search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174123"

    • இன்று நினைவு தினம்
    • நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில்:

    அம்பேத்கார் நினைவு நாளையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தினகரன் மாலை அணிவித்தார்.

    தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை செயலாளர் பூதலிங்கம், ஆதி திராவிட அணி அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், செல்வன், பிராங்கிளின், மாநகர செயலாளர் ஆனந்த், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மாலை அணிவித்தார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன்சுந்தர்நாத், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், மாநகர கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாதவன் மற்றும் சந்திரன், சந்துரு,சகாயராஜ், வெங்கடேஸ்,ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் மனோகரன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், அலெக்ஸ்,எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் மணிகண்டன், ராஜபாண்டியன், டைசன், செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
    • வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் மாதிரிபுகைப்படத்தினை அரசுக்கு அளித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடரில், 2021- 2022ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, வீரபாண்டிய கட்டபொம்மனை நயவஞ்சகமாகத் தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்குப் பாடம் புகட்டும் வகையில் தஞ்சையிலிருந்து திருப்பூர் மாவட்டம் தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆண்ட்ரூ கேதிஷ் என்ற ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர்நாயக்கர் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில் அவருக்கு உருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2 கோடியே 60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

    மேலும் மேற்படி அரங்கம் மற்றும் சிலை அமைத்திட ஏதுவாக, 2021-2022ம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டத் திட்ட மதிப்பீட்டினை திருப்பூர் கலெக்டர் மேலொப்பத்துடன் அனுப்பி வைக்குமாறும், முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற ஏதுவாக, ஐந்து மாதிரி வரைபடங்களையும் அனுப்பி வைக்குமாறும் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல முதன்மைதலைமைப் பொறியாளரிடமும் (கட்டடங்கள்) கேட்டுக்கொள்ளப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு திருப்பூர் மாவட்டத்தில் உருவச்சிலையும், அரங்கமும் அமைத்திட நிர்வாக அனுமதியளித்து ஆணை வெளியிடப்பட்டது.

    இந்தநிலையில் 2021-2022-ஆம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ.2,60,00,000 (ரூ. 2கோடியே 60லட்சம் மட்டும்) திட்ட மதிப்பீட்டினை அனுப்பி வைத்து, அத்திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.திட்ட மதிப்பீட்டில் உள்ளடக்கியுள்ள முக்கிய பணிகளின் விவரம் பின்வருமாறு:-

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை வட்டம், தளி-2 கிராமம், மஜரா திருமூர்த்தி நகர், பொதுப்பணித்துறை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள 0.80.98 ஹெக். நிலத்தினை தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு அரங்கம் அமைத்திடவும்,உருவச்சிலையினை உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் அமைத்திட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு முன்நுழைவு அனுமதி வழங்கியும் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கரின் வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதிரிபுகைப்படத்தினை, இணைத்தனுப்பி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளார்.மேலும் திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.2.53,26,974 க்கு நிதியொப்பளிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் அணிவகுப்பு மரியாதை

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க கடந்த 23-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதிதேவி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றன.

    இதில் திருவனந்த புரத்தில் நடந்த நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடந்தது. நவராத்திரி விழா முடிவுற்ற பின்னர் 8-ந் தேதி அங்கிருந்து குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டது. அந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பளித்தனர்.

    இந்நிலையில் நேற்று குமரி - கேரள எல்லைப்பகுதி யான களியக்காவிளையில் பக்தர்கள் மற்றும் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் திரளாக கூடி நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் களியக்காவிளை, படந்தாலுமூடு, திருத்துவபு ரம், குழித்துறை, தபால் நிலைய சந்திப்பு வழியாக குழித்துறை மகா தேவர் ஆலயத்தை வந்த டைந்தது. அங்கு நேற்று தங்கலுக்கு பின்னர் இன்று அதிகாலையில் குழித்துறை மகாதேவர் ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி சிலைகள் வழி அனுப்பப்பட்டது.

    இதில் தமிழக போலீஸ் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு அங்கிருந்து பத்மநாப புரத்திற்கு புறப்பட்டு சென்றது.இந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

    பத்மநாபபுரத்திற்கு நேற்று வந்து சேர்ந்த சாமி சிலைகள் நாளை (10-ந் தேதி) அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்கு வந்து சேரும். சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஞாயிற்றுகிழமை மாலையுடன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழா வில் பங்கேற்க கடந்த மாதம் 23-ந் தேதி சுசீந்தி ரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங் கள் ஊர்வலமாக சென்றன.

    நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கிய நிலையில் சுவாமி விக்ர கங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்துநேற்று முன்தினம் காலை கரமனை ஆரியசாலை கோயிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தார்.

    மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரசாமி சரஸ்வதி மண்டபத்தில்எ ழுந்தருளினார். வேட்டைக் களத்தை மூன்று முறை சுற்றி வந்த அவர் வேட்டை முடிந்த பின்னர் மீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்து சேர்ந்தார். சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின்னர் ஸ்ரீ பத்ம நாபசுவாமி கோயிலுக்கு சென்றார்.பள்ளிவேட் டையை தரிசிக்க பூஜைப் புரை சரஸ்வதி மண்டபத் தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    மாலையில் செந் திட்டை பகவதி கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனையும், குமாரசாமி யையும் கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத் தில் முன்னே எழுந்தருள செய்தனர். அங்கு மன்னர் குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் விக்கரங்கள் மீண்டும் கோயில்களுக்கு சென்றன.

    நவராத்திரி விக்ரகங் களுக்கு நேற்று நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக் கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை குமாரசாமி, முன்னுதித்த நங்கை அம் மன், சரஸ்வதி தேவி விக்ரகங்கள் இன்று மீண்டும் பத்மநாப புரம் புறப்பபட்டன. வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை மாலையு டன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    • வெண்கல சிலை சென்னையில் தயாராகிறது
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் சிலை உள்ளது.

    இதையடுத்து கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க திமுக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தற்பொழுது பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அனுமதி இல்லாததால் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்து வருகிறார். வெங்கல சிலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடித்து அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அழைத்து திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான பணிகள் திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் நடந்து வருகிறது. அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சிலை அமைக்கப்பட உள்ள பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது .சென்னை ஓமந்தூரார் அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை தயாரித்த தீனதயாள் என்பவர் சிலையை தயாரித்து வருகிறார்.சென்னை மீஞ்சூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் வெண்கலசிலை தயாராகி வருகிறது. இந்த சிலையை அடுத்த மாதத்திற்குள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியுடன் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • போலீசார் தாக்கியதாக கூறி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டபட்டி கிராமத்தில் உள்ள காலனியில் புதிதாக அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. உரிய அனுமதி பெறாமல் வைக்கபட்ட சிலையை அகற்ற காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலித் அமைப்புகள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சிலையின் முன்பாக அமர்ந்து, சிலையை எடுத்தல் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    அப்போது அங்கு வந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு வந்து பேசினார். ஆனால், அவரது பேச்சை யாரும் கேட்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை அகற்றி எடுத்து செல்லப்பட்டது.

    இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிலை விவகாரம் பிரச்சனை ஓய்ந்ததால், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஓமலூரில் கொண்டு வந்து விடப்பட்டனர்.

    இந்தநிலையில், இளம்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர் சமுராய்குருவை மட்டும் தனியாக வாகனத்தில் அழைத்து சென்றதாகவும், இதுபற்றி அவர் கேட்டபோது, மேச்சேரி இன்ஸ்பெக்டர் அவரை தாக்கியதாகவும் கூறி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதுகுளத்தூரில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலை வைக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
    • முதுகுளத்தூர் தொகுதி 3.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதியாகும்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். நவாஸ்கனி எம்.பி. முன்னிலை வகித்தார்.மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி வரவேற்றார்.

    பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு விலையி ல்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கி பேசியதாவது:-

    முதுகுளத்தூர் தொகுதி ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக இருந்தது. இப்போது முன்னேறிய பகுதியாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் பணிகள் நடைபெறுகின்றன.

    முதுகுளத்தூர்-கடலாடி செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் ரூ.21 கோடி செலவில் பைபாஸ் சாலையும், உடைய நாதபுரம் அருகில் பைபாஸ் சாலையும் அமைய உள்ளன. முதுகுளத்தூரில் தேவர் சமூகத்திற்கு ஒரு மகால், செல்லூரில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலை அமைக்கப்படும்.

    கன்னிராஜபுரம் கிராமத்தில் காமராஜருக்கு சிலையும், ராமசாமிபட்டி கிராமத்தில் கட்ட பொம்மனுக்கு சிலையும் அமைக்கப்படும். முதுகுளத்தூர் பகுதியில் சமூக பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை. எல்லோரும் இணைந்தே பணியாற்றுகிறார்கள்.

    குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை என்று கிராம மக்கள் கூறினர். மேலும் செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள பிற்பட்டோர் நல விடுதியில் சாப்பாடு நல்லவிதமாக போடுவதில்லை என்றும் புகார் வந்துள்ளது. இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.

    முதுகுளத்தூர் தொடுதியில் கூடுதலாக 40 பஸ்கள் விடப்பட்டன. அதில் சில பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் விடப்படும். முதுகுளத்தூர் தொகுதி 3.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதியாகும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. அதே போல வர உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பேரூராட்சி சேர்மன் ஷாஜகான், கவுன்சிலர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பூபதி மணி, செல்வநாயகபுரம் கருணாநிதி, உலகநாதன். வாகைக்குளம் அர்ச்சுனன், சேகர், செல்வநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பால்சாமி, சாம்பக்குளம் ராஜாத்தி கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
    • பின்னர் மலர் தூவி மரியாதையும் செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செய்தனர்.

    இதில் ஒன்றிய செயலாளர் பரமசிவன், ஒன்றிய செயலாளர் எழில் பாலகிருஷ்ணன், ஒன்றிய அவை தலைவர்சாமி, சிவ.மகேந்திரன், நகரதுணை செயலாளர்பூண்டி பிரசாந்த், பிரபாகரன், தாமோதரன், நாசர், கொடி ஜெயராமன்சாமிநாதன் கார்த்திகேயன்உள்ளிட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    • வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.
    • கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.

    இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர்ரவி, முருகன் சிலையை கைப்பற்றி வேட்டைக்காரனிருப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வைத்து தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இந்த சிலையை யாராவது விட்டு சென்றர்களா? இல்லை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா? என விசாரித்து வருகின்றனர்.

    • வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது.
    • வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தி லுள்ள மூன்றடுக்கு வணிக கட்டத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

    இதற்கிடையே, வணிக கட்டடத்தின் 3-வது அடுக்கின் மேல் பகுதியில், 8 அடி உயர இயேசுவின் முழு உருவ பைபர் சிலை கடந்த ஜனவரி மாதம் 22 -ம் தேதி நிறுவப்பட்டது.

    அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இச்சிலையை அகற்ற வேண்டு மென சிலர் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள் தேவாலயத்திற்கு முன் கூடியதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இச்சிலை திரைச்சேலைகளால் மூடி மறைக்கப்பட்டது.

    கடந்த சில தினங்களுக்கு முன் திரைச்சேலைகள் அகற்றப்பட்டு சிலை திறக்கப்பட்டது. அனுமதி இன்றி வைக்கப்பட்ட இயேசு சிலை திறக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள், தேவாலய நிர்வாகிகளுடன் அமைதிப்பேச்சு நடத்தினர்.

    இறுதியாக, தேவாலய வணிக கட்டடத்தின் மேல் நிறுவப்பட்ட இயேசு உருவசிலை, திரைச்சேலைக் கொண்டு நேற்று முன்தினம் மீண்டும் மூடி மறைக்கப்பட்டது. முறையான அனுமதி பெற்ற பிறகு இயேசு‌ சிலையை திறக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. இச்சிலையை பத்தாம் பத்திநாதர் தேவாலய வளாகத்திற்குள் நிறுவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார் வழங்கினார்
    • ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்கள் வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    ராகுல்காந்தி பாதயாத்திரையின் போது சுங்கான்கடை எல்லை பகுதியில் ராகுல்காந்திக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் அஜிகுமார் தலைமையில் துணை தலைவர்கள், வட்டார தலைவர்கள், கிராம ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு ராகுல் காந்தி மாலை அணிவித்தார். மேலும் ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்களை அஜிகுமார் வழங்கினார்.

    அதனை பெற்று கொண்ட ராகுல் காந்தி அந்த புறாக்களை வானில் பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் 2½ அடி உயரமுள்ள தேக்கு மரத்தாலான ராஜீவ் காந்தி உருவ சிலையை ராகுல் காந்தியிடம் அஜிகுமார் வழங்கினார்.

    • கன்னியாகுமரி, குழித்துறை ஆற்றில் கரைக்கப்படுகிறது
    • விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அரசின் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் 1250-க்கு மேற்பட்ட இடங் களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    கோவில்கள், வீடுகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலை களை பிரதிஷ்டை செய்து உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. போலீசாரும் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று முதல் மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்ப டுகிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வாகம் 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது. கன்னியாகுமரி, பள்ளிகொண்டான் அணை, வெட்டுமடை, மிடலாம், தேங்காய்பட்டணம், திற்பரப்பு அருவி, தாமிர பரணி ஆறு உள்பட 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது.

    இன்று சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல் லப்பட்டு கரைக்கப்படு கிறது. இதை யடுத்து நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பிரதிஷ்டை செய் யப்பட்டிருந்த சிலைகள் இன்று காலையில் பூஜை கள் செய்யப்பட்டு பிறகு டிராக்டர் மற்றும் மினி டெம்போக்களில் ஏற்றி னார்கள். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவி லுக்கு நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வந்தனர். இங்கி ருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இன்று மாலை புறப்பட்டு செல்கிறது.

    கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, கொட்டா ரம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது. அங்கு கடற்கரையில் சிலை களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் மேல்புறம் பகுதியில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம் குழித்துறை தாமிரபரணி ஆற்றிற்கு கொண்டு செல் லப்படுகிறது. அங்கு ஆற்றங்க ரையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கரைக்கப்ப டுகிறது. விநாயகர் சிலை கள் கரைக்கப்படும். கன்னி யாகுமரி, குழித்துறை தாமிர பரணி ஆறு பகுதிகளில் பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப் படை வசதிகள், மின்வி ளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது அரசின் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவு றுத்தி உள்ளனர். ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைப்பதற்கும் கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

    ×