search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • மேலும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 14.11.2022 மாலை 5.45 மணி ஆகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனை யாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியி டங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம்‌ இருந்து https://www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக (ஆன்லைன்) மூலம் கடந்த 13.10.2022 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

    மேலும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 14.11.2022 மாலை 5.45 மணி ஆகும். எனவே, விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நேரத்தில் எழும் தொழில்நுட்ப பிரச்சினைகளை தவிர்க்க, முன்கூட்டியே இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மழைசேதம் குறித்து அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 1.10.2022 முதல் தொடங்கி உள்ளது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளதால் கடந்த 1 மாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ள கண்மாய், குளம், குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளது. இந்த நேரத்தில் வடகிழக்கு பருவ மழையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு விருது நகர் மாவட்ட நிர்வாக த்தால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசர கட்டுபாட்டு அறை 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

    அருப்புக்கோட்டை வட்டம், பாலையம் பட்டி மேலத்தெருவை சேர்ந்த சரத்குமார் என்பவரின் குழந்தைகள் சித்தார்த் (வயது 8) மற்றும் சந்திரமணி (10) ஆகியோர் அந்த ஊரில் உள்ள ஊரணியில் குளிக்க சென்ற போது தவறி விழுந்ததில் இறந்து விட்டனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய், குளம் மற்றும் குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளதால் குளிப்பதற்கு செல்ல வேண்டாம்.

    தங்கள் குழந்தைகளை கண்மாய்கள், குளங்கள், ஓடைகள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் இருக்கும் இடங்களுக்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என தொழிலாளர் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ். தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    முதலமைச்சரின் வழிகாட்டு தலின்படி, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம், 2021-ன்படி, கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபு ரியும் அனைத்து தொழிலாளர்களும் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி அச்சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்து தரப்பட வேண்டும் என்று அந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிட ப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட சட்ட திருத்தத்தை கடைப்பி டிக்காத விருதுநகர் மாவட்டத்தில் 7 நிறுவன உரிமையாளர்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அக்டோபர் மாதம் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ், கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக, விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ஆட்சி எல்லைக்கு உட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்கள் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பணியாளர்க ளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 5 கல்வி நிறுவனங்கள் மீது முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வில் தொழி லாளர் உதவி ஆய்வர்கள் செல்வராஜ், பாத்திமா, முருகள், துர்கா, சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
    • சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    வல்லம்:

    தஞ்சை வடக்குவாசல் பொந்தேரிபாளையம் கங்கா நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 36).

    இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்று உள்ளது.

    சம்பவத்தன்று தஞ்சை சுந்தரபாண்டியன் நகர் பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கள்ளபெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பையில் இருந்து ரெட்டிப்பாளையம் சுடுகாடு அருகே சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் 6 பேரையும் போலீசார், கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் தஞ்சை பொந்தேரிபாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன்(வயது 28), சுந்தரபாண்டியன் நகரை சேர்ந்த முத்துக்குமார்(28), முத்துக்குமாரின் தம்பி பங்கஜ்குமார்(23), பள்ளியக்ரஹார‌ம் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (20), காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்த மாதவன்(25) பிருந்தாவன் பகுதி இ.எம்.ஜி.நகரை சேர்ந்த அபிசாய்(25) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நேற்று இரவு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    • இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • காற்றின் வேகம் காரணமாக வயர்கள் உரசியதில் தீ பிடித்து இருக்கலாம் என மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனர்.

    நாகர்கோவில், அக்.27-

    நாகர்கோவில் வேப்பமூட்டில் மாநகராட்சி பூங்கா உள்ளது.

    டிரான்ஸ்பார்மரில் தீ

    பூங்காவின் பின் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் தீ பொறிகள் கிளம்பி தீ பிடித்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் அலறியடித்தபடி நாலா புறமும் ஓடினர்.

    இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    காரணம் என்ன?

    இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    காற்றின் வேகம் காரணமாக வயர்கள் உரசியதில் தீ பிடித்து இருக்கலாம் என மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
    • நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி தலைமையில் கஞ்சா ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்ட் பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.

    அப்போது காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் கூறியதாவது:- தமிழக அரசு கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனால் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய குட்கா புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனே எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.கஞ்சா புகையிலை போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவோர் பயமின்றி திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் நாம் கஞ்சா, புகையிலை இல்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா பயிர் செய்வதில்லை. ஆந்திரா மாநிலங்களில் மலைப்பிரதேசங்களில் தான் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆந்திராவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு ஆயுதம் வாங்க கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதற்காக ஆந்திராவில் மலைப்பகுதியில் இதை பயிரிட்டு கஞ்சா விற்பனை செய்கின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆந்திரா சென்று வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கி வரும் கஞ்சாவை சிகரெட் மூலம் பயன்படுத்துகின்றனர். ஆகவே இதை முதலில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்காக வெள்ளகோவிலில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தனியாக ஒரு காவலர் நியமிக்கப்படும். அவரிடம் தங்களது பகுதியில் உள்ள குற்றச்சம்பவங்கள் பற்றி தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.

    அது மட்டுமின்றி வீட்டை பூட்டிவிட்டு பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது விலை மதிப்பு மிக்க நகை மற்றும் பணத்தை பீரோவில் வைத்து விட்டு செல்ல வேண்டாம். வங்கியிலோ அல்லது பாதுகாப்பான மறைவான இடத்திலேயே வைத்துச் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும்போது வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிவிட்டு சென்றால் நாங்கள் கண்காணிக்க ஏதுவாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.

    நகர் மன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் தங்களது வார்டுகளில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்தாலோ யாரேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டாலோ புகார் தெரிவிக்கலாம். வீடு மற்றும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கே. ஆர். முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பையில் மலைப்பாம்பு பிடிபட்டது
    • தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 5-வது வார்டில் பொன்னமராவதி- திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள சாத்தப்பா செட்டியார் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 10 அடி நீளம் கொண்ட வெங்கனத்தி வகையைச் சேர்ந்த மலை பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் இரை தேடி வந்தது.

    இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தீயணைப்பு துறையினர் உடனடியாக வரவில்லை. இதைத்தொடர்ந்து நெற்குப்பை பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர் சேர்க்கப்பன் தூய்மை பணியாளர்களை அழைத்தார். அதன்பேரில் வந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு தலைமையிலான தூய்மைப்பணியாளர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வேலங்குடி வனப் பகுதியில் விட்டனர்.

    • தீபாவளி பண்டிகையையொட்டி, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் கதா் விற்பனையைத் தொடங்கியுள்ளோம் என்று கூறினார்.
    • 52 நெசவாளா்களுக்கு நேரடியாகவும், சுமாா் 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது

    திருப்பூர்:

    திருப்பூா் குமாா் நகா் கதா் அங்காடி வளாகத்தில் காந்தியடிகள் பிறந்தநாள் விழா மற்றும் கதா் சிறப்பு விற்பனை தொடக்கவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர், காந்தியடிகளின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அனைத்து கதா், பட்டு மற்றும் பாலியஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

    பல ஆயிரம் கிராமங்களைக் கொண்ட நமது நாட்டில், விவசாயத் தொழிலில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முடிகிறது. மீதமுள்ள நாள்களில் உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு நூல் நூற்பு, நெசவு மற்றும் சோப்பு தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தச்சு உள்ளிட்ட கிராமத் தொழில்களில் வருவாய் ஈட்டவும், கிராமப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் காந்தியடிகளால் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த கதா் கிராமத் தொழில் திட்டங்கள்.

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் 7 கதா் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 346 பெண் நூற்பாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ப்பட்டு, ரூ. 60.89 லட்சம் மதிப்பிலான கதா் மற்றும் பாலியஸ்டா் நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், 52 நெசவாளா்களுக்கு நேரடியாகவும், சுமாா் 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 1.27 கோடி மதிப்பிலான கதா் மற்றும் பாலியஸ்டா் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் மற்றும் அவிநாசியில் செயல்படும் 2 காதி கிராப்ட்கள் மூலம் 2021- 22 ஆம் ஆண்டுக்கு ரூ. 2.53 கோடி கதா் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், ரூ. 1.76 கோடிக்கு கதா் பட்டு மற்றும் பாலியஸ்டா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாவட்டத்தில் 2022- 23 ஆம் ஆண்டில் ரூ. 2.53 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் கதா் விற்பனையைத் தொடங்கியுள்ளோம் என்று கூறினார். நிகழ்ச்சியில், கதா் கிராம தொழில்கள் உதவி இயக்குநா் வி.வி. ரவிக்குமாா், மொழிப்போா் தியாகிகளின் வாரிசுதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • 5 வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்ப டுகின்றன.
    • இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாா் செய்து இந்திய தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகள் பகுப்பாய்வு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஊரகப்பகுதி மற்றும் நகா்ப்புறத்தில் 1,500 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு செய்து வாக்குச் சாவடிகள் பட்டியல் வெளியிட இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இதன்படி, வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிமே ற்கொ ள்ளப்பட்டுதற்போது இறுதியாக வெளியி டப்பட்ட வரைவு மறுசீரமை க்கப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியலின் மீது அங்கீகரிக்க ப்பட்ட அரசியல் கட்சியினரிடமிருந்து கருத்துகள் கோரப்பட்டன. இதைத்தொடா்ந்து கலந்தா லோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

    பாபநாசம் தொகுதியில் 59, 60, திருவையாறு தொகுதியில் 148, 149, தஞ்சாவூா் தொகுதியில் 292 ஆகிய பாகங்களில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கையின் அடிப்ப டையில் பிரிவுகள் சீரமைக்க ப்பட்டு ஒழுங்கமை க்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்ப டுகின்றன.

    இதேபோல, பாபநாசம் தொகுதியில் 1, 2, 168, 226, 229, தஞ்சாவூா் தொகுதியில் 103, 104, பேராவூரணி தொகுதியில் 111, 147 ஆகிய பாகங்களில் வாக்குச் சாவடிகளின் அமைவிடங்கள் மாற்றிய மைக்கப்பட்டுள்ளன.

    மேலும், பாபநாசம் தொகுதியில் 3, 14, 29 ஆகிய பாகங்களில் கட்டடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் மறுசீரமை க்கப்பட்டு, தற்போது 8 தொகுதிகளிலும் 2,305 சாவடிகள் உள்ளன. மறுசீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள் இறுதிப்படுத்தப்பட்டு, இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாா் செய்து இந்திய தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வட்டாட்சியர் (தேர்தல் )ராமலிங்கம், தி.மு.க. (மாவட்ட பொருளாளர்) அண்ணா, ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன், அ.தி.மு.க. காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் (பொருளாளர்) பழனியப்பன், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ், மாவட்ட செயலாளர் அமிர்த்அரசன், இந்திய கம்யூனிஸ்ட் (செயலாளர்) முத்து உத்துராபதி, முத்துக்குமரன், (செயலாளர்) மு.ஆ.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குருசாமி, மக்கள் விடுதலை (மாவட்டச் செயலாளர்) அருணாச்சலம், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8,215 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு முகாம்களை நடத்தி விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கல்விக் கடன்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன், கு.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் 2022-23ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.21,530 கோடியாகும். இதில், வேளாண்மைத் துறைக்கு 38 சதவீதமாக ரூ.8,206 கோடியும், சிறு வணிகத் துறைக்கு 60 சதவீதமாக ரூ.12,496 கோடியும், பிற முன்னுரிமைக் கடன்களுக்கான வீட்டுக் கடன், மரபுசாரா எரிசக்தி கடன், கல்விக் கடன் மற்றும் இதர கடன்களுக்காக ரூ.478 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8,215 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களை நடத்தி மாணவா்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக கல்விக் கடன்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

    கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், வங்கியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி உள்வட்டம், திருக்கோலக்குடி குரூப், பழைய திருக்கோலக்குடி கிராமத்தில் நாளை (14-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

    மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
    • இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக ரூ.17.50 லட்சம் வரையிலான மானித்துடன் கடனுதவி பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 18 வயதிற்கு மேல் இருக்கவேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ. 10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரையிலும் உற்பத்திப் பிரிவிற்கு ரூ. 50 லட்சம் வரையிலும் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    2022-23-ம் நிதி ஆண்டிற்கான குறியீடு 216 நபர்களுக்கு ரூ.6.24 கோடி மானியம் என விருதுநகர் மாவட்ட தொழில் மையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் வழி முறைகளைப் பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.

    மேலும் இந்த திட்டத்தில் திருத்திய வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சார்ந்த தொழில் தொடங்க இந்த அலுவலகம் மூலம் கடன் வசதி செய்து தரப்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த ஆர்வம் உள்ள தொழில் திறமையுள்ள ஆண், பெண் தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், பெயர் ஆகியவற்றை பதிவு செய்யும் போது ஏஜென்ஸி என்ற option வரும்போது DIC என தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் (89255 34036) என்ற முகவரியில் அணுகி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×