search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 169965"

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் பேஷன் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலின் விலை ரூ. 75 ஆயிரத்து 590 என துவங்குகிறது. புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் டிரம்: ரூ. 74 ஆயிரத்து 590

    ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் டிஸ்க்: ரூ. 78 ஆயிரத்து 990

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    புதிய பேஷன் எக்ஸ்டெக் மாடலில் மேம்பட்ட அம்சங்கள் உள்ளன. அதன்படி ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லேம்ப், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ளூடூத் மாட்யுல் எஸ்.எம்.எஸ்., கால் அலெர்ட் வசதியை வழங்குவதோடு, ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர், லோ-பியூவல் இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட் ஆஃப், சர்வீஸ் ரிமைண்டர் போன்ற வசதிகள் உள்ளன.

    இந்த மாடலிலும் 110சிசி, சிங்கில் சிலிண்டர், பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9 ஹெச்.பி. பவர், 9.79 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    பேஷன் மட்டுமின்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிலெண்டர் பிளஸ், கிளாமர் 125, பிளெஷர் பிளஸ் 110 மற்றும் டெஸ்டினி 125 போன்ற மாடல்களின் எக்ஸ்டெக் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. 

    • யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் R15 V4 மாடலை விற்பனை செய்து வருகிறது.
    • சமீபத்தில் அதன் MT15 V2 விலையை யமஹா உயர்த்தி இருந்தது.

    யமஹா R15 V4 மாடலின் விலை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. முன்னதாக மே மாத வாக்கில் யமஹா R15 V4 விலை ரூ. 600 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை ரூ. 500 அதிகரித்து உள்ளது. யமஹா R15 V4 வொர்ல்டு GP 60-வது ஆனிவர்சரி எடிஷன் விலையில் ரூ. 900 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    புதிய விலை விவரங்கள்:

    யமஹா R15 V4 மெட்டாலிக் ரெட் ரூ. 1 லட்சத்து 77 ஆயிரத்து 400

    யமஹா R15 V4 டார்க் நைட் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 400

    யமஹா R15 V4 ரேசிங் புளூ ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்து 400

    யமஹா R15 V4M மெட்டாலிக் கிரே ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 400

    யமஹா R15 V4M WGP 60-வது ஆனிவர்சரி எடிஷன் ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 800


    கடந்த இரண்டு மாதங்களில் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1100 அதிகரித்து இருந்தலும், யமஹா R15 V4 மாடல் கே.டி.எம். RC200-ஐ விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் கே.டி.எம். RC200 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 13 ஆயிரம் ஆகும். இதன் விலை கே.டி.எம். RC 125 மாடலை விடவும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கே.டி.எம். RC125 விலை ரூ. 1 லட்சத்து 86 ஆயிரம் ஆகும்.

    விலையை தவிர யமஹா R15 V4 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் அனைத்து வேரியண்ட்களிலும் 155சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், யு.எஸ்.டி. ஃபோர்க் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது MT 15 V2 விலையை மாற்றி இருக்கிறது.
    • இதன் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வில் MT 15 V2 மாடலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், யமஹா MT 15 V2 விலை தற்போது ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய விலை விவரங்கள்:

    யமஹா MT 15 V2 மாடலின் பிளாக் நிறத்தின் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 900 என துவங்குகிறது. யமஹா MT 15 V2 ஐஸ் ஃபுளோ மற்றும் சியான் நிறங்களின் விலை ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. முன்னதாக இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.


    யமஹா MT 15 V2 மாடலில் 155சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ப்ளூடூத் வசதி கொண்ட ஸ்கிரீன், எல்.இ.டி. ஹெட்லேம்ப், சிங்கில் சேனல் ஏ,பி.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் அப்சைடு-டவுன் ஃபோர்க், அலுமினியம் ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டு உள்ளது.

    அறிமுகம் செய்யப்பட்டது முதல் யமஹா MT 15 V2 மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஏப்ரல் மாத விற்பனையில் யமஹா MT 15 V2 மாடல் கே.டி.எம். 125 டியூக்-ஐ பின்னுக்குத் தள்ளி அசத்தியது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடல் குறைந்த விலையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ஹண்டர் 350 வெளியீடு ஆகஸ்ட் 4 முதல் 8 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஹண்டர் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருக்கும் புல்லட் 350 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட உள்ளது. அந்த வகையில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து நிர்ணயம் செய்யப்படு என எதிர்பார்க்கலாம்.


    இந்த மாடல் J1C1 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது ஸ்போக் வீல்கள், குறைந்த அம்சங்களையே கொண்டிருக்கும் என தெரிகிறது. இதே மாடலின் டாப் எண்ட் வெர்ஷன் ஒன்று J1C2 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடலில் அலாய் வீல்கள் மற்றும் சற்றே கூடுதல் அம்சங்கள் வழங்கப்படலாம்.

    புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளிலும் 349சிசி என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இதே என்ஜின் தான் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தபோது பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி அருகே வடக்கு பெருமாள்புரத்தில் மோட்டார் சைக்கிளை திருடி விட்டதாக கூறி இரண்டு வாலிபர்களை பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்ட தால் நாகர்கோவில் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த கொள்ளையர்களை மீட்டனர்.

    மீட்கப்பட்ட இருவரி டமும் விசாரணை நடத்தியபோது அவர்கள் தடிக்காரன்கோ ணம் அண்ணா நகரை சேர்ந்த ஆகாஷ் என்பதும் மற்றொருவர் தடிக்கா ரன்கோணம் ரெத்தின புரத்தை சேர்ந்த ஜோசப் ராஜ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து தெற்கு பெருமாள் புரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆகாஷ், ஜோசப்ராஜ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் ஜோசப்ராஜ் புகார் மனு ஒன்று அளித்தார்.அதில் நானும்,ஆகாசும் வடக்கு பெருமாள்புரத்தில் சந்திரகுமார் என்பவரது இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தபோது பொதுமக்கள் எங்களை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ள னர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இது தொடர்பாகவும் கண்டால் தெரியும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பைக் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • இது குரூயிசர் மாடலாக இருக்கும் என தெரிகிறது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ஜூலை 6 ஆம் தேதி இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் டி.வி.எஸ். நிறுவனம் தற்போது முற்றிலும் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    முன்னதாக டி.வி.எஸ். என்டார்க் 125 மற்றும் ஐகியூப் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது முற்றிலும் புது மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளது. இந்த மாடல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த செப்பிலின் குரூயிசர் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. டி.வி.எஸ். நிறுவனம் இம்முறை புதிய லைஃப்ஸ்டைல் சார்ந்த மாடலை அறிமுகம் செய்யும் என்றே தகவல் வெளியாகி உள்ளது.


    இது உண்மையாகும் பட்சத்தில் புது மாடல் செப்பிலின்-ஆக இருக்காது. 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட டி.வி.எஸ். செப்பிலின் குரூயிசர் மாடல் ஆட்டோ விழாவில் அதிகம் பிரபலம் அடைந்தது. இந்த நிலையில், புது மாடல் மூலம் டி.வி.எஸ். நிறுவனம் குரூயிசர் பிரிவில் களமிறங்க தயாராகி விட்டதாகவே தெரிகிறது. தற்போது இந்திய சந்தையின் குரூயிசர் மாடல்கள் பிரிவில் அவெஞ்சர் 220 மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    டி.வி.எஸ். செப்பிலின் கான்செப்ட் 220சிசி என்ஜின் கொண்டிருந்தது. இத்துடன் 1200 வாட் ரிஜெனரேட்டிவ் அசிஸ்ட் கொண்ட மோட்டார் மற்றும் 48 வோல்ட் லி-அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது.

    • பஜாஜ் பல்சர் பிளாக் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இது புதிய தலைமுறை பல்சர் N250 சீரிசை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புது மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பிளாக் எடிஷன் மாடல் பல்சர் N250 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. டீசர் வெளியாகி இருப்பதை அடுத்து, புதிய பல்சர் 250 பிளாக் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். புது மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த மாடல் பல்சர் N250 பிளாக் அல்லது N250 பிளாக் எடிஷன் என்று அழைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    டீசர் தவிர இந்த மாடல் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த பைக்கின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படவில்லை. எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மாடல் பல்சர் N250 சீரிஸ் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் என்ஜின் பல்சர் N250 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இன்றி இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது.


    புதிய பல்சர் N250 பிளாக் மாடல் பிளாக்டு-அவுட் எலிமண்ட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்படி பிளாக் நிற என்ஜின் கவர்கள், எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் வீல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இன்த மாடலில் 249.07சிசி என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 24.5 பி.எஸ். பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், கியர் இண்டிகேட்டர், யு.எஸ்.பி. மொபைல் சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
    • அந்த வரிசையில் 125சிசி பிரீமியம் மாடல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி வருகிறது. இந்த முறை 125சிசி பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலான ரைடர் விலையை டி.வி.எஸ். நிறுவனம் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு டிஸ்க் பிரேக் கொண்ட மாடலுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் டிரம் பிரேக் மாடலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    புதிய விலை விவரங்கள்:

    டி.வி.எஸ். ரைடர் டிரம் பிரேக் மாடல் ரூ. 84 ஆயிரத்து 573 (எந்த மாற்றமும் இல்லை)

    டி.வி.எஸ். ரைடர் டிஸ்க் பிரேக் மாடல் ரூ. 90 ஆயிரத்து 989 (முந்தைய விலை ரூ. 89 ஆயிரத்து 089)


    டி.வி.எஸ். ரைடர் மோட்டார்சைக்கிள் அந்நிறுவனத்தின் மற்ற மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப், வித்தியாச தோற்றம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்., இண்டிகேட்டர்களுக்கு ஹாலோஜன் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 11.32 பி.எஸ். பவர், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் G310 RR பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • தற்போது இந்த மாடலுக்கான புக்கிங் துவங்கி உள்ளது.

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் டி.வி.எஸ். அபாச்சா RR310 சார்ந்த பி.எம்.டபிள்யூ. G310 RR மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலின் டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பி.எம்.டபிள்யூ. G310 RR மாடலுக்கான புக்கிங் இந்தியாவில் துவங்கி உள்ளது.

    புதிய பி.எம்.டபிள்யூ. G310 RR மாடலுக்கான புக்கிங் பி.எம்.டபிள்யூ. அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் வலைதளத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. G310 RR மோட்டார்சைக்கிள் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கான வினியோகம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அன்ற அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது.


    விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலிலும் அபாச்சி RR 310 மாடலில் உள்ளதை போன்றே 313சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் மற்றும் அர்பன், டிராக், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம். புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் வழங்கப்பட இருக்கும் டெயில் லைட், மிரர், விண்ட் ஸ்கிரீன் போன்ற பாகங்கள் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது.

    • டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஐகியூப் ST முன்பதிவு துவங்கி உள்ளது.
    • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் சில மாதங்களில் துவங்க இருக்கிறது.

    டி.வி.எஸ். நிறுவனம் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஸ்டாண்டர்டு, S மற்றும் ST போன்ற வேரியண்ட்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. எனினும், ஸ்டாண்டர்டு மற்றும் S வேரியண்ட்களின் விலை மட்டும் அறிவிக்கப்பட்டு வினியோகம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், டி.வி.எஸ். ஐகியூப் ST வேரியண்ட் முன்பதிவு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

    முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி டி.வி.எஸ். ஐகியூப் ST மாடல் ஆகஸ்ட் மாதம் முதல் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இந்த வேரியண்ட் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த வேரியண்ட் விலை ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அறிவிக்கப்படலாம்.


    தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டி.வி.எஸ். ஐகியூப் ஸ்டாண்டர்டு மற்றும் S வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 130 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டி.வி.எஸ். ஐகியூப் ST வேரியண்ட் அம்சங்கள் மற்றும் பேட்டரியை பொருத்து இதன் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    2022 டி.வி.எஸ். ஐகியூப் S மாடல் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. டாப் எண்ட் ST வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. மூன்று வேரியண்ட்களின் ரேன்ஜ் முந்தைய மாடல்களை விட அதிகமாகவே உள்ளது.

    • இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தது.
    • இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மே 2022 விற்பனையில் அமோக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மே மாத விற்பனை அமோகமாக நடைபெற்று இருக்கிறது. முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களை அலுவலகம் வர வலியுறுத்தி இருப்பதை அடுத்து தனிப்பட்ட போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து உள்ளது.

    அந்த வகையில், மே 2022 மாதத்தில் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி இருசக்கர உற்பத்தியாளர்களின் வாகன விற்பனை விவரங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மே 2022 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 466 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 561 யூனிட்களை மட்டும் விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை மே 2022 மாதத்தில் 59 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2021 மே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 60 ஆயிரத்து 342 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மே 2022 மாதத்தில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 844 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு மே மாதத்தில் வெறும் 38 ஆயிரத்து 763 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் கடந்த மாதம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 482 யூனிட்களை விற்பனை செய்தது. 2021 மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் மொத்தத்தில் 52 ஆயிரத்து 084 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 மே மாதத்தில் 53 ஆயிரத்து 525 யூனிட்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 073 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த மே மாதம் 60 ஆயிரத்து 518 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும்.

    நெல்லையில் பெட்ரோல் நிரப்பும் போது பைக் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த ஆல்வின் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஆல்வின் என்ற இளைஞர் கடந்த 13-ம் தேதி தன்னுடைய புது பைக்கில் பெட்ரோல் நிரப்ப சென்றிருந்தார். ரூ.1000 க்கு பெட்ரோல் போடும்படி சொல்லிவிட்டு வாகனத்திலியே அமர்ந்திருந்தார்.

    அப்போது ரூ. 900 க்கு டேங்க் நிரம்பி பெட்ரோல் வெளியே சொட்ட ஆரம்பித்தது. இதை கவனித்த பங்க் ஊழியர் அவசர அவசரமாக பம்பை வெளியே எடுத்தார். இந்நிலையில், பம்பில் இருந்த பெட்ரோல் துளிகள் ஆல்வி மற்றும் வண்டியின் மீது பட, ஏற்கனவே சூடாக இருந்த பைக் உடனே பற்றி எரிய ஆரம்பித்தது.

    இந்த தீ விபத்தில் இருசக்கரவாகனம் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. பைக் மீது அமர்ந்திருந்த இளைஞரின் உடலையும் தீ பற்றிக்  கொண்டது. உடனே பங்க் ஊழியர்கள் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர். பைக் ஓட்டிய இளைஞர் ஆல்வின்  தீ காயத்துடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சைக்கு பின்னர் பலனின்றி ஆல்வின் இன்று உயிரிழந்தார். 
    ×