search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள்"

    • நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.
    • தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை பகுதிக்கு தேவையான பூக்கள் நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.முகூர்த்த சீசனின் போது தேவை அதிகரித்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்கள் பாதிக்கின்றனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சில சீசன்களை இலக்கு வைத்து புங்கமுத்தூர், பாப்பனூத்து உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

    சில இடங்களில் மல்லி, அரளி போன்ற சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இருப்பினும், இச்சாகுபடியில் போதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. தேவையான விதை, நாற்றுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. எனவே பெரும்பாலானவர்கள் பூ சாகுபடியில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: -

    பூ சாகுபடியில் ஈடுபட ஆர்வம் இருந்தாலும் போதிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை, ராமநாதபுரம், நிலக்கோட்டை பகுதியில் இருந்து வாங்கி வருகிறோம். கோழிக்கொண்டை சாகுபடியில் நோய்த்தாக்குதலால் மகசூல் பாதிக்கிறது.எனவே உள்ளூர் தேவைக்கு தேவையான பூக்களை உற்பத்தி செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில் பூக்கள் கிடைக்கும் என்றனர். 

    திருப்பதியில் நாளை வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ள நிலையில் பழனியில் இருந்து 600 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. #tirupatitemple

    பழனி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்காக தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் பூக்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்தும் பிரம்மோற்சவ விழாவுக்காக 10 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 600 கிலோ பூக்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    முன்னதாக பழனி மாரியம்மன் கோவில் வளாகத்தில் புஸ்ப கைங்கரிய சபா சார்பில் வாடாமல்லி, பிச்சி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சேகரித்து வைக்கப்பட்டது. பின்னர் அவற்றை தரம் பிரித்து சாக்குகளில் அடைக்கும் பணி நடந்தது. முருகன் கோவில் துணை செந்தில்குமார், ஓட்டல் கண்பத் உரிமையாளர் ஹரிகரமுத்து, சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்பட பலர் பூக்களை சாக்கு மூட்டைகளில் அள்ளி போட்டனர். அதையடுத்து அந்த மூட்டைகள் அனைத்தும் வாடகை வேன் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பதியில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடைபெற உள்ளது. #tirupatitemple

    நாம் பூஜை செய்யும் நேரம் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். எந்த நேரத்தில் செய்யும் பூஜைக்கு எந்த பூக்களை பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
    நாம் பூஜை செய்யும் நேரம் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

    1. விடியற்காலப் பூஜைக்குரிய பூக்கள்
    கொன்றை, சாமந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிறப்பூக்கள்.

    2. பகற்கால பூஜைக்குரிய பூக்கள்
    செந்தாமரை, செவ்வலரி, பாதிரி முதலிய சிவப்பு நிறப்பூக்கள்.

    3. யாம காலப்பூஜைக்குரிய பூக்கள்
    மல்லிகை, முல்லை, தும்பை, வெள்ளைருக்கு முதலிய வெள்ளை நிறப்பூக்கள். பொதுவாக மஞ்சள், வெள்ளை நிறப்பூக்கள் பூஜைக்கு மிக உத்தமம்.
    இறைவனை மனதில் பக்தியோடு, மலர்களை அர்ப்பணித்தாலே போதுமானது. பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை விட சிறப்பான வழிபாடு எதுவும் இல்லை.
    இறைவனுக்கு மிகப்பெரிய செலவில் எதையும் செய்யத் தேவையில்லை. மனதில் பக்தியோடு, மலர்களை அர்ப்பணித்தாலே போதுமானது. பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை விட சிறப்பான வழிபாடு எதுவும் இல்லை. அதே நேரத்தில் பழைய பூக்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சனை செய்யக்கூடாது.

    அர்ச்சனை செய்த பூக்கள், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை காலில் மிதிபடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம். கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது கூடாது.

    திருமாலுக்கு, பவளமல்லி, மரிக்கொழுந்து, துளசி ஆகிய மலர்களும், சிவனுக்கு வில்வ இலை, செவ்வரளிப் பூ ஆகியவையும் சிறப்பு வாய்ந்தவை. முருகப்பெருமானுக்கு முல்லை, செவ்வந்தி, ரோஜா சூட்டலாம். அம்பாளுக்கு வெள்ளை நிறப் பூக்களை சாத்தி வழிபடுவது மகத்துவம் வாய்ந்தது.

    எந்தெந்த மலர்கள் என்ன சிறப்புகளைத் தரும் என்பதைப் பார்க்கலாம்.

    அல்லிப்பூ - செல்வம் பெருகும்

    பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்

    வாடாமல்லி - மரணபயம் நீங்கும்

    மல்லிகை - குடும்ப அமைதி கிடைக்கும்

    செம்பருத்தி - ஆன்ம பலம் கூடும்

    காசாம்பூ - நன்மைகள் சேரும்



    அரளிப்பூ - கடன்கள் அகலும்

    அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை

    ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்

    கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை

    ரோஜா பூ - நினைத்தது நடக்கும்

    மரிக்கொழுந்து - குலதெய்வம் அருள்

    சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்

    செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு

    நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்

    சங்குப்பூ (வெள்ளை) - சிவப்பூஜைக்கு சிறந்தது

    சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது

    மனோரஞ்சிதம் - குடும்ப ஒற்றுமை

    தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்

    நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம்

    முல்லை பூ - தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்

    பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்

    தங்க அரளி (மஞ்சள் பூ) - குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.

    பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்கள் மற்றும் ரிஷிகளின் அருளும், ஆசியும் கிடைக்கும். 
    ×