search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரி நிறுவனம் அரசின் சட்டவிதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக கூறி கடந்த 7 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் மாசுக்கட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் வனஜா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் அதன் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் புதியதாக உரிமம் வழங்கப்பட்டு மண் மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டு வரும் தனியார் கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனியார் கல்குவாரி நிறுவனத்தினர் கூறுகையில் ,அரசின் விதிமுறைகளை பின்பற்றி தான் கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு. தற்போது குழி எடுத்து மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் ஏரி அமைக்கப்பட்டு அதில் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

    தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.பாறை எடுக்க 6 மாத காலங்கள் ஆகும். இந்தநிலையில், தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • விவசாயிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது
    • சிறுமி பாலியல் வழக்கில் தீர்ப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயதுள்ள விவசாயிக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் கிராமம், நடுத்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன் (50). விவசாயியான இவர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 30ம்தேதியன்று அதே கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து நடந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. தீர்ப்பை மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல் நேற்று வாசித்தார். அப்போதுள சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சரவணனுக்கு இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து மருவத்தூர் போலீசார் சரவணனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் கோர்ட்டில் குற்றவாளிக்கு முதன் முதலாக சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது இந்த வழக்கிற்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோர்ட் வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • தாசில்தார் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி -கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று (செவ்வாய்க்கிழமை) 8-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று ( திங்கட்கிழமை ) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் , மற்றும் பல்வேறு இயக்கங்கள் , விவசாயிகள்,பொதுமக்கள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கல்குவாரியில் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர் .இதனைத் தொடர்ந்து நேற்று காலை விஜயகுமார் வீட்டில் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் போலீசார் ஆகியோர் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு தயாராக இருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .பின்னர் சாமளாபுரம் வருவாய்த்துறை அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்லடம் டி.எஸ்.பி, கோட்டாட்சியர், பல்லடம் தாசில்தார், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் "கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் விவசாயிகளிடம் "கல்குவாரியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது,ஆய்வின் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தனர். அதிகாரிகள் "கல்குவாரியை ரத்து செய்யப்படும்"என உத்திரவாதம் அளிக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் விவசாயி விஜயகுமாரின் வீட்டில் இருந்து கல்குவாரியை நோக்கி கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.பின்னர் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.இதனால் போலீசாருக்கும் ,விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

    கல்குவாரிக்கு செல்லும் வழியில் போலீசார் பேரிகார்டு வைத்திருந்தனர். இதனால் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு ஊர்வலமாக சென்ற விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் தர்ணா வில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பல்லடம் டி.எஸ்.பி.விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் போலீசாரிடம்" தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்கள், பல்வேறு இயக்கங்கள் இணைந்து வருகிற 9-ந்தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விஜயகுமாருக்கு ஆதரவாக 25 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்குவதாக தெரிவித்து விட்டு சென்றனர். 

    • கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி 7-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • வருவாய் அதிகாரிகள் விவசாயி விஜயகுமார், மற்ற விவசாயிகள் ஆகியோருடன் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று 7-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் , கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் ஒன்றியம் ,கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு முடிவடைந்த பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் " கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விஜயகுமார் "கோடங்கிபாளையம்பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். தொடர்ந்து 7-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    மேலும் விவசாயி விஜயகுமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் அதிகாரிகள் விவசாயி விஜயகுமார், மற்ற விவசாயிகள் ஆகியோருடன் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  

    • 50 ஹெக்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • கால்நடை விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

    பல்லடம் :

    பல்லடம், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துபல்லடம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக்காபுரம், பருவாய், புளியம்பட்டி, மல்லேகவுண்டம்பாளையம், பூமலுார் ஆகிய கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, 50 ஹெக்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஒரு எக்டர் பாசன நிலமுள்ள கால்நடை விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். பண்ணையம் அமைத்து பயறு வகைகள் சாகுபடி செய்வதற்கு விதைகளும், முருங்கை நாற்றுகள் ஊடுபயிராகவும் வழங்கப்படும்.மேலும் பயனாளிகளுக்கு கால்நடை வாங்கவும், மண்புழு உரப்படுகைகள், தேனீ பெட்டி அமைப்பதற்கும் பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகி தெரிந்துகொள்ளலாம். இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் , கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் ஒன்றியம் ,கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு முடிவடைந்த பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் " கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விஜயகுமார் "கோடங்கிபாளையம்பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். தற்போது தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சமீபத்தில் பல்லடம் எம்.எல்.ஏ.,எம்.எஸ்.எம்.ஆனந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி விஜயகுமாரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயி விஜயகுமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாளை 5-ந்தேதி( திங்கட்கிழமை ) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் விவசாயிகள் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தக்காளி சீசன் என்பதால் அதிக அளவிலான டெம்போ வேன்களில் தக்காளி வந்து இறங்குகிறது.
    • டெம்போ வேன்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வந்து கடைக்காரர்களிடம் விற்பனை செய்கின்றனர். தற்பொழுது தக்காளி சீசன் என்பதால் அதிக அளவிலான டெம்போ வேன்களில் தக்காளி வந்து இறங்குகிறது. ஆனால் உடனடியாக லோடுகளை இறக்க முடியாததாலும் கடைகள் முன்பு நீண்ட நேரம் வண்டியை நிறுத்தி வைப்பதாலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    இது தொடர்பாக விவசாயிகள் ,கலாசு தொழிலாளர்கள் , வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் தக்காளி வண்டிகளை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாசு தொழிலாளிகள் இது குறித்து கூறுகையில், வாரச்சந்தை வளாகம் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடை முன்பு வண்டியை நிறுத்தக்கூடாது என்கின்றனர். எனவே காய்கறிகளை ஏற்றி இறக்க முடியவில்லை என்றனர். விவசாயிகள் கூறுகையில் லோடு வந்தால் இறக்க ஆட்கள் வருவதில்லை. முதல் நாள் வந்தால் மறுநாள் வருவதில்லை.

    அதனால் தான் இன்று வண்டியை நிறுத்தி உள்ளோம். இனி நாங்களே இறக்கி கொள்கிறோம். கூலியை அவர்கள் வைத்துக் கொள்ளட்டும் என்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உடுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

    • தொடர் மழை காரணமாக சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஓசூர் :

    ஓசூர் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள், பல ஏக்கர் பரப்பளவில் காய்கறிகள், கீரைகள் பயிரிட்டு வருகின்றனர். மேலும். மருத்துவ குணம் கொண்ட வெள்ளரி மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றையும் விவசாயிகள் விளைவித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஓசூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இந்த நிலையில், ஓசூர் அருகே சானமாவு கிராமத்தை சேர்ந்த விவசாயி அனில்குமார் 5 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். அறுவடை செய்யும் நேரத்தில், கனமழை பெய்ததால் வியாபாரிகள் வாங்கி செல்ல முன்வரவில்லை. இதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் 700 மூட்டை சின்ன வெங்காயத்தை நேற்று டிராக்டரில் ஏற்றிச்சென்று அவருடைய நிலத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் கொட்டி அழித்தார்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொதுவாக 50 கிலோ சின்ன வெங்காயம் கொண்ட ஒரு மூட்டை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு மூட்டை ரூ.500 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது. ஆனால் இந்த வெங்காயத்தையும் வாங்கி செல்ல வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்று கூறினர்.

    • விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
    • அரசு கொப்பரை கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர், காங்கயம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டது.

    கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இம்மையங்கள் ஜூலை 31 வரை மட்டுமே செயல்பட்ட நிலையில், வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. மாநில அளவில் கொப்பரை கொள்முதலில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் இருந்த நிலையில் மாவட்ட அளவில் உடுமலை அரசு கொப்பரை மையம் முதலிடத்திலும், பெதப்பம்பட்டி மையம் இரண்டாமிடத்திலும் இருந்தது.

    வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதோடு தேங்காய்க்கும் விலை இல்லாததால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்தனர்.எனவே அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை நீடிக்க வேண்டும், கூடுதல் விலை மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் மத்திய அரசு செப்டம்பர் 30-ந்தேதி வரை கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதியளித்தது. இதனையடுத்து மாநில அரசு சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டதால் உடுமலை, பெதப்பம்பட்டி மையங்களில் மீண்டும் கொப்பரை கொள்முதல் துவங்கியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன் கூறியதாவது:- விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகள் புகைப்படம், ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தகம் நகல், வி.ஏ.ஓ., உரிமைச்சான்று, அடங்கல், சிட்டா ஆகிய ஆவணங்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்களை அணுகலாம்.

    தற்போது பருவ மழை பெய்து வருவதால் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் உடைக்கும் எந்திரம் மற்றும் பண்ணைக்கழிவுகள் கொண்டு எரித்து சூடான காற்று வாயிலாக குறைந்த நேரத்தில், நேரடியாக கொப்பரை உற்பத்தி செய்யும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.விவசாயிகள் இந்த எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.
    • காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட சிக்கரசம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி (வயது 55). இவருக்குச் சொந்தமாக 4 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.

    இந்நிலையில் வாய்க்காலில் இருந்து தண்ணீா் வரும் பாதையை பக்கத்து நிலத்துக்காரா் அடைத்து வைத்துவிட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சாந்தாமணி புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சாந்தாமணி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா். பின்னா் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, சாந்தாமணி திடீரெனெ வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா். அப்போது அங்கிருந்த துணை வட்டாட்சியா் மற்றும் போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து வட்டாட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து சாந்தாமணி மற்றும் அவரது குடும்பத்தினா் திரும்பிச் சென்றனா்.

    • தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.
    • தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொகளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.

    தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.

    இதையடுத்து அவர்கள் வந்து தியாகராஜனின் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு, அவரது கார்டுக்கு பதிலாகமாற்று ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு, ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறிஉள்ளனர்.

    இந்நிலையில் ஏ.டி.எம். கார்டு மாற்றப்பட்டதை அறிந்த தியாகராஜன் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர்விரைந்து வந்தனர். பொது மக்கள் வருவதை பார்த்ததும் பிரசாந்த் தப்பியோடி விட்டார். சரத்குமார், கபிலை பிடித்து வைத்துக் கொண்டு மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நூதன முறையில் விவசாயிடம் பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மருத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பியோடி பிரசாந்தை தேடி வருகிறார்கள்.

    • உழவர் சந்தை மூலம் வழக்கமாக காய்கறி விற்பனை செய்கிறோம்.
    • இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்காமல் போகிறது.

    பல்லடம் :

    இன்றைய சூழலில் பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பாதிப்புகளை கடந்து எப்பாடுபட்டாவது மகசூல் கொண்டுவர வேண்டும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இருப்பினும் சில விவசாயிகள் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சாகுபடி செய்கின்றனர். இதற்காக தடைக்கற்களை உடைத்தெறிந்து தங்கள் இலக்கை அடைகின்றனர். அவ்வாறு பல்லடத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் ஒன்றிணைந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி விற்பனையை துவக்கியுள்ளனர். இதற்கு பொதுமக்களின் ஆதரவும் பெருகி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உழவர் சந்தை மூலம் வழக்கமாக காய்கறி விற்பனை செய்கிறோம். அதிகாலை நேரம் என்பதாலும் இதர காய்கறியுடன் விற்பனை செய்வதாலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்காமல் போகிறது. எனவே இயற்கை காய்கறிகளை விரும்பும் மக்களுக்கு அவை முறையாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து பிரத்யேகமான இயற்கை காய்கறி விற்பனை அங்காடி திறக்கவும் திட்டமிட்டு துவக்கியுள்ளோம். பனப்பாளையத்தில், சிவன் காய்கறி அங்காடி என்ற பெயரில் ஞாயிறு மற்றும் புதன்கிழமையன்று மாலை 3மணி முதல் 6மணி வரை இயங்கி வருகிறது. பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

    இயற்கை காய்கறி விற்பனை செய்ய, விவசாயிகள் அங்காடி தேடி வருவதாக தகவல் கிடைத்ததும், தங்களுக்கு சொந்தமான கட்டடத்தின் ஒரு பகுதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தாமாக முன்வந்து அளித்துள்ளார் கண் தான அறக்கட்டளை தலைவர் சுந்தரராஜன்.அவர் கூறுகையில், எவ்வளவோ சிரமத்துக்கு இடையே, இயற்கை விவசாயம் செய்கின்றனர். இதை நாம்தான் ஊக்கப்படுத்த வேண்டும்.இது இயற்கை விவசாயிகளுக்கு செய்த உதவியாக கருதுகிறேன் என்றார்.

    ×