search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடனம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜிம்மிற்கு செல்ல தயங்குபவர்கள், வயதானவர்கள் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் போன்றவர்கள் நடனமாடுவதன் மூலம் பெரிதும் பயனடையலாம்.
    • நடனம் மனஅழுத்தத்தை குறைத்து நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட உதவுகிறது.

    ஒரே டென்ஷன்...

    இது பல இடங்களில் நம் காதுகளில் வந்து விழும் வார்த்தை சில நேரங்களில் நாம் கூட இந்த வார்த்தையை சொல்லக் கூடும்.

    ஏன் இப்படி....? எத்தனை பிரச்சனையை சமாளிப்பது? காலையில் கண்விழித்து எழுந்தது முதல் இரவு வீட்டில் தூங்க செல்வது வரை தொடர்ந்து துரத்தும் பிரச்சனைகள்... ஒவ்வொன்றையும் சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

    இதனாலேயே மனஅழுத்தம், எரிச்சல், கோபம் எல்லாம் வந்து விடுகிறது. சந்தோசமான சூழ்நிலையை அனுபவிக்கவே முடியவில்லையே! சே... என்னடா வாழ்க்கை இது... என்று ஒவ்வொரு நாளும் புலம்ப வைத்து விடுகிறது.

    இதில் இருந்து விடுபட குத்தாட்டம் போடுங்கள் என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள். ஜிம்மிற்கு செல்வது, உடற்பயிற்சிகளை செய்வது கடினமாக இருக்கும். இத்தகைய நேரங்களில் கொஞ்ச நேரம் உங்களுக்கு பிடித்த பாடலை போட்டு ஒரு ஆட்டத்தை போட்டால் போதுமாம். உடலே உற்சாகமாகிவிடுமாம்.

    நடனம் ஆடுவது உடற்பயிற்சியின் மகிழ்ச்சிகரமான வடிவம், நல்ல உடல், நல்ல மனநிலையை தருவதோடு கூர்மையான மூளையையும் அளிக்கிறதாம். நடனம் என்பது முழு உடல் பயிற்சி. இது உடல் மற்றும் மன நலனுக்கான நன்மைகளை தருகிறது. மேலும் எல்லா வயதினருக்கும் ஏற்றது. ஆடுவது எல்லோருக்கும் சந்தோசம் தானே!

    ஜிம்மிற்கு செல்ல தயங்குபவர்கள், வயதானவர்கள் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் போன்றவர்கள் நடனமாடுவதன் மூலம் பெரிதும் பயனடையலாம்.

    வழக்கமான நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளைப் போல் இல்லாமல் நடனத்திற்கு அதிக மூளை சக்தி தேவைப்படுகிறது. நடனமாடும்போது உடலை மட்டும் அசைப்பதில்லை. மூளைக்கும் சேர்த்து உடற்பயிற்சி செய்கிறோம். நடனம் ஆடுவதற்கு ஒருங்கிணைந்த உணர்வு மற்றும் சமநிலை தேவைப்படுகிறது. மூளையில் புதிய இணைப்புகளை உருவாக்க உதவுகிறது என்று குருகிராமில் உள்ள ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குனர் டாக்டர் ஆதித்யா குப்தா கூறியுள்ளார்.

    அமெரிக்காவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் அறிவாற்றல் விஞ்ஞானி ஹெலினா புளூமென் கூறும்போது, இறுக்கமான மனநிலையில் இருக்கும் போது நடனம் ஆடினால் மூளையின் பல்வேறு பகுதிகளும் ஈர்க்கப்பட்டு மனநிலை இலகுவாகிவிடும் என்கிறார்.

    நினைவாற்றலுக்கான சிறந்த பயிற்சியாக நடனம் இருக்கிறது. பாடலுக்கு ஏற்ப கை, கால்களை அசைத்து ஆடும்போது உணர்வை ஒருங்கிணைத்து ஆட்டத்தில் கவனம் செல்கிறது. இவை நியூரோ பிளாஸ்டிக் சிட்டியை தூண்டி அறிவாற்றல் வீழ்ச்சியை குறைக்கிறது. மூளையை கூர்மையாக்குவதாகவும் டாக்டர் ஆதித்யகுப்தா குறிப்பிட்டு உள்ளார்.

    பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் நடனம் ஒரு சிறந்த சிகிச்சையாக இருப்பதாக டாக்டர் பிரவீன் குப்தா கூறுகிறார். ஏனெனில் இது காட்சி மற்றும் செவிவழி குறிப்புகளை பயன்படுத்தி மனதின் சமநிலையை மேம்படுத்துகிறது.


    2018-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நடனம் ஆடி பயிற்சி செய்பவர்கள் மூளைப் பகுதிகளில் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் அதிக வளர்ச்சியை கண்டனர். அவை நினைவாற்றல், கவனம் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற சிந்தனை திறன்களைக் கையாளுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    நடனம் மனஅழுத்தத்தை குறைத்து நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட உதவுகிறது. அறிவாற்றல் திறன் அதிகரிக்கிறது.

    ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க நடனம் சிறந்த வழி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். வழக்கமான நடனம் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது, தசை வலிமையை உருவாக்குகிறது மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிக்கிறது.

    நடனமாடும்போது, உடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்துகிறது. நடனம் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் துடிக்க உதவுகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது, "என்கிறார் நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சைபல் சக்ரவர்த்தி.

    ஒரு ஆய்வின்படி, மிதமான-தீவிர நடனம், நடைபயிற்சியை விட அதிக அளவில் இருதய நோய் இறப்புக்கான அபாயத்தைக் குறைப்பதாக தெரியவந்துள்ளது. நுரையீரலை சிறப்பாக செயல்பட வைக்கிறது. நடனம் உங்கள் சுவாச அமைப்புக்கும் நல்லது. எளிதாக சுவாசிப்பதன் மூலம் அதிக ஆற்றல் பெற முடியும் என்கிறார்கள்.

    நடனம் ஆடும்போது தசைகள் வலிமை பெறுகிறது. உடலில் இருந்து கூடுதல் கலோரிகளை எரிக்கிறது என்ற ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

    நடனம் என்றவுடன் முறைப்படி கற்றுக் கொண்டு ஆட வேண்டும் என்பதில்லையாம். உங்களுக்கு பிடித்த பாடலை போட்டு உங்கள் விருப்பம் போல் ஆடலாம்.

    பல வெளிநாடுகளில் உடற்பயிற்சி கூடங்களில் எல்லா வயதினரும் இப்படி குத்தாட்டம் போடுவது அதிகரித்துள்ளது. அது மனதை எளிதாக்குவதாக கூறி சந்தோசப்படுகிறார்கள்.

    எங்கே... நீங்களும் ரெடியா? டென்ஷனை நினைத்து 'வொரி' பண்ணாதீங்க... செல்போனில் பிடித்த பாடலை போடுங்கள். அதை கேட்டு ஒரு ஆட்டத்தை போடுங்க.... எல்லா டென்ஷனும் போயிடும்.

    • மகிழ்ச்சியான தருணங்களும், என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது.
    • ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர்.

     டி 20 உலகக்கோப்பை கொண்டாட்டங்கள் நேற்று மும்பையில் களைகட்டியது. வான்கடே மைதானத்தில் வைத்து இந்திய வீரர்களும் ரசிகர்களும் இந்த வெற்றிடயை கொண்டாடித் தீர்த்தனர். மகிழ்ச்சியும் உணர்வுபூர்வமான தருணங்களும் மைதானத்தை நிறைத்தது.

    மகிழ்ச்சியான தருணங்களையும் என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது. டிஜே பாடல்கள் மைதானத்தை அதிரவைத்த நிலையில் இந்திய வீரர்கள் அவற்றுக்கு வெற்றிக் களியாட்டம் போட்டனர்.

     மைதானத்தில்  நடந்த ரெயின் டான்ஸ் பார்ட்டியில் ஷாருக் கான் படத்தின் பிரபல பாடலான சக் தே இந்தியா பாடல் பின்னணியில் ஒலிக்க அதற்கு ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர். ரசிகர்களும் அவர்களின் உற்சாக மனநிலை தொற்றிகொள்ளவே வான்கடே மைத்தனமே மகிழ்ச்சியில் திளைத்தது. பாடல்களுக்கு இந்திய வீரர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    • தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி...' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
    • தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி...' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோஷன் வேலைகளையும் படக்குழு தொடங்கியுள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி...' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இந்தப் பாடலின் ஹூக் ஸ்டெப்புக்கு ரசிகர்கள் பலரும் நடனம் ஆடி வீடியோ பகிர்ந்து வந்தனர். இந்த டிரெண்டில் தற்போது ஹன்சிகாவும் இணைந்துள்ளார். ராஷ்மிகாவின் சாமி ஹூக் ஸ்டெப்புக்கு பாவாடை, தாவணியில் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    • ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் தெருக்களில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
    • இருவரும் தங்களது நடன பாணிகளில் அசத்திய வீடியோ பயனர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

    சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது வீடியோக்கள் வெளிவந்தாலும் சில வீடியோக்கள் மட்டுமே பயனர்களிடம் வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பாடலுக்கு 2 பெண்கள் இரண்டு விதமான நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

    அந்த வீடியோவில், பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் நெட்பிக்ஸ் தொடரான 'ஹீரமண்டி தி டயமண்ட் பஜார்'-ல் இடம்பெற்ற 'சகல் பான்' என்ற பாடலுக்கு 2 பெண்கள் நடனம் ஆடுகின்றனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் தெருக்களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

    அதில், பூர்ணதா மொகந்தி என்ற பெண் அழகான சாம்பல்- இளஞ்சிவப்பு சேலை அணிந்து சகல் பான் பாடலுக்கு ஒடிசி நடனம் ஆடுகிறார். மற்றொரு பெண்ணான வினிதா ஸ்ரீராம் குமார், வயலட்- தங்க நிற புடவை அணிந்து அதே பாடலுக்கு பரதநாட்டியம் ஆடுகிறார்.

    இருவரும் தங்களது நடன பாணிகளில் அசத்திய வீடியோ பயனர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.


    • தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருவேங்கைவாசல் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் மற்றும் பிடாரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் நடைபெறும் பவுர்ணமி விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றது

    இங்கு இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா காப்புக் கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அங்கு அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்த வந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சேர்ந்து அவர் நடனமாடி உற்சாகமூட்டினார். அவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • 33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
    • லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

    லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்று வேட்டையன் படப்பிடிபிற்காக ரஜினி மும்பை சென்றார். அவர் விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்கலில் வைரலாகியது. படத்தின் இன்ட்ரோ பாடலில் அனிருத் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. படத்தின் இண்ட்ரோ பாடலில் ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடி இருக்கிறார் அனிருத்.

    அதைத்தொடர்ந்து தற்பொழுது அமிதாப் பச்சனுடன் இணைந்து வேட்டையன் படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த ஒருவரை ஒருவர் கட்டி அணைத்த படியும், சிரித்து கொண்டு கருப்பு நிற கோட் சூட்டில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி இருக்கின்றனர்.

    33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதற்கு முன் 1991 ஆம் ஆண்டு 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தகது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்ரீலீலா தமிழில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் படமாக இருந்துவிட கூடாது என்பதால் நிராகரித்து விட்டார்
    • எதிர்காலத்தை மனதில் கொண்டு அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, பார்வதி நாயர் நடிக்கின்றனர்




    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

    கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கும் மாஸ்கோவுக்கும் சம்பந்தம் இருப்பதால் தான் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்

    மேலும் இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளதாக தகவல் வெளியானது.




    அதைத்தொடர்ந்து திரிஷாவுக்கு பதில் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வரும் இளம் நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டார். இது தொடர்பாக அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    ஸ்ரீலீலா தமிழில் தனது முதல் படம் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் படமாக இருந்துவிட கூடாது என்பதால் அந்த வாய்ப்பை தற்போது நிராகரித்து விட்டார் என்கிற தகவல் தற்போது வெளியானது.



    நடன திறமை கொண்ட ஸ்ரீலீலா விஜயுடன் இணைந்து நடனம் ஆடும்போது தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கும் என தெரிந்தும் எதிர்காலத்தை மனதில் கொண்டு அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது
    • தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

    லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இன்ட்ரோ பாடல்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது.

    தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர். எனவே 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த்தின் அறிமுக பாடல் (இன்ட்ரோ பாடல்) மீண்டும் கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான படப்பிடிப்பு வருகிற 25 -ந்தேதி சென்னை சுந்தர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான 'செட்' போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடன அமைப்பாளர் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளார்.

    இதில் ரஜினியின் அறிமுக பாடலை அவர் பிரமாண்டமாக உருவாக்க உள்ளார். இதில் ரஜினியுடன் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகிறார்கள்.

    இந்த பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'அண்ணாமலை' 'பாட்ஷா' படத்தில் வரும் அறிமுக பாடல் போன்று பிரமாண்டமாக தயார் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 'வேட்டையன்' படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் வேட்டையன் படத்தின் இன்ட்ரோ பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் இணைந்து நடமாடியுள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • சகோதரியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் குடும்பத்தில் இந்த சோகம் ஏற்பட்டது

    சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது இந்த காலக்கட்டத்தில் அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. சமீபகாலமாக 'மாரடைப்பு' காரணமாக வாலிபர்கள், சிறுவர்கள், பெண்கள் என அனைத்து வயது தரப்பிரனரும் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏராளம் அரங்கேறி வருகிறது.

    முன்னதாக, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். பல பிரபலங்களும் சமீபத்தில் மாரடைப்பால் இறந்தனர்.

    இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் தனது சகோதரியின் ஹல்டி விழாவில் நடனமாடும்போது ரிம்ஷா என்ற 18 வயது சிறுமி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

    சகோதரியின் ஹல்டி நிகழ்ச்சியில் ரிம்ஷா தனது சக தோழிகள் மற்றும் சிறுவர்களுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. சற்று தடுமாறி பிறகு மீண்டும் நடனத்தில் ஈடுப்பட்டார். பின்னர் நெஞ்சை பிடித்தவாரு தரையில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு ரிம்ஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரிம்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    சகோதரியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் குடும்பத்தில் இந்த சோகம் ஏற்பட்டது அந்த பகுதியில் உள்ள அனைவனையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ஹல்டி நிகழ்ச்சியில் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சிறுமியின் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

    • சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.
    • 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்.

    ஒரு சில சமயங்களில் நமக்கு பிடித்த வேலையை பெறுவதற்காக பிடிக்காத வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அத்தகைய சூழல்களில் வெறுப்பாகவும், வேலையை முழு ஈடுபாடு இல்லாமலும் செய்ய நேரிடும். சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.

    ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு. அதிலும் முக்கியமாக ஊதிய உயர்வு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பதால் அது கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். அதிலும் 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம். ஆனால், இங்கு ஒருவர் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார் அன்கேத். கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். வேலையை ராஜினாமா தானே செய்துள்ளார் என்றால் சரி. அதனை கொண்டாடும் விதமாக இசைக்குழுவுடன் இணைந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் தற்போது பேசுபொருளாகியுள்ளார்.

    ஊதிய உயர்வு தராமல் இருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த அன்கேத், பணியில் இருந்து விலகுவதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட முடிவெடுத்தார். இதையடுத்து தனது நண்பர்கள் மற்றும் இசைக்குழுவை அழைத்து அன்கேத், நிறுவனத்தின் மேலாளர் அலுவலகம் முடிந்து வெளியில் வந்த போது வாசல் முன்பு மகிழ்ச்சியுடன் மேளம் அடித்து ஆடிப்பாடி நடனம் ஆடி கொண்டாடினார். இதனால் எரிச்சலடைந்த நிறுவனத்தின் மேலாளர், அன்கேத் மற்றும் குழுவினரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

    கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கும் மாஸ்கோவுக்கும் சம்பந்தம் இருப்பதால் தான் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்

    மேலும் இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளதாக தகவல் வெளியானது.




    இந்நிலையில் திரிஷாவுக்கு பதில் தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.
    • திருவனந்தபுர தொகுதியில் சசி தரூர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான சசி தரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது.

    2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதில், கேரளா உள்பட 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில ஈடுபட்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், தான் போட்டியிடும் திருவனந்தபுர தொகுதியில் சசி தரூர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது, சசி தரூர் ஜெய் ஹோ பாடலுக்கு தனது ஆதரவாளர்களுடன் நடனமாடினார். அவரை சுற்றி சிறுவர், சிறுமிகள் வெள்ளை உடையில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொருந்திய தொப்பி ஷால் அணிந்து நடனமாடியனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×