என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குட்கா"
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரனவீரன் தலைமையில் வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் நேற்று பரமத்திவேலூர் சந்தை பேட்டை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை, மளிகை கடை மற்றும் பெட்டிக்கடை திடீரென சோதனை மேற்கொண்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பரமத்திவேலூர் , சந்தை பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது 40), உழவர் சந்தை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (44) மற்றும் கரூர் மாவட்டம், புகளூர், ராம்நகரை சேர்ந்த சுப்ரமணியன்(56) ஆகிய 3 பேரை பரமத்திவேலூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 300 குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் மகேஷ்(வயது38). நேற்று இவர் மினி லாரியில் ஆலங்குளத்தில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கேரளா மாநிலத்தில் உள்ள அஞ்சல் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். லாரியை ஆலங்குளத்தை சேர்ந்த டிரைவர் ரவி(35) என்பவர் ஓட்டினார்.
லாரி தமிழ்நாடு எல்லையை தாண்டி, கேரளா எல்லையான ஆரியங்காவு பகுதியில் சென்றது. அப்போது அங்குள்ள சோதனை சாவடியில் கேரள போலீசார் மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் உர மூட்டைகளின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மூட்டைகளை போலீசார் சோதனை நடத்தினர். அந்த மூட்டைகளில் பாக்கெட் பாக்கெட்களாக பான் மசாலா, குட்கா பொருட்கள் இருந்தன.
இவற்றை உரமூட்டை போல கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியுடன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பான்மசால, குட்கா ஆகியவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது தொடர்பாக ஆரியங்காவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ், ரவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்