search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177044"

    • புதிய ரெயிலுக்கு ரெயில் பயணிகள் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் இணைந்து வரவேற்பு அளித்தனர்.
    • ரெயிலின் கார்டு சேகருக்கு மாலை, சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    பாபநாசம்:

    கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் தஞ்சை திருச்சி மதுரை வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதை அடுத்து தனது முதல் பயணத்தை தொடங்கிய வண்டிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டா டப்பட்டது.

    டெல்டா பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயிலாடுதுறை கும்பகோ ணம் பாபநாசம் வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

    தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ராஜபாளையம், தென்காசி சங்கரன்கோவில் பகுதிகளை சேர்ந்த பயணிகள் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து மயிலாடுதுறை – செங்கோட்டை இடையே புதிய ரயில் வண்டி இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

    இதை அடுத்து செங்கோட்டை விரைவு ரயில் முதல் சேவை மயிலாடுதுறையில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக பாபநாசத்திற்கு பகல் 13.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

    புதிய ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம், வணிகர் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து வரவேற்பு அளித்தனர்.

    முன்னதாக வண்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ராஜராஜன் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி குழுத்தின் நெறியாளர் எஸ்.கே.ஸ்ரீதர் ரயில் வண்டியின் ஓட்டுனர்கள் மது, விஸ்வநாதன் மற்றும் ரயில் வண்டியின் கார்டு சேகர் ஆகியோருக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    மேலும் திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன், சங்க தலைவர் சோமநாதராவ், செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், சாமிநாதன், சங்கர், பாபநாசம் வணிகர் சங்க செயலாளர் கோவிந்தராஜன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், அசோகன் ஆகியோரும் ஓட்டுனர்களுக்கு சால்வை கள் அணிவித்து சிறப்பு செய்தனர்.

    நிகழ்ச்சியில் பாபநாசம் நகர தி.மு.க செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பூம்புகார் கைவினை கழகத்தின் முன்னாள் தலைவர் சுவாமிமலை ஸ்ரீகண்டன் ஸ்தபதி, பாபநாசம் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், சம்மந்தம், பாபநாசம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செந்தில்நாதன், பிரான்சிஸ்சேவியர், வெங்கடேசன் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர் அலி, பிரகாஷ், முத்துமேரிமைக்கேல்ராஜ், தேன்மொழிஉதயக்குமார், அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ஓய்வு பெற்ற செய்திதுறை இணை இயக்குனர் கண்ணதாசன், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    இந்த செங்கோட்டை விரைவு ரயில் வண்டி பாபநாசம் ரயில் நிலைத்திற்கு பகல் 12.20 மணிக்கு வந்து தஞ்சை, திருவெறும்பூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், தென்காசி வழியாக இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் செங்கோட்டை வழியாகவும், குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் தென்காசி வழியாகவும், வியாபார நிமித்தமாக அடிக்கடி செல்லும் வணிகர்களுக்கு உதவியாக மதுரை, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளுக்கு செல்லமுடியும்.

    குறைவான கட்டணத்தில் பாதுகாப்போடு பயணம் செய்யும் விதத்தில் பயணிகள் அனைவரும் இந்த ரயில் வண்டியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • தீபாவளி பண்டிகையையொட்டி சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
    • இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி தரணி முருகேசன் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை முறையில் நெல், மிளகாய், பாசிப்பயறு, உளுந்து, திணை, குதிரைவாலி, கேப்பை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களையும், காய்கறிகள் உள்ளிட்டவற்றையும் பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் முன்னோர்கள் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்டு வாழ்ந்து வந்ததன் காரணமாக அவர்கள் 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக இருந்து வந்தனர் ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் பலவிதமான நஞ்சு கலந்த உணவுகளை உட்கொண்டு வருவதனால் ஆயுள் காலங்கள் குறைந்து 50 முதல் 60 வயதிலே சொற்ப காலகட்டத்திலேயே மரணங்கள் அதிகரித்து வருகிறது

    விவசாயி முருகேசன் தனது பண்ணைகளில் விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் நஞ்சு கலக்காத சிறு தானியங்களை வைத்து இனிப்பு வகைகளை தயார் செய்து தற்போது உள்ள சந்ததிகளை பாதுகாக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இயற்கை அங்காடி நடத்தி விவசாய பண்ணைகளில விளையும் வைக்கும் பொருட்களைக் கொண்டு பல விதமான இனிப்பு வகைகளை பண்டிகை காலங்களில் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த அங்காடியில் கம்பு, கேழ்வரகு, சோளம், எள்ளு, திணை, ராகி, வேர்கடலை, எள்ளு, ரவா உள்ளிட்ட சிறு தானியங்களை வைத்து செயற்கைக்கு மாற்றாக இயற்கை முறையில் 7 வகையான லட்டுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பாரம்பரிய முறைப்படி எந்த ஒரு கலப்படமும் செய்யாமல் இயற்கை முறையில் பண்ணையில் விளைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி, ஆத்தூர் கிச்சடி சம்பா அரிசி ஆகியவற்றை வைத்து முறுக்கு, அதிரசம் தயார் செய்து வருகின்றனர்.

    இவைகள் அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் இருந்து கலப்படமில்லாமல் உற்பத்தி செய்யப்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் சுவையானதாக இருப்பதால் ராமநாதபுரத்தில் பல்வேறு அரசு அதிகாரிகளும், பொது மக்களும் தீபாவளிக்காக அதிகளவு நண்பர்களுக்கு கொடுப்பதற்காகவும், குடும்பத்திற்கு பயன்படுத்துவதாகவும் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    மேலும் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களுக்கு என்றே இந்த அங்காடியில் இயற்கை முறையில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுவதற்கு என்றே ஒரு கூட்டமே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    இதற்காக அங்காடியில் முறுக்கு, அதிரசம், லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி என்றாலே புத்தாடைக்கு அடுத்த படியாக இனிப்புகளை இறைவனுக்கு படையல் செய்து பின்னர் உறவினர்களுக்கும் வழங்கி பரிமாறிக்கொள்வது தொன்று தொட்டு இருக்கும் பழக்கமாக உள்ளதால் அதனை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் தற்போதுள்ள காலகட்டத்தில் ரசாயன கலப்படமில்லாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. ராமநாதபுரம் பகுதி பொதுமக்களிடம் இந்த புதிய முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.


    • தீபாவளியை முன்னிட்டு க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை பகுதியில் திருப்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் தலைமையில் தீபாவளியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்களுக்கு இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன்,தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.குமார்,பொங்கலூர் ஒன்றிய செயலாளர் எஸ்.அசோகன், மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மு.அப்துல்பாரி,ஒன்றிய பொருளாளர் மு.சர்புதீன் , தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் சுமதிசெந்தில், சகாப்தீன், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபுபாலசுப்பிரமணியம் ,மங்கலம் இளைஞர் அணி அமைப்பாளர் இப்ராஹிம் , முன்னாள் மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் தம்பிரஹீம், காங்கிரஸ் கட்சியின் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சபாதுரை மற்றும் தி.மு.க. கட்சியின் மங்கலம் நிர்வாகிகள் முபாரக்ராஜா , சேக்முஜிபுர் ரகுமான், சுல்தான்பேட்டை நிர்வாகிகள் பண்ணையார்திருமூர்த்தி ,பாலு , முருகன்,கிட்டான்,அர்ஜூனன் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.
    • மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது

    தருமபுரி,

    தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் லிட்டில் லைட் தன்னார்வ அமைப்பின் சார்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், புத்தாடை, இனிப்பு, காரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சி தருமபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கலந்து கொண்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளாக இருந்து வாழ்க்கையில் சாதித்து வெற்றி பெற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களை பாராட்டி கேடயங்களும் வழங்கப்பட்டது.

    இதனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

    • நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • புதிய ஆடைகள் , இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி கீழ வீதியில் இயங்கி வரும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய ஆடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்விற்கு தலைவர்ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    டெல்டா ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தி நம்பிக்கை மனநல காப்பக சேர்மன் சௌந்தர்ராஜன், அவரது துணைவியார் காப்பகத்தின் துணை சேர்மன் விஜயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி டெல்டா ரோட்டரி உறுப்பினர்களை கௌரவித்தனர்.

    முடிவில் செயலாளர் ராஜதுரை நன்றி கூறினார்.

    இந்த தீபாவளி சிறப்பு புத்தாடை வழங்கும் ஏற்பாட்டினை பொருளாளர் அகிலன், உடனடி முன்னாள் தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மனநல காப்பகத்தில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • எடையளவு சட்டத்தின் கீழ் இனிப்பு, ஜவுளிக்கடை வியாபாரிகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த, ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்

    (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சிவகங்கை மாவட்டடத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகள், இனிப்பு கடைகளில் மற்றும் நிறுவனங்களில் திடீர் சோதனை செய்தனர்.

    எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ், பொட்டலப்பொருட்களின் மேல் பொருளின் பெயர், பொட்டலமிடுபவர், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழு முகவரி, நிகர எடை/நிகர எண்ணம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (வரிகள் உட்பட), பொட்டலமிட்ட, தயாரித்த மாதம், வருடம், நுகர்வோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமாக குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யவேண்டும்.

    அவ்வாறு சட்டவிதிகளின்படி இனிப்பு மற்றும் ஜவுளி பொட்டலங்களில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 7 வணிகர்கள் மீது பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும், எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 வணிகர்கள் மீதும், எடையளவு மறு முத்திரை இடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத, 10 வியாபாரிகள் மீதும் எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட 17 முரண்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும், வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் அவர்களது பெயர் விவரங்களை labour.tn.gov.in என்ற விடுதலின்றி கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த சோதனையில் சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம் மற்றும் சிவகங்கை, காைரக்குடி, திருப்பத்தூர்,

    தேவகோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், கலாவதி, வசந்தி ஆகியோர் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    • தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைேமாதி வருகிறது.
    • ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளில், மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது.

    திருப்பூர் :

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் நிலையம், காதர் பேட்டை உட்பட திருப்பூரின் பிரதான ரோடுகளில் தற்காலிக துணிக்கடை, பலகார கடைகள், நடைபாதை கடை, பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைேமாதி வருகிறது.இதுபோன்ற சூழல்களை பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர். இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.மக்கள் கூடும் இடங்களில், வழிப்பறி திருடர்கள், ஜேப்படி ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் 'மப்டி'யில் ரோந்து சென்று வருகின்றனர்.

    தீபாவளியையொட்டி, என்னதான் போலீசார் பாதுகாப்பு அளித்தாலும் கூட்டத்தை பயன்படுத்தி, கடை உரிமையாளரை திசை திருப்பி பொருட்களை திருடிச் செல்வது, வாங்கிய பொருளுக்கு பணத்தை கொடுக்காமல் கொடுத்தேன் என்றும், சில்லறை வாங்குவது போன்று நடித்தும் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல் மாநகருக்குள் வலம் வருகிறது.வியாபாரிகள் உஷாராக இருந்து பொருட்கள், பணம் போன்றவற்றை இழக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இதேபோல், பொதுமக்களும், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.சந்தேகப்படும் நபர்கள் இருந்தால், உடனே அருகே உள்ள போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.குறு, சிறு பனியன் நிறுவனங்களும் திருப்பூரில் ஏராளமாக உள்ளன. காதர்பேட்டையில் ஆண்களுக்கான பர்முடாஸ், இரவு நேர பேன்ட், டி-சர்ட், குளிர்கால ஸ்வெட்டர், பெண்களுக்கான வீட்டு உபயோக ஆடைகள், உள்ளாடைகள், பனியன் ஆடை, உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என ஏ-டு இசட் ரகங்கள் ஆண்டு முழுவதும் விற்கப்படுகிறது.ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளில், மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது. வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம். ஊரடங்கு முழுமையாக நீங்கிய பின் வர உள்ள இந்த தீபாவளியையொட்டி காதர்பேட்டையில் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,ஆண்டு முழுவதும் காதர் பேட்டையில் குழந்தைகள் ஆடைகள், டி-சர்ட், பேன்ட், பர்முடாஸ் விற்பனை நடக்கும். பெங்களூருவில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள் வாங்கி சென்றனர். ஆந்திரா, தெலுங்கானா வியாபாரிகளும் வாங்கி சென்றனர். தற்போது பல மாவட்டங்களிலும், நெடுஞ்சாலை ரோடுகளிலும் ஆண்டு முழுவதும் கடை அமைக்கும் வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர்.'ஆன்லைன்' வர்த்தகம் வந்த பிறகு காதர்பேட்டையில் வியாபாரம் மந்தமாகிவிட்டது. பொதுமக்கள், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தேவையான ஆடையை வாங்கிவிடுகின்றனர். இதனால் மொத்த வியாபாரமும் பாதிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடை அமைப்போர் மொத்தமாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில்லரை விற்பனை கடைகள் அமைவதால், எங்களுக்கு மொத்த விற்பனை நடக்கிறது. கொரோனா தொற்றால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் விற்பனை கிடைப்பதில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு வியாபாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.வரும் 21, 22, 23 ந் தேதி ஆகிய 3 நாட்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். அதற்காக பெண்கள், குழந்தைகளுக்கான புதுரக ஆடைகளுடன் கடை அமைத்துள்ளோம் என்றார்.

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் திருப்பூர் மாவட்டம் திருப்பூர், பல்லடம் ,தாராபுரம், காங்கயம், உடுமலை உள்பட பல்வேறு ஊர்களில் கடை வீதிகளில் உள்ள ஜவுளி, நகை, மளிகை, பட்டாசு, இனிப்பு கடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்க ஜவுளி, நகை, மளிகை கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிகின்றனர். இதனால் கடைவீதிகள் அனைத்தும் களை கட்டியுள்ளன.

    • கேழ்வரகில் அதிகளவு கால்சியம் உள்ளது.
    • இந்த தீபாவளிக்கு வித்தியாசமான, சத்தான இந்த பலகாரத்தை செய்து பாருங்களேன்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 500 கிராம்

    வெல்லம் - 250 கிராம்

    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - சிறிதளவு

    எண்ணெய் - பொரித்தெடுக்க

    செய்முறை :

    வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அந்த மாவில் பாகு காய்ச்சிய வெல்லத்தை ஊற்றி நன்கு கிளறி வைக்கவும்.

    அதை ஒரு நாள் ஊற விட்டு, மறுநாள் மாவை அதிசரமாக பிடித்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த அதிசரங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுககவும்.

    இப்போது மிருதுவான, சுவையான கேழ்வரகு அதிரசம் தயார்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் சபதம் எடுத்துக் கொண்டனர்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் சபதம் எடுத்துக் கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ. என்.எஸ்.என். நடராஜன், இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, ஹரிஹரசுதன், கருணாகரன், கே.பி.ஜி. மகேஷ்ராம்,தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என். பழனிச்சாமி, ஆண்டவர் பழனிசாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது
    • ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

    ஆரல்வாய்மொழி:

    அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், நகரச் செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், ஒன்றிய செயலாளர் மகாராஜன், நகரத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாழக்குடி நகரச் செயலர் பிரமநாயகம் பிள்ளை, ரோகினி அய்யப்பன்,

    தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஷேக், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், கச்சேரி நாகராஜன், பேரவை நிர்வாகிகள் சுந்தரம் இசக்கியப்பன், ஒல்சி, பேச்சியம்மாள், மல்லிகா, அமுதா, பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் சுயம்புலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த ரெசிபியை நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள்.
    • புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒருதடவை செய்து பாருங்களேன்.

    தேவையானவை:

    பச்சரிசி கால் கிலோ,

    பச்சைப் பருப்பு-100 கிராம்,

    வெல்லம் ஒன்றரைக் கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்)

    ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன்.

    இவை தவிர, நிறைய பால், நிறைய நெய், அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால் சேர்க்கலாம், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம்.

    அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ கஞ்சத்தனமோ கூடவே கூடாது. கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அடிப்படித்துவிடும்.

    அக்காரவடிசலில் முந்திரி, திராட்சை போன்றவற்றை பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது.

    செய்முறை:

    அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காயவையுங்கள். பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள்.

    அரிசி ஒருபங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.

    வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள். கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள். ஒரு லிட்டர் பாலைச் சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள். இறுக இறுக பால் சேருங்கள். கிளறுங்கள்.

    பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள். இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள். அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள்.

    கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்.

    நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள். சூப்பராக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒருதடவை செய்து பாருங்களேன்.

    • குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று உருளைக்கிழங்கில் சூப்பரான அல்வா செய்யலாம் வாங்க..

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - அரை கிலோ

    சர்க்கரை - 1/4 கப்,

    பாதாம் - 1 கையளவு,

    பிஸ்தா - தேவையான அளவு,

    நெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

    பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    வதக்கும் போது, நெய் சேர்த்து கொண்டே இருக்க வேண்டும்.

    பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும்.

    கடைசியாக பாதாம், பிஸ்தாவை சேர்த்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!!

    ×