search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.
    • பஸ், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தொடங்கியது.

    கோவை,

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பங்கேற்று தேசிய கொடியினை ஏற்றி வைக்க உள்ளார்.

    தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்வதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.

    சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் மாநகர் பகுதிகளில் 1,700 போலீசாரும், புறநகரில் 800 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அங்கு போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்கெ ட்டுகள், பஸ் நிலையங்களில் அடிக்கடி ரோந்து சென்று வருகின்றனர்.

    அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். அவர்களின் முகவரியை பெற்ற பின்னரே அவர்களை விடுவிக்கின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பஸ் நிலையங்கள் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது.

    கோவையில் கடந்த சில தினங்களாகவே போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றன்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் ஆகியவற்றிலும் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருந்தால் பிடித்தும் விசாரித்தும் வருகின்றனர்.

    கோவையில் உள்ள கோவை சந்திப்பு ரெயில் நிலையம், போத்தனூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அங்கு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலைய வளாகம், ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வருபவர்களின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர சுதந்திர தினத்தையொட்டி வன்முறையை தூண்டும் வகையிலும், மத மற்றும் சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பதிவு செய்யப்படுவதை தடுக்க சைபர் குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறையினரும் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர்.

    சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலகட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படு கின்றனர்.

    • 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன
    • மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. மடிவீக்க நோயால் கறவை மாடுகள் பாதிக்கின்றன என பால் உற்பத்தியாளர்கள் கூறி வரும் நிலையில் பொங்கலூர் கே.வி.கே., திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவ அறிவியல் துறை இணை பேராசிரியர் சித்ரா விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மடிவீக்க நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்த வழிமுறைகளை விளக்கினார். மாட்டுத்தொழுவம், அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைக்க வேண்டும். சாணம், சிறுநீர் தேங்காமல் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும்.

    கறவைக்கு முன், கறவை மாடுகளின் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமிநாசினி மருந்தை தண்ணீரில் கலந்து நன்கு கழுவி உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறப்பவரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறந்தவுடன் மாடுகள் உடனடியாக படுத்தால் மடி நோய் ஏற்படும். எனவே அவை படுக்காமல் இருக்க பசுந்தீவனம் அல்லது உலர் தீவனம் ஏதாவது ஒன்றை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பாலை கன்றுகள் குடிக்கும் போது தீவிர இதய தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும்.

    சோற்று கற்றாழையை 250 கிராம் அளவுக்கு சிறு, சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் 50 கிராம் விரலி மஞ்சள், 5 கிராம் சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து, நன்கு அரைத்து இந்த கலவையை 100 மி., தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிப்பகுதி முழுக்க, நோய் தாக்குதல் குறையும் வரை தினமும் 8 முதல் 10 முறை பூச வேண்டும்.

    நோய் தாக்குதல் அதிகமாக இருந்தால் கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • 2 நாள் சுற்றுப்பயணம்

    கன்னியாகுமரி,ஜூலை.24-

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் இன்று (திங்கட்கிழமை) மதியம் விமானம் மூலம் தூத்துக் குடிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தி னர் மாளிகைக்கு வருகிறார்.

    அங்கு கவர்னர் ஆர்.என். ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் கவர்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு சன்செட் பாயிண்ட் கடற் கரைக்கு சென்று சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார்.

    இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (25-ந்தேதி) காலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன்பிறகு கடல் நடுவில் அமைந்துள்ள விவே கானந்தர் நினைவு மண்ட பத்துக்கு தனிப்படகில் சென்று தியானம் செய்கிறார்.

    பின்னர் விவேகானந்தபு ரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்லும் கவர்னர், அங்கு பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து அவர் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவி லுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி செல்கிறார்.

    கவர்னர் வருகையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியா குமரி நகரப்பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரிக்கு வரக்கூ டிய அனைத்து வாகனங்களை யும் போலீசார் தீவிர சோதனை செய்தபிறகே அனுமதிக்கி றார்கள். கவர்னர் பயணிக்கக் கூடிய அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    கவர்னர் தங்கக்கூடிய அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், விவேகானந்தர் மண்டபம், விவேகானந்தா கேந்திரா, சுசீந்திரம் கோவில் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் முழுவது மாக போலீஸ் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
    • தி.மு.க., காமராஜருக்கு விரோதி போல ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளார்.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்றது. தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

    மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்று பேசினார். மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, வேல்முருகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோதங்கராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்ட னர். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

    குமரி மாவட்டம் அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட மாவட்டமாகும். ஏனென்று சொன்னால் தி.மு.க.வின் வரலாறை குறிப்பாக கலைஞருடைய வரலாறை முழுமையாக தெரிந்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்த பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசை அவதூறாக பேசியுள்ளார். பல பொய்யான தகவல்களையும் கட்ட விழ்த்துள்ளார்.

    தி.மு.க., காமராஜருக்கு விரோதி போல ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளார். காமராஜருக்கும், தி.மு.க.வுக்கும் உள்ள உறவும், முன்புள்ள வரலாறும் தெரிய மால் அண்ணாமலை உளறி விட்டு சென்றுள்ளார்.

    காமராஜரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியது தி.மு.க. தான். 1961-ல் முதன் முதலில் காமராஜருக்கு சிலை வைத்தது தி.மு.க. என்பதை அண்ணாமலை மறந்து விடக்கூடாது. ராமர் கோவில் வைத்து வடக்கே அரசியல் செய்வது போல், இங்கு காமராஜரை வைத்து அரசியல் செய்ய பாரதிய ஜனதா நினைக்கிறது. காமராஜருக்கு பதவி ஆசை இருப்பது போன்று நாகர்கோவிலில் அண்ணாமலை சித்தரித்து பேசி உள்ளார்.

    காமராஜரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போது, தனது முதல்-அமைச்சர் பதவியை தூக்கி எறிய முன்வந்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் தமிழ் மண்ணுக் காக போராடிய காமராஜர் பெயரை சென்னை விமான நிலையத்திற்கு வைத்துக்காட்டியது தி.மு.க.வாகும்.

    நாகர்கோவிலை நகராட்சி யில் இருந்து மாநகராட்சியாக மாற்ற பலரும் ஆசைப்பட்டார் கள். ஆனால் அதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி காட்டினார்.

    மக்களின் உணர்வுகளை மதிக்கும் கட்சி நாட்டில் ஆட்சி அமைப்பது நிச்சயம். அப்படி பார்க்கும்போது மணிப்பூரில் நடத்த கொடூரங்களை பார்த்தால் பாரதிய ஜனதா அரசு ஒரு கையாலாகத அரசு என தெரிகிறது. இதன்மூலம் சிறுபான்மையினர் மக்க ளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவா கியுள்ளது.

    செந்தில் பாலாஜி மீது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட வழக்கிற்கு இப்போது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?. ஓட்டுக்கு காசு கொடுப்பவர் களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வேட்பாளர்களையே பணம் கொடுத்து வாங்கும் கட்சி பா.ஜ.க. தான். தமிழகத்தில் 40-க்கு 40 என நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக வக்கீல் சூர்யா வெற்றி கொண்டான், மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நிர்வாகிகள் நசரேத் பசலியான், தில்லை செல்வம், தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.எஸ். பார்த்த சாரதி, அணி அமைப்பாளர்கள் அகஸ்தீசன், பிரபா ராம கிருஷ்ணன், இ.என். சங்கர், துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஒன்றிய செயலாளர்கள் பாபு, செல்வன், மதியழகன், சுரேந்திர குமார், பிராங்கிளின், லிவிங்ஸ்டன் மற்றும் வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மண்டல தலைவர் ஜவகர் நன்றி கூறினார்.

    • இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.
    • தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கோவில்களின் அவல நிலை குறித்து கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜூலை 16-ந் தேதி, 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்து முன்னணி கொள்கை விளக்கம், இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.

    மொத்தம் 3,500 இடங்களில் நடந்த தெருமுனை கூட்டங்களில், 1.75 லட்சம் மக்கள் பங்கேற்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமான துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

    கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள சீர்கேடுகள் குறித்தும், இந்துக்களின் நம்பிக்கைகள் திட்டமிட்ட ரீதியில் கொச்சைப்படுத்தும் தி.மு.க., - தி.க., - காங்., - கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் கட்சி என, ஆகிய கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர் களான சமூக ஊடகத்தினர் (யூ-டியூபர்) பற்றியும்,இந்து விரோத செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது

    இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு அந்தந்த பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட் சமயத்தில் ராளமான மக்கள், அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களின் அவல நிலை குறித்து கூறினர்.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்கள் அவல நிலையில் உள்ளது.

    இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, 'அரசே கோவிலை விட்டு வெளியேறு,' என்ற கோஷத்தை முன்னிறுத்தி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து அறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் அரசு பஸ்சை ஒப்படைத்த டிரைவர்
    • நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது

    கன்னியாகுமரி :

    நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது. இந்த பஸ்சை இன்று வடசேரியில் இருந்து மேலசங்கரன் குழியை சேர்ந்த டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் ஓட்டிச் சென்றார்.

    இந்த நிலையில் வள்ளியூர் வரை பஸ்சை ஓட்டிய அவர், அதற்கு மேல் இயக்க முடியாது எனக்கூறி பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் அனுப்பி உள்ளார். தொடர்ந்து தான் ஓட்டிய பஸ்சை, விசுவாசபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்துள்ளார்.

    இந்த பஸ்சில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இது பற்றி பணிமனை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் பலன் இல்லை. எனவே நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் கூறினார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த சில நாட்களாக பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. வலது பக்கம் திருப்பினால் இடது பக்கம் திரும்புகிறது. இடது பக்கம் திருப்பினால் வலது பக்கம் செல்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாது என்று நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்த போதும் இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
    • பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி 1, அமா வாசை தினத்தில் பக்தர்கள் வசதிக்காக மேற் கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    பவானி தாசில்தார் தியாகராஜ் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. மேலும் ஆடி அமாவாசை வரும் 17-ந் தேதி மற்றும் அடுத்த ஆகஸ்ட்டு 15-ந் தேதி என ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வருகிறது.

    இதையொட்டி வரும் 17-ந் தேதி பவானி சங்க மேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து தங்கள் முன்னோர்க ளுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

    எனவே ஆடி அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், பவானி போலீசார், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து போலீசார் மூலம் போக்கு வரத்து தடை மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சரி செய்வது, கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசனை வழங்க ப்பட்டது.

    மேலும் 25 தீயணைப்புத் துறை வீரர்கள் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் படித்துறை பகுதி, காவிரி ஆறு என பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு எந்த விதமான அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பது, 108 ஆம்புலன்சு மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப் பட்டது.

    அதேபோல் பவானி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணியை மேற்கொள்வது, மின்சார துறை மூலம் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் என பல்வேறு துறைகளில் மேற்கொள்ள படும் பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப் பட்டது.

    கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த ஆடி 1 மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது. இதனால் வரும் 17-ந் தேதி ஆடி 1 அன்று கூடுதுறையில் குளிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே கூடுதுறை பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் முடிவு செய்யப் பட்டது.

    • சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    • போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், குற்றாலம் சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? அவை சரியான நிலையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஒலிபெருக்கியில் தொடர் விழிப்புணர்வு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் போதுமான அளவில் பணியில் உள்ளனரா, போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக குளித்து மகிழ்ந்து செல்லுமாறும் அறிவுறுத்தினார்.

    • கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டியில் இந்து முன்னணி சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், நகர தலைவர் வடிவேல், பொருளாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர். வருகிற 30-ந் தேதி அவிநாசியில் பெரிய கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து மக்களை அழைப்பது, 16ந் தேதி திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் 27 இடங்களில் மாநாடு குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, பக்தி அமைப்புகள், சிவனடியார்கள், சமுதாய தலைவர்கள், ஆன்மிக பெரியோர்கள் உள்ளிட்ட அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    • ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • முத்துப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    தில்லைவிளாகம் அடுத்த ஜாம்புவானோடை தெற்கில் நாககாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், கஞ்சிவார்த்தல் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி ஊராட்சி மன்றம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • சி.சி.டி.வி கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வெங்கடாசலபதி சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்றதும் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலமாகும்.

    இந்த கோவிலில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு சிறு சன்னதிகள் முதலியன சுமார் ரூ.3.50 கோடி மதிப்பில் புனரமைத்து திருப்பணி வேலைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளன. இதையடுத்து வரும் 29-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வெங்கடாசலபதி சுவாமி கோவில், வடக்கு வீதியில் எழுந்தருளி இருக்கும் ஜெயவீரஆஞ்சநேயர் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஆலய வளாகத்தில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் 29ஆம் தேதி சுமார் 20000 பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு வி.ஏ.ஓ நகர், அங்காளம்மன் கோவில், நாகநாதசுவாமி கோவில், பிரத்தியங்கிராதேவி கோவில் என நான்கு புறமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவில் கூட்டங்களை பயன்படுத்தி நகை திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் சுமார் 25 இடங்களில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து கவனிக்கும் வகையில் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம். நான்கு இடங்களில் சுகாதாரத்துறை மூலமாக முகாம் அமைக்கப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    29 ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் நேரம் வரை கோவிலுக்குள் 1000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். மதியம் 12 மணிக்கு மேல் அனைவரும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 29ஆம் தேதி நாள் முழுவதும் தரிசனம் செய்யலாம். நிலமாலை, வஸ்திரம் சாத்துதல், அர்ச்சனை ஆகியவை கிடையாது. சுவாமி தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உப்பிலியப்பன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகள் இரண்டையும் 28 மற்றும் 29ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் மூடுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இன்று முதல் 29ஆம் தேதி முடிய ஐந்து நாட்களுக்கு பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும்.
    • ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டிபாளைய த்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உள்பட 5 கோர்ட்டுகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சத்தியமங்கலம் வனப்பகுதி வழக்கு, கோபி செட்டிபாளையம், பங்களா புதூர் போலீஸ் நிலையங்களில் போடப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் ஆகியவை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். இதை யடுத்து அந்த பெட்டகம் கோபிசெட்டிபாளையம் கருவூலத்தில் பாது காப்பாக வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோர்ட்டு ஊழியர் மற்றும் பங்களா புதூர் போலீசார் வழக்கு விசாரணைக்காக முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தொடர்புடைய பெட்டகத்தை கோபிசெட்டி பாளையம் கருவூலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்தனர்.

    இதை தொடர்ந்து அந்த பெட்டியை நீதிபதி தனது அறையில் வைத்து திறக்க முயன்றார். அப்போது பெட்டியின் பூட்டின் மேல் வைக்கப்பட்டு இருந்த அரக்கு சீல் உடைக்கப்படா மல் அப்படியே இருந்தது. ஆனால் பெட்டியின் பூட்டு மாட்டி இருந்த கொண்டியில் இருந்து ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பெட்டியை திறந்து பார்த்தனர்.

    அப்போது அதில் கடம்பூர் போலீசாரால் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இருந்த 48 கிராம் எடை கொண்ட 2 தங்க ஆரம், சத்தியமங்கலம் வனத்துறை மற்றும் பங்களா புதூர், கோபிசெட்டிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 3 ஆயிரத்து 255 பணம் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் கைரேகை பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இத னால் பரபரப்பு நிலவியது.

    ×