search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 167928"

    • ஆந்திர அரசு அணை கட்டக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்
    • நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை என மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில்

    காட்பாடி:

    ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். இதற்கு, பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், 'பாவம்... அவர் கலங்கிப் போய் எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் பேசவேண்டாம். வேறு யாராவது சொன்னால் சொல்லுங்கள்' என்றார். காட்பாடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

    மேலும், ஆந்திர அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதாகவும், அணை கட்டுவதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் அந்த வழக்கை விரைவுபடுத்துவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

    மேலும், திமுக அரசு பயங்கரவாதத்துக்கு துணைபோவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் செளபே கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "யாரோ விவரம் தெரியாத மந்திரி அவர். நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை, எங்கள் கொள்கையும் அதுவல்ல' என்றார்.

    • சட்டப்போராட்டம் மூலம் கட்சியை கைப்பற்றி விடலாம் என்ற ஓ.பி.எஸ்சின் கணக்கு எடுபடாமல் போய்விட்டது.
    • எவ்வளவோ குடைச்சல் கொடுத்தவர்களை கூட ஜெயலலிதா மன்னித்து ஏற்றுக்கொண்ட வரலாறு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.

    தர்ம யுத்தத்தில் தொடங்கி அதிகார யுத்தம் வரை போர்க்கள காட்சிகள் வேகமாகவும், விறு விறுப்பாகவும் நகர்ந்தாலும் முடிவு எப்படி அமையும் என்பது தான் தற்போதைய இறுதி கட்டத்தின் எதிர்பார்ப்பு. கிட்டத்தட்ட நிராயுதபாணி என்ற நிலையில் தான் போர்களத்தில் ஓ.பி.எஸ்.-ன் நிலை உள்ளது.

    எம்.ஜி.ஆர்... அதற்கு அடுத்ததாக ஜெயலலிதா ஆகியோரைப்போல் ஆளுமையும், செல்வாக்கும், மிக்க தலைமை அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போனாலும் அந்த இயக்கத்தை கட்டி காப்பதற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற ஏக்கம் அந்த இயக்கத்தின் மீது பற்று கொண்ட ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். அதனால் தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை தலைமையேற்று வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

    இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என்று எல்லோரும் சேர்ந்து தான் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள். முதல்வர் பதவி என்பது சும்மாவா? வாய்ப்பு கிடைத்தால் யாராக இருந்தாலும் அதை அனுபவிக்கத்தான் முயற்சிப்பார்கள். அந்த வகையில் அடுத்த கட்டமாக சசிகலாவும், முதல்வர் பதவியை நோக்கி நகர தொடங்கியதும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரச்சினை வந்தது. பதவியை துறக்கும்படி சசிகலா தரப்பினர் நெருக்கடி கொடுக்கவே அவரும் துறக்க வேண்டிய கட்டாயம் ஆயிற்று.

    வேறு வழி தெரியாமல் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை ஜெயலலிதா சமாதியில் இருந்து தொடங்கினார். அந்த யுத்த முழக்கம் எதிர்தரப்பை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. முதல்வர் முடிசூட சசிகலா தயாரானார். எம்.எல்.ஏ.க்கள் கழன்று விடாமல் இருப்பதற்காக கூவத்தூரில் சிறைபடுத்தினார்கள். சசிகலா கணக்கு இப்படி இருக்க இன்னொரு பக்கம் அவருக்கு எதிரான கணக்கு வேறு விதமாக முடிவு செய்யப்பட்டது.

    சொத்து குவிப்பு என்ற அஸ்திரம் இன்னொரு திசையில் இருந்து பறந்து வந்து மொத்தத்தையும் துவம்சம் செய்தது. சசிகலாவின் கனவு தகர்ந்தது. சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது தனது விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு அவர் ஜெயிலுக்கு சென்றார். முதல்வராக அறிவிக்கப்பட்டாலும் சட்ட சபையில் பலத்தை நிரூபிக்க வேண்டிய நடைமுறை வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். ஆனால் ஓ.பி.எஸ். தரப்பினர் நடுநிலை வகித்தார்கள்.

    இ.பி.எஸ் தலைமையில் ஆட்சி தேர் சரியான திசையில் நகர்ந்தது. ஆனால் இ.பி.எஸ்க்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகளின் காரணமாக டி.டி.வி. தினகரன் தனியாக பிரிந்தார். ஆக அ.தி.மு.க. 3 அணிகளானது. தினகரனை பொறுத்தவரை தனி கட்சியாகவே தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

    எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல இ.பி.எஸ்சுக்கும், ஓ.பி.எஸ்சுக்கும் டி.டி.வி தினகரன் பொது எதிரியாக இருந்ததால் இருவரும் இணைந்து கட்சியை வலுப்படுத்தலாம். நம்முடைய பலத்தையும் பெருக்கி கொள்ளலாம் என்று திட்டம் வகுத்தார்கள். அதன் விளைவாக இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்சும் கைகோர்த்தார்கள்.

    பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவை தூக்கினார்கள். ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும், இணை ஒருங்கி ணைப்பாளரும் எடப்பாடி பழனிசாமியும் புதிய பதவிகளோடு கட்சியை புதிய பாதையில் வழிநடத்த தொடங்கினார்கள். முதல்வராக இ.பி.எஸ், துணை முதல்வராக ஓ.பி.எஸ் என்று கட்சியும், ஆட்சியும் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது.

    ஒற்றை தலைமையாக இருந்தால் தான் கட்சியை சரியாக நடத்த முடியும் என நினைத்து ஒற்றை தலைமைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி என்ற நிலை வந்ததும் தனது அதிகாரம் குறைந்து விடும் என கருதிய ஓ.பன்னீர்செல்வத்தால் ஒற்றை தலைமை என்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    சமாதானமாக பேசியும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற ரீதியில் எடப்பாடி பழனிசாமி களம் இறங்கினார். பொதுக்குழுவை கூட்டி யாருக்கு ஆதரவு என்பதை நிரூபித்து விடுவோம் என்று கங்கணம் கட்டி இ.பி.எஸ் களம் இறங்கினார். கடந்த ஜூன் 23-ந் தேதி பொதுக்குழு என்று தேதி குறிக்கப்பட்டது. அன்றைய பொதுக்குழுவில் இ.பி.எஸ்சை பொதுச் செயலாளராக அதாவது ஒற்றை தலைமைக்கு கொண்டு வருவதற்காக முயற்சிகளை முன் எடுத்தனர். இதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட ஓ.பி.எஸ் பொதுக்குழுவுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விடிய விடிய கோர்ட்டில வழக்கு விசாரணை நடந்தது. ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். புதிதாக எந்த பதவி தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்ற கோர்ட்டு உத்தரவோடு அந்த பொதுக்குழு கூடியது. ஆனால் பொதுக்குழுவில் அத்தனை தீர்மானங்களையும் நிராகரிப்பதாக கூறி விட்டு ஜூலை 11-ந் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த பொதுக்குழு வானகரத்தில் நடந்து கொண்டு இருந்த போது தலைமை கழகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகுந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது.

    இதனால் அ.தி.மு.க. அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. மீண்டும் வழக்கு கோர்ட்டுக்கு சென்றது. வழக்கை விசாரித்த தனி நீதிபதியின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திறகு சாதகமாக வந்தது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் அலுவலகத்தின் சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட்டதோடு பொதுக்குழு செல்லும் என்றும் அறிவித்தது. அலுவலக சாவியையும் இ.பி.எஸ்சிடம் வழங்க உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே தீர்ப்பு அமைந்துள்ளது. தலைமை கழகத்தின் சாவி இ.பி.எஸ்சிடம் ஒப்படைக்கப்பட்டது சரிதான் என்று அறிவிக்கப்பட்டது. கட்சி, அலுவலகம் எல்லாம் இ.பி.எஸ். வசமாகி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமியின் பக்கம் எம்.எல்.ஏ.க்களின் பலமும் அதிகமாக உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களும் 90 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் சட்டத்தின் துணை கொண்டு அதாவது சட்டப்போராட்டம் மூலம் கட்சியை கைப்பற்றி விடலாம் என்ற ஓ.பி.எஸ்சின் கணக்கு எடுபடாமல் போய்விட்டது.

    சசிகலா, டி.டி.வி. தினகரன் எல்லோரும் அ.தி.மு.க.வுக்கு வர வேண்டும் என்று புதிய முயற்சியை மேற்கொண்டும் பார்த்தார். அதுவும் எடுபடாமல் போனது. இப்போது தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பெரும்பாலானோர் இ.பி.எஸ் பக்கம் இருக்கிறார்கள்.

    சட்டமும், இ.பி.எஸ்சுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்து இருக்கிறது. அதாவது கொஞ்சம், கொஞ்சமாக ஓ.பி.எஸ்சின் கை பலவீனமாகி வருகிறது.

    இப்போது அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரை நம்பி இருக்கும் சிலரிடம் எழுந்துள்ளது.

    பா.ஜனதா கைகொடுக்கும் என்ற எண்ணமும் நிறைவேறவில்லை. பா.ஜனதாவை பொறுத்தவரை தமிழகத்தில் வலுவாக கால் பதிக்க போராடிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கட்சியில் பிளவுகள் ஏற்படுவதால் தனக்கு பலன் கிடைக்குமா என்பதை தான் எதிர்பார்க்கும். எனவே பா.ஜனதாவும் இந்த விஷயத்தில் நைசாக நழுவிவிட்டது. இப்போதைய நிலையில் போர்க்களத்தில் நிராயுதபாணியாக ஓ.பி.எஸ் நிறுத்தப்பட்டுள்ளார். அடுத்து அவர் எடுக்கப்போகும் முடிவை பொறுத்து தான் அவரது எதிர்காலமும், அவரை நம்பியிருக்கும் சிலரது எதிர்காலமும் அமையும்.

    துணை முதல்வர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் இனி மாற்று கட்சிகளில் இணைவது சாத்தியம் இல்லை. அப்படி ஒரு அக்னி பரீட்சைக்கு அவரும் தயாராக மாட்டார். அவருக்கு இருக்கும் ஒரே வழி சண்டை வேண்டாம். சமரசமாக போய்விடுவோம் என்று சொல்வதாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    இப்போதைய சூழ்நிலையில் இவ்வளவு குடைச்சல் கொடுத்த ஓ.பி.எஸ். மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்ப்பதில்லை என்று இ.பி.எஸ் தரப்பு கூறினாலும் சூழ்நிலைகள் மாற வாயப்பு உண்டு என்கிறார்கள்.

    இதை விட எவ்வளவோ குடைச்சல் கொடுத்தவர்களை கூட ஜெயலலிதா மன்னித்து ஏற்றுக்கொண்ட வரலாறு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. எனவே இ.பி.எஸ் தலைமையை ஏற்று ஓ.பி.எஸ் கட்சிக்கு வந்தால் நிச்சயம் இ.பி.எஸ் ஏற்றுக்கொள்வார், ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். தொண்டர்களும் அதைத்தான் விரும்புவார்கள் என்கிறார்கள்.

    தன் பக்கம் நிர்வாகிகள் சாய்வார்கள் என்று காத்திருந்ததுதான் மிச்சம். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து யாரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் செல்லவில்லை.

    தென் மாவட்டங்களின் தனக்கென்று தனி செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அதை வெளிப்படையாக காட்ட தவறி விட்டார். பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று எதையும் முன்னெடுக்கவில்லை. சமுதாய ரீதியாக கட்சியினரை திரட்ட எடுத்த முயற்சிகளும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி. தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த கருணாநிதியின் பெருமைகளை புகழ்ந்தும், தொடர்ந்து தி.மு.க.வின் சில செயல்பாடுகளை பாராட்டியதும் கட்சியினர் மத்தியில் வெறுப்பை சம்பாதிக்க வைத்தது.

    அரசியலில் இப்போதைய நிலையில் அதிர்ஷ்ட காற்று திசை மாறியே வீசுகிறது. எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் மங்குமா? பிரகாசிக்குமா? என்பதை வரும் காலம்தான் நிர்ணயிக்கும். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதுதானே யதார்த்தம்.

    • தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்தானது.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம் என்று வைத்திலிங்கம் எம். எல் .ஏ. தெரிவித்தார்.

    அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது.

    இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்தானது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக ஓ.பன்னீ ர்செல்வம் ஆதரவாளரன துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம். எல் .ஏ. அன்று அளித்த  பேட்டியில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதுவரை பொறுத்திருங்கள். எனவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருத்தமடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம் என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில், வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

    • பணம் பாதாளம் வரை பாயும், முதல்கட்டமாக அய்யப்பனை பிடித்துள்ளனர்.
    • அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ்க்கு என்றுமே இடம் கிடையாது.

    மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகர் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை சென்னையில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் பிடிக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் தாவுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை. பணம் பாதாளம் வரை பாயும். தினகரன், சசிகலா, ஓபிஎஸ் இடம் பணம் கோடிக் கோடியாக உள்ளது. முதல்கட்டமாக அய்யப்பனை பிடித்துள்ளனர்.

    அதிமுக என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ, எம்பிக்களை நம்பியோ ஆரம்பிக்கப்படவில்லை. தொண்டர்களை நம்பித்தான் அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தார். பன்னீர்செல்வம் மகா நடிகர், இவர் நடிகனாக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்று இருப்பார்.

    தேர்தலில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பன்னீர் செல்வத்தின் செயல்பாடு இருந்தன அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ்க்கு என்றுமே இடம் கிடையாது. சுருக்கமான சொல்ல வேண்டும் என்றால் கறந்த பால் மடிபுகாது, கருவாடு மீனாகாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என ஓபிஎஸ் தரப்பு வாதம்
    • நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? என நீதிபதி கேள்வி

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் கோர்ட்டில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளிக்காததால் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவை கூட்டக்கோரி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் விண்ணப்பிக்க முடியும், இது சம்பந்தமான விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது. கட்சியினரின் விருப்பத்தை ஏற்று நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என 2017ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

    அப்போது நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என விளக்க வேண்டும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர். பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்று கொள்வதாக கூறியே பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

    பொதுக்குழுவின்போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

    • ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    • நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன் என ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

    அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்றும், காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் எழுதிய கடிதத்தில், என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன்.

    கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில் அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை
    • தலைமை அலுவலகத்திற்குள் இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசினார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இன்னும் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் இருந்தனர்.

    மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தனர்.

    அதன்பின்னர் ஆர்டிஓ சாய் வர்தினி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியே வந்தனர். வெளியே வந்த ஓபிஎஸ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 

    • அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை கட்சியில் இருநது நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் கூறினார். பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார்.
    • பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. தனது கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது ஒருபுறமிருக்க ஏற்கனவே அறிவித்தபடி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, "பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை இடைக்கால பொது செயலாளர் தீர்மானமாக கொண்டு வருவார். பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பழனிசாமி கொண்டு வருவார்'' என்றார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றும் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கபப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
    • கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என நீதிபதி கேள்வி

    சென்னை:

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. பின்னர் விசாரணை தொடங்கியது.

    தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு என்றும், இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர் பல கருத்துக்களை முன்வைத்தார்.

    பொதுக்குழு கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்கக் கூடாது என்றும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். கட்சி நலனுக்காக வழக்கு தொடுத்திருப்பதாக கூறும் ஓபிஎஸ் தன்னையே எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டார்.

    கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்படவேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டடார். வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.

    • உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்ததையடுத்து விசாரணை தொடங்கியது.
    • 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது என ஓபிஎஸ் தரப்பு வாதம்

    சென்னை:

    ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக அதிமுகவில் ஏற்பட்ட மோதல் நீடித்து வரும் நிலையில், வரும் 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்ததையடுத்து விசாரணை தொடங்கியது.

    உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தனி நீதிபதியை அணுக உத்தரவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதித்துள்ள நிலையில், நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:-

    தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு. இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது. பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்த நோட்டீசில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருப்பதாக கூறப்படவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற விவகாரங்களை உயர் நீதிமன்றத்தில் எழுப்பலாம் என தெரிவித்துள்ளது. பொதுக்குழுவை கூட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், பொதுக்குழுவில் விதிகளை மீற வாய்ப்பு உள்ளது.

    நீதிபதி: அதற்கு நீங்கள் உச்ச நீதிமன்றம்தான் செல்லவேண்டும். மற்ற விவகாரங்கள் என எதை குறிப்பிட முடியும்?

    ஓபிஎஸ் வழக்கறிஞர்: கூட்டத்திற்கு பாதுகாப்பு கோருவது உள்ளிட்ட விவகாரங்கள்தான்

    எடப்பாடி வழக்கறிஞர்: பொதுக்குழு கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்கக் கூடாது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும்.

    இவ்வாறு வாதம் நடந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈபிஎஸ் தரப்பில் சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்திற்கு கொரோனா.
    • வைத்திலிங்கம் அவரது சென்னை இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது திடீரென அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் பலர் முககவசம் அணியாமல் செல்வதால் கொரோனா எளிதில் பரவி விடுகிறது.

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு 5 நாட்களாக காய்ச்சல் உள்ளது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

    தற்போது ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 23-ந்தேதி வானகரத்தில் நடைபெற்றபோது வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்திருந்தனர்.

    அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று பெரியகுளம் திரும்பி வந்த போதும் விமான நிலையத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் குவிந்தனர். இதில் பலர் முககவசம் அணியாமல் சென்றதால் அவர்களில் பலருக்கு காய்ச்சல் வந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் இருமல் காரணமாக அவதிப்பட்டார். அவருக்கு 2 நாட்களுக்கு பிறகு இருமல் சரியாகி உள்ளது. இதேபோல் கட்சி நிர்வாகிகள் பலருக்கு காய்ச்சல் இருமல் ஏற்பட்டுள்ளது.

    இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி பலர் போட்டுக் கொண்டதால் காய்ச்சல் வந்தாலும் 5 நாட்களில் சரியாகி விடுவதாக தெரிவித்தனர்.

    ×