என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் ஆர்ப்பாட்டம்"

    • விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.
    • அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.

    இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

    கோவை வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி–னையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது விவசாயிகளை பாதிக்கும் எந்தொரு திட்டத்தையும் செயல்படுத்தப் போவதில்லை என முதல்வர் உறுதி அளித்தாக விவசாயிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூரில் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொடர்ந்து நமது நிலம் நமதே போராட்ட குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணியளவில் அன்னூர் தாலுகா அலுவலகம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா–ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள், எங்களுக்கான நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    விவசாயிகள் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலை–மையில், மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ்,அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா, காரமடை இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் துகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டம் காரணமாக அன்னூரில் இருந்து சக்தி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில தலைவர் வேணுகோபால், நமது நிலம் நமது தலைவர் ரவிக்குமார், நமது நிலம் நமது செயலாளர் ராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    • இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்பதாக புகார்

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் உள்ள சில தனியார் உரக் கடைகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்கப்படுவதாக கூறிவந்தவாசி தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செய்தி தொடர்பாளர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தார். பின்னர் விவசாயிகள் கூறுகையில், "வந்தவாசி பகுதியில் உள்ள சில தனியார் உரக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் யூரியா உரம் வாங்கும்போது, அதனுடன் சுமார் ரூ.1,500 மதிப்புள்ள இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்கின்றனர்.

    இது குறித்து வேளாண் துறையிடம் புகார் செய்தால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. எனவே இதனை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளோம்" என்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது சிலுவை போன்று அமைத்த ஒன்றை தூக்கிக்கொண்டும்,ஒருவர் கிறிஸ்துமஸ்தாத்தா போன்று வேடமிட்டும் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

    இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் துணை தாசில் தார் சதீஷிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

    • செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடந்தது
    • கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரிடம் மனு வழங்கினர்

    செய்யாறு:

    செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக உழவர் பேரவை சார்பில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் பேரவை மாநில செய்தி தொடர்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், அய்யப்பன், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புருஷோத்தமன் பேசுகையில், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் பயிரிட்டிருந்த கரும்புகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால் அவை காய்ந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும், அரவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த 5 நாட்களாக ஆலையில் கரும்பு பாரத்துடன் நிறுத்தி வைத்திருந்த லாரி, டிராக்டர்களுக்கு வாடகை தர வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    அதன்பின் கோரிக்கைகள் குறித்து உழவர் பேரவையினருடன் சென்று கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரிடம் மனு வழங்கினர்.

    • பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.52 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
    • பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணாபுரம்,

    பால் விலையை உயர்த்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கம்பைநல்லூர் அருகே உள்ள திப்பம்பட்டி கூட்ரோட்டில் பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.52 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் இந்த விலை உயர்வை தாமதம் இன்றி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், செந்தில்குமார், மாநில செயலாளர் சின்னசாமி, டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தருமபுரி மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். மேலும் தமிழக விவசாய சங்க தருமபுரி மாவட்ட செயலாளர் குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன், சிவலிங்கம், ராஜா , நாகராஜ், சுப்பிரமணியன், லோகநாதன், குமார்,யு.பழனி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய நிர்வாகி முனுசாமி நன்றி கூறினார்.

    • கீழ்பவானி வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டம் 2020-ம் ஆண்டு அரசாணை எண் 276-ன் படி அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. மற்றொரு விவசாய சங்கத்தினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சீரமைப்பு பணிகள் பாதியில் நின்றது.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி தலைமையில் 2 தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே சீரமைப்பு பாசன பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாசன சபைகள் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அரசாணை எண் 276-ன் படி கால்வாய் சீரமைப்பு பணிகளை மே மாதம் 1-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி தெளிவாக ஆணையிட்டது.

    மேலும் கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர்கள் போட்ட வழக்கில் சீரமைப்பு பணி களை செய்யும்போது ஒப்பந்த தாரர்கள் ஊழியர்களுக்கும், எந்திரங்களுக்கும் தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒரு ஆணையையும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    இதன் அடிப்படையில் கடந்த 1-ந் தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனினும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் முழுமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கீழ்பவானி ஆயகட்டு நில உரிமையாளர்கள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்த ப்பட்டது.

    இல்லையென்றால் இன்று முதல் கோண வாய்க்கால் பகுதியில் உள்ள பொதுப்ப ணித்துறை அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதே நாளில் எதிர் தரப்பை சேர்ந்த விவசாய சங்கங்களும் பொதுப்ப ணித்துறை அலுவலகத்தில் வந்து மனு கொடுப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் இன்று பொது பணித்துறை அலுவலகம் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், பொருளாளர் சிவ சபாபதி, தமிழக விவசாய சங்கத்தின் செயலாளர் சுப்பு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவ லகத்திற்கு உண்ணாவிரத போராட்டத்திற்காக திரண்டு வந்தனர்.

    உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கீழ்பவானி வாய்க்கால்களில் முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிச்சாமி ஆகியோரும் உடன் இருந்தனர்

    பின்னர் விவசாய சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.அதன்படி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எம்.பழனிசாமியும் உடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். செயற் பொறி யாளர் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது சீரமைப்பு பணிகள் எங்கெங்கு நடைபெறுகிறது என்ற விவரத்தை செயற்பொ றியாளர் அவர்களிடம் தெரிவித்தார். இதனை விவசாய சங்க பிரதி நிதிகளும் ஏற்றுக் கொண்டனர். இதனை அடுத்து உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    • உழவர் சந்தை வாசலிலேயே ஏராள மானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் கடைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கும் உழவர் சந்தையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • உழவர் சந்தை வாசலில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று விவசாயிகள் கடை அமை க்காமல் உழவர் சந்தை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் உயர்மட்டக்குகுழு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தெரிவிக்கையில், உழவர் சந்தை வாசலிலேயே ஏராள மானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் கடைகள் அகற்றப்பட்டு அவர்களு க்கும் உழவர் சந்தையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டு ள்ளது.

    மேலும் உழவர் சந்தை வாசலில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே உழவர் சந்தை வாசலில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவர்களை அகற்ற வேண்டும். அது வரை தாங்கள் கடைகளை திறக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    இது குறித்து ஓரிரு நாளில் வியாபாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரிகள் உறுதிமொழியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் மாதம் 1-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
    • தண்ணீர் இல்லாததால் வில்லுக்குறி, பாறையடி பகுதிகளில் நாற்றுகள் கருகும் நிலைக்கு வந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், அருமநல்லூர், பூதப்பாண்டி, வில்லுக்குறி பகுதிகளில் நடவு பணிக்காக நாற்று பாவப்பட்டு உள்ளது. பி.பி.சானலுக்கு வராத தண்ணீர்ஒ வ்வொரு ஆண்டும் கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் மாதம் 1-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதுபோல இந்த ஆண்டும் கடந்த 1-ந்தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் தண்ணீர் திறக்கப்பட்டு 6 நாட்கள் ஆன நிலையில் வில்லுக்குறி அருகே உள்ள பி.பி. சானலில் தண்ணீர் விடவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தண்ணீர் இல்லாததால் வில்லுக்குறி, பாறையடி பகுதிகளில் நாற்றுகள் கருகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கருகிய நாற்றுகளுடன் இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் பொ துப்பணித்துறை அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் விஜி தலைமை தாங்கினார். வின்ஸ் ஆன்றோ, செல்லப்பா ஆகியோர் சானலில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி பேசினர். செண்பக சேகரப்பிள்ளை, ராதா கிருஷ்ணன், தங்கப்பன், ரவி, சேகர், முருகேசன், சைமன் சைலஸ், ஆறுமுகம் பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், கருகிய நாற்றுடன் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கூறுகையில், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 6 நாட்களாகியும் பி.பி. சானலில் தண்ணீர் திறந்து விடவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு சானல்கள் தூர்வா ரப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து கால்வாய்களையும், சானல்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • குறை தீர்வு கூட்டம் நடந்தது
    • 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 மட்டுமே செயல்படுகிறது

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் வேளாண் விரிவாக்க மையத்தில் உதவி திட்ட அலுவலர் திருமால் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது திடீரென விவசாயிகள் ஏர்கலப்பை போன்று செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பாக கலசபாக்கம் பகுதியில் தான் அதிக அளவு விளைச்சல் உள்ளது. ஆனால் இங்கு 2 நெல் கொள்முதல் மையங்கள் தான் செயல்படுகிறது. 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 செயல்பட்டால் விவசாயிகள் எப்படி முழுமையாக பயன்பெறுவார்கள்.

    இதனால் கலசப்பாக்கம் பகுதியில் அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் உதவி திட்ட அலுவலர் திருமால் உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக தான் இந்த கூட்டமே நடக்கிறது. உங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று கூறினார்.

    பின்னர் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் வேளாண் அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. குறைவு தீர்வு கூட்டத்தில் தாசில்தார் ராஜேஸ்வரி, வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன், பிடிஓ முருகன் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாயபட்டறை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.
    • விவசாயிகள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோ கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் கரையில் தனியார் நிறுவனம் சார்பில் 35 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பில் சாயபட்டறை தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று கோபி-சத்தி மெயின் ரோடு கொடிவேரி அணை பிரிவு பகுதியில் சாயபட்டறை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து காலை 10 மணி முதலே விவசாயிகள் கொடிவேரி அணை பிரிவு பகுதிக்கு கையில் பதாகைகளுடன் திரண்டு வந்தனர். பின்னர் காலை 10.50 மணி அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். கீழ்பவானி பாசன சபை தலைவர் ராமசாமி வரவேற்றார். இதில் காலிங்கராயன் பாசன பகுதி சங்கத் தலைவர் வேலாயுதம் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோ கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    செஞ்சிஅருகே உள்ள பாலப்பாடி கூட்ரோட்டு செம்மேடு தனியார் சர்க்கரை ஆலை எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார். ஆலை மட்ட தலைவர் தினேஷ்குமார் பொருளாளர் விநாயகம் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன் ,மாவட்ட துணைத் தலைவர் மாதவன், செஞ்சி வட்ட தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் கோட்ட நிர்வாகிகள் ஏழுமலை, வெங்கடேசன், நரசிம்ம ராஜன், சீத்தராமன், ராஜேந்திரன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துரைராஜ் நன்றி கூறினார்

    • மாட்டு கொட்டகைக்கு வேண்டி மனு கொடுத்தும் பலன் இல்லை
    • என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திற்கான விவசாயிகள் குறை தீர்வுகூட்டம் கீழ் புதுப்பாக்கம் கிராமத்தில் சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் ஆர். அனாமிகா தலைமை தாங்கினார்.

    தாசில்தார்கள் முரளி, ராஜலட்சுமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண் பயிர்க் காப்பீட்டில் தனியார் நிறுவனத்தை சேர்க்க கூடாது என்றும், மாட்டு கொட்டகைக்கு வேண்டி மனு கொடுத்தும் பலன் இல்லை எனவும், கூட்டத்தை செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    அப்போது விவசாயிகள் கழுத்தில் என்எல்சி என்ற விளம்பர பதாகை தொங்கவிட்டபடி நெல் பயிர்களை அழித்துவிட்டு என்னதான் நீங்கள் சாப்பிட போகிறீர்கள் என கேள்வி கேட்கும் விதமாக விவசாயிகள் மாடுகள் போல வேடமிட்டு அரிசி, தவிடு கலந்துள்ள தண்ணீரை மாடுகள் போல மண்டியிட்டு குடித்தும், அகத்திக்கீரை தழை சாப்பிட்டும், என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாளிகைப்பட்டு ராஜ், பெருங்களத்தூர் ரகுபதி, சிருங்கட்டூர் முருகன், ஏனாதவாடி கஜேந்திரன், பில்லாந்தி தட்சிணாமூர்த்தி, திருபூண்டி ரகுபதி, அகத்தேரிபட்டு கிருஷ்ணன் ,கீழ் புதுப்பாக்கம் முனிரத்தினம் ஆகிய உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கரும்புகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டகுடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையை நிர்வாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.115 கோடி வழங்கவில்லை. மேலும் 2018 ஆம் ஆண்டு இந்த ஆலை நிர்வாகம் ஆலையை நிரந்தரமாக மூடியது. மேலும் ஆலை நிர்வாகம், விவசாயிகளின் பெயரில் மோசடியாக வங்கிகளில் சுமார் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

    எனவே ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரியும் கடந்த 8 மாதங்களாக அந்த ஆலை முன்பு தொடர் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் முன்னிலை வகித்தார்.

    இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கரும்புகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×