search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருமகன்"

    ஈடன் வீட்டு வசதித்திட்ட ஊழல் தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியின் மருமகன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Pakistan #CJPIftikharChaudhry #Murtaza
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி. இவரது மருமகன் முர்டாஸா. இவர் துபாயில் பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு எப்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈடன் வீட்டு வசதித்திட்ட ஊழல் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுபற்றி பாகிஸ்தான் தகவல்துறை மந்திரி பவாத் சவுத்ரி, இஸ்லாமாபாத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-



    தனியார் வீட்டு வசதி ஊழலில் முன்னாள் தலைமை நீதிபதியின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஈடன் வீட்டு வசதி ஊழலில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கி இருக்கிறோம். முன்னாள் தலைமை நீதிபதியின் சம்மந்திதான் (மகளின் மாமனார்) ஈடன் வீட்டு வசதி நிறுவனத்தின் அதிபர் ஆவார்.

    ஈடன் வீட்டு வசதித்திட்டத்தால் 200 முதல் 300 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இந்த வீட்டு வசதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் அவர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எனவேதான் இது தொடர்பான வழக்குகளை இப்திகார் சவுத்ரி தானே தனிப்பட்ட முறையில் விசாரித்து, அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கிறார்.

    இந்த வழக்கில் இப்திகார் சவுத்ரியின் மருமகன் மட்டுமல்ல, மகள், சம்மந்தி, மகன் அர்சாலன் இப்திகார் ஆகியோரும் குற்றவாளிகள் ஆவர். தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கூடங்குளம் அருகே மகளை அடித்ததை தட்டி கேட்ட மாமனாரை மருமகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள காடுதுலா கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது55), விவசாயி. இவரது மகள் பரமசெல்வி என்பவரை அதே பகுதியை சேர்ந்த டிரக்கர் டிரைவர் அந்தோணி ராஜ் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக அந்தோணிராஜ், தினசரி மது குடித்து விட்டு வந்து பரமசெல்வியை அடித்து உதைத்தார். இதை பரம செல்வி தனது தந்தையிடம் கூறி அழுதார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு பெருமாள், மகள் வீட்டுக்கு சென்று அங்கிருந்த மருமகன் அந்தோணி ராஜை சத்தம் போட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ், மாமனார் வீட்டை விட்டு வெளியே வரவும், உருட்டு கட்டையுடன் பின்னால் சென்று சரமாரியாக அடித்தார். இதில் மண்டை உடைந்து உயிருக்கு போராடிய பெருமாளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் பெருமாள் மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து பெருமாள் மனைவி புஷ்பம் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. கனகராஜ், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய அந்தோணி ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்ததால் மாமனார் வீட்டின் மீது மருமகன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #petrolbomb
    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பேராச்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகள் செல்வி (வயது30). இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த சரவணன்(32) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் செல்வி தூத்துக்குடியில் கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் செல்வி வண்ணார் பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். மேலும் சரவணனிடம் இருந்து விவாகரத்து கேட்டு செல்வி நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதனிடையே சரவணன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி வீட்டருகே நின்று ரகளை செய்தாராம். நேற்றிரவு குடிபோதையில் சரவணன், செல்வியின் வீட்டுக்கு வந்தார். திடீரென செல்வின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசினார். இதனால் அந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டின் முன்பு நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிள் சேதமாகின.



    உடனே சரவணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சத்தம் கேட்டு வெளியில் வந்த செல்வி, அவரது தந்தை முத்துராமலிங்கம் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.

    இன்று காலை பாளை பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விவகாரத்து வழக்கு தொடர்பாக செல்வியை மிரட்டும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான சரவணன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #petrolbomb

    துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எர்டோகன் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். #Turkey #Erdogan
    அங்காரா:

    துருக்கி நாட்டில் 2016-ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக முறியடித்தார்.

    அதன்பின்னர் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் அந்த நாடு 95 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இருந்து அதிபர் ஆட்சி முறைக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக எர்டோகன் எதிர்ப்பாளர்கள், துருக்கியின் ஜனநாயகம் அழிவுப்பாதையில் சென்றுவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.



    இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்ட எர்டோகனுக்கு மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் வந்துவிட்டது.

    உடனே அவர் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். இதே போன்று ராணுவ தளபதியாக இருந்து வந்த ஜெனரல் ஹூலுசி அகாரை ராணுவ மந்திரியாக நியமித்தார். மெவ்லுட் கவுசொக்லு வெளியுறவு மந்திரியாக தொடர்கிறார்.  #Turkey #Erdogan  #Tamilnews
    ×