search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருத்தம்"

    நான் ஒரு மந்திரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வருத்தம் தெரிவித்தார். #FuelPriceHike #RamdasAthawale
    மும்பை:

    நாடு முழுவதும் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல். டீசல் விலை குறித்து மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே, ‘நான் ஒரு மந்திரி. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை. மந்திரி பதவியை இழந்தால் நான் விலைஉயர்வால் பாதிக்கப்படலாம்’ என்று நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மந்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து ராம்தாஸ் அதவாலே நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக மும்பையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். சாமானிய மக்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியுள்ளார்.  #RamdasAthawale #UnionMinister
    தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலா ரமானியிடம் டெலிபோனில் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை தேனீர் விருந்து நடைபெற்றது.

    தேனீர் விருந்துக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

    விழாவில் கலந்து கொள்ள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனைவருக்கும் கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது. அப்படி இருந்தும் தலைமை நீதிபதி வி.கே.தஹிலா ரமானியை தவிர்த்து ஐகோர்ட்டு நீதிபதிகள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. முன் வரிசையில் மட்டும் ஒருசில ஓய்வு பெற்ற நீதிபதிகள் அமர்ந்து இருந்தனர்.

    கடந்த 12-ந்தேதி கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படவில்லை என்றும், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளின் இருக்கைகளுக்கு பின்னால் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும் குறை கூறப்பட்டது.

    இதன் காரணமாகவே கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த சுதந்திர தின விழா மற்றும் தேனீர் விருந்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலா ரமானியிடம் டெலிபோனில் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுதந்திர தின விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    ஐகோர்ட்டில் நேற்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு தலைமை நீதிபதி இந்த தகவலை நீதிபதிகளிடம் தெரிவித்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதோடு கவர்னரின் முதன்மை செயலாளர் ராஜகோபால் செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதியை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

    மேலும் மரபு மீறல் தொடர்பாக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். இதை நீதிபதிகளிடம் தலைமை நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.

    இதை கேட்டு பெரும்பாலான நீதிபதிகள் திருப்தி அடைந்தனர். ஆனாலும் அவர்கள் கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #Thoothukudifiring #SterliteProtest #ThambiDurai
    கிருஷ்ணகிரி:

    துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நிருபரிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று ஆலையை திறக்க அனுமதி பெற்றனர். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த ஆலையை மூட உத்தரவிட்டதாக அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கூறினார்.

    அவரது வழியில் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் நலனுக்காக மட்டும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறி உள்ளார்.

    தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வேறு மாதிரியான ஒன்று. ஆகவேதான் தமிழக முதல்-அமைச்சர் அதற்கு உரிய நிவாரணம் வழங்கவும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடிக்கு அதிகாரிகள் முதலில் செல்வார்கள். அங்கு உள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்பு அமைச்சர்கள் சென்று அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இந்த துயர சம்பவம் எங்கள் எல்லோருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதாகவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


    காவிரி பிரச்சனையில் ஒத்துழைக்க தயார் என்று குமாரசாமி கூறிவிட்டார். நீதிமன்றம் கூறியுள்ளபடி செயல்பட தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி அவர் செயல்படுவார் என்று நம்புகிறோம்.

    கர்நாடகாவில் ஒரு மாநில கட்சியின் தலைவர்தான் முதல்-அமைச்சர் ஆகி உள்ளார். அங்கு மாநில கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இந்தியாவில் அந்தந்த மாநில உணர்வுகளுக்கு ஏற்ப தான் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த தேசியக்கட்சிக்கும் வாய்ப்பு கிடையாது. அ.தி.மு.க. தொடர்ச்சியாக ஆட்சி செய்யும்.

    தமிழகத்தைப் பொருத்த வரையில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆட்சி அமைக்கும் என்பதற்கு கர்நாடகா தேர்தலில் தேசிய கட்சி தலைவர்கள் யாரும் முதல்வராக வர முடியாததே எடுத்துக்காட்டு ஆகும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது.

    கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று அனைவரும்செயல்பட வேண்டும். அந்தந்த மாநிலத்தின் உரிமையை தர வேண்டும். மாநில கலாச்சாரத்தையும் மொழியையும் மதிக்க வேண்டும் என்பதுதான் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கையாகும். அந்த வகையில் தான் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    மாநில உரிமைகளை பெற்று அந்தந்த மொழிகளை காப்பது நம் கடமையாகும். தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழினம் இவற்றை காக்க என்றென்றும் அ.தி.மு.க. போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #SterliteProtest  #ThambiDurai
    ×