search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா"

    • திருச்சி சோமரசம்பேட்டையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • சரவணபுரத்தில் உள்ள ஒரு மளிகை கடைகாரர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

    ராம்ஜிநகர்,

    திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோமரசம்பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர், நாச்சி குறிச்சி, தாயனூர் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டி கடைகளில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர். அப்போது அல்லித்துறை அருகே உள்ள சரவணபுரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் சுமார் 6 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்து. அல்லித்துறை, சரவணபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பாபு (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை
    • 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல்

    புதுக்கோட்டை,

    அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த முத்துகிருஷ்ணன் (வயது 44), அப்துல்மஜீது (70), ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தளவாபாளையம் பகுதியில் குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
    • மளிகை கடையில் இருந்து ஏராளமான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ். சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த தளவாபாளையம் மேற்கு தெருவை சேர்ந்த கரிகாலன் (52) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தளவாபாளையத்திடில் கள்ள சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • குட்கா விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு குளிர்பான கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று ஆய்வு செய்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்த தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் இரும்பாலை பகு தியில் உள்ள சாலை வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வேகமாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 40 பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை பகு தியில் உள்ள சாலை வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு போலீசார் உதவி கமிஷனர் ஆனந்தி தலைமையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    430 கிலோ குட்கா

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 40 பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 430 கிலோ எடை கொண்ட அந்த குட்காவின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

    இதையடுத்து அந்த காரை குட்காவுடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த பர்வீன் (24), தயாராம் மாலி (20) என்பது தெரிய வந்தது.

    தொடர் விசாரணை

    மேலும் அவர்கள் குட்காவை பெங்களூர் மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு கடத்தி சென்றதும், வாகன சோனையில் போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது. ெதாடர்ந்து அவ ர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கரூர் மாவட்டத்தில் குட்கா விற்ற 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
    • புகையிலை உள்ளிட்ட குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் குட்கா விற்பனை செய்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக குட்கா பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கரூர் மாநகரம், வெங்க மேடு,பசுபதிபாளையம், அரவக்குறிச்சி, வெள்ளியணை, சின்னதாராபுரம், சிந்தாமணிப்பட்டி, மாயனூர், பாலவிடுதி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டனர்.அப்போது, பெட்டிக்கடை, மளிகைகடை, டீக்கடைகளில் மறைத்து வைத்து குட்கா விற்பனை செய்ய முயன்றதாக 10 பேர் மீது போலீ சார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட் டவர்கள் அனைவரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    • ஒரு கடையில் சோதனை நடத்தியபோது குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
    • கடையின் உரிமையாளர் தங்கதுரை, சிவலிங்கம் .ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் அடுத்த பொத்தேரி பாரதியார் தெருவில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஒரு கடையில் சோதனை நடத்தியபோது அங்கு மூட்டை முட்டைகளாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. சுமார் 210 கிலோ குட்கா, புகையிலையை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் தங்கதுரை, சிவலிங்கம் .ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • ஆட்டோவை சோதனை செய்த போது அதில் குட்கா புகையிலை கடத்தி வந்தது தெரியவந்தது.
    • புகையிலை பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக கைதானவர்கள் கூறினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி டி.எஸ்.பி. நாகசங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளபாண்டி, முதல்நிலை போலீசார் சரவணகுமார், சிவப்பிரகாஷ், சேர்மக்கண்ணன், அன்பரசன் ஆகியோர் குத்துக்கல்வலசை பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்த போது வெள்ளமடை மாணிக்கம் மகன் சுரேஷ், ஆட்டோவை ஒட்டிவந்த கீழப்புலியூரை சேர்ந்த சதீஷ் ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா புகையிலை கடத்தி வந்தது தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கரடி குளத்திலிருந்து கொண்டு வந்ததாகவும், மேலும் பொருட்கள் இருப்பதாக கூறியதின் அடிப்படையில் கரடிகுளம் சென்று மேலும் குட்கா புகையிலை கைப்பற்றி, அதை வைத்திருந்த கரடிகுளம் குருசாமி மகன் சுரேஷ் (வயது 31) உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் குற்றாலத்திற்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாகவும், குற்றாலம் காசிமேஜர்புரத்தை சேர்ந்த ஒரு நபர் தலைமையில் நடப்பதாகவும் கூறினார். அந்த நபரை போலீசார் தேடி வருகின்ற னர். மேலும் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கைப்பற்றபட்டது.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள குதிரைகுத்தி பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சரக்கு வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மினி டெம்போவில் ரகசிய அறை

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள குதிரைகுத்தி பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிடெம்போவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த தக்காளி காலிப்பெட்டிகளை அகற்றிவிட்டு பார்த்தபோது அந்த வண்டியில் ரகசிய அறை ஒன்று அமைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து மேலே இருந்த மரப்பலகையை எடுத்து விட்டு பார்த்தபோது அந்த அறைக்குள் மூட்டை, மூட்டையாக 180 கிலோ குட்கா அடுக்கி வைத்தி ருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    டிரைவர் கைது

    இது குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மேச்சேரி வெள்ளார் வெள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த இளையபாரதி (வயது 27) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் இளையபாரதியை போலீசார் கைது செய்தனர். மேலும் மினி ெடம்போ மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்

    இதேபோல் செவ்வாய் பேட்டை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப் போது செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு கார் கேட்பா ரற்று நின்றது. அந்த காரை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கண்டுபிடிக்கப் பட்டது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ஆகும்.

    இந்த குட்கா புகை யிலையை போலீசார் பறிமுதல் போலீஸ் நிலை யம் கொண்டு சென்றனர். அந்த கார் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது கடத்தி வந்தது யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக சலீம் அவற்றை பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்ட சலீமிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் கூலக்கடை பஜார் பகுதியில் உள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ள பாண்டி மற்றும் போலீசார் சரவணகுமார், அன்பரசன், சிவப்பிரகாஷ் ஆகியோர் சோதனை நடத்தினர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த தொழிலாளி சலீம் (வயது 43) என்பதும், அவர் குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக அவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 50 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் ரூ.41 ஆயிரம் ஆகும்.

    • இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செஞ்சுடையாம்பாளை யத்தில் உள்ள பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்டுள்ள மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் பிரேம்குமார் (29) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார்.
    • போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த நாட்டாமங்கலம் கரட்டூர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் இஸ்மாயில் (31). இவரது கடைக்கு நேற்று மாலை கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார். அப்போது கடையில் இருந்த இஸ்மாயிலிடம் குட்கா எத்தனை பண்டல் வேண்டும் என கேட்டார். அதற்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து லிங்கராஜ் தனக்கு வர வேண்டிய பாக்கி தொகையை கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கராஜ், இஸ்மாயிலை தாக்கினார்.

    இது குறித்து இஸ்மாயில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணியிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கராஜை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ×