search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி"

    திருப்பத்தூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியரை அவரது கள்ளக்காதலன் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சுதா (வயது 32). அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளராக உள்ளார். 7 வயதில் 1 மகள் உள்ளார்.

    கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பசுபதி இறந்துவிட்டார். இதனையடுத்து சுதா அவரது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று அங்குள்ள பாம்பாறு ஆற்றில் உள்ள ஒரு பள்ளத்தில் சுதா தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதனால் அவரது உடல் முழுவதும் ரத்தம் காணப்பட்டது. இதனை கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் குரிசிலாபட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சதீஷ் (32) என்பவருக்கும் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது.

    போலீசார் சதீசை பிடித்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். இதில் சுதாவை சதீஷ் கொலை செய்தது தெரியவந்தது.

    கணவனை இழந்து தனிமையில் இருந்த சுதாவுக்கும் சதீசுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. சதீஷ் சுதாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு சுதாவின் வீட்டுக்கு சதீஷ் வந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவர் வேகமாக வெளியேறி சென்றார்.

    அவர் யார் என்பது குறித்து சதீஷ் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    சுதாவின் நடத்தையில் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு சுதாவை அவரது மோட்டார் சைக்கிளில் பாம்பாற்றுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுதாவின் தலையில் கல்லை போட்டு சதீஷ் கொலை செய்துள்ளார்.

    அவரது உடலை ஆற்றில் உள்ள பள்ளத்தில் தூக்கிபோட்டு விட்டு சேலையால் உடலை மூடிய சதீஷ் அங்கிருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டுவிட்டு சதீஷ் வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.

    இந்த தகவல்களை சேகரித்த போலீசார் சதீசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி செவிலியர்களுக்கு மதிப்பூதியத்தை உயர்த்தி பிரதமர் மோடி அறிவித்தார். #Modi #Incentives #Asha #Anganwadi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள மத்திய சுகாதார பணியாளர்களான ஆஷா, அங்கன்வாடி, ஏ.எம்.என். (துணை செவிலியர்கள்) ஊழியர்கள் ஒரு லட்சம் பேருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    ஆஷா பணியாளர்களின் வழக்கமான ஊக்கத்தொகை உயர்த்தப்படும். அதோடு ஆஷா பணியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பிரதமரின் இலவச காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதேபோல அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும் அதிகரிக்கப்படும்.

    அதன்படி இதுவரை மாதம் ரூ.3 ஆயிரம் பெற்றுவந்தவர்களுக்கு இனி ரூ.4,500 கிடைக் கும். அதேபோல மாதம் ரூ.2,200 பெற்றவர்களுக்கு இனி ரூ.3,500 கிடைக்கும். அங்கன்வாடி உதவியாளர்களின் மதிப்பூதியமும் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக உயர்த்தப்படும். இந்த உயர்வுகள் அடுத்த மாதம் முதல் அமல் படுத்தப்படும்.

    அதுமட்டுமின்றி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களில் ஐ.சி.டி.எஸ். அப்ளிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.250 முதல் ரூ.500 வரை அவர்களது செயல்திறனுக்கு ஏற்ப வழங்கப்படும்.

    ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார பயனாளிகள் தான் தேசத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலமில்லாத அஸ்திவாரத்தின் மீது வலுவான கட்டிடத்தை கட்டமுடியாது. அதேபோல தான் நாட்டின் குழந்தைகள் பலமில்லாதவர்களாக இருந்தால் நாட்டின் முன்னேற்றமும் குறையும்.

    3 கோடி குழந்தைகள் மற்றும் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தரமான, சுகாதாரமான மகப்பேறு மற்றும் போதுமான ஊட்டச்சத்து ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    ஒவ்வொரு மகப்பேறுக்கு பின்னரும் ஆஷா பணியாளர்கள் அந்த குழந்தைகளை 42 நாட்களில் 6 முறை நேரில் பார்த்துவந்தனர். இனி 15 மாதங்களில் 11 முறை அவர்கள் குழந்தைகளை நேரில் சென்று கவனிப்பார்கள். குழந்தைகளின் வாழ்க்கையில் முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியம். உங்கள் அர்ப்பணிப்பு சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #Modi #Incentives #Asha #Anganwadi 
    ×