search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைக்கானல்"

    • கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
    • புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

    தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதன் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் இரவு நேரத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, சுற்றுலாவை அனுபவிக்க செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

    • தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின.
    • கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அருவிகள் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து சென்றனர். இதனிடையே வனத்துறைக்கு கட்டுப்பட்ட பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று 2-வது நாளாக கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராமங்களில் கன மழை பெய்தது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானல் மேல்மலை, தாண்டிக்குடி, கீழ்மலைப்பகுதிகளில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் கடும் சிரமத்தை மக்கள் சந்தித்தனர்.

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஊருக்கு வெளியே 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பள்ளிக்கு காலை 9 மணிக்கு வரும் அரசு பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகின்றனர். கனமழை காரணமாக இப்பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 2 ணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இங்கு வரும் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டது.

    காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளிக்கு செல்ல தயார் நிலையில் இருந்த மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனையடுத்து தனியாருக்கு சொந்தமான லாரிகளில் மாணவ-மாணவிகள் ஏறி மாற்று வழியில் பள்ளிக்கு சென்றனர். ஒரு சில மாணவிகள் கூட்ட நெரிசலில் லாரியில் செல்ல தயங்கி மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் தேர்வை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது பூம்பாறை செல்லும் வழித்தடத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அரசு பஸ் இயக்க முடியவில்லை. மரங்கள் வெட்டி அகற்றியபின் பஸ் இயக்கப்படும் என்றார்.

    மேல்மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.
    • மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இத்தலத்தின் மலை மீதிருக்கும் திருக்கோயிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணியின் திருமேனி நவபாஷாணங்களை கொண்டு போகரால் உருவாக்கப்பட்டதாகும்.

    பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.

    மலை மீதிருக்கும் தண்டாயுதபாணியை வழிபடும் முன்பாக மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாத விநாயகரை வணங்கிய பின் அடுத்து கிரிவலம் வரவேண்டும்.

    கிரிவல சுற்று சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவுடையது. இதன் இருபுறமும் கடம்ப மரங்களும், பிற மரங்களும் உள்ளன.

    மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இங்குதான் போகர் சமாதி நிலையில் இருந்தாராம்.

    இங்கிருந்து முருகப் பெருமானின் சன்னதிக்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.

    இறுதியாக இதனுள் சென்ற போகர் மீண்டு வரவேயில்லை. .

    இப்போதும்அவர் அச்சுரங்கப் பாதையினுள் தான் உள்ளார்.

    அவர் பூஜித்து வந்த புவனேஸ்வரியம்மன் சிலை இன்னும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    • முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.
    • குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.

    ஒரு சமயம் கைலாயத்தில் பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என்ற இரு பிரிவுகளாக இருந்தவனாம்.

    இறைவன் இவ்விரு மலைகளையும் அகத்தியருக்குத் தந்தருளினார்.

    தனக்களித்த இருமலைகளையும் பொதிகைக்குக் கொண்டு வருமாறு அகத்தியர் பெருமான் இடும்பாகரனுக்குக் கட்டளையிட அவற்றை இடும்பன் கொண்டு சென்றான்.

    இவ்வாறு சிவகிரியையும், சக்திரியையும் அவன் தூக்கிச் செல்லும்போது களைத்து இப்போது பழனி மலையும், இடும்பன் மலையும் இருந்திடும் இடங்களில் அவற்றை வைத்தான்.

    முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.

    மீண்டும் அவற்றை தூக்க முற்பட்டபோது இடும்பனால் அவற்றை தூக்கவோ நகர்த்தவோ இயலாமல் போனது.

    இந்நிலையில் குமரப் பெருமான் அம்மையப்பன் தனக்கு ஞானப்பழத்தைத் தராமையால் சினங்கொண்டு சிவகிரி மலை மீது எழுந்தருளினார்.

    பாலகனான குமரன் குராமரத்தினடியில் தோன்றினான்.

    இதுகண்ட இடும்பாசுரன் தன்னால் மலைகளை மீண்டும் தூக்கிட இயலாமல் போனதற்குக் குமரனே காரணம் என்று எண்ணி கடும் கோபம் கொண்டவனாய் அவரை எதிர்த்துப் போரிடத் துவங்கினான்.

    குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.

    முடிவில் அசுரன் குமரனால் வதைப்பட்டான்.

    தன் கணவன் உயிர் நீத்ததைக் கண்டு வருந்திய இடும்பன் மனைவியான இடும்பி குமரக்கடவுளிடம் தன் கணவனை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு வேண்ட, அவரும் அவ்வாறே செய்தருளினார்.

    உயிர் பிழைத்தெழுந்த இடும்பன் குமரப் பெருமானிடம் இரு வரங்களைக் கேட்டான்.

    அவை முருகப் பெருமானின் சன்னதியில் காவலிருக்கத் தனக்கு ஓர் இடம் வேண்டுமென்பதும், தான் இரு மலைகளையும் தூக்கி வந்தது போன்ற இத்தலத்திற்கு பக்தர்கள் இரு காவடிகளுடன் வரும்போது அவர் தம் பிரார்த்தனை நிறைவேறிட வேண்டும் என்பதாகும்.

    இடும்பனின் வேண்டுதல்படியே குமரப் பெருமானும் வரங்களைத் தந்தருளினார்.

    • பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.
    • இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.

    சுமார் 450 அடி உயரம் கொண்ட பழனிமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரிவுகளான வராகமலை, கொடைக்கானல் போன்ற மலைகள் சூழப்பட்ட செழிப்புடன் திகழ்ந்திடும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

    இயற்கை அழகுபட விளங்கும் இம்மலைக்கு எதிரே சற்று தொலைவில் இடும்பன் மலை உள்ளது.

    பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.

    தமிழகத்தில் உள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக உள்ள ஆவினன்குடி பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    இத்தலத்தைச் சுற்றிலும் உள்ள நகரப் பகுதியே ஆவினன்குடி என்றும், மலை பழனிமலை என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நகரம் மற்றும் மலை ஆகியவற்றைச் சேர்த்துப் பழனி என்று வழங்கப்படுகிறது.

    "பழனி" என்பது "பழம் நீ" என்பதன் திரிப்பு என்று தலபுராணம் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ஒரு சமயம் நாரத முனிவர் தன்னிடம் வழங்கிய ஞானப்பழத்தை அம்மையப்பர் தன் இளைய புதல்வனான முருகனுக்குத் தராமல் மூத்த புதல்வன் விநாயகருக்கு அளித்து விட்டார்.

    இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.

    அம்மையப்பர் இம்மலையில் எழுந்தருளி சினம் கொண்டிருந்த தம் புதல்வனிடம் "முருகா! பழம் நீ! பழமாக நீயே இருக்கும் போது உனக்கு எதற்கு வேறு பழம்?"

    என்று ஆறுதல் கூறியதாகவும் அம்மையப்பரால் அருளப்பட்ட "பழம் நீ" என்னும் சொற்றொடரே இத்தலத்தின் பெயராக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

    • அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
    • தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பாரதி அண்ணாநகர் பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமிண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

    மேலும் இதேபகுதியில் நடிகர் பாபிசிம்ஹா அரசு அனுமதியின்றி 3 மாடி கட்டிடம் கட்டி வருவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கொடைக்கானலில் ஜே.சி.பி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

    இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், நிலஅளவையர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பாபிசிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டிடங்கள் மற்றும் இடங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வனத்துறையினரும் ஈடுபட்டனர். அளவீடு செய்யப்பட்ட அறிக்கையை திண்டுக்கல் கோட்டாட்சியர் ராஜாவிடம் வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிகுமார் பிரசாத் தெரிவிக்கையில், கொடைக்கானலில் 2400 சதுரடிக்குமேல் கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது. ஆனால் தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

    இதுகுறித்து வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. வனத்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டிடம் கட்ட அனுமதி பெறவில்லை. பாபிசிம்ஹா தனது தாயார் பெயரில் உள்ள இடத்தை புதுப்பித்து வீடு கட்டி வருகிறார். ஆனால் அதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என தெரியவில்லை.

    2 பேரிடமும் நோட்டீஸ் அளித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

    • சுற்றுலாத்தல வனப்பகுதிக்குள் இவ்வாறான சான்றிதழ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
    • சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் மூடப்படும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்மரக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்து காரணமாக வனப்பகுதி சுற்றுலா தலங்களில் வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்துதல், கழிவறைகள் அமைத்தல் ஆகிய மேம்பாட்டு பணிகளுக்காக 2 தினங்களாக அப்பகுதி மூடப்பட்டது.

    இந்நிலையில் மீண்டும் இன்று முதல் வனப்பகுதி சுற்றுலா தளங்கள் திறக்கப்படுகிறது. தற்பொழுது வனப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல புதிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஓட்டுனர் உரிமம், வாகனபதிவு புத்தகம், வாகன காப்பீட்டுச் சான்றிதழ், வாகன மாசு சான்றிதழ் ஆகியவை முறையாக உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தல வனப்பகுதிக்குள் இவ்வாறான சான்றிதழ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மோயர் சதுக்கம் பகுதியில் வாகன நுழைவு கட்டணம் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்ல ஒரே நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படும். வனப்பகுதிக்குள் உள்ள சுற்றுலாத்தலத்தில் வாகன நுழைவு கட்டணம் அரசாணையின்படி வசூலிக்கப்படும். பேரிஜம் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், பேரிஜம் நுழைவு அனுமதிச்சீட்டு பெற பழைய கட்டணங்களே நடைமுறைப்படுத்தப்படும். பேரிஜம் செல்ல அனுமதி சீட்டு பெற்ற வாகனத்திற்கு மறைமுக கட்டணங்கள் வசூல் செய்யப்படமாட்டாது.சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் மூடப்படும்.

    இவ்வாறு கொடைக்கானல் வனத்துறை அறிவித்துள்ளது.

    இந்நிலையில் ஒரே இடத்தில் வாகன நுழைவுக் கட்டணம், மோயர் சதுக்கம்,பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க ஒரே நுழைவுச்சீட்டு கட்டணம் வசூலிப்பது, வாகனங்களுக்குரிய முழுமையான ஆவணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சரிப்பார்ப்பது என்பது கால விரயத்தை அதிகரிக்கும், அதோடு வாகனங்கள் நுழைவுச்சீட்டு என்பது அடாவடி நடவடிக்கை என உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கொடைக்கானல் நகராட்சி எல்லையில் உள்ள சுங்கச்சாவடி கட்டண வசூல் மையத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், சுங்க சாவடியையே அகற்ற வேண்டும் என்ற எதிர்ப்பு நிலையிலும் மற்றும் ஒரு டாக்ஸி ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது போல் வனத்துறையில் சுங்கச்சாவடி அமைத்து வசூல் செய்வது உள்ளூர் மற்றும் வெளியூர் டாக்ஸி,வேன் ஓட்டுநர்களையும் கடுமையாக பாதிக்கும் என கொடைக்கானல் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே வாகன நுழைவு கட்டணம் என்ற புதிய விதியையும்,வாகன சரிபார்ப்பு என கால நேரத்தை வீணடிப்பதையும் கொடைக்கானல் வனத்துறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலத்த காற்று காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • மின் தடை ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து மேக மூட்டமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து குளிச்சியான காற்று மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ள போதிலும் அவர்கள் குளிர்ச்சியான சூழலை சைக்கிளில் சென்று ரசித்து வருகின்றனர். சாரல் மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். காலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதியடைந்துள்ளனர்.

    கொடைக்கானல், மேல்மலை, கீழ் மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை, பேத்துப்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

    அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பலத்த காற்று காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருவதால் அதனை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வழக்கமாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    ஆனால் தற்போது குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் வந்ததாலும் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரம்யமான அழகை ரசித்து செல்கின்றனர்.

    இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனர்.
    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானல்:

    இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்ணைக் கவரும் மலை முகடுகளும், தலையை முட்டும் மேகக் கூட்டங்களும் இருப்பதால் கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்று அழைப்பர். வருடம் முழுவதும் இங்கு இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பியர் சோழா அருவி போன்ற அருவிகளை கண்டு ரசித்து அருகில் நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இன்று வார விடுமுறை என்பதால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனர்.

    காற்றின் வேகம் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. பின்னர் நிலமை சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காற்றின் வேகத்தைப் பொறுத்து படகுகள் இயக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இனி வரும் காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிர் சீசனை அனுபவிக்க அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    வனப்பகுதிகளில் உள்ள மோயர் சதுக்கம், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்மரக்காடுகள், கோக்கர்ஸ் வாக் உள்பட பல்வேறு இடங்களில் மேக கூட்டங்களுக்கு இடையே இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி ஆகியவை முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழையில் சுற்றுலா பயணிகள் நனைந்தபடி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரியும், குதிரை சவாரி மேலும் சிலர் நடைபயிற்சி செய்தும் மகிழ்ந்தனர்.

    பக்ரீத் பண்டிகை விடுமுறை, வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் கொடைக்கானல் செண்பகனூர் பெட்ரோல் மையம் முதல் ஏரிச்சாலை வரை 6கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    • வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக இருந்தது.
    • நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், பியர்சோழா ஆகிய அருவிகளை கண்டு ரசித்து அருகில் நிற்பதுபோல் செல்பி எடுத்துக் கொண்டனர். வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக இருந்தது.

    குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனூர், சுழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் இதமான சீதோசனம் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். வாரவிடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோடை சீசன் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் குறைவாக காணப்படும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • கோடை விடுமுறையை கொண்டாட பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
    • இதமான சூழலை அனுபவிக்க கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். கோடை சீசனில் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆகியவற்றை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தரை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரியைத் தாண்டி வெயில் சுட்டெரிப்பதால் வார விடுமுறை நாளான நேற்றும், இன்றும் சுற்றுலாப் பயணிகள் மோயர்சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, படகுக் குழாம் போன்ற பகுதிகளில் அதிகமாக குவிந்தனர்.

    தற்போது கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. மேலும் வரும் காலங்களில் இந்த இதமான சூழலை அனுபவிக்க கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வாகன நிறுத்துமிடங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும் எனவும் கோடை விடுமுறை முடிந்த பின்பும் இன்னும் தாங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாகவும், இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×