search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது.
    • இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

    விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் சோதனை முதல் விமான பயணிகளின் உடைமைகள் வரை அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெட்டிகளும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பயணிகள் எவரேனும் சந்தேகப்படும் வகையில் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்திருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது .

    • 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கொக்குபாளையம் மற்றும் நல்லூர் பாளையம், காடாம்புலியூர் பகுதியில் உள்ள மேலிருப்பு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து குடோ ன்களில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை,காவல் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை மேம்பாட்டு வாரியம் மேற்கண்ட 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வில் தொழிற்சாலைகளின் துணை இயக்குநர் மகேஷ்வரன், பண்ருட்டி சிறப்பு திட்ட தனி தாசில்தார் பிரகாஷ்,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தொழிலாளர் அலுவலர் ஆகியோர்உடனிருந்தனர்.ஆய்வின்போது விதிமீ றல்கள் ஏதாவது உள்ளதா? எனவும்,பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    • திருமண உறவானது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டும்.
    • எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும்.

    மனிதராக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது கண்டிப்பாக இருக்கும், ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதலிக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்கியமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.

    நம்முடைய திருமண உறவானது நமது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. சிலர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில விஷயங்கள் அவர்களது துணைக்கு பெரும் தொல்லையாகவோ அல்லது அவர்களது வளர்ச்சியை தடுக்கக்கூடியதாகவோ இருந்துவிடக்கூடும்.

    * கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்றப்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும், மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.

    * கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது, அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.

    * உங்கள் கணவனை-மனைவியை ஒருபோதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே தான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.

    * உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சமூக வலைதள பக்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும், இது உங்கள் துணையின் தனி உரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும், இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைக்கும் ஒரு வித மனசோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தி உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

    * உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.

    • திருமங்கலத்தில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.
    • பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கண்மாயில் தீயணைப்பு, வருவாய் துறையினர் இணைந்து பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு வடகிழக்கு பருவமழை கால பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.

    திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து ராமன் தலைமையில் மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் அவர் களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செய்து காட்டப்பட்டது.

    மேலும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எவ்வாறு முதலு தவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கியாஸ் அடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    • திருத்துறைப்பூண்டியில் நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆறு, ஏரி, குளங்கள் ஆகியவை உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ஆறுகள் தினத்தையொட்டி நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுத்தை வெளியிட்டு பேசுகையில்:-

    ஆறு, ஏரி, குளங்கள் போன்றவை அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.

    இவைகளை நாம் மாசுபடாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச்செல்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

    நாட்டின் வளத்திற்கு ஆறுகளே பெரும் பங்கு வகிக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் கோமதி செந்தில்குமார், கணக்காளர் முத்து மீனாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆனைமலை, நெகமம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
    • மழைக்காலங்களில் ஈரமான புற்கள் அளிக்காமல் சற்று உலர வைத்து அல்லது உலர் தீவனமான வைக்கோல் மற்றும் கடலைக் கொடியுடன் அளித்தல் வேண்டும்.

    உடுமலை

    ஆனைமலை, நெகமம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில், விரைவில் பருவமழை தீவிரமடைய உள்ளது.

    இதனையடுத்து, மழை காலங்களில் கால்நடைகளை எவ்வாறு நோய்களில் இருந்து பாதுகாப்பது என்பது குறித்து அரசு கால்நடைத்துறையினர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி கால்நடைத்துறை அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகள் வருமாறு:-

    கால்நடைகள் அதிக நேரம் மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொட்டகையில் நீர்த்தேங்க விடக்கூடாது. நீர்த்தேங்குவதன் மூலம் ஒட்டுண்ணி பிரச்சினைகள், சளி மற்றும் கொளம்பு அழுதல் போன்ற நோய் அதிகரிக்கும். குறிப்பாக ஆடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிகம் பாதிக்கப்படும். எனவே, சீரான வடிகால் அமைத்தல் அவசியம். குளிர் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் சமயங்களில் சாம்பிராணி மற்றும் வேப்பங்கொட்டை கலந்து கொட்டகையில் காலை மற்றும் மாலை வேலைகளில் புகை மூட்டுதல் வேண்டும்.

    சுத்தமான குடிநீர் அளித்தல் அவசியம். மழைக்காலங்களில் ஈரமான புற்கள் அளிக்காமல் சற்று உலர வைத்து அல்லது உலர் தீவனமான வைக்கோல் மற்றும் கடலைக் கொடியுடன் அளித்தல் வேண்டும். குளிர்காலங்களில் குட்டிகளை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க போதிய சூட்டினை தர வேண்டும். அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுதல் அவசியம். குறிப்பாக கோமாரி, ஆட்டுக் கொல்லி மற்றும் துள்ளுமாரி நோய்களுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

    மடி நோய் வராமல் இருக்க கொட்டகை மற்றும் மாட்டின் மடியை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். கோழி கொட்டகையின் தரைப்பகுதியை ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஈரம் அதிகமானால் ரத்த கழிச்சல் நோய் பரவி பேரிழப்பு ஏற்படுத்தும். அக ஒட்டுண்ணிப் பிரச்சினைகளில் இருந்து கால்நடைகளை காத்துக் கொள்ள இயற்கை மருந்துகளான கோமியம் அல்லது தண்ணீர் 10 லிட்டர், நொச்சி இலை கரைசல் 50 கிராம், உன்னிச்செடி கரைசல் 50 கிராம், வசம்பு 50 கிராம் கலந்து கால்நடை கொட்டகையில் தெளிக்க வேண்டும்.

    இந்த முறையை பயன்படுத்தி கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    • பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
    • முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 31-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    இதற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.

    இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாஷம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது.

    மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், திருச்சி டிஐஜி பலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி மீனா, தஞ்சை எஸ்.பி ஆஸிஷ் ராவத், எஸ்ஐயூ எஸ்பி பாண்டியராஜன், திருச்சி டிராபிக் எஸ்பி செல்வகுமார், சேலம் எஸ்பி மதிவாணன், கரூர் எஸ்பி சுந்தரவதனம், கடலோர காவல் படை எஸ்பி அதிவீரப்பாண்டியன், திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார், அரியலூர் எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உட்பட 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும், கமோண்டோ போலீசாரும் வந்துள்ளனர்.

    மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • பதற்றமான பகுதிகளில் வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக ஆசாத்நகர் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸ் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள். பதற்றமான பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஊர்வலத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • நாளை முதல் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க ஏற்பாடு
    • ஆற்றுப்பகுதியில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் செய்து வருகின்றனர்

    கோவை,

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி கோவை மாநகரில் 676 சிலைகள், புறநகரில் 1,611 சிலைகள் என மாவட்டத்தில் மொத்தமாக 2,287 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை யொட்டி மாநகரில் 2,500 போலீசார், புறநகரில் 2 ஆயிரம் போலீசார் என மொத்தம் 4,500 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய, விடிய ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலைகள் முன்பு தலா ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    கோவை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (புதன்கிழமை) மற்றும் 22-ந் தேதி ஆகிய நாட்களில் நடந்கிறது. கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி, குனியமுத்தூர், வெள்ளக்கி ணறு, வடவள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள குளங்க ளிaல் கரைக்கப்படுகிறது. 22-ந் தேதி முத்தணங்குளத்தில் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாந கரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள் ளது. இது குறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கக்கூடாது. பொள்ளாச்சியிலிருந்து உக்கடம் வரும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் ஈச்சனாரி சர்வீஸ்ரோடு வழியாக சென்று ஈச்சனாரியில் யுடர்ன் செய்து செட்டிப்பாளையம் ரோடு வழியாக ஜி.டி டேங்க், ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் சென்றடையலாம்.

    பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி செல்லும் இலகுரக வாக னங்கள் ஈச்சனாரி, தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதா மில் ரோடு ரெயில் கல்யாண மண்டம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்லலாம்.

    உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடது புறமாக திரும்பி போத்த னூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, செட்டி பாளையம் ரோடு, ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

    உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சாரதாமில் ரோடு வழியாக பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் கனரக வாக னங்கள் மற்றும் பஸ்கள் அனைத்தும் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக அசோக் நகர் ரவுண்டானா, பள்ளியின் இடது புறமாக திரும்பி சிவாலயா சந்திப்பு பேரூர், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்ல லாம். உக்கடத்திலிருந்து குனிய முத்தூர் வழியாக பாலக் காடு நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலைவழியாக அசோக் நகர் ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி புட்டு விக்கி ரோடு வழியாக பாலக்காடு நோக்கி செல்லலாம்.

    பாலக்காடு சாலையிலி ருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனம் மற்றும் பஸ்கள் பாலக்காடு ரோடு, கோவைப்புதூர் பிரிவில் இடது புறமாக திரும்பி கோவைப்புதூர் ஆசரமம் பள்ளி, பேரூர், செல்வபுரம் சிவாலயா சந்திப்பு வழியாக செல்வபு ரம் மேல்நிலைப் பள்ளியின் வலது புறமாக திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    இலகுரக வாகனங்கள் கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், கண்ணாம்பு காளவாயில் இடது புறமாக திரும்பி, புட்டுவிக்கி சாலை, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர், எஸ்.பி ஆய்வு செய்தார்.
    • தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் இமானு வேல் சேகரன் நினைவி டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, முருகேசன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு காமிராக்கள், வி.ஐ.பி.க்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், புற காவல் நிலையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    • மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    கோவை,

    வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் கார் குண்டு வெடிப்பு, சமூக விரோத கும்பல் நடமாட்டம், பல்வேறு குற்றவாளிகள் பிடிபட்ட சம்பவங்களை தொடர்ந்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் நகரில் உச்சகட்ட பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகள் உடமைகள், பார்சல்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

    சோதனைக்கு பின்னரே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர், மால்கள், மார்க்கெட், வணிக வளாகம் என மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகள், கடைவீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    அங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் தங்கி இருந்தால் அவர்களின் முழு விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    சுதந்திர தின விழா நடக்க உள்ள கோவை வ.உ.சி பூங்கா போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அங்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். மேலும் டிரோன் காமிரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    விழா நடக்கும் இடங்களிலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் கதிரவன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இளம்வயதில் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×