என் மலர்
நீங்கள் தேடியது "ஒருவர் கைது"
- ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவரை பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.
- அவர் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே அவரை நக்சல் தடுப்பு போலீசார், கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து போலீசாரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சில சமூக விரோத கும்பல்கள் கஞ்சா பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் நக்சல் தடுப்பு போலீசார் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கீழான வயல் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளத்துரை (வயது50) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.
அப்போது அவர் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே அவரை நக்சல் தடுப்பு போலீசார், கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து சுமார் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கா னல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
- 250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது.
- முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை தோப்பிருப்பு துணை மின் நிலையத்தில் கடந்த 7-ந் தேதி 250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது. காணாமல் போன அலுமினிய காயில் ஒயரை மின்துறை ஊழியர்கள் தேடிவந்தனர். அப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக தோப்பிருப்பு துணை மின் நிலைய இளநிலை மின் பொறியாளர் ரவி (வயது 56) பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக போலலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் குட்டியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் முருகன் அளித்த தகவலின்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- காருக்குள் அவரை கட்டி ப்போட்டு பணத்தை பறித்து சென்றனர்.
- தனிப்படை போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
சென்னிமலை,
சென்னிமலை அருகே ஈங்கூரில் இரும்பு உருக்கு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சத்தியமூர்த்தி (47) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கிளை நிறுவனத்தில் இருந்து ரூ.23 லட்சம் பணத்தை காரில் எடுத்து சென்றார்.
அப்போது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை காருடன் கடத்தி சென்றனர். இதையடுத்து காருக்குள் அவரை கட்டி ப்போட்டு பணத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து சென்னி மலை தனிப்படை போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார், கண்ணங்குடி, காமராஜர் ரோட்டை சேர்ந்த சுரேஷ் (27), என்பரை போலீசார் கைது செய்தார். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்ய ப்பட்டது.
இந்த வழக்கில் தொட ர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார், கண்ணங்குடி அருகே கள்ளர் தெரு மனோகர் (29), நவநீதன் (27), இளையராஜா (31), மற்றும் கோவை செட்டிபாளையம் காந்திஜி ரோட்டை சேர்ந்த அலெக்சாண்டர் (32) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடை த்தனர்.
இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய புது க்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்வரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தினை இது வரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.23 லட்சம் பணத்துடன் சென்ற முக்கிய குற்ற வாளிகளான ராஜசேகர் மற்றும் ராமதுரையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து, கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தென்சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையன் என்பவரது மகன் சூர்யா (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- எரியோடு போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வடமதுரை:
எரியோடு இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகுமரேசன், ஏட்டு குமரேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எரியோடு வடக்குதெருைவ சேர்ந்த தங்கவேல்(58) என்பவர் தனக்கு சொந்தமான குடோனில் 50 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சி:
திருச்சி சுந்தர் நகர் ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது50) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், புத்தூர் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (45) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மின் வாரியத்தில், உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. அதற்கு பணம் கொடுத்தால் வாங்கிவிடலாம் என்று செந்தில்குமாரிடம், நாகராஜன் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து தனது உறவினருக்கு அந்த வேலையை வாங்கி கொடுக்கும்படி, செந்தில்குமார் கடந்த 2017 -ம் ஆண்டு ரூ.12 லட்சத்தை நாகராஜனிடம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து வருடங்கள் கடந்த நிலையில், வேலை வாங்கி கொடுக்காததால், பணத்தை தந்துவிடுங்கள் என்று செந்தில்குமார் கேட்டுள்ளார். விரைவில் வேலை வாங்கித் தருகிறேன் என்று நாகராஜன் கூறியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில்குமார், திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் உதவி ஆணையர் சின்னசாமி, இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜனை தேடி, விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், நாகராஜன் ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்ததை, தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று, நாகராஜனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அம்பத்தூர்:
அண்ணா நகர், அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 36) ரவுடி. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடியாக இருந்த சந்தானம் கடந்த சில மாதங்களாக திருந்தி பெயிண்டிங் வேலை செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சந்தானம் பணி முடித்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சத்யா நகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து சந்தானத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியில் ரவுடிகளாக வலம் வந்தவர்களை சந்தானம் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் சந்தானம் இருந்தால் ஏரியாவில் மதிப்பு கிடைக்காது என்று எண்ணி அவரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சின்ன ராமபர்ட், ஜோசப் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே ஆந்திராவில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சதீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
வளசரவாக்கம் சேனாதிபதி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். குழந்தைகள் நல மருத்துவர். சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 2-வது தெருவில் மருத்துவ மனையை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 10 மணி அளவில் கார்த்திகேயன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கத்தி முனையில் டாக்டர் கார்த்திகேயனை கடத்த முயன்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 3 பேர் கும்பலை பிடிக்க முயன்றனர்.
இதில் ஒருவன் மட்டும் சிக்கினான். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை விருகம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்த்தைச் சேர்ந்த லோக பிராமன் (21) என்பது தெரியவந்தது.
விசாரணையில் டாக்டர் கார்த்திகேயனிடம் கடந்த சில மாதங்களாக பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்ததும், ஆனால் அப்பெண்ணின் குழந்தை இறந்து விட்டதும் அதன் காரணமாக டாக்டரை கடத்தி செல்ல வந்ததாகவும் கூறினார். அவனிடமிருந்து இரண்டு கத்தி மற்றும் கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
லோக பிராமனின் கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த சத்யா மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டாக்டரை கடத்த வந்த மூவரும் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் பணம் பிரச்சனை காரணமாக டாக்டரை கடத்த வந்தார்களா என்கிற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்தவர் திருநாமச்செல்வன் (வயது 47). தொழில் அதிபர். திருநாமச்செல்வனின் மனைவி கலா ராணி (44). இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த கலா ராணி, திடீரென மாயமானார். மேலும் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் அவர் எடுத்து சென்றிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் திருநாமச்செல்வன், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் தனது மனைவி கலா ராணியை அதே பகுதியை சேர்ந்த மரப்பட்டறை அதிபர் சதீஷ் (43) கடத்தி சென்றதாகவும், இந்த கடத்தலுக்கு அவரது நண்பர்கள் கண்ணன்விளையை சேர்ந்த முரளி மோகன் (57), வெட்டுமணியை சேர்ந்த மணிகண்டன், பள்ளியாடியை சேர்ந்த சுனில் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருநாமச்செல்வன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த கோர்ட்டு இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கலாராணியை மீட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்த உத்தரவிட்டது,
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, மார்த்தாண்டம் போலீசார் திருநாமச்செல்வன் புகார் குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சதீஷ், முரளி மோகன், மணிகண்டன், சுனில் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் முரளிமோகன் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கலா ராணியை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
வீராம்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 34). இவரது மனைவி அரியாங்குப்பம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வர்மா, பிரகாஷ், சுந்தர் ஆகிய 3 பேரும் அவரை கிண்டல் செய்தனர்.
அவர் வீட்டுக்கு வந்து ஜெயராஜியிடம் கூறினார். அவர் வந்து என் மனைவியை ஏன் கிண்டல் செய்கிறாய்? என கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெயராஜை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஜெயராஜ் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் வீராம்பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் உதயசிங் (35). ஜிப்மர் ஊழியர். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவில் வந்த போது, 3 பேர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை உதயசிங் ஓரமாக நில்லுங்கள் என கூறினார். எங்களை எப்படி ஓரமாக நிற்க சொல்லலாம்? என கூறி அவர்கள் உதய சிங்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து உதயசிங் அரியாங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோட்டை சேர்ந்த மோகன சுந்தரம் என்பவர் அமிர்தா பால் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு கும்பல் ரூ.50 கோடி கடன் வாங்கி தருவதாக கூறியது. சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த 16-ந்தேதி கடன் தருவதாக அழைத்து வரப்பட்டு அவரிடம் இருந்த ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த வழக்கில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். விசாரணையில் தொழில் அதிபருக்கு கடன் வாங்கித் தருவதாக அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்தது 5 பேர் என தெரியவந்தது.
இந்த வழக்கில் திருத்தணியை சேர்ந்த ஜெயக்குமார், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ரசூல்கான் ஆகிய இருவரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சமும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த கோபி என்பவரை நேற்றிரவு கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #MoneyRobbery
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). இவருடைய சித்தப்பா தமிழ்மணி (62). தன்னுடைய நிலத்தை வேதாரண்யம் பகுதி முதலியார்தோப்பைச் சேர்ந்த தர்மராஜ் (45) என்பவரிடம் விலைபேசி முன்பணம் வாங்கியுள்ளார்.
பாக்கி பணத்தை கொடுத்து தர்மராஜ் நிலத்தை பதிவு செய்து கொள்ளவில்லை. இதனால் முன்பணத்தை தர்மராஜனிடம் திருப்பி கொடுப்பதற்காக தமிழ்மணி, பிரபாகரன் மற்றும் சிலர் சென்றுள்ளனர்.
அப்போது தமிழ்மணி தரப்பிற்கும் தர்மராஜ் தரப்பினருக்கும் தாகராறு ஏற்பட்டதில் தர்மராஜ் கத்தியால் பிரபாகரனை வெட்டியுள்ளார்.
தர்மராஜனை, பிரபாகரன், தமிழ்மணி, சேகர், ஆனந்தன் ஆகிய நால்வரும் சேர்ந்து கம்பால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிரபாகரன், தர்மராஜ் இருவரையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ் மீதும், தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்மணி, சேகர், ஆனந்தன், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீதும் தனித்தனியே வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் வழக்குப்பதிவு செய்தார். இதில் தமிழ்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.