search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    ஈரோடு,

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கபிலன் (30). இவர் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கோவை செல்வதற்காக அவரது நண்பர் சத்யா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கபிலன் மற்றும் அவரது நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான கபிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை.
    • தலைகவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வாகனங்களில் தொங்க விட்டபடி செல்லக்கூடாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள்.

    மேலும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறர்கள்.

    அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை கூறியதோடு, தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என உறுதிமொழியும் மேற்கொள்ள செய்தனர்.

    இதையடுத்து தஞ்சை அண்ணாநகர் பகுதியில் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைகவசம் உயிர்கவசம் என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு நாடகத்தில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அவ்வாறு ஓட்டினால் உயிரிழப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர். மேலும் தலைகவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வாகனங்களில் தொங்க விட்டபடி செல்லக்கூடாது, தலைகவசம் அணிந்து தான் பயணிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • ரூ.88.500 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோ.
    • வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.19,65,000-ம் இதற்கு மானிய தொகையாக ரூ5,20,500 ஆகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெகடர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தாட்கோ மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி ஊராட்சி சாக்கரமஸ் என்பருக்கு தொழில் முனைவோர் இயக்கத்தின் மூலம் ரூ.2.95,000 மொத்த தொகையில் ரூ.88.500 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோவையும்,

    மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் ஊராட்சி பெரிய தெரு ராஜபாண்டியன் என்பருக்கு ரூ.9,800,000 மொத்த தொகையில் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கோதண்டபுரம் ஊராட்சியை சார்ந்த கண்ணன் என்பவருக்கு ரூ.6,00,000 மொத்த தொகையில் ரூ.2.07,000 மானியத்துடன் புதிய டிராக்டர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    இவ்வாகனங்களின் மொத்த மதிப்பு மதிப்பு ரூ.19, 65,000 மும் இதற்கு மானிய தொகையாக ரூ5, 20, 500 ஆகும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்

    முத்துசாமி, மானட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியயின் நேர்முக உதனியாளர் (பொது) நரேந்திரன், மாவட்ட தாட்கோ மேலாளர்சுகந்தி பரிமளம்உதவி மேலாளாசுசிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம்.
    • 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் தியேட்டர் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடியே 5 லட்சம் மதிப்பில் அடுக்குமாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி அடித்தளம், தரைதளம், முதல்தளம், 2-வது தளம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பணிகளை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டலக்குழு தலைவர் மேத்தா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வணிக வளாகம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை ஆட்சேபனை காரணமாக தாமதம் ஆனது. தற்போது மாநகராட்சி சார்பில் பணிகள் நிறைவடைந்து விட்டது. கடைகள் ஏலம் எடுத்துள்ளவர்கள் அந்தந்த கடைகளில் டைல்ஸ் உள்ளிட்ட இதர பணிகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிகள் மே மாதத்துக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.

    இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம். தரைதளம் 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன. இதில் நகைக்கடைகள், ஜவுளி கடைகள் இடம்பெறுகின்றன இதே போல் முதல்தளம், 2-வது தளத்திலும் ஜவுளிகடைகள், நகைகடைகள் இடம் பெறுகின்றன. இதில் ஒவ்வொரு தளத்திலும் ஆண், பெண்களுக்கு தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, குளிர்சாதன வசதியும் அமைக்கப்படுகின்றன.

    இதே போல் தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள வணிக வளாகம், புதிய பஸ் நிலையத்தில் உள்ள பன்னோக்கு வணிக வளாகம் ஆகியவற்றின் பணிகள் விரைந்து முடிக்கப்படும். தஞ்சை மேலவீதி மூலஅனுமார் கோவில் அருகே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள பாலத்தின் முன் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றி பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

    • பரமத்தி அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி பெண் பலியானர்.
    • விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்திவேலூர்,

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌஸ். இவரது மனைவி சசிகலா என்கிற மும்தாஜ் (வயது 64). இவர் நேற்று காலை பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சசிகலா என்கிற மும்தாஜ் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து பார்த்து இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக குண்டும், குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கியது.இதில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன.குறிப்பாக ஊத்துக்குளி சாலை ரெயில்வே கேட் பகுதி மற்றும் அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்கள் சிக்கி கொண்டன.

    அந்த வாகனங்கள் அவ்வழியே வந்த சரக்கு வேன் மூலம் கயிறை கொண்டு பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஊத்துக்குளி ரெயில்வே கேட், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன.
    • மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

     காங்கயம் :

    காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் மலையில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன. இந்நிலையில் ஊதியூா் வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய புள்ளிமான் குண்டடம் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    குடிநீர் தேடி வனங்களில் இருந்து வெளியேறும் விலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே வனங்களில் குடிநீா்த் தொட்டி அமைத்து தண்ணீா் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
    • நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. நகரின் எல்லை பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இதில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.

    அமராவதி புதூரில் இருந்து புளியால் வரை உள்ள காட்டுப் பகுதிகளில் மான்கள் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் நெடுஞ்சாலையைக் கடந்து வருவது வழக்கம்.

    அப்படி கடந்து வரும் போது வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாரிச்சான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானின் உடலை மீட்டுச் சென்றனர்.

    மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்தும், வேகக்கட்டுபாடுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தும் வகையிலும் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பண்ருட்டி போலீஸ் சரகத்தில் அடிக்கடி வாகன விபத்து பெருமளவில் நடக்கிறது.
    • தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன சோதனை மேற்கொள்வதென போலீசார் முடிவு செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி போலீஸ் சரகத்தில் அடிக்கடி வாகன விபத்து பெருமளவில் நடக்கிறது. இதனை தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி துணை சூப்பிரண்டு ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், புதுப்பேட்டை, கொள்ளுகாரன் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன சோதனை மேற்கொள்வதென போலீசார் முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து பண்ருட்டி சென்னை சாலை கொள்ளு காரன் குட்டை பகுதியில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

    • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்.
    • குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.30ஆயிரம் வரை அபராதம் விதிப்பு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர்

    சிவக்குமார் உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், வாகனத்துக்கு உரிய காப்பீடு இல்லாதவர்கள் அதிவேகமாக செல்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாதவர்கள் என கண்டறிந்து.

    அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சீர்காழி நகர்பகுதியில் 30 வாகனங்களுக்கு தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000, லைசென்ஸ் இல்லாதவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டுவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவர்கள் என ரூ.30ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • சந்தேகப்படும்படி பணம் கொண்டு செல்கிறார்களா?

    தஞ்சாவூா்:

    திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை நூதன உடைத்து ரூ.75 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளையர்களை பிடிக்க திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    அந்தந்த மாவட்டங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தஞ்சையில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுபடி ரெயிலடி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசாரின் அதிரடி வாகன சோதனை நடந்து வருகிறது.

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். உடைமைகளை சோதனை இட்டு அதில் சந்தேகப்படும்படி பணம் கொண்டு செல்கிறார்களா என சோதனையிட்டனர். எங்கிருந்து வருகிறீர்கள் ? எங்கு செல்கிறீர்கள் என தீவிர விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அற்புதாபுரம், புதுக்குடி உள்ளிட்ட 8 எல்லைகளிலும் செக்போஸ்ட் அமைத்து தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

    48-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    • சேலம் அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது.
    • தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்

    சேலம்:

    சேலம் மாவட்ட ஆயு–தப்–ப–டை–யில் போலீஸ்–கா–ர–ராக அன்–பு–தா–சன் (வயது 35) என்–ப–வர் பணி–யாற்றி வரு–கி–றார். டிரை–வ–ரான அவர் நேற்று போலீஸ் வாக–னத்–தில் 2-ம் நிலை காவ–லர் தேர்–வுக்கு பயன்–ப–டுத்–தப்–பட்ட பொருட்–களை ஏற்–றிக்–கொண்டு மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–துக்கு சென்–றார். பின்–னர் பொருட்–களை அங்கு இறக்கி வைத்–து–விட்டு மீண்–டும் ஆயு–தப்–ப–டைக்கு வாக–னத்தை ஓட்டி வந்து கொண்–டி–ருந்–தார்.

    அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது. இதில் தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அங்கு டாக்–டர்–கள் பரி–சோ–தனை செய்த போது, அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்.

    இது–கு–றித்து தக–வல் கிடைத்–த–தும் செவ்–வாய்–பேட்டை போலீ–சார் அங்கு விரைந்து சென்று விசா–ரணை நடத்–தி–னர். இதில் இறந்–த–வ–ரின் சட்–டைப்–பை–யில் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் பொதுப்–பி–ரி–வில் புற–நோ–யா–ளி–யாக சிகிச்சை பெற்–ற–தற்–கான சீட்டு இருந்–தது. அதில் ரவிக்–கு–மார் (37) 

    ×