search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • தொண்டி அருகே உலக மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • இதில் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருவெற்றியூர் சமுதாயக்கூடத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலகு, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட சமூக நலத்துறை, மருத்துவத்துறை, சைல்டு லைன் மற்றும் வேல்டு விஷன் தொண்டு நிறுவனம் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின. ஸ்பீடு அரசு சாரா தொண்டு நிறுவன இயக்குநர் தேவராஜ் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் சந்திர எபிநேசர் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாசுகி, முதன்மை மருத்துவ அலுவலர் எட்வின், சமூக நல விரிவாக்க அலுவலர் மெர்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித நார்பட் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வேல்டு விஷன் தொண்டு நிறுவன ஊழியர்களின் கவிதை பாடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் தொண்டு நிறுவன தன்னார்வலர் பொன்னுத்தாயி நன்றி கூறினார். இதில் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
    • ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பகுதியில், ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வட மாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில், ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை நகரான திருப்பூரில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிகார், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி, திருப்பூரில் உள்ள பணியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள், தங்களது குடும்பத்தினரோடு இன்று முதலே ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து, ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர்.

    இதே போல் நாளையும் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்றார்.
    • வார்டு செயலாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மத சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்றார்.

    இதனை கொண்டாடும் வகையில், ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நேற்று மாலை,மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    மேலும் இதில், மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, மற்றும் மாநில மாவட்ட ,மாநகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி நகர காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சிவகிரி:

    காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. அறிவுரையின்படி, மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து 7-ம் திருநாள் மண்டபம் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஓ.பி.சி. தலைவர் திருஞானம், நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன், நகர இலக்கிய அணித்தலைவர் அசோக், நகர காங்கிரஸ் துணைத்தலைவர்கள் எம்.குமார், நாட்டாமை மாணிக்கம், எஸ்.வேலுச்சாமி, செயலாளர்கள் வெள்ளைச்சாமி, குட்டி டெய்லர், ஆறுமுகம், கணேசன், மாடசாமி, வெள்ளத்துரை, மணி ஆசாரி மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை ஜன் ஒளஷாதி திவாஸ் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.
    • தமிழகத்திலேயே 928 மருந்து விற்பனை நிலையங்களில் சிறப்பாக செயல்படும்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஜன் ஒளஷாதி திவாஸ் (மக்கள் மருந்தக வார கொண்டாட்டம்) இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உறுதிமொழி பாதயாத்திரை (பேரணி), பொதுமக்களுக்கான மருத்துவ முகாம் முதலானவை நடைபெறும். இதன் ஒரு அங்கமாக தமிழகத்திலேயே 928 மருந்து விற்பனை நிலையங்களில் சிறப்பாக செயல்படும் திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பாக ஜன் ஒளஷாதி திவாஸ் கொண்டாடப்பட்டது. முதல் நாளான நேற்று வாகனத்தில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று மக்கள் மருந்தகத்தின் சிறப்புகளைப் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    இரண்டாம் நாளான இன்று பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி பாதயாத்திரை (பேரணி) நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். மக்கள் மருந்தகத்தின் உரிமையாளரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான அருண் பாரத், மத்திய பார்வையாளர் அரவிந்த்சாமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    ஊர்வலமானது மக்கள் மருந்தகத்தின் முன்பு துவங்கி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் சாலை வழியாக சென்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்றோர் மக்கள் மருந்தகத்தின் சிறப்புகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். நாளை காலை 10.30 மணியளவில் மங்கலம் சாலையிலுள்ள திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் தாயின் ஆற்றல் மரியாதையும், சுயமரியாதையும் என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருப்பூர் மக்கள் மருந்தக பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.
    • அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா, கீழக்கரை நகர்மன்ற துணை தலைவரும், நகர் இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான் தலைமையில் நடந்தது.

    அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 500 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர். கீழக்கரை நகர் தி.மு.க. நிர்வாகிகள் கென்னடி, முனீஸ்வரன், பாண்டியம்மாள், மணிகண்டன், இளைஞர் அணி நிர்வாகிகள் எபன், சுபியான், பயாஸ், நயீம், முகேஷ், காளிதாஸ், சரவணன் நகர் மன்ற உறுப்பினர் ராணி, சூரிய கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் விழாவில் முன்னிலை வகித்தார்.
    • பிறந்தநாள் விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    சிவகிரி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பில் சிவகிரி பஸ் நிலையம் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் மருதப்பன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேராசிரியர் நல்லசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் முனி யாண்டி, மருதுபாண்டியன், சி.எஸ்.மணி, தங்கராஜ், கார்த்திக், முருகன், அழகு சுந்தரம், ராமச்சந்திரன், முத்தையா, குமாரவேல், ஆனந்தா ஆறுமுகம், பேரூர் துணை செயலாளர், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை விழா ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர அ.தி.மு.க. சார்பில் நடந்தது. தெற்கு நகர செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட பேரவை துணைதலைவர் திருப்பதி, மேற்கு மாவட்ட மகளிரணி கவிதா, தெற்கு நகர அவைதலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

    41-வது வார்டு பொன்னகரம் பகுதியில் அ.தி.மு.க. கொடியேற்றி ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    விழாவில் மின்சார பிரிவு மண்டல பொருளாளர் ரமேஷ்குமார், வார்டு செயலாளர் காசிராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜா, நகர துணை செயலாளர் சங்கர் ராஜ், வார்டு பொருளாளர் கணேஷ் குமார், பெருமாள், சக்தி, கோபி, விக்னேஷ்,நடராஜன், இணைசெயலாளர் யோகேஷ் ,ராஜேந்திரன், முத்துக்குமார், பாலமுருகன், கோவிந்தராஜ், வார்டு பிரதிநிதி சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கினர். இதேபோல் பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கபாண்டி, ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முகபாண்டியன், ராஜா, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா, முன்னாள் சேர்மன் எம்.கே.முருகேசன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மருத்துவரணி கருப்பட்டி கருப்பையா, நகர இளைஞரணி கேபிள் மணி, துரைக்கண்ணன், கச்சிராயிருப்பு முனியாண்டி, இலக்கிய அணி மணி, ஆசிரியர் ஜெய்பிரகாஷ், தியாகு, வார்டு செயலாளர் மணிகண்டன், தண்ட பாணி, மன்னாடி மங்கலம் ராஜபாண்டி, மேலக்கால் காசிலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திருமானூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம் நடைபெற்றது
    • கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி:

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பழுர் பழைய பஸ்நிலையத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்ததை கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் அறிவுறுத்தலின் படி திருமானூர் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாகவும், கீழப்பழுர் நகரக் கழகத்தின் சார்பாகவும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஒன்றிய கழக அவைத் தலைவர் சக்திவேல், தனசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கழக செயலாளர் கமலக்கண்ணன், இலந்தை தேவர், ஒன்றிய முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் நல்லதம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் ஹனிபா, அம்மா பேரவை சீராளன், கீழைக்கழக பிரதிநிதி ரவி, ராஜேஸ்வரி, மலர்விழி நல்லதம்பி, கூட்டுரவு சங்க தலைவர் பூம்புகார், பாண்டியன், அம்மா பேரவை நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொன்டனர்.


    • 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாட்டம் நடக்கிறது.
    • கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை யின் சார்பில் வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்படுகிறது.

    அரசு அலுவலகங்களுக்கு ஆட்சிமொழி சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தல், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர்களுடன் பட்டி மன்றம், ஒன்றியம், வட்டம் அளவில் அரசுப் பணியாளர்கள், பொது மக்கள், தமிழ் அமைப்பு களுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் ஆகியவை நடத்தி ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியை தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்று நடத்த தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரத்தினை சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராகுல்காந்தி நாடு முழுவதும் 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்து காஷ்மீரில் நிறைவு செய்தார்.
    • காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    கிருஷ்ணகிரி,

    கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி நாடு முழுவதும் 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்து காஷ்மீரில் நிறைவு செய்தார்.

    இந்த நடைபயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில், நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார்.

    இதில் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். இதில், மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தகி, ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், இளைஞர் காங்கிரஸ் ஆதில், வேப்பனப்பள்ளி கல்யாணி, மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டுரங்கன், வட்டாரத் தலைவர் சித்திக், இர்பான், மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் அஜீஸ்உல்லா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கவியரசன், மாவட்ட துணைத் தலைவர் நரசிம்மன், மாவட்ட பொதுச் செயலாளர் கமால்கான், நகரத் துணைத் தலைவர் மரிய இருதயம், நகர செயலாளர் அமுல்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், விஜயராஜ் என்கிற குட்டி, பாபு, சொக்கலிங்கம், சரவணகுமார், மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சதாம் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×