search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177044"

    • நாவல் பழத்தில் 'ஜாம்' செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இதில் வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    நாவல் பழம் - 1 கிலோ

    சர்க்கரை - 150 கிராம்

    எலுமிச்சம் பழம் - பாதியளவு

    செய்முறை:

    நாவல் பழங்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றைப் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். இவ்வாறு செய்யும்போது பழத்தின் விதைப் பகுதி தனியாக பிரிந்துவிடும். விதைகளை நீக்கி விடவும்.

    வேக வைத்துள்ள நாவல் பழத்தை நன்றாக ஆற வைத்து தனியாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள நாவல் பழத்தை வாணலியில் கொட்டி மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும்.

    பிறகு சர்க்கரையை அதனுடன் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். துவர்ப்பாக இருப்பதாக தோன்றினால் சர்க்கரையை சிறிதளவு கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

    சிறிது நேரம் அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

    பின்பு பாதியளவு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    சிறிது நேரத்தில் ஜாம் சரியான பதத்திற்கு வந்துவிடும்.

    அதனை ஆற வைத்து பயன்படுத்தலாம்.

    சூடு ஆறிய பிறகு ஜாமை ஒரு கண்ணாடி ஜாரில் பத்திரப்படுத்தி தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

    எலுமிச்சை சாறு சேர்த்திருப்பதால் 6 மாதத்திற்கு கெட்டுப்போகாமல் வைத்து பயன்படுத்த முடியும். ரொட்டி, சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

    • எள் உடல் எடையை குறைக்க உதவும்.
    • உடலில் கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை எள் - அரை கிலோ

    வெல்லம் -அரை கிலோ

    நெய் - 2 டேபிள்ஸ்பூன்

    பொடித்த ஏலக்காய் -1 டீஸ்பூன்

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் எள்ளை கொட்டி சிறு தீயில் வறுத்தெடுக்கவும். எள் பொன்னிறமாக மாறும் வரை இடைவிடாமல் வறுத்தெடுக்கவும். ஒருபோதும் எள் கருகிவிடக்கூடாது.

    வறுத்த எள்ளை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

    வெல்லத்தையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் சிறு தீயில் வைக்கவும்.

    பின்பு நெய் ஊற்றி அது சூடானதும், வெல்லத்தை கொட்டவும். வெல்லம் பாகு பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    அதனுடன் பொடித்த எள்ளையும், ஏலக்காயையும் சேர்த்து கிளறவும்.

    பின்பு லட்டுகளாக தயாரித்து காற்று புகாத டப்பாவில் 10 நாட்கள் வரை சேமித்து வைத்து சுவைக்கலாம்.

    • குழந்தைகளுக்கு சாக்லேட் புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சாக்லேட் புட்டிங் கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.

    தேவையான பொருட்கள்:

    பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்

    சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்

    சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

    பால் - 1½ கப்

    வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்

    துருவிய சாக்லேட் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும்.

    பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.

    கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.

    பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.

    நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.

    • ஆருத்ரா தரிசனம் அன்று இறைவனுக்கு இந்த களி நைவேத்தியமாக படைக்கப்படும்.
    • இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்

    பச்சரிசி - 1 கப்

    வெல்லம் - 200 கிராம்

    துருவிய தேங்காய் - கால் கப்

    முந்திரி - தேவையான அளவு

    திராட்சை - தேவையான அளவு

    நெய் - ¼ கப்

    ஏலக்காய் பொடி - கால் மேசைக்கரண்டி

    செய்முறை

    அடுப்பில் கடாய் வைத்து அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ½ கப் தண்ணீரை எடுத்து தனியே வைத்து விடவும்.

    * கொதிக்கும் தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். இவ்வாறு கிளறும் போது, களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

    * தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ¼ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்து பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும். பிறகு, அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளற வேண்டும்.

    மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும், அதை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதில் ஏலப்பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

    * மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும். இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.

    * இப்போது சுவையான திருவாதிரை களி ரெடியானது.

    திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்ட போல, எளிமையாக செய்யலாம்.

    • முழுவதும் பாலில் செய்யக்கூடிய இனிப்பு தான் 'பெங்காலி மிஷ்டி டோய்'.
    • இதை சாப்பிட்டால் முகத்தில் உண்டாகும் சுருக்கம் நீங்கி பளபளப்பு உண்டாகும்.

    தேவையான பொருட்கள்:

    புளிப்பில்லாத தயிர் - 50 மி.லி.

    கன்டென்ஸ்டு மில்க் - 100 மி.லி.

    சர்க்கரை - 3 தேக்கரண்டி

    பால் - 400 மி.லி.

    குங்குமப்பூ - 1 கிராம்

    பிஸ்தா பருப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தயிரை வடிகட்டியில் ஊற்றி, அதில் இருக்கும் தண்ணீர் நீங்கும் வரை நன்றாக வடிகட்டவும். பின்னர் அதனை முட்டை அடிப்பானைக் கொண்டு கிரீம் பதத்தில் வரும் வரை கலக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் 300 மி.லி. பால், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் காய்ச்சவும்.

    வாணலியில் சர்க்கரையைக் கொட்டி, பொன்னிறமாக உருகும் வரை கிளறவும். பின்பு அதில் 2 மேசைக் கரண்டி பால் ஊற்றி கலக்கவும். பால் சர்க்கரையுடன் கலந்து கிரீம் பதம் வரும்வரை கலக்கவும். இப்பொழுது 'பால் கேரமல்' தயார்.

    கன்டென்ஸ்டு மில்க் கலவையில், கேரமல் ஊற்றி கலந்துகொள்ளவும். பின்னர் அதில் தயிர் சேர்த்துக் கலக்கவும்.

    வாணலியில் தண்ணீர் ஊற்றி சூடானதும், அதனுள் ஸ்டாண்ட் வைக்கவும். தயிர் கலவை உள்ள பாத்திரத்தை அலுமினியம் பாயில் கவர் அல்லது மெல்லிய துணியால் மூடி ஸ்டாண்ட் மீது வைத்து வாணலியை மூடவும். கலவையை 20 முதல் 25 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்னர் அதன் மீது பொடிதாக நறுக்கிய பிஸ்தா, குங்குமப்பூ தூவி அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது நாவில் கரையும் 'பெங்காலி மிஷ்டி டோய்' தயார்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • சத்தானது சுவையானது இந்த ஸ்நாக்ஸ்.

    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - 1/4 கிலோ

    சாக்லேட் - 100 கிராம் அல்லது சாக்லேட் சிறப்பு - 100 மில்லி

    தேங்காய் - 1/2 மூடி

    செய்முறை :

    பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை துருவி கொள்ளவும்.

    சாக்லேட்டை உருக்கி கொள்ளவும்.

    உருக்கிய சாக்லேட்டில் பேரீச்சம்பழ விழுது, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இப்போது சத்தான சுவையான சாக்லேட் பேரீச்சம் பழ லட்டு ரெடி.

    • இது கராச்சி அல்வா, நட்ஸ் அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.
    • இந்த அல்வாவை மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    கார்ன்ஃப்ளார் - 50 கிராம்

    சர்க்கரை - 200 கிராம்

    நெய் - ½ கப்

    ஆரஞ்சு நிறம் - 1 சிட்டிகை

    பொடித்த நட்ஸ் - ½ கப்

    ஏலக்காய் பொடி - ¼ தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவை போட்டு அதனுடன் 1 ½ கப் தண்ணீர், ஒரு சிட்டிகை கேசரி கலர் சேர்த்து மாவு கரையும் வரை கலக்கவும்.

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.

    சர்க்கரை கரைந்த பின்னர் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மாவு கலவையை சேர்த்துக் கலக்கவும்.

    குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும் கிளறும் போது லேசாக கட்டிகள் உருவானால் பயப்பட வேண்டியதில்லை.

    கார்ன்ஃப்ளார் மாவு ஓரளவு கெட்டியாக கண்ணாடி பதம் வந்த பிறகு அதில் 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    நெய்யை முழுமையாக சேர்த்த பின்னர் பொடித்த நட்ஸ் சேர்த்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.

    பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

    பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா திரண்டு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

    ஒரு தட்டில் நெய் தடவிய பின்னர் தயார் செய்துள்ள அல்வாவை அதில் சேர்க்கவும்.

    அதனை ஒரு கரண்டி கொண்டு சமமாக செய்த பிறகு ஓரளவு கெட்டியாகும் வரை ஆறவைக்கவும்.

    அல்வா ஆறிய பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

    சுவையான பாம்பே அல்வா தயார். 

    • கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
    • இன்று பிளம் கேக் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    மைதா - 100 கிராம்

    பட்டர் - 100 கிராம்

    சர்க்கரை - 100 கிராம்

    கார்ன் பிளார் - 2 ஸ்பூன்

    ஓமம் தூள் - அரை ஸ்பூன்

    திராட்சை - 30 கிராம்

    சுக்குத் தூள் - அரை ஸ்பூன்

    பால் - கால் கப்

    முந்திரி, பிஸ்தா, வால்நட்- விருப்பத்திற்கேற்ப

    செர்ரி பழம் - 50 கிராம்

    செய்முறை:

    சர்க்கரையை மிக்சி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    மைதா மாவினை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பட்டரை உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    செர்ரி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    முந்திரி, பிஸ்தா மற்றும் வால்நட் போன்றவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    கார்ன் பிளாரை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும் .

    பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கூழ் போன்று காய்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பாலினை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதில் உருகிய பட்டர் சேர்த்து சாஃப்டாக பிசைய வேண்டும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். பின் முட்டையை மைதா மற்றும் சர்க்கரை கலவையில் ஊற்றி மீண்டும் பிசைய வேண்டும்.

    பின் இந்த கலவையை பாலில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    பின் கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும்.

    வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களை தூவி மீதி மீதி கலவையை ஊற்ற வேண்டும். அதன் மேல் பொடித்த நட்ஸ்களை தூவி விட வேண்டும்.

    ப்ரீ ஹீட் செய்து கொண்ட ஓவனில் கேக் டின்னை வைத்து சுமார் நாற்பது நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். அவ்ளோதான் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் "பிளம் கேக்" ரெடி.

    • கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
    • கேழ்வரகில் ஆப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 1 கப்

    சாதம் - 1/4 கப்

    சோடா மாவு - 1/4 டீஸ்பூன்

    துருவிய தேங்காய் - 3/4 கப்

    நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் சூடேற பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள்.

    பின் மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதில் பிரட்டி வைத்துள்ள மாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து மூடி ஓரமாக வையுங்கள்.

    இது 8 மணி நேரம் ஊற வேண்டும்.

    மறுநாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். நன்கு கிளறி ஆப்ப சட்டியில் ஊற்றி சுட்டு எடுங்கள்.

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.

    இதற்கும் தேங்காய்பால் சூப்பராக இருக்கும்.

    • கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
    • மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலோடு கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதை கொண்டாடுகின்ற வகையில் நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான என்.கெளதமன அறிவுறுத்தலின்படி,நாகை நகர கழக செயலாளரும் நகர மன்ற தலைவருமான.

    இரா.மாரிமுத்து தலைமையில் நாகை பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நாகை *நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், தோழர்கள் மூத்தமுன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • தேங்காய்ப்பால் போஹா கோவாவின் ஸ்பெஷல் ஐட்டம்.
    • பத்தே நிமிடங்களில் இந்த போஹாவை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்

    அவல் - 200 கிராம்

    தேங்காய்ப்பால் - 1 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    செய்முறை

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    மிருதுவாக வந்தவுடன் அரை கப் சூடு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    அத்துடன் அவல் சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    அத்துடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறிவிடவும்.

    சுவையான தேங்காய்ப்பால் போஹா ரெடி. சுடச்சுட பரிமாறவும்.

    • சிறுதானியங்களில் நிறைய தாதுச்சத்துகளும், வைட்டமின்களும் உள்ளன.
    • அரிசியில் இருப்பதைவிட இதில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி - 100 கிராம்,

    இட்லி அரிசி - 100 கிராம்,

    உளுந்து - 25 கிராம்,

    வெந்தயம் - அரை தேக்கரண்டி,

    கருப்பட்டி - 200 கிராம்,

    இளநீர் - அரை கப்.

    செய்முறை:

    குதிரைவாலி அரிசியுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல் நாளே வாங்கி வைத்துப் புளிக்க வைக்க வேண்டும்.

    புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.

    கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.

    ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து வேக விடவும்.

    ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.

    சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம் தயார்.

    ×