search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168087"

    • கடலூர் மஞ்சக்குப்பம் பத்மாபதி நகரை சேர்ந்தவர் ரகமதுன்னிசா (55). இவரது கணவர் அப்துல் மஜீத் (60). சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
    • மர்ம நபர்கள் 3 ேபர் கையில் பொருட்களுடன் வெளியில் வந்தனர். பின்னர் தங்களிடம் இருந்த கத்தியை காண்பித்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பத்மாபதி நகரை சேர்ந்தவர் ரகமதுன்னிசா (55). இவரது கணவர் அப்துல் மஜீத் (60). சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் அஸ்லாம் துபாய் நாட்டில் வேலை செய்து வருகிறார்.


    மூத்த மகள் ஷப்பாவுக்கு திருமணமாகி தனது கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். அகமது நிஷா தனது இளைய மகள் அசினாவுடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் துபாயில் இருக்கும் மூத்த மகள் ஷப்பாவின் பிரசவத்திற்காக இருவரும் நேற்று இரவு விமானம் மூலம துபாய் சென்றுள்ளனர்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று ஒரு அறையில் இருந்த பொருட்களை திருடி உள்ளனர். மேலும் மற்றொரு அறையில் இருந்த பூட்டை உடைக்கும் போது அதனுடைய சத்தம் வெளியில் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தை சேர்ந்த 2 பெண்கள் ரகமதுன்னிசா வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் முன்பக்க கதவு உடைத்து மர்ம நபர்கள் உள்ளே இருந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் திருடன் திருடன் என கூச்சலிட்டனர். அப்போது உள்ளே இருந்த மர்ம நபர்கள் 3 ேபர் கையில் பொருட்களுடன் வெளியில் வந்தனர். பின்னர் தங்களிடம் இருந்த கத்தியை காண்பித்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் சத்தம் போடாமல் அமைதியாக இருந்தனர். இதனை தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பொருட்களை திருடிக் கொண்டு எந்த வித பயமும் இன்றி ஹாயாக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த அனைவரும் வெளிநாட்டில் உள்ளதால் திருடு போன பொருட்கள் எத்தனை லட்சம் மதிப்பிலானது, என்னென்ன பொருட்கள் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு என்னதான் தீர்வு என பொதுமக்கள் பீதியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கு நிரந்தரமாக தற்போது தீர்வு இல்லை என வெட்ட வெளிச்சமாக தெரிய வருகின்றது. மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வராமலும், வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து சென்றால் மட்டுமே கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    முன்பெல்லாம் ஒரு பகுதியில் ஒரு திருட்டு ஏற்பட்டால் போலீசார் பழைய குற்றவாளி மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு குறைந்தபட்ச நாட்களில் குற்றவாளிகளை பிடித்து உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றங்களை தடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். தற்போது குற்றவாளிகளை பிடித்தவுடன் விசாரணை செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்காமல் குற்றவாளிகளிடம் உரிய முறையில் விசாரணை நடத்த முடியாததால் போலீசாரால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் எப்படி குற்றவாளிகளை விசாரித்து பொருட்களை கைப்பற்றி இனி வருங்காலங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் எப்படி தடுப்பது?மேலும் இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் உள்ளதால் ஒவ்வொரு போலீசாரும் மிகுந்த அவதியுடன் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே உரிய முறையில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும். இதனை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றால் திருடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பாலான வீடு, கடைகள், கோவில்கள் போன்றவற்றில் கொள்ளை சம்பவம் நடந்து அனைவரும் வீதியில் நிற்கக்கூடிய நிலை ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆகையால் போலீஸ் உயர் அதிகாரிகள் இதற்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நிம்மதியாக வெளியில் சென்று வருவதற்கும் தயக்கம் இன்றி வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம்.
    • 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்தனர்.

    மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனர்.

    தொடர்ந்து நாகை கடைத்தெருவில் இருவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு இருப்பதை அறிந்த பா.ஜ.க.வினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் நகர பொறுப்பாளர் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை இரவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் சுப்ரியா அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    அப்போது காவல் நிலையம் முன்பு 50 -க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க.வினரை சமாதானம் செய்து அப்புறப்படுத்திய போலீசார் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி சென்று நாகை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

    • தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது
    • எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து இது தொடர்பாக, பாலவிடுதி போலீசில் புகார் அளித்தேன்

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை முதியவர் ஒருவர் வந்தார். கலெக்டர் அலுவலக படிக்கட்டுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த அவர், திடீரென தான் பையில் ம றைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் அங்கு பணிக்கு வந்து கொண்டிருந்த ஊழியர்கள் அவரது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவரை ஆசுவாசப்படுத்தி விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் பாலவிடுதி அருகே உள்ள தூளிபட்டியை சேர்ந்த காளியப்பன் (வயது 60) என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து காளியப்பன் கூறும் போது, சிலர் நபர்களின் துண்டுதலின் பேரில், என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். எங்கள் பகுதியில் உள்ள கோவிலில், மகனுக்கு திருமணம் நடத்தினேன். எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து இது தொடர்பாக, பாலவிடுதி போலீசில் புகார் அளித்தேன். போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன், என்னை தாக்கியதில் படுகாயமடைந்தேன்.

    சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாலவிடுதி போலீசார், நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால், பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனால் தான் தீக்குளிக்க முயன்றேன் இவ்வாறு அவர் கூறினார். பின்னர் காளியப்பனை, தான்தோன்றி மலை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.




    • திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தலைவர்-துணைத்தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
    • ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கீழக்கரை

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியத்தலைவர் புல்லாணி தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி:- தமிழக அரசு தற்போது பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் வர்ணம் பூசுதல், மராமத்து உள்பட 80 பணிகள் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டது.

    ஆனால் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. சேர்மன் எதிர் கட்சி சேர்மன்போல் செயல்படுகிறார். "தி.மு.க. சேர்மனா அல்லது எதிர்கட்சி சேர்மனா" என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குழப்பம் ஏற்படுத்தி பள்ளிப் பணியை நிறுத்திவிட்டார். இந்த திட்டத்தை திசை திருப்புவதற்கு காரணம் என்ன?

    தலைவர்:- நான் எந்த சேர்மன் என்று மக்களுக்கு தெரியும்.

    துணைத்தலைவர் சிவ லிங்கம்:- திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மிகவும் மோசமாக செயல்படுகிறது. இங்கு தி.மு.க. சேர்மனா? அல்லது அ.தி.மு.க.சேர்மனா? என்பது குழப்பமாக உள்ளது எந்த கட்சி சேர்மன் என்றே தெரியவில்லை?

    கவுன்சிலர் பைரோஸ் கான்:- டெண்டர் வைத்து ரத்து செய்ததற்கான காரணத்தை முதலில் கூறுங்கள். பள்ளி வர்ணம் பூசுதல் குறித்து கடந்த 4 மாதங்களுக்கு மேலாகவே உரிய நடவடிக்கை மேற் கொண்ட நிலையில் தற்போது நிறுத்தியது ஏன்?

    கவுன்சிலர் பைரோஸ் கான்:- என்னை ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்த மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இங்கு நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளால் நான் கடந்த 3 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை.

    துணைத்தலைவர் சிவ லிங்கம்:- எதற்கெடுத்தா லும் தலைவர் தடை போடக்கூடாது. நாங்கள் கேட்பது உங்கள் சொந்த நிதியை அல்ல, அரசு நிதியைத்தான் திட்ட பணி களுக்கு ஒதுக்கீடு செய்ய கேட்கிறோம்.

    இதைத்தொடர்ந்து தலை வர், துணைத்தலைவரை ஒருமையில் பேசியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே துணைத்தலைவர் அவரது இருக்கை விட்டு எழுந்து பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய ஒன்றிய கவுன்சில் கூட்டம் 2½ மணிநேரம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.79 லட்சம் மதிப்பில் 61 பணிகளுக்கு வருகிற 28-ந் தேதி டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தொடங்கியது முதல் கடைசி வரை தொடர்ந்து தலைவருக்கு எதிராக விவாதங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தி.மு.க.கவுன்சிலர்கள்- தி.மு.க.சேர்மன் இடையே பணிகள் குறித்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்த நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு தேவையான பணிகளை செய்ய வற்புறுத்தாமல் கூட்டம் முடியும் வரை மவுனம் காத்தது புரியாத புதிராக இருந்தது.

    • நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகள் ஏராளமாக செயல்படுகிறது.

    இதற்கிடையே நகரப்பேருந்து நிலையத்தின் கடைகளை இடித்து அகற்றிவிட்டு அங்கு வாரச் சந்தை கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    இதற்காக அங்கு கடை வைத்திருப்பவர்களிடம் கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அப்பகுதி பொதுமக்கள் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ளே பேருந்துகள் வந்து செல்லும் என்பதையும், பேருந்துகள் இங்கு நிற்கும் என்பதையும் நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு நகராட்சி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது.

    நகர பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    நள்ளிரவு அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல் நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 60). இவர்களது மகள், மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்

    இந்நிலையில் வழக்கம்போல் சின்ன சாமி, செல்லமாள் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து சின்னசாமி மற்றும் செல்லமாளை தாக்கி அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி அருகே ெரயில்வே கிராசிங் கேட்டை உடைத்துக் கொண்டு பாய்ந்த லோடு ஆட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது
    • உடனடியாக ெரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த வழியாக வரும் ெரயில்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டன

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே எலமனூரில் ெரயில் நிலையம் உள்ளது. இங்கு கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எலமனுார் கிராமத்துக்கு செல்ல லெவல் கிராசிங் உள்ளது. நேற்றிரவு 7 மணியளவில் ெரயில் வருவதற்கு சற்று முன் லெவல் கிராசிங்கில் உள்ள கேட்டை பணியில் இருந்த ெரயில்வே ஊழியர் மூடியுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ ஒன்று மூடிய கேட்டில் மோதியது. இதில் அந்த ஆட்டோ கேட்டை உடைத்து கொண்டு தண்டவாள பகுதிக்கு பாய்ந்தது. இதைக் கண்டு ெரயில்வே ஊழியர்கள் கடும் அதிர்ச்சிஅடைந்தனர்.உடனடியாக ெரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த வழியாக வரும் ெரயில்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டன. அதிர்ஷ்ட வசமாக அந்த சமயத்தில் ெரயில் வராதததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பின்னர் தண்டவாள பகுதியில் இருந்து விபத்துக்குள்ளான ஆட்டோ அப்புறப்படுத்தப்பட்டு ெரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ெரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டதில் லோடு ஆட்டோ தகுதி சான்று இல்லாமல் இருப்பதும், ஆட்டோ ஓட்டிய நபருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




    • அப்பா அடித்ததால்,மனமுடைந்த இவர் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார்.
    • தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமம் வடக்கு தெரு, காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது 2-வது மகன் கபில் தேவ் (வயது20).சம்பவத்தன்று குடிபோ தையில் தந்தை- மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி, கபில்தே வை அடித்தார்.

    இதனால் மனமுடைந்த கபில்தேவ் இரவு 12.30 மணி அளவில் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார். இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திட்டக்குடி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மேலே ஏறி திட்டக்குடி தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்இரவு 1 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • மது போதையில் உறவுக்கார மாணவன் மணி பாலனை (17) அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளனர்.
    • இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியை சுழட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

    கடலூர்:

    ண்ருட்டி, பிப்.11-பண்ருட்டி அருகே புதுப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு கிராமத்தில்நேற்று மாலை இரண்டு சக்கர வாகனத்தில் குடிபோதையில்கத்தியை சுழட்டிக்கொண்டு சென்ற வர்களை பொதுமக்கள் பிடித்து புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து புதுப்பே ட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அந்தநபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்ததி வான் (வயது 23)முருகன் ( 23) என தெரிய வந்தது.

    இவர்கள் சமையல் வேலை செய்பவர்கள். மடப்பட்டில் சமையல் வேலை முடித்துவிட்டுமது போதையில் சிறு கிராமத்தில்உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும்தனது உறவுக்கார மாணவன் மணி பாலனை (17) அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியை சுழட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து சிறு கிராமத்தை சேர்ந்தமகேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரில்புதுப்பேட்டை போலீசார் திவான், முருகன் மீது வழக்கு பதிந்து 2பேரையும் கைது செய்தனர். மாணவன் மணி பாலனுக்கு அறிவுரைக் கூறி எச்சரித்துபெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

    • குடிபோதையில் இருந்த 2 பேர் அரசு பஸ்சை மறித்து கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
    • 2 பேரும் இருசப்பனை கல்லால் தாக்கி கீழே தள்ளி காதை கடித்துள்ளனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆண்டி கரையை சேர்ந்தவர் இருசப்பன் (வயது 36). மேட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு காவல் பணிக்காக வீட்டில் இருந்து மேட்டார் சைக்கிளில் மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். மங்கனூர் காலனி அருகே சென்றபோது குடிபோதையில் இருந்த 2 பேர் அரசு பஸ்சை மறித்து கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் பஸ்ஸில் இருந்த பெண்கள், குழந்தைகள், அச்சத்துடன் இருந்தனர். இதனைப் பார்த்த போலீஸ்காரர் இருசப்பன் அந்த நபர்களை தட்டி கேட்டு உள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் இருசப்பனை கல்லால் தாக்கி கீழே தள்ளி காதை கடித்துள்ளனர். இதனால் முகத்திலும், காதிலும் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து இருசப்பன் கருமலை கூடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் போலீஸ்காரரை தாக்கியது தானம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் முத்துராஜ் (45), சிவசக்தி (53), என்பது தெரியவந்தது. இவர்கள் குடிபோதையில் தங்களை கண்டு மக்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக அரசு பஸ்சை நிறுத்தி தகராறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிவசக்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடி வருகிறார்கள்.

    • இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
    • இன்று காலையில்,மணமகனை காணவில்லை. .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டத   அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று மாலை வந்தடைந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கிவிட்டனர் .

    இன்று காலையில் வெகுநேரமாகியும் ரூமை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து ரூமுக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மருநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை உருவாக்கியது. 

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
    • விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டுமென மனுக்கள் வழங்கினார்,

    கடலூர்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது குஞ்சிதபாதம் - என்.எல்.சி. சார்பாக விருத்தாச்சலம்,புவனகிரி,ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 ஏரிகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்   த்துறையூர் காந்தி: -அரசூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மலட்டாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் அதே பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் வீராணம் ஏரி விவசாயிகள் சங்கத் தலைவர் பாலு: - மத்திய கனிம வள நிறுவனம் சார்பில் வீராணம் ஏரியை சுற்றியும் 2017 முதல் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் 2020 பாதுகாத்த வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆய்வு தொடரப்படுவதால் இந்த ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நிலையில் என்.எல்.சி.க்கு வீடு , நிலம் கொடுத்த பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் திடீரென்று கூட்டத்தில் திரண்டு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது- 2000 ஆம் ஆண்டு முதல் நிலம் வீடு எடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு பதில் ரு 1, 09, 500 கொடுத்ததை ஏற்க முடியாது. அத்தொகையை வாங்கிய அனைவருக்கும் நிரந்தரவேலை கொடுக்க வேண்டும்.வேலை வேண்டாம் என்பவருகளுக்கு இன்றைய வாழ்வாதார தொகை கொடுக்க வேண்டும்.  2000-ம் ஆண்டு முதல் நிலம் கொடுத்த அனைவருக்கும் 01.01.2014 முதல் கொடுக்க கூடிய இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும். நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்பை என்எல்சி செலவில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் தன்னிச்சையாக செயல்படாமல் விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர். இதனை தொடர்ந்து விவசாய குறை கேட்பு கூட்டம் நடந்தது.

    ×