search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175048"

    • ஓட்டை-உடைசல் பஸ்களை இயக்குவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக விளங்குகிறது. இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை பகுதியில் செயல்பட்டு வரும். தொழில் நிறுவனங் களில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு பஸ்கள் போதுமான அளவில் வில்லை. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசல் பஸ்களாகவே உள்ளன. அவைகளில் கம்பிகள் உடைந்து நீட்டிக்கொண்டு பயணிகளை பயமுறுத்துகின்றன.

    சில பஸ்களில் இருக்கைகள் அமர முடியாத அளவில் கிழிந்து சரிந்து சேதமாக காட்சியளிக் கின்றன. சில டவுன் பஸ்கள் தள்ளாடியபடியே செல்கின்றன. மழை காலங்களில் பல பஸ்களின் மேற்கூரை சேதமாகி பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. அப்போது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில பஸ்களில் குடை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே தற்போதுபெண்களுக்கு கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்களில் பல போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் அதில் பயணம் செய்யும் போது சர்க்கஸ் வாகனங்களில் செல்வது போல் உள்ளது.

    மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்ல போதிய பஸ்கள் இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் பஸ் நிறுத்தம் வரும்போது டிரைவர்கள் பெயரளவுக்கு நிறுத்திவிட்டு அவர்கள் ஏறுவதற்குள் பஸ்களை எடுத்துச்செல்கின்றனர். இதேநிலை மகளிர் கட்டணமில்லா பஸ்களிலும் உள்ளது.

    எனவே பயணிகளின் நலன் கருதி மதுரை மாவட்டத்திற்கு தேவையான அளவு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும். புதிதாக வாங்கப்படும் பஸ்களை அதிகமாக மதுரைக்கு வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது.
    • குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் நாள்தோறும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.

    இந்த சூழலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பஸ் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை.சேதம் அடைந்த இருக்கைகள், காட்சிப் பொருளான குடிநீர் தொட்டி, சுகாதார வளாக வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வெளிமாவட்ட மக்கள் ஒன்றிணைந்து பிரிந்து செல்லும் இடமாக உடுமலை மத்திய பஸ் நிலையம் உள்ளது.இங்கு பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவில்லை. இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது. அல்லது தரையில் அமர வேண்டிய சூழல் உள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது. முக்கியமாக அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சுகாதார வளாக வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பெண்கள் ,குழந்தைகள், கர்ப்பிணிகள், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

    ஆண்களுக்காக கட்டப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதி பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அவர்கள் கோரிக்கை வைக்கும் முன்பே நிறைவேற்றித் தர வேண்டியது அவர்களது கடமையாகும். ஆனால் குறைபாடுகள் கண்ணுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் செல்வது வேதனை அளிக்கிறது.

    உடுமலை மத்திய பஸ் நிலையம் என்பது சுற்றுப்புற கிராம பொதுமக்களை ஒன்றிணைக்கும் பகுதியாகும். இங்கு ஏற்படுகின்ற சிறு குறைபாடு கூட அனைத்து கிராமங்களிலும் எதிரொலிக்க கூடிய சூழல் உள்ளது. இதனால் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருக்கைகள், குடிநீர், சுகாதார வளாக வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றனர். 

    • 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள், அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில்,அதில் சில நாற்காலிகள் உடைந்து, சாய்ந்து கிடக்கின்றன.இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு பகுதி களை இணைக்கும்
    • வந்தேபாரத் ரெயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்க வேண்டும்.

    நாகர்கோவில் :சென்னை- கன்னியாகுமரி வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் - பயணிகள் சங்கம் கோரிக்கை

    சென்னையில் வருகிற 8-ந் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை மற்றும் தாம்பரம் - செங்கோட்டை வாரம் 3 முறை ரெயில் சேவை போன்றவற்றையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலை சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் சார்பில், பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்று அறிவித்தீர்கள். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் வந்தேபாரத் ரெயில்களை இயக்கும் பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழ்நாட்டில் 2-வது வந்தேபாரத் ரெயில் சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த ரெயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்க வேண்டும்.

    பொதுவாக தெற்கு ரெயில்வேக்கு இது போன்ற அதிவேக ரெயில்கள் இயக்கப்பட்டால் அது சென்னையை மையமாக வைத்து பெங்களூர் அல்லது கோயம்புத்தூருக்கோ இயக்கப்படும்.அதை நிரூபிக்கும் வகையில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்ட 2ரெயில்களையும் சென்னை - மைசூர் மற்றும் சென்னை - கோவைக்கு இயக்கப்படுகிறது.

    தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்படும் ரெயிலை வைத்து முழு தமிழ்நாடும் பயன்படும் விதத்தில் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்தேபாரத் ரெயில் இயக்க வேண்டும். ஆனால் இந்தக் கோரிக்கைக்கு தெற்கு ரெயில்வே செவி சாய்க்கவில்லை.

    சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 740 கி.மீ வழித்தடத்தில் சென்னை - திருநெல்வேலி இடையே முழுவதும் மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள திருநெல்வேலி- மேலப்பா ளையம் 3.6 கி.மீ மற்றும் ஆரல்வாய்மொழி -கன்னியாகுமரி 28.6 கி.மீ பாதை என மொத்தம் 32.2 மட்டும் ஒரு வழி பாதையாக உள்ளது.

    ஆகவே இந்த தடத்தில் வந்தேபாரத் ரெயில் இயக்க போதிய வசதி வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரு ரெயில் கூட தென்மாவட்டங்களுக்கு இதுவரை அறிவிக்கப்பட வில்லை.

    ஆகவே பிரதமர் மோடி இந்த விஷயத்தில் தலையீட்டு வந்தேபாரத் ரெயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்க வேண்டும்.

    இதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் ரெயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்கவும் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இடநெருக்கடி பிரச்சனை இருப்பின் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து இயங்கும் ஒரு சில ரெயில்களை மாற்றம் செய்துவிட்டு, காசி தமிழ் சங்கம் ரெயிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கன்னியாகுமரியிலிருந்து தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது.
    • மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அவரப்பாளையம், மற்றும் அருகிலுள்ள பகுதிவாழ் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது. மேலும் குடிமகன்கள் அங்கே அமர்ந்து மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர். மேலும் குடிமகன்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படுத்தும் தூங்குகின்றனர்.

    இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுவர்கள் பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை பராமரித்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவு நேர பஸ்கள் குறைப்பால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
    • இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

    மதுரை

    மதுரையின் மையப் பகுதியில் பெரியார் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ரெயில் நிலையமும் உள்ளது. வெளி யூரில் இருந்து பல்வேறு பணி நிமித்தமாக வரும் பயணிகள் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம் சென்று பல்வேறு இடங்களுக்கு செல்வார்கள். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் ஆரப்பாளையம் மற்றும் பெரியார் பஸ் நிலையங்களுக்கு சில பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் சில நாட்களில் இரவு திருமங்கலத்துக்கு 4 பஸ்கள் இயக்கப்படுவதற்கு பதிலாக ஒரு பஸ் மட்டுமே இயக்கப்ப டுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்து இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு வழியின்றி ஆட்டோக்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் முதலில் ஒரு தொகையை கூறுகின்றனர். பின்னர் கூடுதல் தொகையை கேட்கின்றனர்.

    இது பற்றி கேட்டால் தாங்கள் சொல்வது தான் சரியான தொகை என்று அடம்பிடித்து பணத்தைப் பெற்றுச் செல்கின்றனர். இப்படி தில்லு முல்லு செய்யும் ஆட்டோ டிரைவர்களால் மற்ற ஆட்டோ டிரைவர்களின் பெயரும் கெடுகிறது.

    எனவே இது போன்ற அடாவடியில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களை சங்க நிர்வாகிகள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.மேலும் பயணிகள் நலன் கருதி இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

    திருமங்கலத்துக்கும் தேவையான அளவில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை 

    • புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தல்
    • குளச்சல் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வந்து கண்காணித்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் திங்கள் நகரும் ஒன்று. இங்கு ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவ மனைகள் ஏராளம் உள்ளது.

    திங்கள் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இரணியல், நெய்யூர் பகுதிகளில் உள்ள மக்கள் பொருள்கள் வாங்கவும், வங்கி பணிகளுக்கும் திங்கள் நகர் வருவது வழக்கம். இப்பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் நாகர்கோவில், கருங்கல், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். திங்கள் நகர் பஸ் நிலையத்தில் இருந்துதான் இவர்கள் அனைவரும் பஸ் ஏறி செல்ல வேண்டும்.

    இதனால் திங்கள் நகர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பெண்கள், குழந்தைகள், மாணவ-மாணவிகள் என அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய பஸ்சை எதிர்ப்பார்த்து நிற்பார்கள்.

    பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் நிலையத்திற்குள் தனியார் வாகனங்கள் எதுவும் செல்ல கூடாது என்று திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவிட்டார். இதனால் தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் செல்வது குறைந்தது. மேலும் இதனை குளச்சல் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வந்து கண்காணித்து வந்தனர்.

    மேலும் போலீசார் சோதனையில் அத்துமீறும் வாகனங்களுக்கு அபரா தமும் விதிக்கப்பட்டது. பஸ் நிலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதுபோல பஸ் நிலையத்தில் இரணியல் போலீசாரும் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இல்லாத நேரத்தில் இப்போது போதை நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் அதிக போதையில் பஸ் நிலைய ஓய்வறை பகுதியில் மயங்கி கிடப்பதும், பயணிகள் மற்றும் பெண்கள் நிற்கும் பகுதியில் விழுந்து கிடக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இன்னும் சிலர் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் பகுதியில் கூட விழுந்து கிடக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

    இன்னும் சிலர் போதையில் ஆபாசமாக பேசியபடி பஸ்நிலையத்தில் சுற்றி வருகிறார்கள். பஸ்சுக்கு காத்திருக்கும் பெண்கள் மற்றும் மாணவிகள் இதனை கண்டு பயந்து ஓடும் சம்பவங்கள் நடக்கிறது. முதியவர்கள் இதனை பார்த்து முகம் சுழித்தப்படி செல்கிறார்கள்.

    திங்கள் நகர் பஸ் நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இங்கு எப்போதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக திங்கள் நகர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இரணியல் போலீசார், குளச்சல் போக்குவரத்து காவல் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    குறிப்பாக திங்கள் நகர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து அங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பபடி இங்கு புறக்காவல் நிலையம் அமைத்தால் அசம்பாவிதங்களை தடுப்பதோடு, போதை நபர்களால் ஏற்படும் தொல்லையும் முடிவுக்கு வரும்.

    • நாகர். ரெயில் நிலையத்தில் முறையான அறிவிப்பு வெளியிடாததால் நடந்த சோகம்
    • அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பாதியில் நிறுத்தினர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியில் இருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்து அடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்லும். இந்த ரயிலில் தினமும் கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்கி றார்கள். இதனால் கன்னி யாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினமும் கூட்டம் நிரம்பி வழியும்.

    நேற்றும் மாலை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறுவதற்காக ரயிலின் பின்பகுதி மற்றும் முன்ப குதியில் பிளாட்பாரங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். முன்பதிவு செய்யப் பட்ட பெட்டிகளில் ஏறுவ தற்கும் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது கன்னியா குமரியில் இருந்து 5.45 மணிக்கு திப்ரூகர் செல்லும் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று சில பயணிகள் அந்த ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறினார் கள். முதல் பிளாட்பாரத்தில் வந்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிறிது நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    ஒழுகினசேரி பகுதியில் ரயில் திரும்பிய போது பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயி லுக்கு பதிலாக வேறு ரயிலில் ஏறியதை உணர்ந்த பயணிகள் அபாய சங்கிலி யை பிடித்து இழுத்தனர்.இதைத் தொடர்ந்து ரயில் நடுவழியில் நின்றது. உடனடியாக ரயிலில் ஏறிய பயணிகள் அதிலிருந்து இறங்கினார்கள்.

    பின்னர் அங்கிருந்து தண்டவாளம் வழியாக ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். ரயில் நடுவழியில் நின்றதையடுத்து ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் அங்கு சென்று விசாரித்தனர். அப்போதுதான் ரயில் பயணிகள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று தவறுதலாக ஏறி விட்டதாக கூறினார்கள். இதனால் நேற்று மாலை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரயில் நிலை யத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது. திப்ரூகர் ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகள் இங்கு வந்து சேருவதற்கு முன்னதாகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாரானது. ரயில் பயணிகள் அவசரமாக ஓடி வந்து ரயிலை பிடித்தனர். பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

    இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ரயில் நிலையத்தில் சரி யான அறிவிப்புகள் வெளி யிடப்படவில்லை. கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயில் வரக்கூடிய நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் ரயில் வந்தது. அறிவிப்புகள் வெளியிடாததால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் என்று நினைத்து ரயிலில் ஏறி விட்டதாகவும் ரயில் நிலையத்தில் முறையான அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் தெரிவித்தனர்.

    • திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.
    • பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் ஒன்றை மற்றொன்று முந்தி செல்ல முயற்சிக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மத்திய பஸ் நிலையம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் அரசு டவுன் பஸ்கள் ஒரு பகுதியிலும், வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றொரு பகுதியிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனை தவிர மினிபஸ்கள் பஸ் நிலையத்தின்முகப்பில் நிறுத்தப்படுகின்றன.

    இந்நிலையில் பேருந்துகளை இயக்கும் டிரைவர்கள் கட்டுப்பாடின்றி தங்களது விருப்பம் போல் அதிவேகத்தில் பஸ்சை ஓட்டி பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றனர். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைகின்றனர்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில்:- பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் ஒன்றை மற்றொன்று முந்தி செல்ல முயற்சிக்கிறது. அந்த நேரத்தில் நடந்து செல்லும் பயணிகள்ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு நடந்து செல்ல அச்சமாக உள்ளது. நிலையத்திற்குள் வரும் பஸ்கள் மெதுவாக பொறுமையாக வர அறிவுறுத்த வேண்டும். இப்படித்தான் வர வேண்டும். இப்படித்தான் செல்ல வேண்டும் என்று வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் . அப்படி இல்லாத பட்சத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இருக்கையின்றி நின்று கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, தேனி, கோயம்புத்தூர், திருச்சி, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டு மின்றி அண்டை மாநில மான கேரளா விற்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கேரளா பகுதிக ளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தினுள் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் கேரளாவிற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு இருக்கையின்றி நின்று கொண்டே இருக்கும் சூழ்நிலை மற்றும் அருகில் இருக்கும் மற்ற சுவர்களில் வயது முதிர்ந்தவர்கள் ஏறி அமரும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    அதிலும் குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவசரத் திற்கு அவர்கள் தரையில் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக் கின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி கேரளா செல்லும் பஸ்கள் இயக்கப்படும் பகுதியில் கூடுதல் அமரும் இருக்கைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • திருவாரூர்- காரைக்குடி இடையே தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • நடைமேடைகளில் நடக்கவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் திருவாரூர்- காரைக்குடி இடையே தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும், வாரத்தில் 4 நாட்கள் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி மற்றும் ராமேஸ்வரம்- செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அதிராம்பட்டினத்தில் நின்று செல்கின்றன.

    இந்நிலையில், ரெயில் நிலைய நடைமேடைகள் விரிசல் ஏற்பட்டு ராட்சத பள்ளங்களுடன் மிகவும் சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனால் நடைமேடைகளில் நடக்கவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே, அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடைபாதைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனியார் பஸ் டிரைவர்கள் மோதியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
    • பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் மதுரை மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. பஸ் நிலையம் எதிரே டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வங்கிகளும் இயங்கி வருகிறது.

    வெளியூர் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தி முந்திச் செல்வதில் தனியார் பஸ் டிரைவர்களுக்க அடிக்கடி தகராறு இருந்து வருகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசிக்கு செல்லும் தனியார் பஸ் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றியது. இந்த பஸ்சை கள்ளிக்குடிடய அடுத்துள்ள குராயூரை சேர்ந்த பிச்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சுக்கு அடுத்து மற்றொரு தனியார் பஸ் சிவகாசிக்கு மதுரையில் இருந்து வந்தது. இதை சோளங்குருணியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(32) ஓட்டிவந்தார்.

    ஏற்கனவே முன்னால் சென்ற பஸ், திருமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்ததை கண்ட பின்னால் வந்த பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்தார். அவர் வேகமாக சென்று ஏற்கனவே நின்று கொண்டிருந்த பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தினார்.

    இதில் பிச்சை ஓட்டி வந்து நிறுத்திய பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக பிச்சை மற்றும் 2-வதாக வந்த பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் சிவரக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ்(41) ஆகியோர் ஏன் பஸ்சை எடுக்கவில்லை என்று கூறி பிச்சையுடன் தகராறு செய்தனர். 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் பிச்சை, தன்னை மற்றொரு பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் ஜெயராஜ் ஆகியோர் இரும்பு ராடு கொண்டு தாக்க முயன்றதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நிலையம் எதிரேயே தனியார் பஸ் டிரைவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க திருமங்கலம் போலீசார், தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பஸ்ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்பினர், பயணிகள் வலியுறுத்தினர்.

    ×