ந்து இருப்பது போன்றவை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்பு படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.

    பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இளஞ்சிவப்பு படையில் கராத்தே தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 25 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தற்காப்பு கலைகளில் பிரவுன் பெல்ட் பெற்றவர்கள். பெண் பயணிகளின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் ஒவ்வொரு ரெயில் மற்றும் நிலையத்திலும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில் இளஞ்சிவப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பெண் பயணிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான பெண்கள் மெட்ரோ ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    ஆனாலும் சில இடையூறுகள் இருப்பதாக ஆய்வில் உறுதியானது. இந்த இளஞ் சிவப்பு படையிடம், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம். அவற்றை அவர்கள் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.

    நந்தனத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இளஞ்சிவப்பு பாதுகாப்பு படையை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்.

    • நாளை 13ம் தேதி பெரிய அளவிலான போராட்டத்தை டெல்லியில் நடத்த தயாராகி வருகின்றனர்.
    • டெல்லி நகருக்குள் நுழைய முடியாதபடி தடைகளை அமைத்து உள்ளனர்.

    சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற பெயரில் விவசாயிகளின் பேரணி நாளை (13- ந்தேதி) டெல்லியில் நடைபெறுகிறது.

    உத்தரபிரதேசம், அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் இந்த விவசாயிகள் நாளை 13ம் தேதி பெரிய அளவிலான போராட்டத்தை டெல்லியில் நடத்த தயாராகி வருகின்றனர்.

    விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லி போலீசார் சிங்கு, காஜிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளனர். போராட்டக்காரர்களை நகருக்குள் நுழைவதைத் தடுக்க ஆணிகள் மற்றும் தடுப்புகளை அமைத்து உள்ளனர். 

    மேலும், சாலைகளில் கிரேன், ஜேசிபி எந்திரங்கள் மூலம் பெரிய சிமெண்ட் கற்களை கொண்டு தடுப்புகள் அமைத்து உள்ளனர். விவசாயிகளின் வாகனங்கள் டெல்லி நகருக்குள் நுழைய முடியாதபடி தடைகளை அமைத்து உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான போலீசார் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
    • கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அதனை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் அதற்கு மறுநாள் (17-ந் தேதி) காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    காணும் பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பொழுதை போக்குவார்கள். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும்.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். மெரினாவில்

    சென்னையில் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

    இதன் படி வருகிற 17-ந் தேதி அன்று மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவை யான பாதுகாப்பு ஏற்பாடு களை போலீசார் செய்து வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக கடற்கரை யோரங்களில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. இதையும் தாண்டி மக்கள் கடலில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக போலீஸ் குதிரைப்படை வீரர்களை கொண்டும் கண்காணிக்கப்பட உள்ளது.

    மெரினாவில் கூட்ட நெரிசலின் போது குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவுக்கு பெற்றோருடன் வருகை தரும் குழந்தைகளின் கைகளில் பாதுகாப்பு வளையம் ஒன்றை கட்டிவிட போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த வளையத்தில் போலீஸ் உதவி மைய செல்போன் எண்களும், பெற்றோர்களின் செல்போன் எண்களும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமாக மாயமாகும் குழந்தைகளை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    டிரோன்கள் மூலமாகவும் வானில் வட்டமடித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மெரினாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும் போலீசார் பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.
    • சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது.

    சேலம்:

    ஜனவரி மாதம் 1-ந் தேதி வந்துவிட்டால் போதும். கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. சமூக வலைதளங்கள் அதிகரித்து விட்ட சூழலில் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். அப்படித் தான் இன்றைய தினமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    ஆங்கிலப் புத்தாண்டு-2024 இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. இதனால் மலைப் பகுதியில் நிலவும் பனி மூட்டம் மற்றும் சிலு சிலு காற்றின் மத்தியில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

    கோவில்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மால்களில் குவிவது ஒரு ரகம். சுற்றுலா தலங்களை தேடி தேடி சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது மற்றொரு ரகம்.

    அந்த வகையில் "ஏழைகளின் ஊட்டி" என்று பாசமாக அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம், கூட்டமாக படையெடுக்க தொடங்கி உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி , ஆந்திரா உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தற்போது தமிழத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான பேர் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். ஏற்காட்டில் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிறார்கள். இதையொட்டி இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளதால், அங்குள்ள தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.

    ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் திருவிழா கோலம் போல் காட்சியளிக்கிறது. அங்குள்ள பூங்காக்கள், ஏரி, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

    இதற்காக முன்கூட்டியே அதாவது நேற்று இரவு முதலே பக்காவாக திட்டம் தீட்டி வைத்து பஸ்கள், மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சாரை, சாரையாக ஏற்காட்டிற்கு வருகின்றனர்.

    இன்று ஒருநாள் ஏற்காட்டில் தான் என்று. ஏற்காட்டின் மையப் பகுதியான ஏரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், அதன் இயற்கை அழகை ரசித்தும் வருகின்றனர். ஆங்காங்கே உள்ள திடீர் கடைகளில் கிடைக்கும் சுட சுட சோளக்கதிர், நிலக்கடலை, மிளகாய் பஜ்ஜி போன்றவற்றை ரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர்.

    சேலம் மாவட்டத்தின் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காலநிலை குளிர்ச்சியாக இருக்கும். இது டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சம் 16.7 செல்சியஸ் வரை தொடும். அந்த வகையில் 4,969 அடி உயர்த்தில் உள்ள ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனி படர்ந்து காணப்படுகிறது. அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மற்றும் சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏற்காட்டில் வெப்பநிலை மனதிற்கு இதமாகவும், சில்லென்ற காற்றோடு அம்மண்ணின் வாசத்தையும் அள்ளித் தருவதால் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

    இந்த புத்தாண்டையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கார்கள் அனைத்தும் சோதிக்கப்பட்டு, மதுபாட்டில்கள் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படும். ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளின் நிர்வாகங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மது அருந்திவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளை விடுதிகளில் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் கூறியுள்ளோம்.

    விடுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படால் இருக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மது அருந்திவிட்டு எவரும் வாகனங்களை இயக்கக் கூடாது.

    சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது. நிகழ்ச்சியாளர்கள், நிகழ்ச்சிகளை கண்டிப்பாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், காட்சி முனைப்பகுதிகள் உள்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.

    மும்பை:

    மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பை நகரில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.

    இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. அவனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவன் எங்கிருந்து பேசினான் என்பது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    வெடி குண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம், ஆட்டம். பாட்டத்துடன் உற்சாகத்துடன் நடக்கும். இன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.

    • மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பொது மக்களை தங்கவைப்பதற்கான தற்காலிக தங்குமிடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், வள்ளிக்கந்தன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொத்திக்குப்பம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் ராசாப்பேட்டை புயல் பாதுகாப்பு மையம் ஆகிய மையங்களில் குடிநீர், ஜெனரேட்டர் வசதி, கழிவறை உள்ளிட்ட பொதுமக்களை தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்தும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-

    கடலூர் மாவட்டத்தில் மிக அதிக பாதிக்கக் கூடிய பகுதிகள், அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகள் எனக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக தங்கும் இடங்கள் தயார்நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை செய்வதற்கு அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து, பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாக செயல்படும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற் றினை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குடும்பத் திற்கு ஆதார மாகவும், உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. உழைக்கும் மகளிரின் நலனை கருத்களை பெருமைப்ப டுத்திடும் பொருட்டு, மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்கத் திட்ட மான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங் கும் உரி மைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தி ன் மூலம், தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்ற னர். விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில், 4,97,708 விண்ணப்பிங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தகுத தகுதி வாய்ந்த 3,25,514 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தில் மேல்முறையீடு செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதற்கட்ட மாக 3,25.514 மகளிர்களுக் கும், 2ம் கட்ட மாக 22,096 மகளிர் என மொத்தம் 3.47,610 மகளிர்களுக்கு. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வங் கிக்கணக்கில் செலுத் தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தனது செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

    • ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ரயில் நிலையத்தி லிருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்போது வழி நெடுகிலும் கூடியிருந்த பெண்கள் ஆர் எஸ் எஸ் கொடிக்கு மலர் தூவி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலமானது நாகை அவுரித்திடலில் நிறைவடைந்தது.

    அதன் பின்னர் அவுரித்தி டலில் கொடியேற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியை செய்து காண்பித்தனர்.

    நாகையில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    • இரவு முழுவதும் வியாபாரம் செய்ய போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    • வணிகர்களிடம் அரசு அதிகாரிகள் எனக்கூறி வசூல் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட, நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார், செயலாளர் ஆனந்த், பொருளாளர் சோலையம்மாள் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இரவு முழுவதும் வியாபாரம் செய்வதற்கு போலீசார் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறு வணிகர்களையும், சாலையோர வியாபாரிகளையும் கடையை அடைக்க சொல்லி வற்புறுத்தக் கூடாது.

    வணிகர்களை அந்தந்த பகுதியில் உள்ள சமூக விரோதிகள் சட்ட விரோதமாக பணம் கேட்டு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    வணிகர்களிடம் அரசுத்துறை அதிகாரிகள் என கூறி கட்டாய வசூல் செய்தும், பொருட்கள் கேட்டு தொல்லை கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருகின்ற 19ஆம் தேதி புதிதாக தலைமை கட்டிட திறப்பு விழாவிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தப்பட்டது.

    இதில் பொறுப்பாளர்கள் வல்லம் கோவிந்தராஜ், திருக்காட்டுப்பள்ளி தியாக சுந்தரமூர்த்தி, பூதலூர் சண்முகராஜ், செங்கிப்பட்டி நந்தகுமார், ஒரத்தநாடு மணிசுரேஷ், பட்டுக்கோட்டை வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • கடையின் வெளியே வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
    • கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த கடைகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர உரிமம் வழங்கப்படுகிறது. நிகழாண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் சில இடங்களில் வெடிவிபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    எனவே, பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

    இதனால் பெரும்பாலான கடை களுக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பேராவூரணி பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்த கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும். தீ தடுப்பு கருவி இருக்க வேண்டும். மின் இணைப்புகள் பழுதின்றி இருக்க வேண்டும். கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும், அவசர கால வழி கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பேராவூரணி வட்டாட்சியர் ஆர். தெய்வானை, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயதுரை, முருகேசன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் கமலநாதன், கிராம நிர்வாக அலுவலர் சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வருகிற 10 -ந் தேதி மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் நாறவாக்கம் மற்றும் கைப்பணி குப்பம் இடை யில் உள்ள கடற்கரை ஓரமுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தினை விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஈஸ்ரூதன் ஜெய் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

    அப்போது விழா மேடை எப்படி அமைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சருடன் வரும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய குடிநீர் உணவு இருக்கைகள் மின் வசதி போன்றவைகள் எவ்வாறு அமைத்து தர வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், மாவட்ட கவுன்சிலர் புஷ்ப வல்லி குப்புராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் அறிக்கை
    • 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட தோட்டியோட்டில் செயல்பட்டுவரும் பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதி மற்றும் அழகிய மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பிலாங்காலை முதியோர் இல்லம் போன்றவற்றை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார். அங்குள்ளவர்களிடம் நேரடியாக பேசிய அவர் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சுவதார் கிரஹக் என்ற பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதியானது சுரக்க்ஷா தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிடம் ஏற்பாடு, ஆலோசனை மையம் அதனுடன் சுயதொழில் என பெண்களுக்காக பல்வேறு உதவிகள் இம்மையம் ஏற்படுத்தி உள்ளது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களை 5 நாட்கள் வரை இங்கு தங்க வைக்கலாம். இருப்பினும், நீண்ட கால தங்கும் தேவைக்காக, அத்தகைய பெண்கள் மற்றும் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது 18 வயதிற்கு குறைந்த துன்பப்பட்ட அல்லது ஆதரவற்ற பெண்கள், சக்தி சதனுக்கு பரிந்துரைக்கப்படு வார்கள்.

    அங்கு அவர்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை தங்கலாம். சக்தி சதனில் தங்குவதற்கு 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்படலாம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் மூலம் தேவை அடிப்படையில் இருப்பினும், 55 வயதுக்கு மேற்பட்ட வயதான பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கலாம். அதன் பிறகு அவர்கள் முதியோர் இல்லங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு மாற்றப்பட வேண்டும். மேலும் இக்குறுகிய கால தங்கும் விடுதியில் இருந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் அக்டோபர் மாதம் முழுவதும் முதியோர் தினவிழா அனுசரிக்கப்பட்டது. மாவட் டத்தில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தொடர்பாக வரும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது.

    மூத்த குடிமக்கள் உதவி எண் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வழிதவறியவர்கள் மற்றும் கைவிடப்பட்ட முதியவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க உதவுதல் உள்ளிட்டவை செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    முதியோர் உதவி எண்ணில் அழைக்கும் போது முதி யோர்களின் உடல்ரீதியான, பாதுகாப்பு, மனநல ஆலோ சனை, சுகாதார தேவைகள் தொடர்பான வழிகாட்டுதல் உறுதி செய்து கொடுக்கப்படு கிறது. மாவட்டத்தில் தற்போது 31 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பிள்ளைகளால் கைவிடப் படும் முதியோர்களை பாதுகாத்து அவர்களிடம் அன்பும் பாசமும் காட்டி மூத்த குடிமக்களை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். பிலாங்காலை மற்றும் மாத்தார் முதியோர் இல்லங்களில் 129 முதி யோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு தற்போது முதியோர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றது.

    முதியோர் உதவி எண் 14567 ஆகும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மூத்த குடிமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று அவர்களின் குறைகள் அறியப்பட்டு தீர்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் வழக்கு தொடர் பாக மாவட்ட ஆட்சியரின் தீர்ப்பே இறுதியானது ஆகும். எந்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் ஆட்சியரின் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக கருதப்படும்.

    எனவே ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டில் உள்ள முதியோர்க ளுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களை சிறந்த முறையில் பராமரித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து பிலாங்காலை முதியோர் இல்லத்தில் கொண்டாடப் பட்ட சர்வதேச முதியோர் தினவிழாவில், கலெக்டர் ஸ்ரீதர் முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டினார். முதியோர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, குறுகிய கால தங்கும் விடுதி தலைவர் சாந்தா பாலகிருஷ்ணன், மாத்தார் மற்றும் பிலாங் காலை முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் முதி யோர்கள் கலந்து கொண்டனர்.

    ×