search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை-மதுரை மாவட்ட எல்லையில் கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகள்உள்ளன. இங்கு தமிழக அரசின் தொல்லியல் துறைமூலம் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் முக்கிய திட்டமாக இங்கு கிடைத்த பொருட்களை கொண்டு பிரமாண்ட கட்டிடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் செட்டிநாடு கட்டிடகலையில் மிகப்பெரிய அகழ்வா ராய்ச்சி காப்பக அரங்கம், கல்மண்டபங்கள், கூடங்கள், குளம் போன்றவை கலை நயத்துடன் அமைக்கும் பணிநிறைவடைந்துள்ளது.

    இந்த பணிகளை இறுதி ஆய்வு செய்யும் பணி நடந்தது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கீழடியில் ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு மார்ச் முதல் வாரத்தில் வருகை தருகிறார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    கீழடி அகழாய்வு பணியில் கிடைத்த தொல்பொருட்களை பார்த்த வகையில் தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப் படுத்துவதற்கு ஏதுவாகவும் அந்த பொருட்களை உலகத் தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ11.03கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டி டம் கட்டுமான பணிகள் நடந்தது.

    தமிழர்களின் சங்க கால தமிழர்களின் பெருமை களை பறைசாற்றுகின்ற வகையில் உலக அளவில் புகழ்பெற்றுள்ள கீழடி அகழ் வைப்பக கட்டிடத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் வளாகத்தில் நடை பெற்ற விவரம் தொடர்பாக கலெக்டர் ஆய்வு செய்தார்.

    வருகிற மார்ச் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங் கெற்க உள்ளார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி கட்டிட மைய செயற பொறியாளர் மணிகண்டன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை கோட்டாச்சியர் சுகிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 28-ந் தேதி(செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவல கத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமை தாங்குகிறார்கள்.இதில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டு பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர், விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும் என நகராட்சி தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
    • இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் சேதுபதி நகர், தங்கப்பா நகர், கோட்டைமேடு தெரு மற்றும் புதிய பஸ் நிலையம் அருகில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    முதியவர்கள், குழந்தைகள், அந்த பகுதி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தினர். பல ஆண்டுகளாக இந்த பூங்காக்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகி உள்ளன. புதர் மண்டியும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும் சேதமடைந்துள்ளன.

    புதிய பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் அருகில் அமைந்துள்ள பூங்கா பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. இங்கு திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, குப்பை கொட்டுவது, மது அருந்தும் இடமாக மாறி உள்ளது.

    இது குறித்து நகராட்சி தலைவர் கார்மேகம் கூறுகையில், ராமநாதபுரம் நகரில் உள்ள பூங்காக்கள், ஊரணிகளை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, வேலிகள் அமைக்கப்படுகிறது. பசுமையாக்கல் திட்டத்தில் இங்கு 25 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிட்டு தற்போது 15 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்த்துள்ளோம்.

    ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை பராமரித்து பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது முயற்சியில் தங்கப்பாநகர், மகர்நோன்பு பொட்டல் பூங்காவில் ரூ.36 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள், மரக்கன்றுகள், பூச்செடிகள் வைக்க உள்ளோம்.

    இதே போல புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.எஸ்.கே. பூங்காவும் ரூ.16 லட்சத்தில் சுற்றுச்சுவருடன் முழுமையாக புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    • மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்
    • உழவு செய்யும் போது ஏக்கருக்கு 250கி வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23 மக்காச்சோளம் பயிரில் ஒருங்கிணைந்த பயிர்மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் கண்டுணர்வு பயணத்திற்கு குன்றாண்டார்கோவில் வட்டாரம், நாஞ்சூர்கிராமத்திற்கு விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த பயணத்தில் வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) மதியழகன் கலந்து கொண்டு கூறியதாவது : மக்காச்சோளம் பயிரை ஆடிப்பட்டம் (ஜூலை-ஆகஸ்ட்), தைப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி) ஆகிய பருவங்களில் விதைப்பு செய்யலாம். மக்காச்சோளம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். தற்போது குறிப்பாக அமெரிக்கன் படைப்புழு தாக்குதலினால் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனை முதலில் கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும். உழவு செய்யும் போது ஏக்கருக்கு 250கி வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். பயிர்சுழற்சி முறைகளை கடைபிடிக்க வேண்டும். பேவோபியா பேசியானா 1 கிலோ விதைக்கு 10 கிராம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். வரப்பு பயிராக ஆமணக்கு, சூரியகாந்தி, எள், சாமந்திபூ, தட்டைப்பயறு ஆகியவற்றை விதைப்பு செய்யலாம். மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். விவசாயி ஆனந்தன் என்பவரது வயலில் இனக்கவரச்சி பொறி பயன்பாடு பற்றி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பர்கனா பேகம், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆரோக்கியராஜ், உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் புதுமைபெண் திட்டத்தில் 1355 மாணவிகள் பயனடைந்தனர் என கலெக்டர் ரமணசரஸ்வதி தகவல் தெரிவித்தார்
    • புதுமைப் பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1,355 மாணவிகள் பயனடைந்த வருவதாக மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,அரியலூர் மாவட்டத்தில், ஏற்கனவே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 910 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுமைப் பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவி கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும்.மாணவிகள் 8 அல்லது 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில், மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில், நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர் என்று அவர் கூறினார்.

    • ஆதிதிராவிடர், பழங்குடியின முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
    • இந்த திட்டத்தின் கீழ் இலக்கீட்டில் 25 சதவீதம் நகரும் அலகு விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை (NEEDS) மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சமாக வழங்கப்படுகிறது.

    மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசிய மயமா க்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் மற்றும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இலக்கீட்டில் 25 சதவீதம் நகரும் அலகு விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோர்களிடம் இருந்து எண்ணிக்கையில் கட்டுபாடுகளின்றி விண்ணப்பங்கள் பெற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    விண்ணப்பங்கள் வணிக நோக்கத்திற்கான (Commercial Purposes only) பயண வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஜே.சி.பி, ரோடு ரோலர், கலவை எந்திரம் டேங்கர் டிரக், கிரேன்கள் மற்றும் போர்க்லிப்ட் கருவி கள், காங்கிரீட் மிக்சர் கருவிகள், ஆழ்துளை கிணறு வாகனங்கள், நடமாடும் உணவக வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய தொழில்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிவகங்கை – 630 562 என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அலுவலர்களை 89255 33989 மற்றும் 89255 33990 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆர்டரின் பேரில் 90 கிராம் தங்க ஆரம் உள்ளிட்ட ஆபரணங்களை செய்தார்.
    • ஆலக்குடி ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தஞ்சாவூா்:

    திருவாரூர் கம்பர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தினேஷ்குமார் (வயது 36). இவர் திருவாரூரில் நகை பட்டறை வைத்துள்ளார்.

    ஆர்டரின் பெயரில் நகை செய்து கொடுப்பார்.

    அதன்படி காரைக்குடியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆர்டரின் பேரில் 90 கிராம் தங்க ஆரம் உள்ளிட்ட ஆபரணங்களை செய்தார்.

    பின்னர் காரைக்குடிக்கு நேரடியாக சென்று அந்த வாடிக்கையாளரிடம் கொடுப்பதற்காக ஒரு பேக்கில் 90 கிராம் தங்க நகைகளை வைத்து கொண்டு திருவாரூரில் இருந்து காரைக்குடி- திருச்சி பயணிகள் ரயிலில் ஏறினார்.

    பின்னர் தஞ்சை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ் மூலம் காரைக்குடிக்கு செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தான் கொண்டு வந்த பேக் நகைகளோடு மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும் பலன் இல்லை. அப்போதுதான் வந்த ரயிலில் பேக்கை மறந்து வைத்தது தெரிய வந்தது.

    உடனடியாக தஞ்சை ரயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த விவரங்களை கூறி நகைகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமார், பாதுகாப்பு படை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், இருப்பு பாதை தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் லதா, பாதுகாப்பு படை ஏட்டு மணிகண்டன் மற்றும் போலீசார் ரயில் செல்லும் வழியான ஆலக்குடிக்கு விரைந்து சென்றனர். முன்னதாக ஆலக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் நரேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் ஊழியர் ரத்தினத்திடம் நடந்த விவரங்களை கூறினார்.

    அப்போது ஆலக்குடியில் ரயில் வந்து நின்றது. உடனே அனைத்து பெட்டிகளிலும் ஏறி சோதனை செய்து பேக்கை கண்டுபிடித்தனர். அதைத் திறந்து பார்த்தபோது 90 கிராம் நகைகள் பத்திரமாக இருந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை தஞ்சாவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் தஞ்சையில் தினேஷ் குமாரிடம் 90 கிராம் தங்க நகைகளை போலீசார் ஒப்படைத்தனர். அதிவிரைவாக நகைகளை மீட்ட ரெயில்வே போலீசாருக்கு தினேஷ்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    • தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 2 செல்போன்கள், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் டவுன் புறப்பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் டவுன் புறப்பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்துக்கு வந்த தகவலின் பேரில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதன் பேரில், கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் மேற்பார்வையில், உதவி இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன், சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், செந்தில், நாடிமுத்து, ஜனார்த்தனன், பார்த்திபநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் மணஞ்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் மூர்த்தி (வயது 23 ), சந்தனாள்புரத்தை சேர்ந்த ஏசுராஜ் மகன் பிரசாந்த் (23), பெருமாண்டியை சேர்ந்த பூபதி மகன் மகேந்திரன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினமான 26-ந் தேதி (வியாழக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1.4.2022 முதல் 31.12.2022 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம் - ஊரகம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். எனவே 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதி பொது மக்கள் குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளரிடமும் அந்தந்த மண்டல அலுவ லகங்களில் உதவி ஆணையா ளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.

    மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 24-ந் தேதி(செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். சாலையில் உள்ள மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதிகளான செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் த.மு.மு.க. சார்பில் ரூ.1.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாநில துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
    • அனைத்து சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு அவசர தேவைக்கு 158 பேருக்கு ரத்த தானம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் நிருபர் களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் த.மு.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது கடந்த ஆண்டு மருத்துவ உதவியாக ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம், சிறு தொழில் உதவி ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம், வீடு கட்டுவதற்கு ரூ. 35 ஆயிரம், உயர் கல்வி உதவி ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம், விதவை மாதாந்திர குடும்பச் செலவுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம், கல்வி உதவி ரூ. 2 லட்சத்து 96 ஆயிரம், கல்லூரியின் நிர்வாக செலவு ரூ. 7 லட்சம், அனைத்து சமுதாய மக்களுக்காக புதிய ரூ. 26 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், குடும்ப நிவாரண நிதி ரூ.1 லட்சம் உதவி, வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் ரூ. 87 லட்சத்து 65 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதில் 306 பேர் கடன் பெற்று பல்வேறு தொழில் களை மேற்கொண்டு தற்போது அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து உள்ளது. மேலும் பல்வேறு வகையான உதவிகளின் மூலம் த.மு.மு.க, சார்பில் கடந்த ஆண்டுரூ.1.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    அனைத்து சமூக மக்களுக்காக ரத்ததானம், மருத்துவ முகாம் சேவை யாற்றிய தமுமுக தொண்டர் களை கவுரவிக்கும் வகை யில் மனிதநேய சேவை செய்த ராமநாதபுரம் த.மு.மு.க.விற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் ராமநாத புரம் மருத்துவ கல்லூரி சார்பில் இரண்டு மனிதநேய விருதை வழங்கினர். அனைத்து சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு. அவசர தேவைக்கு 158 பேருக்கு ரத்த தானம் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது த.மு.மு.க., ம.ம.க. மாவட்ட தலைவர் பிரிமியர் இபுராஹிம், ம.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஆஷிக் சுல்தான், அப்துல் ரஹீம், பொருளாளர் ஹமீது சபிக் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • அந்த வேனை பாண்டிச்சேரி சுல்தா ன்பட்டியைச் சேர்ந்த ரகுமான் (வயசு 30) ஓட்டி வந்தார்.
    • உடனே வேனை நிறுத்தி விட்டு வேனிலில் இருந்து இறங்கி தப்பித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வேன் ஒன்று சென்றது. அந்த வேனை பாண்டிச்சேரி சுல்தா ன்பட்டியைச் சேர்ந்த ரகுமான் (வயசு 30) ஓட்டி வந்தார். அப்போது விருத்தாச்சலம் மேம்பாலம் அருகே வந்தபோது வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே வேனை ஓட்டிவந்த டிரைவர் ரகுமான் உடனே வேனை நிறுத்தி விட்டு வேனிலில் இருந்து இறங்கி தப்பித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூ ர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை யிலான போலீ சார் மற்றும் தீய ணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

    ×