search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175048"

    • உடுமலை வழியாக சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர் உட்பட பல்வேறு வெளியூர்களுக்கு ரெயில்கள் செல்கின்றன.
    • காவலர் பல்வேறு பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    உடுமலை :

    உடுமலை வழியாக சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர் உட்பட பல்வேறு வெளியூர்களுக்கு ரெயில்கள் செல்கின்றன. இந்நிலையில் பழனி ெரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தல் படி காவலர் ரகு உடுமலை ரெயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும், மேலும் ரெயிலை விட்டு இறங்கும்போது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்.

    சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்தால் உடனே காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

    • கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர்மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.
    • இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் தினமும் வந்து செல்கிறார்கள்.

    தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். தொடர்ந்து அவர்கள் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டு செல்வார்கள். மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். தொடர்ந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் தடுப்பணையில் கொட்டும் தண்ணீ ரில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை குடும்பத்துடன் சாப்பிட்டனர். மேலும் பலர் தடப்பணையின் வெளியில் விற்கப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

    இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பூங்காவுக்கு வந்த சிறுவர்- சிறுமிகள் ஊஞ்சல் விளை யாடினர். மேலும் பெண்கள், ஆண்கள் என பலர் பூங்கா வில் விளை யாடி மகிழ்ந்த னர். இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காண ப்பட்டது.

    • கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
    • தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    கோவை

    கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால் கோவையில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.

    இதற்காக கோவையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. இன்றில் இருந்து விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    இதனால் கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    பயணிகள் வசதிக்காக சிங்காநல்லூரில் இருந்து திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இருப்பினும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அவர்களுக்கு போதிய பஸ்கள் கிடைக்கவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. காத்திருந்தும் பஸ்கள் வராததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.பண்டிகை காலங்களில் முன்கூட்டியே அதிகளவு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கையும் வைத்தனர்.

    பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் கோவையில் கூடுதலான பஸ்கள் இயக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை காலம் என்பதால், நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 70 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை சார்பில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.

    • பயணம் செய்யும் பயணிகள் அதிக கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டு கால கொரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் ஓட துவங்கி உள்ளன.

    தஞ்சை -திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரெயில்களும் வழக்கம் போல ஓடிக்கொண்டு உள்ளன.

    பாசஞ்சர் ரெயில்களிலும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதுமட்டும் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நீண்ட தூர பயணம் செய்ய ரெயில் பயணம் வசதியாக இருப்பதால் கட்டண உயர்வை பயணிகள் பொருட்படுத்தவில்லை.

    அதே சமயம் குறைந்த தூரம் பயணம் செய்யும் பயணிகள் அதிக கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா‌நோய் தொற்று காரணமாக ரெயில் கள் நிறுத்தப்படுவதற்கு முன்பு மயிலாடுதுறை -திருநெ ல்வேலி பாசஞ்சர் ரெயில் ஆலக்குடி, அய்யனாபுரம் ஆகிய ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

    தற்போது இந்த இரண்டு ரெயில் நிலையத்தில் மயிலாடுதுறை -திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில் நிற்பதில்லை.மதிய நேரத்தில் திருச்சி செல்ல ரெயில் இல்லாததால் இந்த பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.

    மயிலாடுதுறை-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில் ஆலக்குடி, அய்யனாபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என்று ரெயில் பயணிகள் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல திருச்செந்தூர் -சென்னை விரைவு ரெயில் பூதலூர் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் செல்லும் போது நின்று செல்கிறது.

    மறு மார்க்கத்தில் சென்னை செல்லும் போது பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.

    பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் செல்பவர்கள் திரும்பி வரும்போது திருச்சியில் இறங்கி காத்திருந்து வேறு பிளாட் பார்ம்‌சென்று ரெயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. திருச்செந்தூர் விரைவு ரெயில் சென்னை செல்லும் போது பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓணப்பண்டிகை விடுமுறையையொட்டி குவிந்தனர்
    • திரிவேணி சங்கமம் கடற்கரை களைகட்டியது

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஓணப்பண்டிகை விடுமுறையையொட்டி இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம்தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் அங்கு பல மணி நேரமாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.பின்னர் காலை10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து10மணிக்கு பிறகுதான் படகு போக்குவரத்து தொடங்கியது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்த ர்மண்டபத்தை மட்டும் பார்வையிட்டுவந்தனர். இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவு சுற்றுலா பயணிகள்வி வேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு வந்தனர்.

    ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.
    • வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . இங்குள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர். இதனால் கடைகள் பூட்டப்பட்டதால்,பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில், கடைகள் இல்லாததால், குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கவும், குடிநீர் பாட்டில் வாங்கவும் முடியவில்லை. வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது. ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் விபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது . எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்,கடந்த ஆகஸ்டு 26 ந்தேதி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் 86 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 78 கடைகளின் அரசு நிர்ணய வாடகை அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. மொத்தமுள்ள 86 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 2 கடைகளும், பஸ் நிலையத்தில் 4 கடைகளும், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகளும் உள்ளிட்ட 8 கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன. மற்ற 78 கடைகள் ஏலம் எடுக்கப்படவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் கடைகள் திறக்கப்படவில்லை. கடந்த 30 நாட்களாக பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டி கிடப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    • நாய்கள் தொல்லையால் பெண்கள் பீதி
    • இதுவரை எந்த பூர்வாங்க பணிகளும் நடைபெறவில்லை.

    கன்னியாகுமரி:

    இந்தியாவில் மிகப்பெரிய துறையாக ரெயில்வேதுறை விளங்குகிறது. இந்த ரெயில்வே துறையின் மூலமாக நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நீண்டதூர பயணங்களுக்கு முதுகெலும்பாய் திகழ்வது ரெயில் போக்குவரத்து மட்டுமே. இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் ரெயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் கட்டமாக 50 ரெயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், காட்பாடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவின் தெ ன்கோடி முனையில் அமை ந்துள்ள உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 1 கோடிக்கும் மேல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். இதில் கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாடு மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ரெயில் மூலமாகவே வந்து சொல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை, பெங்களூரு, ஹிம்சாகர், ஹவுரா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் மேம்படுத்தப்பட உள்ள ரெயில் நிலையங்களில் ஒன்றாக கன்னியாகுமரி ரெயில் நிலையம் தேர்வாகி உள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ.67 கோடி செலவில் நவீன மயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலாப்பய ணிகளை கவரும் வகை யில் இந்த ரெயில் நிலை யத்தின் முகப்பு பகுதியா னது விவேகானந்தர் நினைவு மண்ட பம் போல் வடிவ மைக்கப்பட்டு அழகுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும் இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்தப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான எந்த பூர்வாங்க பணிகளும் நடைபெறவில்லை.

    கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது மேற்கூரையும் போடப்ப ட்டுள்ளது ஆனால் ஏற்கெனவே உள்ள பிளாட்பாரத்தில் குறிப்பிட்ட இடங்களில் மேற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்க ளில் பயணிகள் கடும் அவதிப்ப டுகிறார்கள்.

    அதுமட்டுமின்றி கன்னியா குமரி ரெயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை கடுமை யாக உள்ளது. பகல் நேரங்க ளில் பயணிகள் மத்தியில் நாய்கள் அங்கு இங்கும் சுற்றி திரிகின்றன.

    சில நேரங்களில் நாய்க ள் பயணிகளை கடிக்க துரத்து வதை காண முடிகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் மேற்கூரை இல்லாத இடங்களில் மேற்கூ ரை அமைத்து மழை மற்றும் வெயில் பாதிப்பில்இருந்து பயணிகளை பாதுகாக்க வேண்டும். மேலும் நாய்தொல்லை களையும் அடி யோடு அகற்றி பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.

    • 3 மாத காலம் மேட்டுப்பாளையம்,நெல்லை ரெயில் இயக்கப்பட்டது.
    • மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந் திர ரெயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட டது.

    கோவை 

    மேட்டுப்பாளையம் -நெல்லை வாராந்திர ரெயில்,பயணிகளின் கோரிக் கையை ஏற்று கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த மே மாதம் முதல் 3 மாத காலம் மேட்டுப்பாளையம், கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்டது.

    வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரெயில் மறுநாள் சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லையை அடையும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும். 3 மாத காலத்துக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்த ரெயில் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு ரெயில் பயணிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

    மேலும் 70 சதவீத பயணிகளுடன் சென்ற இந்த ரெயில் ஏன் ரத்து செய்யப்பட்டது என்று ரெயில் பயணிகள் சங்கங்கள் தரப்பில் கண்டனம் எழுப்ப பட்டது. இதை தொடர்ந்து அந்த வாராந்திர ரெயில் ஜூலை மாதம்21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 19-ந் தேதி வரை 5 வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அது நேற்றுடன் முடிவடைந்து. மீண்டும் அந்த ரெயிலை இயக்குவது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாத தால் மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயில் 2-வது முறையாகரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அடுத்த வாரம் அந்த ரெயில் இயக்கப்படாது. இது ெரயில் பயணிகளிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயிலில் கடந்த 2 வாரங்களாக முன் பதிவுக்கு டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே ரெயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் அந்தரெயிலை நீட்டிக்காமல் ரெயில்வே நிர்வாகம் மவுனமாக உள்ளது. ஆனால் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக் கப்பட்டு வரும் வாராந் திர ரெயில் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் 5 மாதங்களுக்கு நீட்டித்து. அதாவது நவம்பர் மாதம் வரை நீட்டித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது.

    ஆனால் அதே மாதம் நீட்டிக்கப்பட்ட மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந் திர ரெயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட டது. அதன்பிறகு நீட்டிப்பது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.இதில் தென்னக ரெயில்வே பாரபட்சத்துடன் நடப்பதோடு மட்டு மல்லாமல் கோவையை வஞ்சிப்பதாகவும் தெரிகிறது. எனவே ரெயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந்திர ரெயிலை மீண்டும் இயக்குவ தோடு மட்டுமல்லாமல் அதை நிரந்தர ரெயிலாகவும் மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், அணை கரை பகுதியில் கூடினர்.
    • இதேபோல் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது.

    சேலம்:

    காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதையும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், அணை கரை பகுதியில் கூடினர். அவர்கள் மதகுகள் வழியாக சீறிப்பாயும் தண்ணீரை பார்த்தனர். பல ஏக்கர் பரப்பளவிலான அணை பூங்காவிலும் பொதுமக்கள் குவிந்தனர்.

    இதேபோல் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. அந்த வகையில் மேட்டூர் அணை பூங்காவுக்கு 20 ஆயிரத்து 656 பேரும், அணையின் வலது கரை பகுதியில் உள்ள பவளவிழா கோபுரத்துக்கு 2694 பேரும் வந்து சென்றனர். இதனால் நுழைவு கட்டணம் மூலம் அரசுக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 750 ரூபாய் வருமானம் கிடைத்தது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட கூடுதலான போலீசார், அணை மற்றும் பூங்கா பகுதியில் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோவையிலிருந்து தினமும் காலை 8.50 மணிக்கு புறப்படும்.
    • ரெயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரான திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் அதிக அளவில் ெரயில் மூலமாகவே தங்களது சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையிலிருந்து தினமும் காலை 8.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, பெங்களூரு, ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம், அனந்தபூர், மந்திராலயம் ரோடு, ராய்ச்சூர், கங்காபூர் ரோடு, சோலாப்பூர், பூனே வழியாக லோகமான்ய திலக் வரை இந்த ெரயில் செல்லும். இந்த ெரயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

    வடமாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணத்தால்இந்த ரெயிலுக்கான இணைப்பு ெரயில் வருவதில் தாமதமானது. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக காலை 8.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டிய ெரயில் இன்று மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 2.45 மணிக்கு வந்து 2.47 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 13 மணி நேரம் தாமதம், நேற்று முன்தினம் 3½ மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ெரயிலில் கோவையில் இருந்து திருப்பூருக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களும் பயணிக்கிறார்கள். ரெயில் தாமதத்தால் தொழிலாளர்கள், பயணிகள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.  

    • ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஆடி பெருக்கு விழாவை யொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கனைள சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காவுக்கு சென்றனர்.

    தொடர்ந்து அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    ஆடி 18 அன்று மட்டும் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை காண பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்காகவே சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணையை காண வரு வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 102 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணை யின் மேல் பகுதிக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணி க்கப் பட்டு வருகிறது.

    இதே போல் ஆடிப்பெ ருக்கு விழாவையொட்டி பண்ணாரியம்மன் கோவி லில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர் களின் கூட்டமாக காண ப்பட்டது.

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று காலை முருகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டல் முருகன், கோபிசெட்டி பாளையம் சாரதா மாரி யம்மன், பாரியூர் கொண்ட த்து காளியம்மன், பச்சை மலை, பவளமலை முருகன், கொளப்பலூர் அஞ்சநேயர், அளுக்குழி செல்லாண்டி யம்மன், பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர், செல்லா ண்டியம்மன் உள்பட அனைத்து கோவில்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×