search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேசான்"

    • ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.
    • ரெட்மி 12 பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் மைக்ரோசைட் மூலம் வெளியாகும்.

    ரெட்மி 12 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வெளியாகி உள்ளது.

    அமேசான் மட்டுமின்றி புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அழகிய சாதனம் என்று சியோமி நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்காக பாலிவுட் நடிகை திஷா படானியை விளம்பர தூதராக சியோமி நியமனம் செய்து இருக்கிறது.

     

    புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் க்ரிஸ்டல் கிளாஸ் கொண்டிருக்கும் என்று மைக்ரோசைட்-இல் தெரியவந்துள்ளது. ரெட்மி 12 பற்றிய இதர விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வரும் நாட்களில் தெரிவிக்கப்பட இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், கிளாஸ் பேக், IP53 தர ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • ஏற்கனவே மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
    • அமேசான் தளத்தில் மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் லீக் ஆனது.

    மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போன் ஜூலை 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடலும் அறிமுகமாகிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு ஒருவாரம் காலம் இருக்கும் நிலையில், மோட்டோரோலா ரேசர் 40 விலை விவரங்கள் அமேசான் தளத்தில் தவறுதலாக இடம்பெற்று விட்டது.

    புதிய மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்று டீசர்களில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், இந்த மாடலின் இதர அம்சங்களும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான்.

     

    தற்போது அமேசான் தளத்தில் மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இடம்பெற்றது. அதன்படி இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்படும் என அமேசான் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தவறுதலாக இடம்பெற்ற நிலையில், மோட்டோரோலா ரேசர் 40 விலை விவரங்கள் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.

    சீன சந்தையில் மோட்டோரோலா ரேசர் 40 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 46 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 54 ஆயிரத்து 500 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

     

    மோட்டோரோலா ரேசர் 40 அம்சங்கள்:

    6.9 இன்ச் FHD+ 1080x2640 பிக்சல் மடிக்கக்கூடிய pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்

    12 ஜிபி ரேம்

    64MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

    டூயல் சிம் ஸ்லாட்

    வைபை, ப்ளூடூத்

    4200 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் டர்போசார்ஜிங்

    • பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்து இருக்கும்.
    • முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அமேசான் பிரைம் லைட் சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. இது அமேசான் பிரைம் சேவையின் குறைந்த விலை வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

    பிரைம் லைட் சந்தா ஒற்றை வருடாந்திர திட்டம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பயனர்கள் 12 மாதங்களுக்கு ரூ. 999 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சலுகையில் காலாண்டு மற்றும் மாதாந்திர திட்டங்கள் வழங்கப்படவில்லை. வழக்கமான அமேசான் பிரைம் சந்தா விலை ஆண்டுக்கு ரூ. 1499 ஆகும். இதே சலுகை மாதம் ரூ. 299 விலையிலும், காலாண்டு சந்தா விலை ரூ. 599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பலன்களை பொருத்தவரை அமேசான் பிரைம் லைட் மற்றும் அமேசான் பிரைம் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரியான பலன்களே வழங்கப்படுகின்றன. பிரைம் லட்டா சந்தாவில் பயனர்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் டெலிவரி பெறும் வசதி பெற முடியும். வழக்கமான இலவச டெலிவரிக்கு எந்த விதமான குறஐந்தபட்ச தொகையும் இல்லை என அமேசான் உறுதியளித்துளளது.

    வழக்கமான பிரைம் சந்தாவின் கீழ் அமேசான் மியூசிக் மற்றும் வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. பிரைம் சந்தா வைத்திருப்போரும், இதே பலன்களை பெற முடியும். எனினும், பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்திருக்கும். பயனர்கள் அதிகபட்சம் இரண்டு சாதனங்ககளில் HD தரத்தில் வீடியோக்களை பார்க்கலாம்.

    பிரைம் சந்தா வைத்திருப்போர் அிகபட்சம் 4K ஸ்டிரீமிங், அதிகபட்சம் ஆறு சாதனங்களில் ஒரே சமயம் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ விளம்பரங்களை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், எப்படி இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அமேசான் பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு பிரைம் ரீடிங் மற்றும் அமேசான் மியூசிக் சேவைகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படாது. இதில் அமேசான் பிரைம் மியூசிக் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, கேமிங் மற்றும் இலவச இ-புத்தகங்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.

    • ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
    • ஆப்பிள் சேல் டேஸ் பெயரில் அமேசான் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

    அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் தளத்தில் அவ்வப்போது ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போதைய சிறப்பு விற்பனை ஜூன் 11 ஆம் தேதி துவங்கியது. இந்த விற்பனை ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி, வட்டியில்லா மாத தவணை முறை சலுகை, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    ஐபோன் 14 (128 ஜிபி) 15 சதவீத தள்ளுபடியின் கீழ் ரூ. 67 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 79 ஆயிரத்து 999 ஆகும். இதன் 256 ஜிபி மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி இந்த வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 77 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. 512 ஜிபி மாடல் விலை 1 லட்சத்து 09 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது 11 சதவீத தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 97 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 76 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை ரூ. 86 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. இந்த வேரியண்டிற்கு 13 சதீவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என பல்வேறு ஐபோன்களை விறப்னை செய்து வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலின் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டு முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது.

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 990 என்றும் மாறி இருக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
    • கையில் இதய வடிவ மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் தோழி லாரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த தம்பதி ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகவே ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரென் சன்செஸ் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், சன்செஸ் கையில் இதய வடிவம் (ஹார்டின்) மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

     

    முன்னாள் செய்தியாளரான லாரென் சன்செஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். எனினும், இதுபற்றிய தகவல்கள் 2019 ஆண்டு ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் இடையே விவாகரத்து நடக்கும் வரை வெளியில் தெரியாத ரகசியமாக இருந்து வந்தது.

    ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து வழங்குவதற்காக மெக்கன்சி 38 பில்லியன் டாலர்களை ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

    அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.

    இந்தியாவில் எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் இந்தியாவில் வேலையிழந்துள்ளனர்.

     

    ஒவ்வொரு பிரிவில் இருந்தும் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜேசியின் ஆரம்பக்கட்ட பணிநீக்க திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

    பின் மார்ச் மாதத்தில் அமேசான் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 9 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆண்டு ஜேசி அறிவித்தார். சீரற்ற பொருளாதார நிலை காரணமாகவே பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

    • ரியல்மி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் டீசரை வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
    • நார்சோ N53 ஸ்மார்ட்போன் இரண்டுவித நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் மிகமெல்லிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நார்சோ சீரிசில் புதிய ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய நார்சோ ஸ்மார்ட்போன் N53 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    அமேசான் மட்டுமின்றி ரியல்மி நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன் டீசரை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ரியல்மி நார்சோ N53 மாடலில் அதிகபட்சம் 16 ஜிபி டைனமிக் ரேம், 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த விவரங்கள் நார்சோ N53 என்ற இணைய தேடலில் தெரியவந்துள்ளது.

     

    நார்சோ N53 மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதற்கான டீசர் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

    ரியல்மி நார்சோ N53 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய நார்சோ ஸ்மார்ட்போனிற்கான முதற்கட்ட டீசர்களில் அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. இந்த மாடலில் 6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G88 பிராஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    எனினும் பட்ஜெட் ரக மாடல் என்ற வகையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இதில் வழங்கப்படும் 16 ஜிபி டைனமிக் ரேம் தேவைக்கு ஏற்ப ஸ்மார்ட்போனின் ரோம் -(ரேண்டம் அக்சஸ் மெமரி) ரேம் போன்று பயன்படுத்தப்படும். புதிய ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போன் ஃபெதர் பிளாக் மற்றும் ஃபெதர் கோல்டு என இரண்டுவிதமான நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
    • அமேசான் ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் இரு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் சார்ந்த அறிவிப்புகளும் வெளியாக இருக்கின்றன. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற I/O 2022 நிகழ்வில் டேப்லட் மாடலின் டிசைன் விவரங்களை வெளியிட்டது.

    இதைத் தொடர்ந்து கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய டேப்லட் விலை பற்றிய தகவல்கள் ரகசியமாக இருந்து வந்தது. புதிய டேப்லட் மாடல் ஆப்பிள், சாம்சங் மற்றும் பல்வேறு மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்த இருக்கிறது. இந்த நிலையில், கூகுள் பிக்சல் டேப்லட் விலை விவரங்கள் அமேசான் ஜப்பான் வலைதளத்தில் தவறுதலாக லீக் ஆகியுள்ளன.

     

    அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் ஜப்பான் நாட்டில் ஹசல் மற்றும் போர்சிலைன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் விலை 79 ஆயிரத்து 800 யென்கள் இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 331 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் பிக்சல் டேப்லட் மாடல் குறைந்த விலை பிரிவில் இருக்காது என்று தெரியவந்துள்ளது. அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்டில் இந்த பிக்சல் டேப்லட் மாடல் ஜூன் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிக்சல் டேப்லட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    10.9 இன்ச் 1600x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே

    கூகுள் டென்சார் 2 சிப்செட்

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

    7000 எம்ஏஹெச் பேட்டரி

    அமேசான் ஜப்பான் வலைதளத்தில் பிக்சல் டேப்லட் உடன் சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பிக்சல் டேப்லட்-ஐ ஸ்மார்ட் டிஸ்ப்ளேவாக மாற்றுகிறது. இதுபற்றிய விவரங்கள் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

    • கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
    • பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    பிரீமியம் அல்லது மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வாங்குவது பற்றிய திட்டம், அதற்கான பட்ஜெட் விஷயத்தில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும். அந்த வகையில், பிரீமியம் மாடல்களின் மீது அதிக சலுகைகள் அல்லது தள்ளுபடி அறிவிக்கப்படும் போது அதுபற்றிய தகவல் வேகமாக பரவுவது இயல்பான காரியம் தான். அந்த வரிசையில், அமேசான் வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S20 FE மாடலை அமேசான் வலைதளத்தில் தற்போது ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 74 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த வேரியண்டிற்கு குறுகிய கால சலுகையாக 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    இதன் காரணமாக கேலக்ஸி S20 FE விலையில் ரூ. 45 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதற்காக பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யவோ அல்லது குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறுகிய கால தள்ளுபடி சேர்த்து கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    விலை குறைப்பு தவிர பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையை பெற ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். அனைத்து ஸ்மார்ட்போனிற்கும் ஒரே மாதிரியான மதிப்பு வழங்கப்படாது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் மறுமதிப்பீடு பொருத்து அதற்கான விலை வேறுப்படும்.

    எக்சேஞ்ச் சலுகையில் முழு தள்ளுபடியை பெறும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலே வாங்கிட முடியும். இதன் மூலம் அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் சேமிக்கலாம்.

    அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S20 FE 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

    • அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன.
    • 2023 ஆண்டில் மட்டும் 1,68,918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை டெக் நிறுவனங்கள் வழங்கி உள்ளன.

    உலகளவில் பிரபலமாக அறியப்படும் முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதலே பணிநீக்க நடவடிக்கைகளால் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூகுள், மெட்டா, அமேசான் உள்பட உலகளவில் 570 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை வழங்கி உள்ளன.

    இதுதவிர, மேலும் பலரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்க நிறுவனங்கள் தற்போது ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன. எனினும், இந்த பகுதிகளில் உள்ள கடுமையான விதிகள் காரணமாக நிறுவனங்கள் தரப்பில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடம் முன்கூட்டியே அறிவிக்காமல் பணிநீக்கம் செய்ய முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

     

    பணிநீக்க நடவடிக்கைகளுக்கு முன்பு ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணையங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடம் பணியினை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஆல்ஃபாபெட் நிறுவனம், ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்து, பெரும் தொகையை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இது போன்ற தகவல்களால், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இயங்கி வரும் கூகுள் அலுவலக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர். கூகுள் போன்றே அமேசான் நிறுவனமும் தனது மூத்த மேலாளர்களிடம், பணியை ராஜினாமா செய்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அமேசான் நிறுவனம் 9 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளது.
    • இந்த அறிவிப்பு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது.

    இதையடுத்து, அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட அமேசான் நிறுவனமும் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.

    இந்நிலையில், அமேசான் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த வாரம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் விளம்பரப்பிரிவு மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன....

    இந்த அறிவிப்பு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஸ் ப்ரோ 2R இந்திய விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற கிளவுட் 11 நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்தது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது கிளவுட் 11 நிகழ்வில் ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் 11R, ஒன்பிளஸ் ப்ரோ 2 வரிசையில் ஏராளமான சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய பயனர்களுக்காக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R மாடல் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலுடன் ஒப்பிடும் போது 2R மாடலில் வயர்லெஸ் சார்ஜிங், ஹெட் டிராகிங் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை.

    மேலும் பட்ஸ் ப்ரோ 2 மாடலை விட 2R விலை ரூ. 2 ஆயிரம் வரை குறைவு ஆகும். விலை மற்றும் அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பட்ஸ் ப்ரோ 2R மைக்ரோசைட் அமேசான் இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஒன்பிளஸ் இயர்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 48db டெப்த் மற்றும் 4000Hz விட்த் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 54ms லோ லேடன்சி, மெலோடிபூஸ்ட் டூயல் டிரைவர்கள் 11mm வூஃபர், 6mm டுவீட்டர், டைனாடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R அம்சங்கள்:

    ப்ளூடூத் 5.3 (LHDC 5.0/AAC/SBC/LC3)

    டால்பி அட்மோஸ்

    ஸ்பேஷியல் ஆடியோ

    ஒன்பிளஸ் ஆடியோ ID 2.0

    தனித்துவம் மிக்க ஆடியோ

    11mm டைனமிக் டிரைவர் + 6mm டைஃப்ரம் டிரைவர்

    பிரெஷர் சென்சிடிவ் கண்ட்ரோல்

    டூயல் மைக்ரோபோன்

    54ms லோ-லேடன்சி கேமிங்

    இயர்போனுக்கு வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP55), கேஸ்-க்கு IPX4 ரெசிஸ்டண்ட்

    டூயல் கனெக்ஷன்

    இயர்பட்களில் 60 எம்ஏஹெச் பேட்டரி கேசில் 520 எம்ஏஹெச் பேட்டரி

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R - அப்சிடியன் பிளாக் மற்றும் மிஸ்டி வைட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ×