search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் திருச்சியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டினர்
    • மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட தில்லை நகர் அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    திருச்சி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட தில்லை நகர் அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் வனிதா, பகுதிச் செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, என்.எஸ்.பூபதி, நாகநாதர் பாண்டி, கலைவாணன், என்ஜூனியர் இப்ராம்ஷா எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அப்பா குட்டி, வட்ட செயலாளர்கள் தில்லை முருகன், கண்ணியப்பன், ராஜகோபால், ஜெகதீசன், சீனிவாசன், கல்லுக்குழி முருகன் செல்வமணி, அப்துல் ரகுமான், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட த் தலைவர் ஜான் எட்வர்ட் குமார், பகுதி பிரதிநிதிகள் திருநாவுக்கரசு, மகேந்திரன், ஹாரூண், மற்றும் ரோஜர், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ், தில்லை நகர் விஷ்வா, மார்க்கெட் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    • ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டினர்
    • அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கப்பட்டதற்கு தொண்டர்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பினர்

    ஜெயங்கொண்டம்:

    எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக அங்கீகரித்ததை வரவேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராம ஜெயலிங்கம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சை, நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் கல்யாண சுந்தரம், விக்ரம பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கப்பட்டதற்கு வரவேற்பு கோஷங்கள் எழுப்பியவாறு பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


    • சித்திரை 2-ந் தேதி மலையாள மக்களின் விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கோத்தகிரி,

    சித்திரை 1-ந் தேதி தமிழர்களின் புது வருட பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதற்கு அடுத்த நாள் மலையாள மக்களின் விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி விஷூ கனிக்கு முந்தைய தினம் பூ, பழங்கள், நகைகளின் மூலம் பூஜையறையில் உள்ள சாமி சிலைகள் மற்றும் போட்டோக்களை அலங்கரித்து அடுத்த நாள் காலை சூரிய உதயதிற்கு முன்பதாக குடும்பத்தினர் அனைவரும் அந்த அலங்கரிக்க ப்பட்ட சாமி சிலை மற்றும் போட்டோக்களை வணங்குவர். பின்பு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வணங்கி தங்களுடைய சக நண்பர்களுக்கு வீட்டில் வைத்து உணவுகளை அளித்து அவர்களுக்கு தங்களால் முடிந்த பணம் போன்றவற்றை வழங்குவர். இதனை கைநீட்டம் என்றும் அழைப்பர்.

    இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் உள்ள மலையாள மக்கள் காலை முதலே தங்களின் வீடுகளில் விஷூ கனி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    கோத்தகிரி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

    • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டினர்
    • திருப்பலியை ஆலய பங்கு தந்தை அதிபர் தங்கசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார்.

    திருமானூர்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கருக்காவூர் என்னும் ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப் பட்ட சுற்றுலா தலங்க–ளில் ஒன்றான அடைக்கிற அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையான இன்று ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா அதிகாலை 12 மணிக்கு நடைபெற்றது.இயேசு கிறிஸ்து சுமார் கி.பி. 33 ஆம் ஆண்டு சிலு–வையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவிலிருந்து உயிர்த்ததை குறிக்கும் வித–மாக கிறிஸ்தவர்கள் கொண் டாடும் இந்த நாள் 40 நாள் தவக்காலத்தில் முடிவில் நடைபெறுகிறது.

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு திருப்பலியை ஆலய பங்கு தந்தை அதிபர் தங்கசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார். திரளான கிறிஸ் தவர்கள் மற்றும் மாற்று மதத்தினர் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாளில் வணங்கி அருள் பெற்று சென்றனர். நிகழ்ச்சியை உதவி பங்கு தந்தை ஞான அருள் தாஸ் நன்றி கூறினார் .




    • நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து விலக்கு: அரியலூர் மாவட்ட விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
    • பொதுமக்கள் உற்சா–கமாக கோஷம் எழுப்பி அரசுக்கு நன்றி தெரி–வித்தனர்.

    உடையார்பாளையம்

    காவிரி டெல்டா மாவட் டங்களில் உள்ள சேத்தி–யாத்தோப்பு, மைக்கேல் பட்டி, வடசேரியில் தனி–யார் மூலம் நிலக்கரி சுரங் கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண் டும் என்று பிரதமர் நரேந் திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

    அரிய–லூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி திட்ட பகுதியான பருக்கள் கிரா–மத்தில் விவ–சாயிகள் மற்றும் பொது–மக்கள் இத்திட்டத் திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த–னர்.இந்தநிலையில் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக மத்திய சுரங் கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறி–வித்தார். இதையடுத்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பருக்கள் கிராமத்தில் அதனை வரவேற்ற மக்கள் மகிழ்ச்சியாக கொண்டா–டினர்.

    மேலும் கிராமத்தின் முக்கிய பகுதியில் ஒன்று கூடிய மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங் கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்ப–டுத்தினர். உற்சா–கமாக கோஷம் எழுப்பி அரசுக்கு நன்றி தெரி–வித்தனர்.இதுகுறித்து விவசாயி புகழேந்தி கூறு–கையில், பருக்கள் கிராமம் முற்றும் முதலுமாக நிலக் கடலை முந்திரி உள்ளிட்ட விவ–சாயிகளை நம்பி பிழைக்கும் கிராமம்.இங்குள்ள மக்களுக்கு விவசா–யத்தை தவிர வேறு எது–வுமே தெரியாது. திடீரென நிலக்கரி சுரங்க ஏழு அறிவிப்பு வெளியா–னதும் மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

    தற்போது மத்திய அமைச்சர் நிலக்கரி ஏல நடைமுறையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு விளக்கு அளித்து அறிவித் திருப்பது எங்கள் பகுதி விவசாயிகளுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது என்றார். விவசாயி சோமசுந்தரம் கூறுகையில், எங்கள் கிரா–மத்தில் நிலக்கரி திட்டத் திற்கு சுரங்கம் அமைக்க இருப்பதாக தகவல் பரவி–யதை அடுத்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். கடந்த மூன்று நாட்களாக நிம்மதி இன்றி என்ன செய்வது என்று எங்கள் கிராமம் மக்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

    நாங்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். எங்களுக்கு இந்த கிராமத்தை விட்டு வேறு எங்கு சென்று தங்கு–வதற்கான வாய்ப்பு ஏற்பட்டா–லும் அது நிம்ம–தியை கொடுக்காது. இப் போது அரசு நிலக்கரி திட்ட ஏலத்தை தமிழகத் தில் விளக்கு அளித்து அறிவித்திருப்பது நிச்சயமாக எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றார்.


    • என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்த நாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.
    • ”வாழப் பழகலாம் வாங்க” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, ந.அ.மஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் ந.அ.மஞ்சம்மாள் தொழில் நுட்பக்கல்லூாி ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவிய கல்வி வள்ளல், தொழில திபா் அமரா் என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்தநாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.

    முதல்நாள் நிகழ்வாக, என்.ஆா்.கிருஷ்ணம ராஜா மண்டபத்தில் செந்த மிழ்ச்சுடா் சிவக்குமாா் "வாழப் பழகலாம் வாங்க" என்னும் தலைப்பில் சொ ற்பொழிவாற்றினாா்.

    2-ம் நாள் விழா மதுரை ரோட்டில் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள "சாந்தி ஸ்தல்" நினைவுப் பூங்காவில் நடை பெற்றன. காலை நிகழ்ச்சி யில், மானேஜிங் டிரஸ்ட்டி என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா நிறுவனரது நினை வாலயத்தில் மாலைகள் அணிவித்து மலா்களால் வழிபாடு செய்தாா். மேலும், நினைவுப்பூங்காவைப் பராமரித்துவரும் ஊழியா்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினாா். தொடா்ந்து ஸ்ரீவில்லி புத்தூா் ஸ்திரிரத்னா கலைவளர்மணி உமா சந்திரசேகா் மற்றும் குழுவினரின் கீா்த்தனாஞ்ஜலி நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளா் மஞ்சுளா கிருஷ்ணமூா்த்தி ராஜா முன்னிலை வகித்தாா்.

    விழாவில், கடையநல்லூா் முனைவா் சங்கர நாரா யணன் வீணை இசையால் நிறுவனருக்கு வீணாஞ்ஜலி செலுத்தினாா். ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிாியா் நல்லா சிாியர் ரமேஷ் வரவேற்றுப் பேசினாா். முடிவில் பட்டதாாி உதவித் தலைமை ஆசிாியா் இளையபெருமாள் நன்றி கூறினாா். தமிழாசி ரியர் பிரான்சிஸ் அருள்ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    • ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    • நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை யடுத்து தென்திருப்பேரை மற்றும் ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி யும் கொண்டாடினர்.

    தென்திருப்பேரை

    தென்திருப்பேரை மெயின் ரோடு கால்நடை மருத்துவ மனை அருகில் நகர செயலாளர் ஆறுமுகநயினார் தலைமையில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் முன்னிலையில் பட்டாசு வெடித்து லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் சடகோபன், வார்டு செயலாளர்கள் மாரியப்பன், பிரேம்ஆனந்த், சந்துரு, அருணாசலம், லட்சு மணன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆழ்வார்திருநகரி பஜாரில் நகர அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி முன்னிலையில் நகர செயலாளர் செந்தில் ராஜ குமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் கே.டி.சி. பெரியசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவ சுப்பிரமணியன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் நாகமணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வேலுசாமி, நகர துணைச்செயலாளர் விஸ்வநாதன், இளைஞரணி செயலாளர் லட்சுமணன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மரிய அடைக்கலம், சிறுபான்மை பிரிவு செய லாளர் தம்புராஜ், விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி, ஆனந்தவெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    ஆழ்வார்திருநகரியில் நகர செயலாளர் செந்தில் ராஜகுமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    ஆழ்வார்திருநகரியில் நகர செயலாளர் செந்தில் ராஜகுமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் கொண்டாடப்பட்டது.


     


    • பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை தொடர்ந்து கொண்டாட்டம்
    • பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர்

    திருமானூர்,

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.அதன்படி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் சார்பாக கொண்டப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமையில் கீழப்பழூரில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து , இனிப்பு வழங்கி கொண்டாடினர்.மேற்கு ஒன்றிய சார்பாக அக்பர் சரீப். தனலட்சுமி மருதமுத்து. செந்தில்குமார். கமலக்கண்ணன். மலர்விழி நல்லதம்பி. பாவேந்தன். இலந்தை தேவர். இளையராஜா. மணிவேல். சித்ரா உதயகுமார். அய்யாக்கண்ணு. தில்லை திருவாசகமணி. மற்றும் பல தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து திருமானூர் கிழக்கு ஒன்றிய சார்பாக ஒன்றிய செயலாளர் வடிவழகன் தலைமையில் திருமானூரில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில் சேட்டு ராஜேந்திரன் டி வி ஆர் கார்த்தி. ஜே கே கார்த்தி. மகாலட்சுமி கருணாநிதி. நடராஜன். சரவணன், முருகேசன், சௌந்தர், சபரிநாதன் , தவமணி, சாமிநாதன், மாரியப்பன். பிரதீவு ராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்றுதள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றுக்கொ ண்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.அதேபோல் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்ஜிஆர். இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணைச்செ யலாளர் பூலுவப்பட்டி பாலு, இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர் ,பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், ஹரிஹரசுதன், கண்ணன், திலகர் நகர் சுப்பு, தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கங்கைகொண்ட சோழபுரத்தில் உற்சாக கொண்டாட்டம்
    • நடனம், கும்மியடி, கயிறு இழுத்தலில் அசத்திய பெண் போலீசார்

    அரியலூர்,

    மீன்சுருட்டி: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் சிறப்பு பிரிவுகள் ஆகியவற்றில் பெண் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக பெண் ஊர்க்காவல் படையினரும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து பெண் போலீசாரின் பணியினை பாராட்டும் வகையிலும், மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக பணிபுரிய ஏதுவாக அமையும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பிய பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, உயர் அதிகாரிகளின் அனுமதியுடன், பெண் போலீசார் அனைவரையும் நேற்று ஒரு நாள் சுற்றுலா அழைத்து சென்றார். இதில் அவர்கள் அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் மாளிகைமேடு ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் பெண் போலீசார் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கும்மியடித்தும், கலை நிகழ்ச்சியில் நடனமாடியும், பாட்டு பாடியும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இது குறித்து பெண் போலீசார் கூறுகையில், நாங்கள் போலீஸ் பணியில் சேர்ந்ததில் இருந்து இதுபோன்று சக பெண் போலீசாருடன் ஒன்றாக இன்ப சுற்றுலா சென்றது இல்லை. முதல் முறையாக எங்களை சுற்றுலாவிற்கு அழைத்து சென்று, எங்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம், என்றனர்.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் சார்பில் நடைபெற்றது
    • 6 ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக் கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து வேந்தர் சீனிவாசன், இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தனர். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா வரவேற்புரை வழங்கினார்.இந் நிகழ்வின் துவக்கத்தில் வேந்தர் தலைமை உரையாற்றும் போது, பெண்களின் முக்கியத்துவம் குறித்தும் பெற்றோர்களின் பெருமை குறித்தும் வாழ்நாட்களில் நாம் வணங்கக்கூடிய தெய்வம் நம் பெற்றோர்கள் என்ற பொன்னான கருத்துகளை முன் மொழிந்தார்.இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் தம் உரையில், பெண்ணினத்தின் பெருமையினையும் பெண்களுக்கான வளர்ச்சி நிலைகளையும் எடுத்துக்கூறினார்.சிறப்பு விருந்தினர்களாக கலெக்டர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளா தேவி, வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அ.லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் சிறப்பை பற்றி பேசினர்.இதனைத் தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் அனைத்து கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி முதல்வர் சாந்தா, நன்றியுரை வழங்கினார்.நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி முதல்வர்கள். புல முதன்மையர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் தனலட்சமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் பயிலும் 6000 மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்றது
    • வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் சார்பில் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், ஹோலி பண்டிகையின்போது சாதி, மதம், இனம், மொழி, நிறம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற மகத்துவம் ஓங்கி நிற்பது இந்த விழாவின் சிறப்பாகும். நமது கல்விக்குழுமத்தில் பயிலும் வட மாநில மாணவர்களுடன் இணைந்து நமது மாணவர்கள் சகோதர மனப்பான்மையுடன் இந்த விழாவை கொண்டாடுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.இவ்விழாவில் கலர் பொடிகளை தூவி மகிழ்வார்கள். வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. அதனால் அனைவரும் இயற்கையான வண்ண பொடிகளை கொண்டு ஹோலியை கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.ஹோலி பண்டிகையையொட்டி ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கலர் பொடிகளைத் தூவியும் திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவில் 200 மேற்பட்ட வடமாநில மாணவர்கள் மற்றும் முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×