search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்வு"

    திருச்சி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    திருச்சி:

    பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக அரசு அலுவலங்களுக்கு சென்று வருவதில் ஏற்படும் காலதாமதம், காலவிரயம், போக்குவரத்து செலவு விரயத்தை தவிர்க்கவும், அந்தந்த கிராமங்களுக்கு அரசு அலுவலர்கள் சென்று கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

    திருச்சி கிழக்கு வட்டத்தில் அரியமங்கலம், திருச்சி மேற்கு  வட்டத்தில் பஞ்சப்பூர், திருவெறும்பூர் வட்டத்தில் அரசங்குடி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் கிளிக்கூடு, மணப் பாறை வட்டத்தில் முகவனூர் தெற்கு, மருங்கா புரி வட்டத்தில் செவந்தாம் பட்டி, லால்குடி வட்டத்தில் கருடாமங்கலம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் ராசாம் பாளை யம், முசிறி வட்டத்தில் நெய்வேலி, துறையூர் வட்டத்தில் பகன வாடி, தொட்டியம் வட்டத்தில் அரங்கூர் ஆகிய கிராமங்களில் நாளை  24-ந்தேதி முகாம் நடைபெறுகிறது.  

    இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாமில் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள் தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. #India #Nepal #ModiVisitNepal
    காட்மாண்டு:

    பிரதமர் மோடி அண்டை நாடான நேபாளத்துக்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அவர் காட்மாண்டு அருகே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பசுபதி நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதேபோல் மஸ்டாக் மாவட்டத்திக்கு சென்று அங்குள்ள முக்திநாத் கோவிலிலும் சாமி கும்பிட்டார். கடல் மட்டத்தில் இருந்து 12,172 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் இருவருக்குமே புனித ஸ்தலமாகும். மோடிக்கு இந்த 2 கோவில்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.



    இதைத்தொடர்ந்து தலைநகர் காட்மாண்டு திரும்பிய மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலியுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள்(2015-ல் நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட தினம்) தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

    குறிப்பாக சரக்குகளை கையாளுதல், வர்த்தகம், நேபாளத்துக்கு மேலும் 4 வழித்தடங்களில் விமான போக்குவரத்து, எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்தல், எரிசக்தி பகிர்வு, டெராய் பகுதியில் 1,000 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைத்தல், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்படும் என்று இரு நாடுகளின் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    தனது 2 நாள் நேபாள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை மோடி நாடு திரும்பினார்.  #India #Nepal #ModiVisitNepal 
    ×