என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊழல்"
- ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று சபதம் எடுத்தோம்.
- சுகாதார அமைச்சர் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை மான் கண்டுபிடித்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதைமுன்னிட்டு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குலுவில் சாலைப் பேரணி நடத்தினர்.
அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொது மக்களிடம் உரையாற்றினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
எங்களுக்கு அரசியல் தெரியாது. நாங்கள் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. அண்ணா ஹசாரே இயக்கத்தில் தொடங்கிய எங்கள் பயணம், பின்னர் கட்சியை உருவாக்கினோம். ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று சபதம் எடுத்தோம். முதலில், டெல்லியில் ஊழலை முடிவுக்கு கொண்டு வந்தோம். பின்னர் பஞ்சாபில் அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான செயல்முறையைத் தொடங்கினோம்.
எந்த ஒரு முதலமைச்சரும் தன் அமைச்சரை சிறைக்கு அனுப்பியதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தனது சுகாதார அமைச்சர் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை மான் கண்டுபிடித்தார். அவருக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவர் அதை கம்பளத்தின் கீழ மறைத்திருக்கலாம் அல்லது அமைச்சரிடம் தனது பங்கைக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவரை சிறைக்கு அனப்பினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்