search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168147"

    • கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார்.
    • பொதுமக்களுக்கு எளிதில் தகவல் கிடைத்து விடுவதால் ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய நிலை இல்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவப்பநாயக்கனூர் ரேஷன் கடையின் விற்பனையாளராக மாற்றுத்திறனாளி சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வழங்கப்பட உள்ள பொருட்கள் குறித்த தகவலை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் குருவப்ப நாயக்கனூர் ரேஷன் என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப்பை நிறுவி உள்ளார்.

    இதன் மூலமாக வார்டு வாரியாக பொருட்கள் வழங்கும் தகவல், என்னென்ன பொருட்கள் போடப்படுகிறது. கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு எளிதில் தகவல் கிடைத்து விடுவதால் ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய நிலை இல்லை.

    இதன் காரணமாக முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கூலித்தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு, காலநேர விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் சரவணனுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதே போன்று உடுமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வாட்ஸ்-அப் குருப்பை உருவாக்கி தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால் பொதுமக்களுக்கும் ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    • வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வந்த சூப்பர் அம்சம் தற்போது ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படுகிறது.
    • புது அம்சம் கொணஅடு பயனர்கள் தங்களுக்கு முக்கியமான தகவல்களை வாட்ஸ்அப் செயலியிலேயே குறித்து வைத்துக் கொள்ளலாம்.

    வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்டு வந்த மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) அம்சம் தற்போது வெளியாகிறது. புதிய 1:1 அம்சம் கொண்டு உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக் கொள்ள முடியும். இந்த அம்சம் மூலம் குறிப்புகளை உங்களுக்கே அனுப்பிக் கொள்வதோடு, நினைவூட்டிகள் மற்றும் மிக முக்கிய தகவல்களையும் அனுப்பிக் கொள்ளலாம்.

    இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பணி சார்ந்த விவரங்களை குறித்துக் கொள்ள உதவும். இந்த அம்சத்தில் ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியல், ரிமைண்டர் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்ட போது, வாட்ஸ்அப் உங்களின் போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்வதை குறிக்கும் வகையில் தனி கேப்ஷனை வழங்கியது.

    மேலும் சிலருக்கு தங்களின் சாட் பாக்ஸ்-இல் சொந்த மொபைல் நம்பர் சிறிது காலத்திற்கு தெரிந்தது. மல்டி டிவைஸ் வசதி இருப்பதால் உங்களது மொபைல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் போது, அந்த மெசேஜ் நீங்கள் சின்க் செய்திருக்கும் மற்ற சாதனங்களிலும் காண்பிக்கப்படும்.

    புதிய மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சத்தை இயக்குவது எப்படி?

    வாட்ஸ்அப்-ஐ திறக்கவும்

    புதிய சாட்-ஐ உருவாக்க வேண்டும்

    பட்டியலில் உங்களின் காண்டாக்ட் முதலில் காண்பிக்கப்படும்

    நம்பர் மீது க்ளிக் செய்து மெசேஜ் செய்ய துவங்கலாம்

    வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். இதுதவிர மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி, வாய்ஸ் ஸ்டேட்டஸ் அப்டேட் என ஏராளமான புது அம்சங்கள் வாட்ஸ்அப்-இல் வழங்கப்பட இருக்கிறது.

    • உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது.
    • தற்போது வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    வாட்ஸ்அப் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக உள்ளது. தினந்தோரும் கோடிக்கணக்கானோர் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் முக்கிய பாலமாக திகழ்கிறது. இத்தனை பிரபலமாக இருக்கும் வாட்ஸ்அப் செயலி அதே அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறது.

    இந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு சுமார் 500 மில்லியன் பயனர் விவரங்கள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஒருவர் சுமார் 487 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர் விவரங்களை ஹேக்கிங் கம்யுனிட்டியில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார் என சைபர்நியூஸ் தெரிவித்து இருக்கிறது.

    இதில் உலகம் முழுக்க 84 நாடுகளை சேரந்த பயனர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் 32 மில்லியன் பயனர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் துருக்கியை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர் விவரங்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் 7 ஆயிரம் டாலர்கள் எனும் விலைக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. லண்டன் டேட்டாபேஸ் விவரங்களின் விலை 2 ஆயிரத்து 500 டாலர்களும், ஜெர்மனி விவரங்களின் விலை 2 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் லீக் ஆகி இருக்கும் மொபைல் போன் நம்பர்களை கொண்டு ஏராளமான மோசடிகளை செய்ய முடியும் என்ற வாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

    • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் வழங்குவதற்கான சோதனைகள் அதன் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது.
    • சமீபத்தில் தான் வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருந்தது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது மெசேஜிங் செயலியில் ஏராளமான புது அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது அம்சங்கள் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் முன்பே பீட்டா வெர்ஷனில் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டு விடும். அந்த வகையில் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுபற்றிய தகவல்களை WABetaInfo வெளியிட்டு இருக்கிறது. இதில் புது அம்சம் எப்படி காட்சியளிக்கும் என்ற ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி பயனர்கள் அதிகபட்சம் 30 நொடிகள் கொண்ட வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பதிவிட முடியும் என தெரியவந்துள்ளது. மற்றவர்கள் திரையின் கீழ்புறம் வலதுபக்கமாக இருக்கும் மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்து வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியும்.

    இதுவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பாரில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது. தற்போது வாய்ஸ் ஸ்டேட்டஸ் இந்த பட்டியலில் புதிதாக இணைய இருக்கிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்கு மட்டுமே காண்பிக்கும். இதே போன்ற நிலையை புதிய வாய்ஸ் ஸ்டேட்டஸ்-இலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.21.5 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது. இது மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் சில அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இவை எப்போது செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Photo Courtesy: WABetaInfo

    • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் இருக்கிறது.
    • பயனர்களுக்கு தொடர்ந்து புதுப்பது அம்சங்களை வழங்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் "Polls" உருவாக்கும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் மட்டும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. வரும் நாட்களில் வாட்ஸ்அப் வெப் தளத்திலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    முதற்கட்டமாக வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட் மற்றும் தனிநபர் உரையாடல்களில் Polls அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப் Polls-இல் கேட்கும் கேள்வியில் அதிகபட்சம் 12 பதில்களை ஆப்ஷனாக வழங்க முடியும். மேலும் ஒரே பதிலை இரு ஆப்ஷனாக வழங்க முற்பட்டால், வாட்ஸ்அப் அதனை எச்சரிக்கை செய்யும்.

    ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வாட்ஸ்அப் Polls பயன்படுத்துவது எப்படி?

    முதலில் உங்களின் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் வாட்ஸ்அப் செயலி அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின் தனிநபர் அல்லது க்ரூப் சாட் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஐஒஎஸ்-இல் வழக்கமாக குறுந்தகவல்களை டைப் செய்யும் இடத்தின் அருகில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டில் சாட் பாக்ஸ்-இன் அங்கமாக இருக்கும் "பேப்பர்-கிளிப்" ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

    ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு தளங்களிலும் மெனு ஆப்ஷன் திறக்கும். அந்த மெனுவின் இறுதியில் Polls ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். இனி Poll ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மற்றொரு மெனு திறக்கும். அதில் Poll கேள்வி மற்றும் பதில்களை சேர்க்கக் கோரும். இவ்வாறு செய்து முடித்ததும் அதனை அனுப்பலாம்.

    நீங்கள் Poll அனுப்பியவர்கள், அதற்கான பதிலை கிளிக் செய்ய முடியும். Poll-இன் இறுதியில் அதற்கு கிடைத்த பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு Poll-க்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தன. எந்த பதிலை அதிகம் பேர் தேர்வு செய்தனர் என்ற விவரங்களை பார்க்க முடியும்.

    • வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்களை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது.
    • இந்த அப்டேட்டில் கம்யுனிடிஸ், இன்-சாட் போல்ஸ் என புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் புதிய அம்சம் வரும் மாதங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்படும் என மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தஉ இருந்தார். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் அம்சம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்த அம்சம் வாட்ஸ்அப் க்ரூப்களை ஒருங்கிணைக்கும் புது வசதியை செயல்படுத்துகிறது.

    கம்யுனிடிஸ் அம்சத்தின் கீழ் பயனர்கள் பல்வேறு வாட்ஸ்அப் க்ரூப்களை ஒற்றை குடையின் கீழ் கொண்டுவர முடியும். கம்யுனிடிஸ் அம்சம் மூலம் வியாபாரங்கள் உரையாடும் போது மற்ற தளங்கள் வழங்குவதை விட அதிகளவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்க முடிவு செய்துள்ளது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் வாட்ஸ்அப்-இல் அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய கம்யுனிடிஸ் அம்சத்தை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது சாட்-இன் மேல்புறத்திலும், ஐஒஎஸ் பயனர்கள் சாட்-இன் கீழ்புறத்திலும் காண முடியும்.

    இங்கிருந்து ஏற்கனவே உள்ள க்ரூப்களை ஒரு கம்யுனிடியின் கீழ் ஒருங்கிணைக்க முடியும். இதுதவிர புது கம்யுனிடியையும் உருவாக்க முடியும்.

    கம்யுனிடியில் சேர்ந்த பின் பயனர்கள் க்ரூப்களின் இடையே தங்களுக்கு தேவையான விவரங்களை மிக எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். அட்மின்களும் மிக முக்கிய அப்டேட்களை கம்யுனிடியில் உள்ள அனைவருக்கும் அனுப்ப முடியும்.

    புதிய கம்யுனிடிஸ் அம்சம் தவிர இன்-சாட் போலிங் மற்றும் 32 நபர்களுடன் வீடியோ காலிங் வசதி, க்ரூப் பயனர்கள் எண்ணிக்கை 1024 உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எமோஜி ரியாக்‌ஷன், அதிக ஃபைல் ஷேரிங் மற்றும் அட்மின் ரிமுவல் போன்ற அம்சங்களை க்ரூப்களிலும் பயன்படுகத்த முடியும். இந்த வசதி கம்யுனிடி அம்சத்திற்கு பெருமளவு உதவியாக இருக்கும்.

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அம்சங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. வரும் மாதங்களில் உலகம் முழுக்க இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • வாட்ஸ்அப் பீட்டா செயலியில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் இரண்டு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 அப்டேட்டில் புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பயனர்கள் தங்களுக்கு தாங்காளாகவே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதுதவிர ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் எனும் புது வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த இரு அம்சங்களும் சோதனை முறையில் மிக சிறிய பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) - அம்சம் கொண்டு பயனர்கள் அவர்களின் சொந்த மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதற்கான வசதியை வாட்ஸ்அப் தனித்து காண்பிக்கிறது. சில பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வேறு விதமான சின்க் வசதியை வழங்கி இருக்கிறது. அதாவது அவர்களின் சொந்த நம்பருக்கு குறுந்தகவல் அனுப்பும் போது, இவை ஏற்கனவே லின்க் செய்யப்பட்ட சாதனங்களுடன் சின்க் செய்யப்பட்டு விடும்.

    ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் - க்ரூப் சாட்களுக்குள் க்ரூப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ப்ரோபைல் படத்தை வெளியிடுகிறது. இந்த வசதியை செயல்படுத்த முதலில் க்ரூப் ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஒரே பெயரில் க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றவர்களை ப்ரோபைல் போட்டோவை வைத்து எளிதில் கண்டறிந்து விட முடியும்.

    ஒருவேளை யாரேனும் ப்ரோபைல் போட்டோ வைக்காமல் இருந்தாலோ அல்லது பிரைவசி செட்டிங்கில் அதனை மறைத்து வைத்தாலோ, போட்டோ இல்லாமல் காலியாக உள்ள படம் செட் செய்யப்படும். இதில் குறிப்பிட்ட காண்டாக்டின் முதல் எழுத்து ப்ரோபைல் போட்டோவாக வைக்கப்படும்.

    தற்போது மெசேஜ் யுவர்செல்ஃப் மற்றும் ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் அம்சங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 வெர்ஷனிலும் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 22.23.0.70 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர் சோதனைக்கு பின் இரு அம்சங்களும் அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • புது அம்சம் பற்றிய விவரங்கள் செயலியின் பீட்டா வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன் 2.22.23.14/15 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புது அப்டேட்டில் மல்டி டிவைஸ்-க்கான லாக்-அவுட் ஸ்கிரீன், புகைப்படம், வீடியோ, ஜிஃப் மற்றும் டாக்யுமெண்ட் உள்ளிட்டவைகளை கேப்ஷனுடன் ஃபார்வேர்டு செய்யும் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    லாக்-அவுட் ஸ்கிரீனை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. புதிய லாக்-அவுட் பகுதி வாட்ஸ்அப்-இல் இருந்து லாக்-அவுட் செய்ததும் காண்பிக்கும். செயலியின் செட்டிங்ஸ்-இல் இருந்தபடி இரண்டாவது சாதனத்தில் இருந்து லாக்-அவுட் செய்ய முடியும்.

    வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- லின்க்டு டிவைசஸ் ஆப்ஷன் மூலம் பிரைமரி போனில் இருந்து டேப்லெட் செஷனை விட்டு வெளியேற முடியும். மேலும் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் ஆப்ஷன்களில் இருந்து நம்பரை மாற்றுவதற்கான "சேஞ்ச் நம்பர்" அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் புகைப்படம், ஜிஃப், வீடியோ உள்ளிட்டவைகளை ஃபார்வேர்டு செய்யும் போது அவற்றுக்கு தலைப்பிடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தரவுகளை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் தலைப்பை பார்க்க முடியும். இதே வசதி டாக்யுமெண்ட்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு அம்சங்களில் லாக்-அவுட் ஸ்கிரீன் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான வெர்ஷனில் வெளியாகும் முன் இந்த அம்சம் தொடர் சோதனை செய்யப்படும். ஃபார்வேர்டு மீடியா வித் கேப்ஷன் அம்சம் பீட்டா பயனர்களில் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் விளங்குகிறது.
    • இந்தியா மட்டுமின்றி உலகளவில் வாட்ஸ்அப் சேவை நீண்ட நேரம் முடங்கிய சம்பவம் அரங்கேறியது.

    இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை நேற்று (அக்டோபர் 25) மதியம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் செயல்பாட்டு வந்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கி போனது. இந்த செயலி சுமார் இரண்டு மணி நேரம் முடங்கி போனது.

    வாட்ஸ்அப் வரலாற்றில் இத்தனை மணி நேரம் செயலி முடங்கியது இதுவே முதல் முறை ஆகும். சேவை முடங்கியதால் பயனர்களால் புகைப்படம், வீடியோ, குறுந்தகவல் உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப்-இல் அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து டவுன்டிடெக்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நாடு முழுக்க சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் சேவையை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    திடீரென முடங்கிய நிலையில், வாட்ஸ்அப் சேவைகள் மதியம் 2 மணி அளவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. எனினும், செயலியில் அவ்வப்போது சில இடர்பாடுகள் ஏற்பட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்தே வாட்ஸ்அப் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

    முந்தைய தகவல்களில் வாட்ஸ்அப் சர்வெர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேவை முடங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. எனினும், வாட்ஸ்அப் சேவை தொழில்நுட்ப குறைபாடு காரணமாக முடங்கியது என மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியது
    • வாட்ஸ்அப் சேவைகள் தற்போது இடையூறுகளைச் சந்தித்து வருவதாக பயனர்கள் பலர் புகார்

    புதுடெல்லி:

    இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்று மதியம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. தகவல்களை அனுப்ப முடியாமல் தவித்தனர். வாட்ஸ்அப் சேவைகள் இடையூறுகளைச் சந்தித்து வருவதாக பயனர்கள் பலர் புகார் அளித்தனர். டுவிட்டரில் இது தொடர்பான ஹேஷ்டேக் டிரெண்டானது. தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியானது.

    வாட்ஸ்அப் சேவை முடங்கியதை அந்த நிறுவனம் உறுதி செய்ததுடன், பிரச்சனை சரி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் வாட்ஸ்அப் வழக்கம்போல் செயல்பாட்டிற்கு வரும் என்றும் வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரச்சனை சரி செய்யப்பட்ட நிலையில், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு வாட்ஸ்அப் செயல்பாட்டிற்கு வந்தது. 

    • வாட்ஸ்அப் முடக்கம் தொடர்பாக டுவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
    • தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல்

    புதுடெல்லி:

    இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பிரபல வலைத்தளமான வாட்ஸ்அப் முடங்கியது. பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள், எந்த தகவலையும் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.

    மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் சேவைகள் தற்போது இடையூறுகளைச் சந்தித்து வருவதாக பயனர்கள் பலர் புகார் அளித்தவண்ணம் உள்ளனர். டுவிட்டரில் இது தொடர்பான ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. கோளாறு சரி செய்யப்பட்டு வாட்ஸ்அப் விரைவில் செயல்படும் என மெட்டா நிறுவனம் கூறி உள்ளது.

    • வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்பட்டு வந்த புது அம்சம் பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    • வாட்ஸ்அப் கால் லின்க்ஸ் அம்சத்தை பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கடந்த மாதம் அறிவித்து இருந்தார்.

    மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் கால் லின்க்ஸ் எனும் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் புதிதாக கால் செய்யவும், ஏற்கனவே உள்ள அழைப்பில் எளிதில் இணைந்து கொள்ளவும் வழி செய்கிறது. பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய வாட்ஸ்அப் கால் லின்க்ஸ் கொண்டு அதிகபட்சம் 32 பேர் ஒரே சமயத்தில் அழைப்பில் பேச முடியும். மேலும் இந்த லின்க்ஸ் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். வாட்ஸ்அப் செயலியின் கால்ஸ் டேபில் புதிதாக கால் லின்க் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு அழைப்பிற்கான லின்க்-ஐ உருவாக்கிக் கொள்ள முடியும். இதற்கு "கிரியேட் கால் லின்க்" ஆப்ஷனை க்ளிக் செய்தாலே போதுமானது.

    மேலும் லின்க் உருவாக்கும் போதே அது வீடியோ அல்லது வாய்ஸ் கால் என்பதை தேரிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் லின்க்-களை எளிதில் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்படவில்லை. இவ்வாறு செய்ய முற்பட்ட போது கால் லின்க்-இல் இணைய க்யூ ஆர் கோட் காண்பிக்கப்படுகிறது.

    முன்னதாக வாட்ஸ்அப் வாய்ஸ் கால் சேவையில் 32 பேருடன் பேசும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய கால் லின்க்ஸ் அம்சம் பற்றிய தகவலை பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்து இருந்தார். அந்த வரிசையில், இந்த அம்சம் தற்போது அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    ×