search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
    • வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.

    இதனை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு ரூபாய் 7.05 லட்சம் மதிப்பிலான (நகரும் பொருட்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி) யை வழங்கினார்.

    இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.

    இதன் மூலம் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    • கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்துள்ளது.
    • கடவுள்தான் அதிகாரிகளுக்கு பிச்சை போட்டு வருகிறார்.

    உடுமலை : 

    பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த ஏராளமான வாகனங்கள் திருடப்பட்டும் மோசடியாக பறிக்கப்பட்டும் வருகிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.

    இது குறித்து அவர் தி உடுமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்துள்ளது. இதில், ஈடுபட்ட முகமது ஷாரிக், கோவை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்து சென்றுள்ளார். கோவையில் கார் வாங்கி கொடுத்தவரை கைது செய்த போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை

    கோவை, உடுமலை பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த ஏராளமான வாகனங்கள் திருடப்பட்டும், மோசடியாக பறிக்கப்பட்டும் வருகிறது.

    இதனால் இன்னும் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் ஆபத்து உள்ளது. போலீசார் வாகனத்திருட்டு உள்ளிட்டவை குறித்து விசாரிக்க வேண்டும்.சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் பொன்மாணிக்கவேல் சிறப்பாக பணியாற்றினார். அவர் அறநிலையத்துறையே தேவையில்லை, கடவுள்தான் அதிகாரிகளுக்கு பிச்சை போட்டு வருகிறார் என கூறியுள்ள கருத்தை வரவேற்கிறோம்.

    உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்தும், வெள்ளோட்டம் விடப்படாமல் தேர்நிலை காலியாக உள்ளது.பழைய தேர் பாதுகாப்பில்லாமல் உள்ளது. கந்த சஷ்டி விழாவுக்கு வெள்ளி வேல் வைக்காமல் ஆகமம், வழிபாட்டு முறையை சிதைத்துள்ளனர். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கோவில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன.
    • குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சையின் மையப்பகு தியில் காமராஜர் மா ர்க்கெட் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை புதுப்பித்து பல்வேறு வசதிகளுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதனால் இங்கிருந்த கடைகள் தஞ்சை மாதாக்கேட்டை சாலை காவேரி நகருக்கு தற்காலிமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    அங்கு தற்காலிகமாக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வந்தன.இந்த நிலையில்பணிகள் அனைத்தும் முடிவடை ந்ததால் முறைப்படி இன்று காமராஜர் மார்க்கெட் திறக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து காணொளி வழியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார், மண்டல குழு தலைவர் மேத்தா , மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரூ.20 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட்ட காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன. மேலும் மழைநீர் வடிகால் வசதி, வாகனம் நிறுத்துமிடம், திடக்கழிவுகளை கையாளும் வசதி, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி, மின் வசதி, தீயணைப்பு வசதி, குடிநீர் வசதி கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவிநாசி பாளையம் சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.
    • 17 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் பறிமுதல்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் படி, கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) ராஜ்குமார் மேற்பார்வையில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், பார்த்திபன்நாதன், நாடிமுத்து , செந்தில், ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் என்பவரை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து விக்னேஷ் கண்ணனை கைது செய்து 17 பவுன் நகைகளையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி தஞ்சை மாநகரம் முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    இதில் பஸ் நிலையங்கள், ரெயிலடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவீன வசதியுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

    மற்ற இடங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

    இதில் பதிவாகும் காட்சிகளை பார்க்க தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறை மற்றும் போலீசார் கண்காணிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே 2 இடங்களில் பதிவாகும் காட்சிகள் பார்க்கபட்டன.

    தற்போது நடமாடும் வாகனம் மூலமும் காட்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    இந்த வாகனத்தை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் இந்த நடமாடும் வாகனத்தில் தெரிந்ததை பார்வையிட்டனர்.

    இந்நிகழ்வில் பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், மாநகர் நல அலுவலர் (பொ) அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகள் மற்றும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான காவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் சாக்கில் மறைத்து வைத்து கடத்தி வந்த சாராய 110 லிட்டர், 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகளையும் வாகனத்தையும்பரிமுதல் செய்து விசாரனை செய்தனர்.

    காரைக்கால் நெடுங்காடு தெருமாங்வி லங்கை சிவன்கோயில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வீரமணி (வயது 26) என்பது தெரியவந்தது.

    அவரை சாராய கடத்தல் வழக்கில் கைது செய்து பொறையார்கிளை சிறையில் அடைத்தனர்.

    • மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.
    • நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
    • மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

    நாகர்கோவில், அக்.27-

    புதிய சட்டத்திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் செட்டிகுளம் கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், வடசேரி பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். நாகர்கோவில் நகரில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 64 பேருக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் அபராதம் விதித்துள்ளனர் .இதன் மூலமாகரூ. 64 ஆயிரம் வசூல் ஆகியுள்ளது. இதே போல் கோட்டார், வடசேரி போலீசாரும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் பலரும் சிக்கினார்கள் . பெண்களும் சிக்கி தவித்தனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.

    மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இன்று காலையிலும் ஹெல்மெட் சோதனை நடந்தது. ‌ஹெல்மெட் அணியாமல் பின்னால் இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    • சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 30ந்தேதி பல்லடம் கடை வீதியில் வணிகர் சங்க அலுவலக திறப்பு விழாவிற்க்கு வரும் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்லடம் அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • பலியான சிமியோனுக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சிமியோன் (வயது 46). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இவர் கடந்த 4-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக சுசீந்திரம் புறவழி சாலையில் காக்குமூர் சந்திப்பில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிமியோனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வடசேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனு மதித்தனர்.

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிமியோன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிமியோன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். பலியான சிமியோனுக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    • மூன்று பேர் மின்னல் வேகத்தில் வந்து கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயன்றனர்.
    • கூச்சல் போட்டதால் திருடர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நேற்று வழக்கம் போல வாரச்சந்தை நடைபெற்றது.

    பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று மாலை சந்தைக்கு சென்று காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு தங்கள் வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ரிஜிஸ்டர் ஆபீஸ் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் மின்னல் வேகத்தில் வந்து தேவி என்பவரின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்தனர்.

    கழுத்தில் நக கீரல் பட்டதால் செயினை இருக்கமாக பிடித்துக் கொண்டார். உடன் வந்த பெண்கள் கத்தி கூச்சல் போட்டதால் செயினை அறுக்க முடியாத திருடர்கள் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேராவூரணி போலீசார் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவதாக கூறினர்.

    பேராவூரணி காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசார் நியமித்து தீபாவளி பண்டிகை மற்றும் கூட்டம் நேரங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 66 ஆதரவற்ற மற்றும் ஏழைகளின் உடலை அடக்கம் செய்துள்ளார்.
    • காந்தி சிலைக்கு மாலை அணிவித்து வாகனத்தை ஏழைகளின் பயன்பாட்டிற்கு அளித்துள்ளார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40) எம்.பி.ஏ. பட்டதாரி.

    இவர் கடந்த சில வருடங்களாக பல்வேறு சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக ஆதரவற்ற நிலையில் இருந்து இறந்தவர்கள் மற்றும் உடல் அடக்கம் செய்ய வசதி இல்லாத நிலையில் உள்ள ஏழைகளின் உடல்களை நகராட்சி மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெற்று தனது சொந்த செலவில் வாகனத்தில் ஏற்றி சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த உடல்களை அடக்கம் செய்து விடுவார்.

    இது போன்று இதுவரை 66 ஆதரவற்ற மற்றும் ஏழைகளின் உடலை அடக்கம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏழைகளின் உடல்களை எடுத்து சென்று அடக்கம் செய்ய தனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அமரர் ஊர்தி ஒன்றை விலைக்கு வாங்கி அதை ஏழைகளுக்காக இலவசமாக அர்ப்பணித்தார்.

    முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்த வாகனத்தை ஏழைகளின் பயன்பாட்டிற்கு அளித்துள்ளார்.

    இவரின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    ×