என் மலர்
நீங்கள் தேடியது "slug 168087"
- தினமும் பலருடன் செல்போனில் பேசியதால் கழுத்தை நெரித்து கொன்றேன்
- ஏளனமாக பேசி கிண்டல் செய்வார்
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி பெனிஸ்டர் (வயது 30). இவரது மனைவி பத்மா (30).
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை வீட்டில் பத்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து பத்மாவின் தந்தை வடசேரி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீ சார் பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பத்மா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பத்மாவின் கணவர் ஆண்டனி பெனிஸ்டர் வடசேரி போலீசில் சரண் அடைந்தார். மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆண்டனி பெனிஸ்டரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆண்டனி பெனிஸ்டர் கூறியதாவது:-
நானும் பத்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எங்களுக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரண மாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். இதையடுத்து கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு பிரிந்து செல்லலாம் அதுவரை ஒரே வீட்டில் வசிக்கலாம் என்று கூறி ஒரே வீட்டில் வசித்து வந்தோம் .
இந்தநிலையில் நேற்று காலை எனது மகனும் மகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். வீட்டில் இருந்த எனது மனைவி பத்மா தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் நடத்தை யில் எனக்கு சந்தேகம் இருந்ததால் இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவர் நமக்கு தான் விவாகரத்து ஆகப் போகிறது, நான் யாருடன் பேசினால் உனக்கு என்ன என்று என்னிடம் கூறினார்.இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது கழுத்தை நெரித்தேன். இதில் பத்மா மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்று விட்டேன். வீட்டிற்கு வந்த போதுதான் எனது மனைவி இறந்திருக்கும் தகவல் தெரிய வந்தது.உடனே நான் போலீசில் சரணடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஆண்டனி பெனிஸ்டரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுவன் ஒருவன் ஒரு மறைவுக்கு பின்னால் அமர்ந்து மது பாட்டில்களை விற்கும் வீடியோ காட்சி நேற்று பரவியது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை,போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்தூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஒரு மறைவுக்கு பின்னால் அமர்ந்து மது பாட்டில்களை விற்கும் வீடியோ காட்சி நேற்று பரவியது.
இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர்.அப்போது அந்த சிறுவனின் வீடு பூட்டியிருந்தது. அக்கிராமத்தில் விசாரித்த போது மது விற்ற சிறுவன் 7-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.
மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த சிறுவனின் தந்தை இறந்து விட்டார். எனவே தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறான்.இதையடுத்து அந்த சிறுவனின் தாய் மது விற்று வந்துள்ளார்.
சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. தாய் கைதான நிலையில் அந்த சிறுவன் மது விற்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த வீடியோ வெளியானதால் சிறுவனின் குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள தங்களது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அவர்கள் ஊருக்கு திரும்பியதும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
11 வயது சிறுவன் மது விற்ற வீடியோ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
- 10 பேர் மட்டுமே ஜெப கூட்டம் நடத்துவதற்கு அனுமதி
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் வீரபாகுபதியில் அனுமதி இன்றி வீட்டில் ஜெபக்கூட்டம் நடந்துள்ளது. இதனை பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கண்டித்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்து முன்னணி ராஜாக்க மங்கலம் ஒன்றிய பொதுச் செயலாளர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து புத்தளம் ஜங்ஷனில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்திற்கு ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஒன்றிய பொதுச் செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் வக்கீல் ஜெகநாதன், பொரு ளாளர் முத்துராமன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான அய்யப்பன், ராஜக்கா மங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தர்மலிங்கம் என்ற உடையார், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா தெற்கு மாநகர பொதுச் செயலாளருமான வீரசூரபெருமாள், ஓ.பி.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தங்கம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், வீரபாகுபதி ஊர் பொதுமக்கள் திரண்டனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதனால் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் விரைந்து வந்தார். அவர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்சினைக்குரிய வீட்டில் எக்காரணம் கொண்டும் ஜெபக்கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம். இதனை மீறி ஜெபக்கூட்டம் நடத்த முயற்சித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் உறுதி கூறினார்கள்.
இதனை ஏற்று போரா ட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வீரபாகுபதியில் உள்ள அந்த வீட்டில் வைத்து ஜெபக்கூட்டம் நடத்திவிட கூடாது என்பதற்காக கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, ஏ .டி .எஸ்.பி. ராஜேந்திரன், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்
அப்போது ஜெபக்கூட்டம் நடத்து வதற்காக 40-க்கும் மேற் பட்டோர் வந்திருந்தனர். அப்போது தகுந்த அனுமதி இருந்தால் மட்டுமே ஜெபக்கூட்டம் நடத்த முடியும் என்று அவர்களிடம் கூறினர்.
உடனே அவர்கள் டி.எஸ்.பி.யிடம் நாங்கள் 10 நிமிடம் ஜெப கூட்டம் மட்டும் நடத்திவிட்டு செல்கி றோம் என்றனர். பின்னர் டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி. தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி 10 பேர் மட்டுமே ஜெப கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் பேரில் காலை 9.10 முதல் 9.20 வரை 10 பேர் ஜெபம் செய்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்பட் டது.
- கீழவாசலை சேர்ந்த முகமது உஸ்மான் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
வல்லம்:
தஞ்சை பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாணவியின் தந்தை குடித்துவிட்டு வந்துள்ளார்.
பின்னர் மாணவியின் தாயை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் தாய் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் தஞ்சை கீழவாசலை சேர்ந்த முகமது உஸ்மான் (வயது 39) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முகமது உஸ்மான் கடந்த 4-ம் தேதி மாணவியிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது பற்றி அந்த மாணவி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது உஸ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒருவரை ஒருவர் சரமாரியாக கத்தியில் மாறி மாறி குத்திக் கொள்கின்றனர்.
- இந்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.
திருவாரூர்:
திருவாரூர் விஜயபுரம் பகுதியில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை பல வருடங்களாகஇயங்கி வருகிறது.
இந்த மருத்துவ மனையில் திருவாரூர் புது தெருவைச் சேர்ந்த 38 வயதான சுரேஷ் என்பவர் தனது மனைவி புவனேஷ்வரியை பிரசவத்தி ற்காக அனுமதித்துள்ளார்.
அவருக்கு அங்கு நேற்று இரவு குழந்தை பிறந்து சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக சுரேஷ் அங்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் திருவாரூர் புதுத் தேர்வை சேர்ந்த 55 வயதான கண்ணன் என்பவர் அந்த மருத்துவமனை வளாகத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வருகிறார்.
அவர் வண்டியை நிறுத்துவதற்குள் சுரேஷ் அவரை வண்டியுடன் சேர்த்து தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்துகிறார்.
இதில் நிலைத்தடுமாறிய கண்ணன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை குத்துவதற்காக முயன்றார்.
இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கட்டி புரண்டு கத்தியால் மாறி மாறி குத்தி கொள்கின்றனர்.
இந்த காட்சிகள் மருத்துவம னையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மருத்துவமனை அரசு தாய் சேய் நல மருத்துவமனை என்பதால் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் இருந்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையின் வாயிற் கதவை பூட்டியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் என்பவரின் மாமியாருக்கும் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக இருவரும் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டதாககவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அருப்புக்கோட்டை நகராட்சியில் பா.ஜ.க. பிரமுகர் மீதான குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
தி.மு.க. கவுன்சிலர் மணி முருகன்:- ெரயில்வே பீடர் ரோட்டில் புதிது புதிதாக தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. இதனால் அந்த பகுதியில் அதிகாலை முதலே மதுபானங்கள் விற்பனை நடப்பதாகவும், மது பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு அந்த சாலை யிலேயே போட்டு விட்டு சென்று விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எஸ்.பி.கே. பள்ளி செல்லும் பாதையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து கறிக்கடை நடத்தி வருகிறார். அவர் குப்பைகளை ரோட்டில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார். இதுபற்றி கேட்டால், நான் பி.ஜே.பி.க்காரன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்.
இதற்கு பா.ஜனதா கவுன்சிலர் முருகானந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜனதா கட்சியினரை அவன், இவன் என்று ஒருமையில் கூற வேண்டாம். உங்கள் குறைகளை கூறுங்கள். ஒருமையில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், 2 கவுன்சிலர்களையும் அமைதியாக இருக்கும்படி கூறினார்.
பின்பு கவுன்சிலர்கள் கூறிய கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகரசபை தலைவர் உறுதி அளித்தார்.
- சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
- இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் எஸ்.ஆர்.சி. நகர் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காரில் வந்தவர் அவரை பார்த்து போ என சொன்னதாகவும், அதற்கு ரோட்டில் சென்றவர் தகாத வார்த்தையால் பேசியதாகவும், இதனால் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது.
இதற்குள் ரோட்டில் நடந்து சென்றவர் தரப்பில் இருந்து வந்த நபர்கள், காரில் வந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து காரில் வந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு திரண்டனர். மோதல் ஏற்படும் சூழ்நிலையில் அங்கு வந்த பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து கலைந்து போக சொன்னார்கள். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அந்தப் பகுதிக்கு நேரில் வந்தார் அப்போது அவரிடம் ஒரு தரப்பினர், எதிர்த் தரப்பினர்,சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களால் சமூகவிரோதச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகவும், தட்டி கேட்பவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதன் பின்னர் இரு தரப்பினரும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- அங்கன்வாடி ஊழியர்களும், பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
- போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 20,30 வது வார்டு காமராஜர் நகர் 1வது வீதியில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது .இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பால்வாடி பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியை திறக்க வந்தபோது கட்டடத்தில் இருந்து பாம்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது .
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளியில் விட்டு செல்வதற்காக வந்திருந்த பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து உடனடியாக வடக்கு காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் . அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் காட்சி அளிப்பதால் கட்டிடத்திற்குள் ஏராளமான பூரான் ,பல்லி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அவ்வப்போது மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச்சுவரை யாரோ சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணலை கொட்டி வைத்திருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.
- அனுமதி இன்றி சிலர் பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள சுவரை உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணல்களை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட முருகேசன் நகரில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ரூ.44 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவை அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச்சுவரை யாரோ சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணலை கொட்டி வைத்திருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்பொழுது அனுமதி இன்றி சிலர் பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள சுவரை உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணல்களை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.
மாநகராட்சி அதிகாரிகள் வந்ததும் அந்த பகுதி மக்கள் சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் அதிமுக வீரப்பன் சத்திரம் பகுதி செயலாளர் கேசவமூர்த்தி,வார்டு செயலாளர் செல்வராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.
அவர்கள் பூங்கா சுவரை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,
பூங்காவின் சுற்று சுவரை அனுமதியின்றி சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக அங்கு குழிகள் தோண்டி மணலை நிரப்பியுள்ளனர்.
இது சம்பந்தமாக மாநகராட்சி சார்பில் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.
- சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
- குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கேரளாவில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் தடம் உள்ளது. மேலும் மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில்களும் இந்த வழியாக சென்று வருகின்றன.
குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களை இணைக்கும் ரெயில் பாதை என்பதால் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் வந்து, செல்கின்றன.
ெரயில் தடமாற்றி தண்டவாளத்தில்...
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள முள்ளிசெட்டிபட்டி இடையே ரெயில் தடம் மாற்றியில் இடையே கற்களை வைத்துள்ளனர். தொடர்ந்து மற்றொரு தண்டவளத்தில் இரும்பு ராடுகளை எடுத்து தண்டவாளத்தின் குறுக்கே வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து அவ்வழி வந்த உள்ளூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டு ரெயில் நிலையத்திலிருந்த பாயிண்ட் மேன் அருண் என்பவரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற பாயிண்ட் மேன் அருண் கற்களையும் இரும்புத் ராடையும் அப்புறப்படுத்தினார்.
இதில் தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் அகற்ற முடியாத அளவுக்கு வைத்திருந்தால் அவற்றை அகற்ற சிரமம் ஏற்பட்டது. கடின முயற்சிக்கு பிறகு அந்த கற்கள் முழுவதும் அங்கிருந்து அகற்றப்பட்டது.
கற்கள் மற்றும் இரும்பு ராடு வைத்த சமயத்தில் அந்த வழியாக ரெயில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில்களை தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் வைத்திருந்ததால் ரெயிலை கவிழ்க்க மிகப்பெரிய சதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தண்டவாளம் நடுவே கல் மற்றும் இரும்பு ராடுகளை வைத்த மர்ம கும்பல் யார் ? என கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் எடுத்துள்ளனர். அவர்கள் தண்டவாளம் ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சம்பத்தை அடுத்து சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹேதா, துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரும் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.
உள்ளூர் பகுதியை சேர்ந்த நபர் சரியான நேரத்தில் தகவல் தெரிவித்ததால் அவருக்கு பொதுமக்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள், போலீசார் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- பர்கூர்-கர்நாடகா செல்லும் பிரதான சாலை பகுதியில் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் ஒற்றை யானை சென்றது.
- இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலை பகுதிகளில் யானை, மான், கரடி செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது ஒற்றை யானை ஊருக்குள் பூகுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பர்கூர்-கர்நாடகா செல்லும் பிரதான சாலை பகுதியில் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் ஒற்றை யானை சென்றது.
இதனால் சாலையில் செல்லக்கூடிய இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஒட்டிகள் வாகன த்தை ஓரமாக நிறுத்தினர். சில வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் யானையை படம் பிடித்தனர்.
சுமார் அரை மணி நேரம் சாலையில் வலம் வந்த ஒற்றை யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் பர்கூர் போலீஸ் நிலையத்தில் பின்புற மதில் சுவற்றின் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- சகோதரர் மகளை அவதூறாக பேசியதால் நண்பரை தாக்கி கொலை செய்தேன்
- திருவட்டார் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.
இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்பு பிஸ்வாஷ் (வயது 28), அனில் பார்மன் (22) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் வேலை பார்த்து வந்தனர். இதற்காக 5 பேரும் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி வசித்து வருகின்றனர்.
நேற்று பணிமுடிந்து அறைக்கு வந்த 5 பேரும் ஒன்றாக மது அருந்தி உள்ள னர். அப்போது சோம்பு பிஸ்வாஷ், அனில்பார்மன் இடையே தகராறு ஏற் பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அனில்பார்மன் பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதில் சோம்பு பிஸ்வாஷ் பரிதாபமாக இறந்தார்.
கொலை குறித்த தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சோம்பு பிஸ்வாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உறவினர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து வர 3 நாட்கள் ஆகலாம் என்பதால் பிரேத பரி சோதனைக்கு பிறகு சோம்பு பிஸ்வாஷ் உடல் அங்கேயே வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தப்பி ஒடிய அனில் பார்மனை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான கார ணம் குறித்து அவர் போலீ சாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், மது அருந்திக் கொண்டிருக்கும் போது சோம்பு பிஸ்வாஷ் குடி போதையில், எனது சகோதரர் மகள் பற்றி அவதூறாக பேசினார். இதனை நான் கண்டித்தேன்.
ஆனால் அவர் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினேன். இதில் சோம்பு பிஸ்வாஷ் இறந்து விட்டார் என குறிப்பிட்டு உள்ளார்.