search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன்"

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்குவதற்கான பீட்டா டெஸ்டிங்கை மேற்கொண்டு வந்தது.
    • தற்போது ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 வெர்ஷன்களை ஆப்பிள் வெளியிட துவங்கி இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பீட்டா முறையில் டெஸ்டிங் செய்து வந்த ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 அப்டேட்களின் ஸ்டேபில் வெர்ஷன்களை ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வெளியிட்டு உள்ளது. இந்த அப்டேட் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் SE 3 மாடல்களில் 5ஜி அப்டேட் பெற முடியும்.

    எனினும், சில பயனர்களுக்கு ஐபேட் ஒஎஸ் 16.2 தங்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். 2022 ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களின் செல்லுலார் வெர்ஷன்களில் 5ஜி சப்போர்ட் உள்ளது. புது அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை குறித்து பயனர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    5ஜி மட்டுமின்றி புதிய அப்டேட் ஃபிரீடம் ஆப் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தரவுகளை கேன்வாஸ் ஒன்றில் ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ளலாம். பின் இங்கிருந்தபடி அவற்றை பார்ப்பது, ஷேர் மற்றும் கொலாபரேட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இதில் ஏராளமான ஃபைல்களுக்கான சப்போர்ட், அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபிரீடம் போர்டுகள் ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும்.

    இவற்றை ஃபேஸ்டைம் அழைப்புகளின் போதும் இயக்க முடியும். இதை கொண்டு மற்றவர்களுடன் இணைந்து குறிப்பிட்ட போர்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம். ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருப்பதால், இவை தானாக மற்ற சாதனங்களிடையேயும் சின்க் செய்யப்பட்டு விடும். இந்த அப்டேட்டில் ஆப்பிள் மியூசிக் சிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐகிளவுடிற்கு மேம்பட்ட டேட்டா பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் அங்கமாக ஐபோன் 14-க்கு இத்தனை சலுகைகள் கிடைக்கின்றன.

    ஐபோன் வாங்குவோர் பலருக்கும் மனதில் எழும் முதல் சந்தேகம், முற்றிலும் புதிய ஐபோன் 14 வாங்கலாமா அல்லது ஐபோன் 13, ஐபோன் 12 என சற்று பழைய மாடல்களை வாங்கலாமா என்பது தான். இது பற்றிய தெளிவு கிடைக்க ஐபோன் 14 டிசைன் மற்றும் அம்சங்கள் கிட்டத்தட்ட ஐபோன் 13 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், ஐபோன் 14 மாடலில் 5-கோர் GPU கொண்ட ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி எஸ்ஒஎஸ் வசதி, கிராஷ் டிடெக்‌ஷன் போன்ற அம்சங்கள் புதிய ஐபோன் 14-இல் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை எதுவும் ஐபோன் 13 மாடலில் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இதுவரை வெளியான ஐபோன்களில் அதிநவீன மாடல் ஐபோன் 14 தான்.

    இதுதவிர ஐபோன் 14 மாடலுக்கு ஆன்லைன் வலைதளங்களில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் "பிளாக் ஃபிரைடே சேல்" அங்கமாக ஐபோன் 14 மாடலுக்கு அசத்தலான சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஐபோன் 14 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

    ப்ளிப்கார்ட் சலுகை விவரங்கள்:

    தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் வழங்கப்படும் சலுகையின் கீழ் ஐபோன் 14 விலை ரூ. 77 ஆயிரத்து 400 என மாறி இருக்கிறது. இந்த விலை ஐபோன் 14 (128 ஜிபி) மாடலுக்கானது ஆகும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ஐபோன் 14 விலையில் ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 14 (128 ஜிபி) விலை மேலும் குறைந்து ரூ. 72 ஆயிரத்து 400-க்கு கிடைக்கும்.

    இவை தவிர ஐபோன் 14 வாங்குவோர் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 20 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். எக்சேன்ஜ் சலுகையில் முழு தள்ளுபடியை சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 14 (128 ஜிபி) விலை ரூ. 51 ஆயிரத்து 900 என மாறி விடும். எனினும், எக்சேன்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.

    • ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பெருமளவு ஆபத்தில் சிக்கியும், சீராக இயங்கும் அளவுக்கு தரம் கொண்டிருப்பதற்கு உலகளவில் பெயர் பெற்றுள்ளன.
    • ஒரு வருடத்திற்கு முன் கடலில் விழுந்த ஐபோன் மாடல் கரை ஒதுங்கிய சம்பவம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக மாறி இருக்கிறது.

    ஆகஸ்ட் 2021 வாக்கில் சர்ஃபிங் செய்ய கடலுக்குள் சென்ற கிளார் அட்ஃபீல்டு என்ற பெண் தனது ஐபோனை கடலில் தொலைத்து விட்டார். 39 வயதான கிளார் தற்போது கடலில் விழுந்து காணாமல் போன தனது ஐபோனை கண்டறிந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் ஒரு வருடத்திற்கு பின் மீட்கப்பட்ட ஐபோன் தற்போது சீராக இயங்குகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    கிளார் அட்ஃபீல்டு நீர்புகாத பையில் வைத்திருந்த ஐபோன் 8 பிளஸ் மாடலை கடந்த ஆண்டு கடலில் தொலைத்து விட்டார். கடலில் விழுந்து காணாமல் போன ஐபோன் தற்போது கரை ஒதுங்கி இருக்கிறது. இதனை பிராட்லி காட்டன் என்ற பெயர் கொண்ட நாய் கண்டறிந்து இருக்கிறது. ஐபோன் வைக்கப்பட்டு இருந்த நீர்புகாத பையினுள் அட்ஃபீல்டு தாயாரின் மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டை வைக்கப்பட்டு இருந்தது.

    இதை வைத்தே அட்ஃபீல்டை தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 2021 முதல் சர்ஃபிங் செய்வதை அட்ஃபீல்டு வழக்கமாக கொண்டிருந்தார். எப்போது சர்ஃபிங் செய்யும் போது தனது ஐபோன் அடங்கிய பையினை கழுத்தில் மாட்டிக் கொள்வார். அதே போன்று தான் செய்யும் போது தான் தண்ணீரில் தவறி விழுந்த அட்ஃபீல்டு பையை எப்படியோ தொலைத்திருக்கிறார்.

    தொலைந்து போன ஐபோன் மீண்டும் கிடைக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என அட்ஃபீல்டு தெரிவித்து இருக்கிறார். மேலும் 450 நாட்கள் கடலில் இருந்த ஐபோன் மீண்டும் வேலை செய்யும் என்பதை நம்ப முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

    • 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா்.

    பீஜிங் :

    சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மத்திய சீனாவில் உள்ள செங்சாவு மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அங்கு அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், ஐபோன் தொழிற்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த ஊழியர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் அவர்களை விரட்டியடிக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா். இதில் பலர் காயம் அடைந்தனர். மேலும் தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.

    • ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
    • ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தி வருவோருக்கு புதிய தலைமுறை 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 பீட்டா வெர்ஷனை உலகம் முழுக்க வெளியிட்டு வருகிறது. இந்திய ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்தியாவில் 5ஜி சப்போர்ட் வெளியிடும் நிறுவனங்களில் ஆப்பிள் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னதாக சாம்சங், சியோமி, ரியல்மி, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கின.

    ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வருவோர் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. தற்போது ஐஒஎஸ் 16.2 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்களிடம் இருந்து கருத்து கேட்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    ஆப்பிள் தேர்வு செய்த பயனர்கள் புதிய ஐஒஎஸ் 16.2 பீட்டா 2 வெர்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பீட்டா திட்டத்தில் இணைந்து இருக்கும் பயனர்கள் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இந்த இரு நிறுவன சேவைகளை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். இதற்கு பயனர் வசிக்கும் பகுதியில் 5ஜி ஏற்கனவே வெளியிடப்பட்டு இருப்பது அவசியம் ஆகும்.

    தற்போது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் SE 2022 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐஒஎஸ் 16.2 பீட்டா இன்ஸ்டால் செய்த பின் ஐபோன்களின் செட்டிங்ஸ் -- வாய்ஸ் & டேட்டா -- 5ஜி ஆன், 5ஜி ஆட்டோ மற்றும் 4ஜி/எல்டிஇ போன்ற ஆப்ஷன்கள் காணப்படுகின்றன.

    • ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடாதது பற்றி சாம்சங் சமீபத்தில் கேலி விளம்பரம் வெளியிட்டு இருந்தது.
    • ஆப்பிள் நிறுவனத்தின் போல்டபில் ஐபோன் பற்றிய விவரங்கள் பல ஆண்டுகளாக வெளியாகி வந்தன.

    மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடவில்லை என்பதை கூறி ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்யும் வகையில் சாம்சங் சமீபத்தில் தான் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. இதற்கு ஆப்பிள் தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும், சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

    சீனர் உருவாக்கிய போல்டபில் ஐபோன் மாடல் ஐபோன் V என அழைக்கப்படுகிறது. இது ஒரு கிளாம்ஷெல் வகையிலான போல்டபில் போன் ஆகும். மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய வீடியோ சீனாவை சேர்ந்த வீடியோ தளமான பிலிபிலியில் வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஏராளமான பாகங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதன்படி கேலக்ஸி Z ப்ளிப் மற்றும் மோட்டோ ரேசர் போன்ற மாடல்களில் இருப்பதை போன்று ஐபோனில் உள்ள பாகங்களை இரண்டாக பிரித்து அவற்றை ஒன்றாக இணைத்துள்ளார். போனின் கீழ்புறத்தில் மதர்போர்டு, ரேம், மெமரி போன்ற பாகங்களும், மேல்பாதியில் பேட்டரி, கேமரா சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

    நீண்ட கால உழைப்பின் பலனாக இந்த மடிக்கக்கூடிய ஐபோனை சீனர் உருவாக்கி இருக்கிறார். எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் ப்ரோடோடைப் நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. இவர் உருவாக்கி இருக்கும் போல்டபில் ஐபோனில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், கேமரா மற்றும் இதர அம்சங்கள் உள்ளன. மேலும் இவை அனைத்தும் சீராக இயங்குகின்றன.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்பட பல்வேறு சாதனங்கள் சீனா ஆலையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவன சாதனங்களின் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஆப்பிள் மாற்றி வருகிறது.

    சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன் உற்பத்தி சரியும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி இலக்குகளை குறைப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையான செங்சௌ-வில் அடுத்த மாதத்திற்கான ஐபோன் உற்பத்தி 30 சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ஆலையில் குறையும் ஐபோன் உற்பத்தியை ஓரளவு ஈடுசெய்ய ஷென்சென் ஆலையில் பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியை அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஷென்செனில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல பணியாளர்கள் சில நாட்களுக்கு முன் ஆலையை விட்டு வெளியேறினர்.

    உலகளவில் மின்சாதன பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற இடர்பாடான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக பாக்ஸ்கான் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதுதவிர மற்ற ஆலைகளுடன் தொடர்பு கொண்டு உற்பத்தி சரிவை முடிந்த வரை ஈடுகட்ட முயற்சித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

    உற்பத்தி சரிவு குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. செங்கௌ ஆலையில் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக மிக கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    • இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    • வருடாந்திர அடிப்படையில் ஐபோன் விற்பனை உலகளவில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்திய ஐபோன் விற்பனையில் வரலாறு காணாத வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் ஐபோன் விற்பனை இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    உலகளவில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 90.1 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீதம் வரை அதிகம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 394.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட எட்டு சதவீதம் அதிகம் ஆகும்.

    "ஒவ்வொரு பகுதி வருவாயிலும் நாங்கள் புதிய சாதனையை இந்த காலாண்டில் எட்டியிருக்கிறோம். இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில் தொடர்ந்து இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறோம்," என ஆப்பிள் நிறுவனத்தில் கால் தெரிவித்தார்.

    "புதிய ஐபோன் 14 சீரிஸ் பல்வேறு தலைசிறந்த தொழில்நுட்பம் மற்றும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை மேற்கொள்வதில் சுவாரஸ்ய அனுபவத்தை வழங்குகிறது," என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 உற்பத்தி சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நடைபெற்று வருகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களில் யுஎஸ்பி டைப் சி ரக போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • முன்னதாக ஐரோப்பிய யூனியன் சார்பில் மின்சாதனங்களில் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட் வழங்க வலியுறுத்தப்பட்டது.

    ஆப்பிள் நிறுவனம் ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ப ஐபோனில் யுஎஸ்பி டைப் சி ரக சார்ஜர் வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி கிரெக் கோஸ்வியக் தெரிவித்து இருக்கிறார். மற்ற விதிகளை பின்பற்றுவதை போன்றே இந்த விதியையும் ஆப்பிள் நிறுவனம் பின்பற்றும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    எனினும், எந்த ஐபோன் மாடலில் இருந்து லைட்னிங் போர்ட் நீக்கப்பட்டு யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை. கலிபோர்னியாவில் நடைபெற்ற வால் ஸ்டிரீட் ஜர்னல் கருத்தரங்கில் இந்த தகவலை கிரெக் கோஸ்வியக் தெரிவித்து இருந்தார்.

    பல ஆண்டுகளாகவே ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையே முரணான கருத்துக்கள் நிலவி வருகின்றன. முன்னதாக ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனம் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்க வலியுறுத்தி வந்தனர். இது சாத்தியமாகி இருப்பின் லைட்னிங் போர்ட் மற்றும் தற்போதைய யுஎஸ்பி டைப் சி போர்ட் எதுவும் கண்டறியப்பட்டு இருக்காது என கோஸ்வியக் தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு முதல் ஐபோனில் யுஎஸ்பி டைப் சி வழங்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் விதிகள் 2024 வாக்கில் அமலுக்கு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது மேக், பல்வேறு ஐபேட் மற்றும் அக்சஸரீக்களில் யுஎஸ்பி டைப் சி வழங்கி விட்டது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டிம் குக் தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
    • இத்துடன் டிம் குக் பகிர்ந்து இருந்த புகைப்படம் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தீபாவளி வாழ்த்து தெரிவித்த செய்தி இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தற்போது டிம் குக் வாழ்த்து சொல்ல பயன்படுத்திய புகைப்படம் இந்தியாவின் மும்பையை சேர்ந்த புகைப்பட கலைஞர் தனது ஐபோனில் எடுத்தது என தெரியவந்துள்ளது.

    இது குறித்து டிம் குக் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "இந்த படம் ஒளி திருநாள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் எப்படி இருக்கும் என்பதை கச்சிதமாக பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருக்கிறது," என குறிப்பிட்டு இருக்கிறார். இத்துடன் புகைப்படத்தில் ஷாட் ஆன் ஐபோன் எனும் வாசகம் இடம்பெற்று உள்ளது.

    டிம் குக் பகிர்ந்த புகைப்படத்தை அபெக்‌ஷா மகர் என்ற புகைப்பட கலைஞர் தனது ஐபோனில் எடுத்து இருக்கிறார். தனது புகைப்படத்தை டிம் குக் பகிர்ந்து இருப்பதை பார்த்த அபெக்‌ஷா மகர் டிம் குக்கின் ட்விட்டர் பதிவில் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

    அதில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது ஷாட் ஆன் ஐபோன் புகைப்படத்தை டிம் குக் பகிர்ந்து இருப்பது எனக்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்," என அபெக்‌ஷா மகர் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் ஐபோனில் எப்படி சிறப்பான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற தகவல்களையும் அபெக்‌ஷா மகர் தெரிவித்து இருக்கிறார்.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுடன் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி சில ஆண்டுகள் கழிந்து விட்டது.
    • பிரேசில் நாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டு நித்ததுறை சார்பில் 2.34 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், சார்ஜர்கள் இன்றி ஐபோன் விற்பனையை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு மற்றொரு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 100 மில்லியன் ரியாக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,56,59,47,700 அபராதம் விதித்துள்ளது. மேலும் பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களுடன் கட்டாயம் சார்ஜர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

    பிரேசில் நாட்டில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சார்ஜர் வழங்கப்பட வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிபதி கரமுரு அபோன்சோ பிரான்சிஸ்கோ உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு இறுதியானது இல்லை என்பதால், இதில் மேல்முறையீடு செய்ய முடியும்.

    2020 ஆண்டு வாக்கில் ஐபோன் 12 வெளியீட்டில் இருந்து ஐபோன்களுடன் சார்ஜர் வழங்குவதை ஆப்பிள் நிறுத்திவிட்டது. ஆப்பிள் நடவடிக்கையை தொடர்ந்து சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்களும் இதே போன்று பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி உள்ளன.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் 5ஜி வசதியை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு உள்ளது.
    • ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் விரைவில் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும்.

    இணையத்தில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான புது ஐபோன் மாடல்களுக்கு 5ஜி வசதியை செயல்படுத்தும் அப்டேட் டிசம்பர் மாத வாக்கில் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

    இதற்கான ஆயத்த பணிகளை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள் புது தலைமுறை சேவையை வெளியிடும் போது ஆப்பிள் அதனை தனது சாதனங்களில் சோதனை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. தனது சாதனங்களில் அப்டேட் வெளியிடும் முன் நெட்வொர்க் வேலிடேஷன் மற்றும் டெஸ்டிங் உள்ளிட்டவைகளை முடிக்க வேண்டும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.

    5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்ட ஐபேட் ஏர் 5th Gen மாடலுக்கு எப்போது இந்த அப்டேட் வழங்கப்படும் என்ற விவரங்களை ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. எனினும், ஐபோன்களுக்கு வழங்கும் போதே ஐபேட் மாடலுக்கும் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் நெட்வொர்க் இந்தியாவின் எட்டு நகரங்களில் வழங்கப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகள் வெளியாகும் என்றும் மார்ச் 2024 வாக்கில் நாடு முழுக்க 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

    ×