search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.
    • பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை அவுரி திடலில் சிக்கல் வேளாண்மை அறிவியல் மையம், தானம் அறக்கட்டளை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ரகு தலைமை, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தாங்கினார்.

    நாகை புதிய பஸ் நிலையம் அவுரி திடலில் தொடங்கிய பேரணியானது நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது.பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சட்டத்தினை கடுமையாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது நாகை, சீர்காழி, காரைக்கால், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தானம் அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.

    • மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு
    • நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை நடக்கிறது.

    விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடும் அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். குடியரசு தின விழாவில் 500 பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடக்கிறது.

    இதையடுத்து போலீ சாரின் அணிவகுப்பு ஒத்தி கை நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் போலீசார், தீயணைப்பு படையினர், என்.சி.சி. மாணவர் படை யினர் கலந்து கொண்ட னர். இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    விழா நடைபெறும் மைதானத்தில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா விளை யாட்டு அரங்க வாசலில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டு உள்ளது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குடியரசு தினத்தை ஒட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பணி யில் 1200 போலீசார் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர்.

    நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசனங்களுக் குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்றிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜ்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் தங்கி யுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு உள்ள வருகை பதிவேட்டை யும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள லாட்ஜிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட எல்லை பகுதி களில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வரு கிறது. அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி, களியக் காவிளை சோதனை சாவடி யில் போலீசார் கண் காணிப்பு பணியை மேற் கொண்டனர்.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். கடலோர காவல் படை போலீசாரும் கண் காணிப்பு பணியை மேற் கொண்டு வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக யாராவது சுற்றி திரிகிறார் களா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலை மையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் உடை மைகளை போலீசார் சோதனை செய்து வருகிறார் கள். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து வெளி யூர்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த பார்சல் களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை மேற்கொண்டனர்.

    ரெயில் தண்டவாளங்களி லும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. கன்னியா குமரி, நாங்கு நேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் பாது காப்பு பணிக்கு நியமிக்கப் பட்டுள்ளனர். நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது ரெயில்வே பாலங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களி லும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குடியரசு தினவிழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனைகளை தொடங்கி உள்ளனர்.

    நெல்லை:

    குடியரசு தினவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மகேந்திரகிரி இஸ்ரோ மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், வடக்கு விஜயநாராயணம் கடற்படை தளம் உள்ளிட்ட இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையம்

    மாநகர பகுதியில் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். டவுன் ரதவீதிகள், சந்திப்பு ரெயில் நிலையம், பாளை வ.உ.சி. மைதானம், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவை போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனைகளை தொடங்கி உள்ளனர். இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யதாஸ், செந்தில் மற்றும் போலீசார் ரெயில்வே தண்டவாளத்தில் மோப்பநாய் மூலமாக ேசாதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை நெல்லைக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். மேலும் பார்சல் அலுவலகத்தில் இருந்து பொருட்களையும் சோதனை செய்தனர்.

    தென்காசி-தூத்துக்குடி

    தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் ஆகாஷ் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்காக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் சுமார் 1,000 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ரெயில்நிலையம், விமான நிலையம், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படு கின்றனர். தண்டவாளங்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    • கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு
    • படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குடியரசு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    இந்தியாவின் 74-வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படு கிறது. இதை யொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப் பட்டு உள்ளது.கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகிறார்கள். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48கடற்கரை கிராமங்களி லும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கி றார்களா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    • தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை (21-ந்தேதி) தை அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும்.

    பகல் 11 மணிக்கு அக்னி தீர்த்தக்கரைக்கு ராமர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி 12 மணிக்கு காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக தை அமாவாசையை முன்னிட்டு பகல் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும். அக்னிதீர்த்தக்கடல் பகுதியி லுள்ள மண்டகப்படியில் இருந்து இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்சமுர்த்திகளுடன் கருட வாகனத்தில் ராமர் புறப்பாடு நடைபெறும் என்று கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.

    தை அமாவாசை முன்னிட்டு ராமேசுவ ரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வசதிக்காக ராமேசுவரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி பாம்பன் முதல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை வரை ஆயிரம் போலீசாரை நியமித்து பாதுகாப்பு அளிக்கவும், நகர் முழுவதும் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவில் 4 ரத வீதிகளில் காமிரா அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    • குழந்தைகளுக்கான தேவைகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் நேரடியாக மனுவினை வழங்கலாம்.

    விருதுநகர்

    குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான குற்றங்களை தடுத்து குழந்தைகள் அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், அவர்களின் தேவைகளை நிறை வேற்றுவதற்கும், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசால் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையம் மூலம் நாடு முழுவதும் 727 மாவட்டங்களில் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகள், குறைகளுக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஆணையத்தின் முதல் கட்ட அமர்வு விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் குழந்தைகள் உரிமை மீறல் பிரச்சினை மற்றும் குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த அமர்வில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பு, ஊட்டச்சத்து, வளர்ச்சி, கல்வி, மருத்துவம், மன மற்றும் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகள், குழந்தை தொழிலாளர், குழந்தைத்திருமணம் மற்றும் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் சார்ந்த பிரச்சினைகள், குழந்தைகளின் இதர உரிமை மீறல் தொடர்பான பிரச்சி னைகள், குறைபாடுகள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள் குறித்த மனுவினை பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளி குழந்தைகள், குழந்தை கள் இல்லங்கள், விடுதிக ளில் தங்கியுள்ள குழந்தை கள், பெற்றோர், பாதுகாவ லர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மாவட்டத்தில் பிப்ரவரி 24-ந் தேதி நடைபெறும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் நேரடியாக மனுவினை வழங்கலாம்.

    இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி தெரி வித்துள்ளார்.

    • சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருவதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பெற்றோர்களே பொறுப்பாவார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று பீச், பூங்கா மற்றும் அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அமைதியான முறையில் எவ்வித இடையூறும் இல்லாமல் மகிழ்ச்சிகரமாக சென்று வருவதற்கு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் லைசன்சரில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய அளவில் மாற்றம் செய்து வைத்துக்கொண்டு பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களில் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸ் செல்லுதல், பைக்கில் சாகசம் செய்தல், விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அத்துடன் அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

    அதே போன்று 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் லைசன்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பின் விளைவுகளுக்கு பெற்றோர்கள் பொறுப்பாவார்கள்.

    பொது இடங்களில் தேவையில்லாமல் அமர்ந்து மது அருந்திக் கொண்டு கலகத்தை உண்டு பண்ணு பவர்கள்,பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ஆண் மற்றும் பெண் போலீசார் சீருடை அணியாமல் பொதுமக்களில் ஒருவரோடு, ஒருவராக ஆங்காங்கே ரோந்துப் பணி மேற்கொள்வார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

    மேலும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.அதனால் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க பல்வேறு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொண்டு சட்டப்படி தீர்வு கண்டு கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உதவுவதற்கு காவல்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொண்டு காவல் துறையின் அவசர உதவிக்கு எண். 100 மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அலைபேசி எண். 95141 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி, எந்தவித உரிமையும் இன்றி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வருகிறார் .
    • பிரார்த்தனை கூடம் நடத்தக்கூடாது என்று அவினாசி தாசில்தார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் .

    அவினாசி :

    அவினாசி அருகே பொங்கல் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஜெபக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் செம்பியநல்லூர் ஊராட்சி தாசம்பாளையம் நேரு நகர் பகுதியில் ஒருவர் ஊராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி அந்த இடத்தில் எந்தவித உரிமையும் இன்றி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வருகிறார் .அங்கு பிரார்த்தனை கூடம் நடத்தக்கூடாது என்று அவினாசி தாசில்தார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் .அதையும் மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்தி வருகிறார்.ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேரு நகர் பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மேற்படி நபர் பிரார்த்தனை நடத்த வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தங்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். பொங்கல் பண்டிகை காலத்தில்நாங்கள் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலவரத்தை ஏற்படுத்த இருப்பதாக தெரிய வருகிறது. எனவே கலவரத்தை ஏற்படுத்த இருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
    • சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

    தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை, அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
    • திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணிப்பு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 மாவட்டங்களிலும் சேர்த்து 3000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சை பெரிய கோவில், மணிமண்டபம் பூங்கா, வேளாங்கண்ணி தேவாலயம், மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்கள், சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அங்கு சந்தேகப்படும்படி யாராவது நடமாடுகிறார்களா எனவும் கண்காணித்து வருகின்றனர். மேலும் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    குறிப்பாக ஹோட்டல்களில் பாதுகாப்பை உஷா ர்படுத்தி உள்ளனர். மேலும் குடித்துவிட்டு வாகனம் யாராவது ஓட்டுகிறார்களா எனவும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணித்து வருகின்றனர். நாளை வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்
    • பல்வேறு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகள் கடைபிடிக்க வேண்டிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டல இயக்குநரகத்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சாலைப் போக்குவரத்து விதிகள் பற்றிய அறிவுரைகளும் உறுதிமொழி ஏற்பும் தொடர்நது இப்பள்ளியில் வழங்கப்படுகிறது.

    பள்ளிசெயலர் ரஞ்சன்கோபால் ஆலோசனையின்படி நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அனந்தராமன் சாலைப் போக்குவரத்து விதிமுறை உறுதிமொழிகளை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.

    சாலையின்இடது புறமாக நடந்து செல்வேன், சாலையின் குறுக்கே கடந்து செல்லாமல் உரிய நடைபாதைகளில் மட்டுமே கடந்து செல்லுவேன், ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்,ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே மோட்டார் வாகனங்களை ஓட்டுவேன், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவேன், பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெற்றோரையும் தலைக்கவசம் அணிய வலியுறுத்துவேன் மற்றும் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு முன்னதாகவே செல்லுவேன் முதலிய 25க்கு மேலான உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    • மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

    மதுரை

    மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

    இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

    நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.

    இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×